search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
    • மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி நடைபெற்றது.

    அவினாசி :

    சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. 1000 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி நடைபெற்றது. அப்போது, சான்றிதழ்களை வழங்க பணம் வசூல் செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது.

    இதுகுறித்து பள்ளி நிா்வாகத்திடம் கேட்டபோது, சேவூா் பகுதியில் மின் தடை ஏற்பட்டதால் தனியாா் கடைகளில் சான்றிதழ்களை கலா் ஜெராக்ஸ் எடுப்பதற்காக மட்டுமே மாணவ, மாணவிகளிடம் தலா ரூ.100 வாங்கினோம். 25 மாணவா்கள் மட்டுமே சான்றிதழ் வாங்க வந்திருந்தனா். சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதை அடுத்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்தனா். பின்னா் அதிகாரிகள் கூறியபடி மாணவா்களிடம் பெறப்பட்ட ரூ.100-ஐ அவா்களிடம் திரும்ப வழங்கி வருகிறோம் என்றனா்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘‘குடிமக்கள் கணக்கு எண்’’ பிழைதிருத்தம் செய்ய முடியாமல் மாணவர்கள் அவதியடைகின்றனர்.
    • இ-சேவை மைய அலுவவலகத்திற்கு சென்றுதான் சி.ஏ.என். நம்பர் கிடைக்க ஆவணம் செய்யப்படுகிறது.

    அபிராமம்

    கோடைவிடுமுறை முடிந்து பள்ளி-கல்லூரிகள் திறக்கப்படும்போது அங்கு புதிதாக மாணவ-மாணவிகளை சேர்க்கவும், மேல்வகுப்புகள் படிக்கவும் சாதி, இருப்பிட, வருமான சான்றிதழ்கள் தேவையாகும். இந்த சான்றிதழ்கள் பெற ''குடிமக்கள் கணக்கு எண்'' கட்டாயமாக தேவைப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள தாலுகாக்கள், யூனியன் அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி உள்பட பல்வேறு பகுதிகளில் பொது இ-சேவை மையம், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. காப்பரேசன், கூட்டுறவு கடன் சங்கம், மகளிர் திட்டம் உள்பட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்கள் செயல்படுகிறது. இங்கு சான்றிதழ் பதிவு செய்ய வரும் மாணவ- மாணவிகள் சி.ஏ.என். நம்பர் பிழைதிருத்தம் செய்ய வேண்டும்.

    ஆனால் அந்த வசதி இ-சேவை மையங்களில் கிடையாது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மன உைளச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு வருவாய்துறை சான்றிதழ்கள் பதிவு செய்ய ஆதார் எண் வைத்து ''குடிமக்கள் கணக்கு எண்'' (சி.ஏ.என்.) உருவாக்கம் செய்யப்படும். இந்த எண் உருவாக்கம் செய்ய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மைய அலுவவலகத்திற்கு சென்றுதான் சி.ஏ.என். நம்பர் கிடைக்க ஆவணம் செய்யப்படுகிறது.

    இதனால் மன உளைச்சல் ஏற்படுவதுடன் நேர விரயம், பண விரயம் உள்பட பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாவதுடன் சான்றிதழ் கிடைப்பதிலும் சிரமத்துடன் அலைய வேண்டியதுள்ளது. இந்த நிலையை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • மாணவர்கள் பள்ளியில் படிக்கும் போதே உயர்கல்வி நிறுவனங்களை சென்று பார்க்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது.
    • தகவல்கள் பெற மையத்தை அணுகுவது அதிகரித்துள்ளதாக தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.

     திருப்பூர் :

    அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்றாலும் தங்களுக்கான விருப்பமான துறை, கல்லூரிகள், நுழைவுத்தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் முன்னணி கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பை இழக்கின்றனர்.இதை எடுத்துக்கூறி உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

    மாணவர்கள் பள்ளியில் படிக்கும் போதே உயர்கல்வி நிறுவனங்களை சென்று பார்க்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது.ஒவ்வொரு அரசுப்ப ள்ளியிலும் செயல்படும், உயர்கல்விவழிகாட்டி மையங்களில் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க உத்தரவிட ப்பட்டுள்ளது.இம்முயற்சியால் மாணவர்கள் உயர்கல்வி குறித்த தகவல்கள் பெற மையத்தை அணுகுவது அதிகரித்துள்ளதாக தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.இது குறித்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், நகர்ப்புற மாணவர்களை விட, கிராமப்புற மாணவர்களுக்கு, உயர்கல்வி நிறுவனங்கள், படிப்புகள் குறித்த புரிதல், சற்று குறைவாக தான் இருக்கும். இந்த தடையை நீக்க கொண்டு வரப்பட்ட உயர்கல்வி வழிகாட்டி மையம், அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக செயல்படுகிறது.மாணவர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் எந்த துறையை தேர்வு செய்யலாம் விண்ணப்பிக்கும் முறை, கவுன்சிலிங், வேலைவாய்ப்பு குறித்த கேள்விகளை கேட்கின்ற னர் என்றனர். இந்தநிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்கள்பெற்ற அதிகபட்ச மதிப்பெண்கள், தேர்ச்சிசதவீதத்தை எடுத்துரைத்து சேர்க்கை நடத்துமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கனவே துவங்கப்பட்டது. ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் கொண்டு அரசின் திட்டங்களை எடுத்துரைத்து சேர்க்கை பணி மேற்கொள்கின்றனர்.சமீபத்தில் பிளஸ்- 2 ரிசல்ட் வெளியான நிலையில் பாடவாரியாக சென்டம், தேர்ச்சி சதவீதம், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை விளம்ப ரபடுத்தி அரசுப்பள்ளிகளின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை பொதுமக்களுக்கு விளக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், தனியார் பள்ளிகளை ஒப்பிடுகையில், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதிகம்.

    இங்கு மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதே, மிகப்பெரிய சவால்.இதில் பல இடங்களில் பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை. ஆசிரிய ர்களின் முழு முயற்சியால் மட்டுமே தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கிறது.அரசின் நலத்திட்டங்கள், பள்ளிகளில் உள்ள கற்பித்தல் வசதிகள், ஹைடெக் ஆய்வகம், அதிக மதிப்பெண்கள் பெற்றால் இடஒதுக்கீட்டில் கிடைக்கும் சலுகை, நுழைவுத்தேர்வுகளுக்கு வழங்கப்படும் பயிற்சி ஆகியவற்றை எடுத்துக்கூறி சேர்க்கை நடத்தப்படுகிறது என்றனர்.

    • பி.எஸ்.சி.,(நர்சிங்) படிக்க 17 வயது நிறைவடைந்தவர்களும், 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
    • எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி பிரிவினர் வயது வரம்பு 35 வரை இருக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- டாக்டர் கனவு வாய்க்குமா, வாய்க்காதா என்ற குழப்பத்தோடு இருக்கும் மாணவர்களுக்கு குறிப்பிடத்தகுந்த வாய்ப்பை துணை மருத்துவ படிப்புகள் வழங்குகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கிடைக்கவில்லை என்றாலும் துணை மருத்துவப் படிப்புகள் மாணவர்களுக்கு வாய்ப்பாக அமைய காத்திருக்கிறது.அரசு மருத்துவ கல்லூரிகள், சுயநிதிமருத்துவக் கல்வி நிறுவனங்களில் பல்வேறுதுணை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான அறிவிப்பை மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

    அதில் பி.பார்ம்., (4 ஆண்டு), பி.எஸ்.சி., (நர்சிங்) (3ஆண்டுகள்), பி.பி.டி., (பிஸியோதெரபி) (4 ஆண்டுகள் - 8 செமஸ்டர்) மற்றும் 6 மாத உறைவிட இன்டர்ன்ஷிப், பி.ஏ.எஸ்.எல்.பி., (4ஆண்டுகள்), பி.எஸ்.சி., ரேடியாலஜி அண்ட் இமேஜிங் டெக்னாலஜி (3 ஆண்டுகள்), பி.எஸ்.சி., ரேடியோதெரபி (3 ஆண்டுகள்), பி.எஸ்.சி., கார்டியோ (3 ஆண்டுகள்), பி.ஓ.டி., அக்குபேஷனல் தெரபி (4 ஆண்டுகள்) உள்ளிட்ட படிப்புகள் உள்ளது. பி.எஸ்.சி., (நர்சிங்) படிக்க 2021 டிசம்பர் நிலவரப்படி 17 வயது நிறைவடைந்தவர்களும், 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி பிரிவினர் வயது வரம்பு 35 வரை இருக்கலாம். மற்ற படிப்புகளுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31, 2021 நிலவரப்படி 17 வயது நிரம்பியிருக்க வேண்டும்.பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது ஏதேனும் ஒரு பாடத்துடன் கணிதம் உள்ள பிரிவை எடுத்து படித்து 40 சதவீதம் மதிப்பெண் பெற்று ஒரே தடவையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பி.பார்ம்., பி.ஏ.எஸ்.எல்.பி., படிப்புகளுக்கு பிளஸ் 2- வில் குறிப்பிட்ட பாடங்களின் கூட்டு சராசரியாக குறைந்தது 40 சதவீதமும், எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி மாணவர்கள் பிளஸ் 2-வில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். பிற படிப்புகளுக்கு பிளஸ் 2 -வில் மேற்குறிப்பிட்ட பிரிவுகளை எடுத்து படித்து தேர்ச்சி பெற்றிருப்பதே தகுதி.மாணவர்கள் விண்ணப்பங்களை www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு "The Secretary, Selection Committee, Kilpauk, Chennai 104 என்ற பெயரில் எடுக்கப்பட்ட 400 ரூபாய்க்கான வரைவோலையையும் இணைத்து நேரில் அல்லது தபாலில் அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • மொழிப்பாடத்தேர்வில் மட்டும் மாநில அளவில் 50 ஆயிரத்து 674 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
    • துணை பொதுத்தேர்வு ஜூன் 19ந் தேதி நடத்தப்படுகிறது.

    தாராபுரம் :

    பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13ந தேதி துவங்கி ஏப்ரல் 3-ந் தேதி வரை நடந்தது. மொழிப்பாடத்தேர்வில் மட்டும் மாநில அளவில் 50 ஆயிரத்து 674 பேர் ஆப்சென்ட் ஆகினர்.இவர்கள் பள்ளிக்கு வராதவர்கள் என தெரிவிக்கப்பட்டதால் நலத்திட்ட பொருட்கள், அதற்காக செலவிடப்பட்ட தொகை குறித்த கேள்விகள் எழுந்தன. பள்ளிக்கு வந்து தேர்வெழுத வராதவர்கள் நிலை குறித்து, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

    மாவட்ட வாரியாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம், குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. தேர்வெழுதாத மாணவர்களை பள்ளி மேலாண்மை குழு மூலம், கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.பிளஸ் 2 ரிசல்ட் வெளியான நிலையில் ஆப்சென்ட் மாணவர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்த கேள்வி எழுந்துள்ளது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், உயர்கல்வி சேர்க்கையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, துணை பொதுத்தேர்வு ஜூன் 19ந் தேதி நடத்தப்படுகிறது. தோல்வியடைந்த மாணவர்களுக்கும், தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் சிறப்பு பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, ஆப்சென்ட்டான மாணவர்களில் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் பட்டியல் திரட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    • ஆயர் மார் ஜார்ஜ் ராேஜந்திரன் அறிவுரை
    • முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் சான்றிதழ்கள் வழங்கினர்

    கன்னியாகுமரி :

    கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் வரவேற்பு நடனமாக மாணவிகளின் பரத நாட்டியம் ஆடினர். கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அருட்தந்தை மைக்கேல் ஆரோக்கியசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.

    சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமை உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாணவர்களாகிய நீங்கள் பெற்றோர்களை கவனிக்க வேண்டும். இதை ஏன் கூறுகிறேன் என்றால் இன்று முதியோர் இல்லங்கள் பெருகி கொண்டி ருக்கின்றன. மாணவர்க ளாகிய உங்கள் வளர்ச்சியில் உங்கள் பெற்றோர்களை உங்களுக்கு உறுதுணை யாகவும், உதவியாகவும் இருக்கிறார்கள். உங்கள் வளர்ச்சியில் அவர்களது பங்களிப்பை எப்போதும் மறந்து விடாதீர்கள். திருமறையானது வயதான காலத்தில் உனது தாய் தந்தையரை பாதுகாப்பது உனக்கு ஏராளமான ஆசீர்வாதங்களை தரும் என்று கூறுகிறது. ஆகவே மாணவர்கள் உங்கள் பெற்றோரை அவர்களது வயதான காலத்தில் பாதுகாத்து கொள்ளுங்கள் என கூறினார்.

    பல்கலைக்கழக அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன், குமரித்தோழன் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட டி.வி. புகழ் பாலா மற்றும் வினோத் ஆகியோரின் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எழுத்தாளர் குமரித்தோழன் மாணவ,மாணவிகள் எப்படி இருக்க வேண்டும்? அவர்களது இலக்கு என்னவாக இருக்க வேண்டும்? இங்கிருந்து மாணவர்களாகிய நீங்கள் வெளியே செல்லும்போது இந்த சமூகத்திற்கு என்ன நன்மையை செய்யப்போகி றோம் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என பேசினார்.

    தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் பேரருட்தந்தை தோமஸ் பவுத்துபறம்பில் சிறப்புரையாற்றும் போது வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அந்த வாழ்க்கையை பிறருக்கு பயன்பட வாழ வேண்டும் என்று பேசினார்.

    கல்லூரி துணை முதல்வர் சிவனேசன் நன்றி கூறினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    • பிரெய்ல் புத்தகங்கள் மற்றும் கணித உபகரணங்கள் இலவசமாக பெற்றுத்தரப்படுகிறது.
    • அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத மாணவர் தேர்ச்சியை தொடர்ந்து அளித்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் கட்டுப்பாட்டின் கீழ் தஞ்சையில் பார்வைத்தி றன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் 2023-2024-ம் கல்வியா ண்டிற்கான 1-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    இந்த பள்ளியில் சிறப்பாசிரியர்களால் பார்வையற்ற மற்றும் பார்வைத்திதிறன் குறையு டைய மாணவர்களுக்கு பிரத்தியேக முறையான பிரெய்ல் வழி கல்வி வாயி லாக கற்பிக்கப்படுகிறது.

    மேலும் இந்த பள்ளியில் மத்திய மற்றும் மாநில அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள், மாநில அரசால் வழங்கப்ப டும் கல்வி உபகரணங்கள், சீருடை, காலணி, பிரெய்ல் புத்தகங்கள் மற்றும் கணித உபகரணங்கள் இலவசமாக பெற்றுத்தரப்படுகிறது.

    இந்த பள்ளி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத மாணவர் தேர்ச்சியினை தொடர்ந்து அளித்து வருகிறது. மாணவர்களுக்கு மாதந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்யப்ப டுகிறது. இந்த பள்ளியின் விடுதியில் மாணவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு இடமும், ஆரோக்கியமான உணவு மற்றும் தூய்மையான குடிநீர் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.இங்கு மாணவர் சேர்க்கை க்கு, பார்வைத்திறன் குறை யுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம், தஞ்சை, என்ற முகவரியில் அணுகலாம். மேலும் அலுவலக தொலைபேசி எண் 04362-272222 மற்றும் தலைமை ஆசிரியரின் செல்போன் எண்கள் 9629495808, 8903263066 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏழை மாணவர்கள் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும்.
    • பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது.

    தஞ்சாவூர்:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவோம், நாட்டின் ஒருமைப்பாட்டையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாப்போம், மாற்றத்தை நோக்கி அனைத்து மக்களையும் அணி திரட்டுவோம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய பிரசார இயக்கம் நடந்து வருகிறது.

    அதன்படி தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடை பயண பிரசார இயக்கம் இன்று 2-வது நாளாக நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி 2-ம் நாள் பிரசார இயக்கத்தை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    ஏ.ஐ.டி.யு.சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார் பிரசார இயக்கத்தை முடித்து வைத்து உரையாற்றினார்.

    இந்த பிரசார இயக்கத்தில், விவசாயிகளின் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    ஏழை மாணவர்கள் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.

    இதில் மூத்த தலைவர் கிருஷ்ணன், மாநகரத் துணைச் செயலாளர் முத்துக்குமரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, செல்வகுமார், மாநகர நிர்வாகிகள் மூர்த்தி, கல்யாணி, ஆசிரியர் சுந்தரமூர்த்தி, மாரிமுத்து, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா நன்றி கூறினார்.

    • 27 ஆயிரத்து 37 மாணவ -மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர்.
    • அரசு பள்ளி மாணவ- மாணவிகள் பெரும்பாலானவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

    இதில் தேர்ச்சி சதவீதம் 94.03 ஆகும்.

    தஞ்சை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 212 மாணவர்கள் , 14 ஆயிரத்து 323 மாணவிகள் என 27037 மாணவ -மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர்.

    இதில் 25734 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் 95.18 ஆகும்.இதில் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் பெரும்பாலானவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    அதிக மதிப்பெண் பெற்றதையும் தேர்ச்சி அடைந்ததை கொண்டாடும் வகையில் ஆசிரிய- ஆசிரியைகளுக்கு இனிப்பு வழங்கி மாணவ-மாணவிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    • உதவி மையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
    • மாணவர்கள் பதிவு செய்ய வரும்போது ஜாதி சான்றிதழ் அசலை கொண்டு வர வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) குமரேசமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

    இதற்கு பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேதாரண்யம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான உதவி மையம் அமைக்க ப்பட்டுள்ளது.

    இந்த மையம் இன்று (8-ந்தேதி) முதல் 19-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

    பதிவு செய்ய விண்ணப்ப கட்டணமாக ஓ.சி, பி.சி, எம்.பி.சி மாணவர்கள் ரூ.50 செலுத்தினால் 5 கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி. பிரிவை சேர்ந்த மாணவர்கள் ரூ. 2 பதிவு கட்டணமாக செலுத்தி 5 கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி. மாணவர்கள் பதிவு செய்ய வரும்போது ஜாதி சான்றிதழ் அசலை கொண்டு வர வேண்டும்.

    இந்த வாய்ப்பை வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மாணவ- மாணவி கள் பயன்படுத்திக் கொள்ளு ங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனது வீட்டில் தினமும் மாலை நேரங்களில் வகுப்பு எடுத்து வருகிறார்.
    • மாணவர்களுக்கு உணவு மற்றும் தானிய வகைகளை வழங்கி வருகிறார்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை அருகே உள்ள அடஞ்ச விளாகம் பகுதியைச் சேர்ந்தவர்பூங்கொடி. இவர் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு பிப்ரவரி 2020 முதல் ஏப்ரல்2023 வரை பல்வேறு விதமான கற்றல் மேம்பாடு அடைய பயிற்சிகளை தனது இல்லத்தில் தினசரி மாலை நேரங்களில் வகுப்பு எடுத்து வருகிறார்.

    முக்கிய நாட்களில் மாணவர்களுக்கு உணவு, மற்றும், தானிய வகைகளை வழங்கி வருகிறார்.அதற்கான குறும்பட போட்டியில் மாவட்ட அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    நேற்று நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் சவுந்தர்ராஜன், கல்வித்துறை சார்பாக ரூ.2 ஆயிரத்தை காசோலை யாக தன்னார்வலர் பூங்கொடிக்கு வழங்கினார்.

    இதில் இல்லந்தேடி கல்விமாவட்ட ஒருங்கிணைப்பாளரும் அரிச்சந்திரபுரம் பள்ளியின் பட்டதாரி ஆசிரியருமான முரளி கலந்து கொண்டார்.

    • ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் அருகிலுள்ள தபால்நிலையம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் மாணவர்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை பயன்படுத்தி விரல் ரேகை மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கி கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×