search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்கழுக்குன்றம்"

    திருக்கழுக்குன்றம் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமானதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பவானி (20). காதல் கணவருடன் அதே பகுதியில் வாழ்ந்து வந்தார்.

    இவருக்கு 2 வயதில் ரஷ்வந்த் என்ற மகன் உள்ளான். கடந்த 10-ந்தேதி மகனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. திருக்குழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருக்கழுக்குன்றம் அருகே லாரி மோதி இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மாமல்லபுரம்:

    கல்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவந்தவர் துரை (வயது 56). கடந்த 15-ந் தேதி இரவு அவர் பூஞ்சேரியில் ரோந்து பணியை முடித்துவிட்டு மறைமலை நகரில் உள்ள அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    திருக்கழுக்குன்றம் அடுத்த குச்சிச்காடு பகுதியில் வந்த போது, எதிரே வந்த மணல் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இன்ஸ்பெக்டர் துரைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி துரை பரிதாபமாக இறந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது இதயம் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கும், கிட்னி மலர் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    திருக்கழுக்குன்றம் அருகே சாராயம் விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றத்தை அடுத்த அம்மணம்பாக்கம் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பதாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த கெம்புராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த பெண் சாராய வியாபாரிகள் ரூபாவதி, தனலட்சுமி ஆகியோரும் பிடிபட்டனர்.

    ×