search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம்"

    • இவர் தனது கம்பெனிக்காக இடம் பார்த்து வந்துள்ளார்.
    • ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வடசேரி வஞ்சி மார்த்தாண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயசு 51). இவர் கோணம் பகுதியில் உள்ள வலை கம்பெனியில் மேலாளராக பணி செய்து வருகிறார்.

    இவர் தனது கம்பெனிக்காக இடம் பார்த்து வந்துள்ளார். அப்போது தோவாளை 4 வழிச்சாலை அருகே ஒரு இடம் உள்ளதாக தகவல் கிடைத்தது. அதில் குறிப்பிடப்பட்ட எண்ணை தொடர்பு கொண்ட போது, 4 வழிச்சாலைக்கு வரும் படி கூறி உள்ளனர்.

    அதன்பேரில் இடத்தை பார்ப்பதற்காக ரமேஷ் சென்றார். அப்போது அங்கு 3 பேர் வந்தனர். அவர்கள் திடீரென ரமேசை சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் அவரது கையில் கிடந்த 4 கிராம் மோதிரம் மற்றும் ரூ.6 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்துச் சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசில் ரமேஷ் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் சீலநாயக்கன்பட்டியில் திடீரென அங்கு வந்தபவரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, வழிப்பறியில் ஈடுப்பட்டார்.
    • அவரிடமிருந்து ரூ.5000 பணத்தை பறித்துக் கொண்ட அவர், பிடிக்க வந்த அருகில் இருந்த நபர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்டம், பனம ரத்துப்பட்டி அருந்ததியர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 38). கொத்தனார். இவர் நேற்று சீலநாயக்கன்பட்டி பைபாஸ் இரட்டைக் கோவில் அருகே நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் மூர்த்தியை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கினார்.

    பின்னர் அவரிடமிருந்து ரூ.5000 பணத்தை பறித்துக் கொண்ட அவர், பிடிக்க வந்த அருகில் இருந்த நபர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது, சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த நிர்மல் தாஸ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மதுரை அருகே கட்டிட காண்டிராக்டரிடம் பணம், செல்போன்கள் திருடப்பட்டன.
    • இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் சக்தி சிவராஜ் (வயது 36). கட்டிட கான்ட்ராக்டரான இவர் மதுரை துவரிமான் மேலக்கால் மெயின் ரோட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்கி, நாகமலை புதுக்கோட்டையில் திருமண மண்டபம் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்தி தங்க வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் சக்தி சிவராஜ் சம்பவத்தன்று இரவு அறையில் படுத்து தூங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, அவர் வைத்திருந்த 14 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2 செல்போன்களை காணவில்லை. இது தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் அறைக்குள் புகுந்து பணம் மற்றும் செல்போன்களை திருடியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி மேற்கண்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • இதில் 15 லட்சத்து 60 ஆயிரத்து 503 பேர் பொங்கல் பரிசு பணம் வாங்கினர்.
    • தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்கவில்லை.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந் தது.ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவடடங்களில் 15 லட்சத்து 88 ஆயிரத்து 937 குடும்ப அட்டைக்கு ரூ.1000 பணம் வழங்க அந்தந்த ரேசன் கார்டுகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதில் 15லட்சத்து 60 ஆயிரத்து 503 பேர் பொங்கல் பரிசு பணம் வாங்கினர்.

    மிதம் 28 ஆயிரத்து 434 பேர் ரூ.1000 வாங்க வில்லை.

    இதைப்போல் தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்காததால் அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பி வந்துவிட்டது.

    இந்த தொகையை அரசு கருவூலத் தில் அதிகாரிகள் செலுத்தி விட்டனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
    • ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி ஆகிய 5 இடங்களில் நெடுஞ்சாலைரோந்து படை போலீசார் கண்காணிப்பு பணி

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். காலை, மாலை நேரங்களில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டு உள்ளது .

    குட்கா, கஞ்சா விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலை ரோந்து படை போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி ஆகிய 5 இடங்களில் நெடுஞ்சாலைரோந்து படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிமுறைகளை மீறு வோருக்கு அபராதம் விதிக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர் வாகன ஓட்டிகளிடம் பணம் பெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து அவரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்கியதாக சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடந்திருக்கிறது
    • பெண்கள் மூலம் பேசியதும் அம்பலம்

    நாகர்கோவில்:

    வெளிநாட்டு வேலை என்ற மோகத்தில் நாடு முழுவதும் பலர் பணத்தை இழந்து வருவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இன்னும் சிலர் ஏஜண்டுகளை நம்பி பணத்தை இழந்து தான் வருகின்றனர்.

    அப்படி ஒரு சம்பவம் மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை, கருங்கல், மார்த்தாண்டம், அஞ்சுகிராமம், ஜேம்ஸ்டவுன் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் சிலரை தொடர்பு கொண்ட ஏஜண்டுகள், ஆஸ்திரேலியாவில் வேலை இருப்பதாக கூறி உள்ளனர். இதனை நம்பிய இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், சென்னையில் மருத்துவ பரிசோதனைக்கும் ஏஜண்டுகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

    விரைவில் வேலைக்கான உத்தரவு, விசா போன்றவை வந்து விடும் எனக் கூறி ஒவ்வொரு இளைஞரிடமும் ரூ. 75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ஏஜண்டுகள் வசூலித்துள்ளனர்.

    ஆனால் நாட்கள், மாதங்கள், வருடங்கள் கடந்தும் எந்தவித விசாவும் வராத நிலையில் தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை இளைஞர்கள் உணர்ந்தனர்.இதனை தொடர்ந்து அவர்கள், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, அவ்வப்போது தங்கள் செல்போனில் ஏஜண்டு தரப்பில் யாராவது பெண்கள் பேசி, கண்டிப்பாக விசா வந்து விடும் என நம்பிக்கை தெரிவித்ததாகவும் இதனை நம்பி காத்திருந்ததாகவும் ஏமாந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

    மேலும் ஒரு கட்டத்தில், பணிக்கான விசா கிடைக்க வில்லை. எனவே சுற்றுலா விசாவில் உங்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கிறோம். பின்னர் பணிக்கான விசா வாங்கி தருகிறோம் என்றும் மோசடி கும்பல் உறுதியளித்தனர்.

    இந்தக் கும்பல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இதுபோல மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம். குறைந்தது 250 பேரிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்திற்கு விசாரணைக்கு வந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

    இதன்மூலம் மோசடிக் கும்பல் தமிழகம் முழுவதும் நெட்வொர்க் அமைத்து பணம் மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். 

    • போலீசார் கடலங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அவர்கள் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    தரங்கம்பாடி:

    மணல்மேடு அருகே கடலங்குடி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் மற்றும் போலீசார் கடலங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கடலங்குடி அரண்மனை தெரு பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாட்டிக்கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் அவர்கள் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பந்தநல்லூர் மேல செல்லப்பன் பேட்டையை சேர்ந்த கதிரேசன் (வயது37), திருக்கோடிக்காவலைசேர்ந்த தமிழரசன் (40), பந்தநல்லூர் நெய்குப்பையை சேர்ந்த முத்துக்குமார் (38), திருவிடைமருதூர் முல்லங்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனியப்பன் மகன் கார்த்திகேயன் (34), திருவிடைமருதூரை சேர்ந்த முகமது ரபீக் (47), திருச்சியை சேர்ந்த முஸ்தபா (60), அத்திகடையை சேர்ந்த அனிபா (40), மன்னார்குடி அரிசி கடை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (48), காரைக்காலை சேர்ந்த சதீஷ்குமார் (50), ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    • வாழப்பாடி அடுத்த கீரப்பட்டி மலை கிராமத்தில் கடந்த 2022 டிசம்பர் 29-ந் தேதி விவசாயி வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் ஒரு மந்திரவாதி என்றும், உங்கள் வீட்டில் புதையல் இருப்பதாகவும், புதையலை எடுத்து கொடுப்பதற்கு, ரூ.1 லட்சம் செலவாகுமென கூறியுள்ளார்.
    • பழனியம்மாள் இந்த போலி மந்திரவாதியிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், புதையலை எடுத்துக் கொடுக்கமால் அந்த மர்ம நபர் தலைமறைவானார்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த கீரப்பட்டி மலை கிரா மத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 42). கடந்த 2022 டிசம்பர் 29-ந் தேதி இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் ஒரு மந்திரவாதி என்றும், உங்கள் வீட்டில் புதையல் இருப்பதாகவும், அந்த பொருளை எடுக்காமல் விட்டால், உங்களது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுமெனவும், புதையலை எடுத்து கொடுப்பதற்கு, ரூ.1 லட்சம் செலவாகுமென கூறியுள்ளார்.

    இதனால் பதறிப்போன பழனியம்மாள் இந்த போலி மந்திரவாதியிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், புதையலை எடுத்துக் கொடுக்கமால் அந்த மர்ம நபர் தலைமறைவானார்.

    இது குறித்து பழனி யம்மாள் வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தியதில் புதையல் எடுத்துக் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றியது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இறையமங்கலம் பகுதியைச் சேர்ந்த போலி மந்திரவாதி செல்வராஜ் (41) என்பவர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து ேபாலீசார், அவரை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர்.

    • கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கேப் ரோட்டை சேர்ந்தவர் நிஷார் (வயது 34).

    இவர் நாகர்கோவில் அலெக் சாண்டரா பிரஸ் ரோட்டில் செல்போன், கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் கடை வைத்து உள்ளார். தினமும் காலை யில் கடையை திறந்து விட்டு இரவு பூட்டுவது வழக்கம்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு நிஷார் வேலை விஷயமாக கோவைக்கு சென்றார்.இதனால் கடையை அவரது உறவினர் கவனித்து வந்தார். நேற்று இரவு அவர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    இன்று காலை கடைக்கு வந்த போது ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்த போது அங்கு இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் லேப்-டாப் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    மேலும் மேஜையில் இருந்த ரூ.30 ஆயிரமும் மாயமாகி இருந்தது. இது குறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் கடையில் பதிவாகி இருந்த கைரேகை களை பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. தொடர்ந்து தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதி யில் கொள்ளையர்கள் கை வரிசை காட்டி இருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    • கைதான வாலிபர் வாக்குமூலம்
    • இரணியலில் 3 இடங்களில் கைவரிசை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே திங்கள் நகரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இதே போல் அதேபகுதியில் உள்ள ஜுவல்லரி கடை மற்றும் செல்போன் கடை ஒன்றை உடைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது.

    இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் இரணியல் சப் இன்ஸ்பெ க்டர் பாலசுந்தரம் தலைமை யிலான போலீசார் நெய்யூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.சந்தேகம் அடைந்த போலீசார் அவரை இரணியல் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்த போது அவர் கன்னியாகுமரி அருகே ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த இன்னாசி லயோலா (வயது 29) என்பது தெரியவந்தது.

    இவர் திங்கள் நகரில் உள்ள ஏடிஎம் மையம், ஜுவல்லரி செல்போன் கடைகளில் கைவ ரிசை காட்டியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் இன்னாசி லயோலாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் போலீசாரிடம் கூறுகையில் தனக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் குடிப்பதற்கு பணம் இல்லாததால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றேன்.ஆனால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் ஜுவல்லரி மற்றும் செல்போன் கடையை உடைத்ததாக தெரிவித்தார். போலீசார் இன்னாசி லயோலாவை இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் அவர் நாகர்கோ வில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • மார்க்கெட்டின் பின்புறம் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டல்
    • பெற்றோருக்கு போன் செய்து மிரட்டி, ‘ஜிபே’ மூலமும் பணம் பறிப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் மஞ்சாலு மூடு நாரகத்தின் குழி பகுதி யைச் சேர்ந்த ஜிஸ்னு (வயது 26), சுர்ஜித் (22) ஆகியோர் பெங்களூருவில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியர்களாக பணி புரிந்து வருகின்றனர்.

    இவர்கள் புத்தாண்டை முன்னிட்டு மார்த்தாண்டம் படர்ந்த பாறை பகுதியில் உள்ள தங்களது நண்பர் சோனு ஜோஸ்பின் வீட்டிற்கு வந்தனர். கடந்த 4-ம் தேதி ஜிஸ்னு, சுர்ஜித் இருவரும் இரவு 11.30 -மணி அளவில் மார்த்தாண்டம் சென்று விட்டு மார்க்கெட்டின் பின்புறம் உள்ள வழி வழியாக நடந்து சென்ற னர்.

    அப்போது 5 பேர் கும்பல் அவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளது. மேலும் அந்தக் கும்பல் 2 பேரையும் தாக்கி மலைப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளது. அங்கு வைத்து பணத்தை பறித்துக் கொண்டதோடு, அவர்களது பெற்றோருக்கு போன் செய்து மிரட்டி, 'ஜிபே' மூலமும் பணம் பறித்து உள்ளனர்.

    பின்னர் 2 வாலிபர்களின் செல்போன்களை பறித்துக் கொண்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்று விட்டது. இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி, மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஜெனால்ட் (27) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் தலை மறைவாக இருந்த 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு மார்த்தாண்டத்தை அடுத்த ஆளுவிளை குமாரதாஸ் என்பவரின் மகன் அஜின் மோன்ஸே (23), மார்த்தாண்டம் கொடுங் குளத்தை சேர்ந்த பீட்டர் ரகு ராஜ் என்பவரது மகன் சிபின் இம்மானுவேல் (22), பாகோடு ஒற்றை விளைைய சேர்ந்த தேவசகாயம் மகன் அஸ்வின் (19 ) ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    • ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மேற்கு தெருவை சேர்ந்தவர் சம்பவத்தன்று இரவு சொந்த வேலையாக சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ஜங்ஷன் செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார்.
    • திடீரென கத்தி முனையில் ரமேஷ் இடமிருந்து ரூ.15,000 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.9,500-ஐ பறித்துக் கொண்டார்.

    சேலம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மேற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46). இவர் சம்பவத்தன்று இரவு சொந்த வேலையாக சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ஜங்ஷன் செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார்.

    இவருடன் பயணித்த, மற்றொரு பயணி 5 ரோடு பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது திடீரென கத்தி முனையில் ரமேஷ் இடமிருந்து ரூ.15,000 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.9,500-ஐ பறித்துக் கொண்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்கு பதிவு செய்து ரமேஷிடம் பணம் பறித்த மர்ம நபரை தேடி வருகிறார். 

    ×