search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எந்திரம்"

    • தேங்கிய மழைநீரை உரிய எந்திரங்களை கொண்டு அகற்ற நடவடிக்கை.
    • கொள்ளிடம் ஆற்றில் ஓரிரு நாட்களில் சுமார் 60 ஆயிரம் கன அடிநீர் மயிலாடுதுறைக்கு வரும் என எதிர்பார்ப்பு.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கத்தில் அரசின் திட்டங்கள் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர்அமுதவல்லி தலைமையில், மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலையில் நடைபெற்றது.

    மயிலாடுதுறை மாவட்டத்தி ல்மழைநீர் வடிகால்வாய்கள் சத்தம் செய்யப்பட்டு தூர்வாரி ஆழப்படுத்துவதையும், தேங்கிய மழைநீரினை உரிய இயந்திரங்களைக் கொண்டு அகற்ற நடவடிக்கை எடுப்பது குறித்து உறுதி செய்ய சம்மந்தப்பட்ட அலுவலரிடம் அறிவுறுத்தப்பட்டது.

    மயிலாடுதுறையில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் உள்ள இடற்பாடுகளை களையவும், நிரந்தர தீர்வு காணுவதற்கு விரிவான ஆய்வறிக்கை திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தற்காலிகமாக உள்ள சிக்கல்களை களைய நடவடிக்கை எடுக்க நகராட்சி அலுவலர்களிடம் உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி பேசினார். அதனை தொடர்ந்து கலெக்டர் லலிதா பேசியதாவது:

    மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் ஓரிரு தினங்களில சுமார் 60 ஆயிரம் கன அடிநீர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது.

    இதனால் பொது மக்கள் யாரும் நீர்நிலைகள் அருகில் செல்லவோ, குளிப்பதோ, கால்நடைகளை அழைத்து செல்லவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ள ப்படுகி றார்கள். மாவட்டத்திலுள்ள 4 பல்நோக்கு நிவாரன முகாம்கள் மற்றும் தற்காலிக நிவாரன முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு எதிர் பாராத அசம்பாவிதங்களை தவிர்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்முருகதாஸ், உதவி ஆணையர் (கலால்) அர நரேந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள்அ ர்ச்சனா (சீர்காழி), யுரேகா (மயிலாடுதுறை), இணை இயக்குனர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை முருகண்ணன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர்கவித பிரியா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    எந்திரத்தில் கை சிக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர் திருவேங்கடம். இவரது மகன் மதன்குமார் (வயது 24). இவர் கோவை சூலூர் அப்பநாயக்கன்பட்டியில் உள்ள இரும்பு ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு மதன்குமார் வேலை செய்து கொண்டு இருந்த போது எந்திரத்துக்குள் இடது கை சிக்கி துண்டானது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினர். இதனை பார்த்த சகஊழியர்கள் அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மதன்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மதன்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிவகங்கை மாவட்டத்திற்கு புதிதாக வந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து முதல்நிலை பரிசோதனை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.
    சிவகங்கை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்திற்கு புதிதாக மின்னணு வாக்கு பதிவு எந்திரம் வந்துள்ளது. இந்த எந்திரம் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல்நிலை பரிசோதனை செயல் விளக்கம் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

    பெங்களூரு பெல் நிறுவனத்திலிருந்து பொறியாளர் துபே தலைமையில் வந்த பொறியாளர்கள் குழுவினர் இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தனர்.

    அதன் பின்னர் கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்திற்கு பெங்களூருவில் இருந்து 3 ஆயிரத்து 310 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1800 மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 1800 வாக்காளர்களின் வாக்குப்பதிவு குறித்த விவரத்தை தெரிவது குறித்த எந்திரம் ஆகியவை புதிதாக வந்துள்ளது. இந்த எந்திரங்கள் முழுவதும் சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது இந்த மின்னணு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த முதல் நிலை பரிசோதனைகள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் செய்யப்பட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணி 20 நாட்கள் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் மின்னணு எந்திர பராமரிப்பு அலுவலர் ராமபிரதீபன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ரமேஷ், சிவகங்கை வட்டாட்சியர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×