search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாமிரபரணி"

    நெல்லை அருகன்குளம் ஜடாயு படித்துறையில் தாமிரபரணி ஆற்றில் ஆரத்தி வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
    தாமிரபரணி மகாபுஷ்கரத்தையொட்டி நெல்லை அருகன்குளத்தில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அங்குள்ள எட்டெழுத்து பெருமாள், ராமலிங்க சுவாமி, லட்சுமி நாராயணர் மற்றும் காட்டு ராமர் கோவில்களில் வழிபாடு நடத்தினர்.

    தாமிரபரணி ஆற்றில் ஜடாயு படித்துறை அருகில் ஜடாயு தீர்த்தம், ராமதீர்த்தம், சிவதீர்த்தம் ஆகிய 3 தீர்த்தங்களும் கலப்பதால் இங்கு புனித நீராடுவது சிறப்பானது என்று கூறப்படுகிறது. இதனால் இங்கு தினமும் பக்தர்கள் வந்து புனித நீராடி செல்கிறார்கள்.

    தாமிரபரணி மகா புஷ்கரத்தையொட்டி கடந்த அக்டோபர் மாதம் விழா நடந்த 12 நாட்களும் இங்கு மகா ஆரத்தி நடந்தது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் மகா ஆரத்தி எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி நேற்று கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் ஜடாயு துறையில் நேற்று மாலை 6.15 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் ஜடாயு படித்துறையில் மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டு, பூக்களை தூவி வழிபாடு நடத்தப்பட்டது. தாமிரபரணி நதியை பாதுகாக்கவும், மழை பொய்க்காமல் சீராக பெய்யவும், உலக நன்மை மற்றும் பக்தர்கள் குடும்ப நலன் வேண்டியும் இந்த ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 
    தாமிரபரணியில் புஷ்கர விழாவுக்காக நீராட வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆந்திராவில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வர தொடங்கியுள்ளனர். #ThamirabaraniMahaPushkaram
    நெல்லை:

    144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் தாமிரபரணி புஷ்கர விழா இந்த ஆண்டு கடந்த 11-ந்தேதி தொடங்கி நடந்துவருகிறது. குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு குரு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆனதையடுத்து விருச்சிகத்துக்கு உரிய நதியான தாமிரபரணியில் மகா புஷ்கரவிழா கொண்டாடப்படுகிறது.

    இந்த விழாவுக்காக கடந்த 6 மாதத்துக்கும் மேலாக பல்வேறு ஆன்மீக அமைப்புகள் ஏற்பாடுகள் செய்து வந்தன. பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை 64 தீர்த்தக்கட்டங்கள், 149 படித்துறைகளில் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி அந்தந்த பகுதியில் விழா நடத்தும் அமைப்புகள் காலையில் ஆற்றில் புனித நீராடலையும், தொடர்ந்து சிறப்பு யாகங்கள், கலை நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றன. மாலையில் தாமிரபரணிக்கு மகா ஆரத்தியும், தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றன.

    அகில பாரதிய துறவியர் சங்கம் சார்பாக பாபநாசம் மற்றும் நெல்லை தைப்பூச மண்டபம் ஆகிய 2 இடங்களில் புஷ்கர விழா நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை இப்பகுதியில் சிறப்பு யாகங்கள், வழிபாடுகள் நடைபெற்றன.

    புஷ்கர விழாவின் 3-வது நாளான இன்று தாமிர பரணியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள். அதிகாலையிலேயே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் சிறப்பு வசதிகள் செய்திருந்தன. தொடர்ந்து தாமிரபரணியில் புஷ்கர விழாவுக்காக நீராட வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆந்திராவில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வர தொடங்கியுள்ளனர்.

    பாபநாசம் சேனைத் தலைவர் திருமண மண்டபத்தில் அனைத்து சித்தர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து சித்த மருத்துவர்கள் பங்கேற்றனர். இன்று மாலை பாபநாசம் இந்திர கீல தீர்த்த படித்துறையில் மகா ஆரத்தி நடைபெறுகிறது.

    பாபநாசம் சித்தர்கள் கோட்டம் மற்றும் பாபநாசம், சிங்கை ஊர்மக்கள் சார்பாக திரிநதி சங்கம தீர்த்தத்தில் புஷ்கர விழா நடைபெற்று வருகிறது. புஷ்கர விழாவின் 3-வது நாளான இன்று காலையில் சிறப்பு வேள்வி நடைபெற்றது. மாலையில் தமிழ் ஆகம விதிப்படி சிவனடியார்களால் மகா ஆரத்தி பூஜை நடத்தப்படுகிறது.

    காஞ்சி சங்கர மடம் சார்பாக திருப்புடை மருதூர் புடாட்சர தீர்த்தத்தில் நடைபெற்ற விழாவில் இன்று காலை சுதர்சன ஓமம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. மாலையில் சிறப்பு ஆரத்தியும், திவ்யநாம சங்கீர்த்தனமும் நடைபெறுகிறது.

    அம்பை, கல்லிடைகுறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள படித்துறைகளிலும் தாமிரபரணிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நெல்லை மேலநத்தம் அக்னி தீர்த்த கட்டத்தில் நேற்று புஷ்கர விழா தொடங்கியது. இன்று காலையும் இங்கு தாமிரபரணிக்கு வழிபாடுகள் நடைபெற்றது.

    குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவில் படித்துறையில் காலையில் தாமிரபரணிக்கு வழிபாடு நடந்தது. தொடர்ந்து பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. நெல்லை கைலாசபுரம் கைலாசநாதர் படித்துறையில் காலையில் வேதபாராயணம் மற்றும் ஓமங்கள் நடைபெற்றன. நெல்லை சங்கீத சபாவில் பன்னிரு திருமுறை பாராயணம் நடைபெற்றது. மாலையில் தாமிரபரணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் அலங்கார தீபாராதனை, ஆரத்தி நடைபெறுகிறது.

    அருகன்குளம் எட்டெழுத்துபெருமாள் கோவில் கோசாலையில் இன்று காலை சிறப்பு ஓமம் நடந்தது. 50-க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் கலந்துகொண்டு யாகம் வளர்த்தனர். இதேபோல் முறப்பநாடு கைலாசநாதர் ஆலயம், ஸ்ரீவைகுண்டம் படித்துறை, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் இன்று காலை பல்வேறு யாகங்கள், வழிபாடுகள் நடைபெற்றன.

    புஷ்கர விழாவையொட்டி பக்தர்கள் நீராட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆற்றில் நீச்சல் வீரர்கள், தீயணைப்பு படையினர் ரப்பர் படகு மற்றும் பாதுகாப்பு சாதனங்களுடன் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆற்றில் பாதுகாப்புக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.  #ThamirabaraniMahaPushkaram




    ‘புஷ்கரம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனித நதிகளில் நடைபெறும் கும்பமேளா. ‘மகா புஷ்கரம்’ என்பது 144 (12x12) ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா. அதன்படி இந்த ஆண்டு மகாபுஷ்கரம் நடைபெறுகிறது.
    12-10-2018 முதல் 23-10-2018 வரை

    பிரம்மதேவரின் கையில் இருந்தது தீர்த்தம் ‘புஷ்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த புஷ்கர தீர்த்தத்தை கடுமையான தவம் இருந்து பிரம்மதேவரிடம் இருந்து வரமாகப் பெற்றார், குரு பகவான். ‘புஷ்கரம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனித நதிகளில் நடைபெறும் கும்பமேளா. ‘மகா புஷ்கரம்’ என்பது 144 (12x12) ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா. அதன்படி இந்த ஆண்டு மகாபுஷ்கரம் நடைபெறுகிறது.

    நம் நாட்டில் உள்ள முக்கியமான 12 நதிகள், 12 ராசிகளுக்குஉரியவைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. அதன்படி விருச்சிக ராசிக்குரியதாக தாமிரபரணி நதி சொல்லப்பட்டு ள்ளது. குரு பகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய நதியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும் என்பது ஐதீகம். அதன்படி இந்த ஆண்டு விருச்சிக ராசியில் குரு சஞ் சரிப்பதால், தாமிரபரணியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும். அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் அவர்களின் தேவியர்கள், இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் நதி தேவதைகளும் அந்த நதியில் தங்கியிருப்பார்கள்.

    நதிகளெல்லாம் தெய்வீகம் வாய்க்கப் பெற்றவை என்று கருதுவது நம் நாட்டு ஐதீகம் ஆகும். இயற்கையாக அமைந்த நீர் நிலைகளில் தெய்வத் தன்மை உண்டு. அதில் மகிமை காண்பவர்கள், அதனுள்ளே கடவுள் உறைந்திருப்பதை உணர்கின்றனர். தென் தமிழக நதிகளில் தெய்வ சொரூபமாக விளங்குவது தாமிரபரணி.

    அகத்தியரை ‘தென் நாடு செல்க’ எனக் கட்டளையிட்டார், சிவபெருமான். அதற்கு அகத்தியர், தனக்கு அங்குள்ள தமிழ் மொழியை உணர்த்தும்படி வேண்டினார். சிவபெருமானும், அகத்தியரை தன் அருகே அமர வைத்து தமிழ்மொழியைக் கற்பித்தார். பின்னர் அங்கிருந்து பொதிகைமலை வந்து அமர்ந்த அகத்தியர், கடும் தவம் செய்தார். அவர் முன் தோன்றிய சூரிய பகவான், அகத்தியருக்கு தமிழ் இலக்கணங்களை கற்றுக் கொடுத்தார்.

    இதையடுத்து முதல் தமிழ்ச் சங்கத்தின் முதல்வராய் இருந்து தமிழை வளர்த்தார் அகத்தியர். இந்த நிலையில் அகத்தியர் நீராடும் பொருட்டு, சிவபெருமான் பொதிகை மலையில் ஒரு நதியை உருவாக்கி, அதை அவருக்கே தானமாகக் கொடுத்தார். அந்த நதி தாம்பிர வர்ணத்தில் இருந்ததால் அதற்கு ‘தாம்பிர வர்ணி’ என்று பெயர் வந்தது. காலப்போக்கில் அதுவே மருவி ‘தாமிரபரணி’ என்றானது.

    அகத்தியருக்காக ஈசனால் உருவாக்கப்பட்டு, வற்றாத ஜீவ நதியாய் ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி நதிக்கரையில் ஏராளமான திருக் கோவில்கள் உள்ளன. பாபநாசம் முதல் புன்னக்காயல் (முகத்து வாரம்) வரையான இதன் கரையோரத்தில் மொத்தம் 143 படித்துறைகள் அமைந்துள்ளன. இப்புனித நதிக்கரையில் அமைந்துள்ள குறுக்குத்துறை படித்து றையில் 12-10-2018 அன்று மகாபுஷ்கரத் திருவிழா தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

    திருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் 11-10-2018 (வியாழன்) அன்று இரவு 7.20 மணிக்கு குரு பகவான் பிரவேசிக்கிறார். மறுநாள் 12-10-2018 (வெள்ளி) அன்று தாமிரபரணி புஷ்கரம் ஆரம் பம். 23-10-2018 (செவ்வாய்) அன்று புஷ்கரம் விழா பூர்த்தியாகும். மொத்தம் 12 நாட்கள் இந்த விழா நடக்க இருக்கிறது.

    இந்த 12 நாட்களும் 12 ராசிகளைக் குறிப்பதாக அமைந்துள்ளது. 12-ந் தேதி (வெள்ளி) - விருச்சிகம், 13-ந் தேதி (சனி)- தனுசு, 14-ந் தேதி (ஞாயிறு) - மகரம், 15-ந் தேதி (திங்கள்)- கும்பம், 16-ந் தேதி (செவ்வாய்) - மீனம், 17-ந் தேதி (புதன்) - மேஷம், 18-ந் தேதி (வியாழன்) - ரிஷபம், 19-ந் தேதி (வெள்ளி) - மிதுனம், 20-ந் தேதி (சனி) - கடகம், 21-ந் தேதி (ஞாயிறு) - சிம்மம், 22-ந் தேதி (திங்கள்) - கன்னி, 23-ந் தேதி (செவ்வாய்) - துலாம்.

    ஒவ்வொருவரும் தமது ஜென்ம ராசிக் குரிய தேதி, கிழமையில் தாமிரபரணி நதியில் நீராடுவதால் முழுப்பலன் கிட்டும். குடும்பத் தலைவரோடு தொலை தூரத் திலிருந்து நீராட வருகின்றவர்கள் குடும்பத் தலைவரின் (தந்தையின்) ஜென்ம ராசி எது வோ, அந்த ராசிக்குரிய நாள், கிழமையில் நீராடினாலே போதும். அது குடும்பம் முழுவதும் பிரகாசத்தைக் கொண்டு வரும். 12 நாட் களிலும் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்குச் சமமானது.

    இந்த 12 நாட்களிலும் தாமிரபரணிக் கரையில் தானம் செய் வது சிறப்பு. தானங்களுள் ‘கோ தானம்’ முக்தியை அளிப்பதாக சொல்லப்படுகிறது. நல்ல பசுவைத் தானம் செய்வதால், மோட்ச சித்தி உண்டாகும் என்று புராணங்கள் கூறுகின்றன.

    இது தவிர புஷ்கரம் தங்கியிருக்கும் 12 நாட்களிலும், தாமிர பரணி நதிக்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் சிறந்ததாகும். இதனால் பித்ரு தோஷம் விலகி, உங்கள் வாழ்வு பொலிவும் வலுவும் பெறும். பாபநாசம் முதல் புன்னக்காயல் வரையான 143 படித்துறைகளில் எவற்றில் வேண்டுமானாலும் நீராடலாம், தானம் செய்யலாம், திதி கொடுக்கலாம்.

    சூரிய உதயத்திற்கு முன்பு நான்கு நாழிகைகள் (96 நிமிடங்கள்) அருணோதய காலமாகும். இந்த 96 நிமிட காலத்தில் நீராடுவது மிக மிகப் புண்ணியமாகும்.

    திருமணமாகாத ஆண், பெண்கள் அதிகாலை வேளையில் நீராடினால் மட்டுமே நற்பலன் கிட்டும். திருமணமானவர்கள் அதிகாலை, மதியம் ஆகிய இரண்டு வேளைகளிலும் நீராட லாம். துறவு வாழ்க்கை மேற்கொள்பவர்கள் அதி காலை, மதியம், சூரிய அஸ்தமனம் ஆகிய மூன்று வேளைகளிலும் நீராடலாம்.

    நவக்கிரகங்களில் குரு பகவானை ‘புத்திரகாரகன்’ என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புத்திர பாக்கியத்திற்கு காரணகர்த்தா இவரே. குரு பகவானின் அனுக்கிரகம் நிரம்பப் பெற்ற தலங்களிலும், குரு பகவான் சஞ்சாரத்தால் சிறப்பு பெறும் புஷ்கர நதியிலும் நீராடினால் புத்திரப்பேறு கிடைப் பது நிச்சயம். அந்த வகையில் தாமிரபரணியில் நீராடுவது சிறந்த பலனைத் தரும். குரு திசை, குரு புத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள், புஷ்கர நாளில் தாமிரபரணியில் நீராடினால் புதுவாழ்வு பூக்கும்.

    ராசிகளுக்குரிய நதிகள்

    மேஷம் - கங்கை

    ரிஷபம் - நர்மதை

    மிதுனம் - சரஸ்வதி

    கடகம் - யமுனை

    சிம்மம் - கோதாவரி

    கன்னி - கிருஷ்ணா

    துலாம் - காவிரி

    விருச்சிகம் - தாமிரபரணி

    தனுசு - சிந்து

    மகரம் - துங்கபத்ரா

    கும்பம் - பிரம்மநதி

    மீனம் - பிரணீதா
    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழா நாளை தொடங்கி வருகிற 22-ந் தேதி வரை நடக்கிறது.
    குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றுக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

    இந்த புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய மகாபுஷ்கர விழாவாகும். இதையடுத்து புஷ்கர விழாவை பிரமாண்டமாக கொண்டாட சிருங்கேரி, காஞ்சி மடங்கள், துறவிகள் சங்கம், சித்தர்கள் கோட்டம், தாமிரபரணி புஷ்கர ஒருங்கிணைப்பு குழு உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பூஜைகள், சிறப்பு யாகங்கள், தாமிரபரணிக்கு ஆரத்தி வழிபாடு நடத்த‌ ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 143 படித்துறைகளில் புஷ்கர விழா பூஜைகள் நடைபெறுகின்றன. நெல்லை அருகன் குளம் ஜடாயு தீர்த்தம், செப்பறை கோவில், மணி மூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் படித் துறைகள் முற்றிலும் புதுப் பித்து கட்டப்பட்டு உள்ளன.

    தூத்துக்குடியில் முறப்ப நாடு தலத்தில் படித்துறைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு படித்துறைகள் புதுப்பிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு உள்ளன. இந்த தாமிரபரணி மகா புஷ்கர விழா நாளை (11-ந்தேதி) தொடங்குகிறது.

    நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவை நாளை காலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். பின்பு அங்குள்ள படித்துறையில் புனித நீராடும் கவர்னர் பாபநாசம் சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் நடக்கும் தாமிரபரணி புஷ்கர துறவிகள் மாநாட்டிலும் பங்கேற்கிறார்.

    மாலை 5.15 மணிக்கு நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த பகுதியில் நடைபெறும் புஷ்கர விழாவில் கலந்துகொண்டு தாமிர பரணிக்கு ஆரத்தி பூஜையை தொடங்கி வைக்கிறார். இதற்காக தீர்த்த கட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நதிக் கரையில் 144 அடியில் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. .

    ஆரத்தி பூஜையின்போது காசியில் கங்கைக்கு நடப்பது போன்று மகாபாரணி ஆரத்தி செய்யப் படுகிறது. இதற்காக காசியில் இருந்து 7 சிறப்பு ஆரத்தி தட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சிறப்பு வேத பண்டிதர்களும் வந்துள்ளனர். படித்துறையில் 7 அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தைப்பூச மண்டபம் அருகே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.

    விழாவின்போது தாமிர பரணியின் மையப்பகுதியில் படகுகளில் மீட்பு படையினரும், போலீசாரும் பாது காப்பு பணியில் ஈடுபடு கிறார்கள். புஷ்கர விழாவுக்காக எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. 54 யாக குண்டங்களும், நடுவில் பத்ம குண்டமும் அமைக்கப் பட்டுள்ளன.

    இதேபோல் பாபநாசம் சித்தர்கோட்டம் சார்பாக நடைபெறும் விழாவில் நாளை காலை 7.30 மணி யளவில் புனித தீர்த்தமான கல்யாண தீர்த்தத்தில் இருந்து அடியார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக வந்து நதிக்கு வழிபாடு தொடங் குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6.15 மணியளவில் பஞ்சபூத மேடையில் 16 வகை தீபங்கள், 5 வகை உபச்சாரங் களுடன் தமிழ் ஆகம விதிப்படி சிவனடியார்களால் மகா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறும்.

    ஸ்ரீவைகுண்டம் படித்துறை யில் நாளை முதல் 23-ந்தேதிவரை புஷ்கர விழா நடக்கிறது. விழாவில் தினசரி கோ பூஜை, சுமங்கலி பூஜை, திருமணம் கைகூடுவதற்கு, புத்திர பாக்கியம், தம்பதி ஒற்றுமை, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான சிறப்பு பூஜைகள், சுதர்‌ஷண ஹோமம், பாராயணம் முற்றோதுதல், நாலாயிர திவ்ய பிரபந்தம், வித்யா ஹோமம், பொங்கல் வழிபாடு, கனக தாரா ஜெயம் மற்றும் இதர பூஜைகள் நடைபெற உள்ளன.

    புஷ்கர விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. விழாவை யொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன. இதற்காக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேசுவரன் நெல்லையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.

    ஏற்கனவே ஆற்றுக்குள் உள்ள ஆழம் குறித்தும், எந்தெந்த இடங்களில் எத்தனை அடி தூரம் வரை பக்தர்களை அனுமதிப்பது என்றும் விழா குழுவினர் அறிக்கை தயார் செய் துள்ளனர். அதன்படி குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் பக்தர்கள் ஆற்றுக்குள் செல்ல முடியாத வகையில் இரும்பு கம்பிகளை நிறுவி, இரும்பு வலைகளை கட்டி பாதுகாப்பு வளையம் அமைக்கப் பட்டுள்ளது.

    புஷ்கர விழாவுக்காக நெல்லை மாநகரில் 600 போலீசாரும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் 3500 போலீ சாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். குமரி மாவட்டத்தில் இருந்து போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட உள்ளனர். தேவைப்பட்டால் இதர மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி மாவட் டத்தில் பக்தர்கள் நீராடுவதற் காக 29 படித்துறைகள் கண்டறியப்பட்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி முறப்பநாடு, அகரம், நாணல்காடு, ஆழிக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் அருகில், ஆழ்வார் திருநகரி திருசங் கனை, அகோப்பில்லா, காந்தீஸ்வ ரர், பட்சிராஜன், நாயக்கர் பகுதி, பிள்ளையார் கோவில், தோணித்துறை, பால்குளம், தென்திருப் பேரை, குரங்கனி, ஏரல் இரட்டை திருப்பதி, மங்கள குறிச்சி, சேர்மன் அருணாசலசுவாமி கோவில், வாழவல்லான், உமரிக்காடு, சேதுக்குவாய்த்தான், சொக்கப்பழங்கரை, முக்காணி ஆற்றுப்பாலம் மேற்கு மற்றும் கிழக்கில் 2 இடங்கள், சேர்ந்த பூமங் கலத்தில் 2 இடங்கள் ஆக மொத்தம் 29 இடங்களில் உள்ள படித்துறைகளில் பக்தர்கள் நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விழாவையொட்டி 3 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில், 5 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 16 துணை போலீஸ் சூப்பிரண்டு கள் உள்பட சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சிறப்பு பயிற்சி பெற்ற 90 போலீசார் அடங்கிய பேரிடர் மீட்பு குழுவினரும், 27 படகுகளும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.
    தாமிரபரணி புஷ்கரணி விழாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதில் நியாயம் இல்லை என்று எச்.ராஜா கூறினார். #ThamirabaraniMahaPushkaram #HRaja

    மதுரை:

    நெல்லை தாமிரபரணியில் புஷ்கரணி விழா நாளை (11-ந் தேதி) தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக சிந்து, கங்கை, யமுனை, நர்மதா, கோதாவரி, கிருஷ்ணா, பிரம்மபுத்திரா, காவிரி உள்ளிட்ட 12 நதிகளில் இருந்து புனித தீர்த்தங்கள் எடுக்கப்பட்டு 12 ரதங்களில் நெல்லை கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த ரத யாத்திரை இன்று காலை மதுரை வந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அம்மன் சன்னதி முன்பிருந்து பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    அதன் பின்னர் எச்.ராஜா, நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை தாமிரபரணி புஷ்கரணி விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். கடந்த முறை புஷ்கரணி விழா நடந்தபோது அப்போதைய சபாநாயகர் ஆவுடையப்பன் கலந்து கொண்டார். சுற்றுச் சூழலுடன் ஒன்றிணைவது தான் வாழ்க்கை என்று வேதங்கள் கூறுகின்றன.

    இயற்கையை பசுவில் இருந்து பால் கறப்பது போல பயன்படுத்த வேண்டும். பசுவை கொல்லுவது போல பயன்படுத்தக்கூடாது.

    இயற்கையை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தான் புஷ்கரணி விழா நடை பெறுகிறது.

    நதியை தாயாக நினைக்கிறோம். 12 -வது புஷ்கரணி விழா மகா புஷ்கரணியாக கொண்டாடப்படுகிறது. அந்த விழா நாளை தாமிரபரணியில் சிறப்பாக கொண்டாட பக்தர்கள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    ஆனால் புஷ்கரணி விழாவுக்கு திடீரென்று சில எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

    ராமராஜ்ய ரத யாத்திரை தமிழகம் வந்தபோது எதிர்ப்பு நிலவியது போல இப்போதும் எதிர்க்கிறார்கள்.


    தி.மு.க., ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட்டுகள் எதிர்ப்பு தெரிவிப்பதில் நியாயம் கிடையாது. மேலும் அரசு ரீதியாகவும் சில இடைஞ்சல்கள் உள்ளன.

    தீர்த்தவாரி என்றாலே விக்ரகங்களை வைத்து பூஜை செய்வது தான். ஆனால் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி இது ஆகம விதிகளுக்கு முரணானது என்று கூறியுள்ளார்.

    கடந்த 2015-ம் ஆண்டு சென்னை தீவுத்திடலில் இந்திய சுற்றுலா வணிக கண்காட்சி நடைபெற்ற போது 28 கோவில்களில் இருந்து விக்ரகங்களை எடுத்து வந்து அந்த அதிகாரியே நிகழ்ச்சியை நடத்தினார்.

    புஷ்கரணி விழாவால் எழுச்சி வந்து விடக்கூடாது என்பதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    இன்றைக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியும் இங்கே வந்துள்ளார். அவரது வருகை ஒரு புதிய மாற்றம் முன்னேற்றமாக கருதுகிறேன்.

    இந்து சமுதாயத்தில் தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்று கிடையாது. எல்லோருமே ஒன்று தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நதிகளை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தாமிரபரணி புஷ்கரணி விழா கொண்டாடப்படுகிறது.

    இதில் பங்கேற்க புதிய தமிழகம் கட்சிக்கு அழைப்பு விடுத்த இந்து அமைப்புகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தாமிரபரணி புஷ்கரணி விழா 12 நாட்கள் நடைபெறுகிறது. அதில் புதிய தமிழகம் கட்சியினர் பங்கேற்பதுடன், நாங்களும் தனியாக விழா நடத்த முடிவு செய்துள்ளோம்.

    அனைத்து நதிகளின் தீர்த்தங்களையும் எடுத்து வந்து தாமிரபரணியில் கலப்பது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாகும். நீர், நதி, மண் ஆகிய இயற்கையை பேண வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலேயே இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ThamirabaraniMahaPushkaram #HRaja

    தாமிரபரணி மகா புஷ்கர விழா வருகிற 11-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி விழா சிறப்பாக நடைபெற வேண்டி உச்சிஷ்ட கணபதி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    தாமிரபரணி மகா புஷ்கர விழா வருகிற 11-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது. இந்த நாட்களில் நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவில் முன்பும் தாமிரபரணி ஆற்றில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடக்கிறது. இதையொட்டி விழா சிறப்பாக நடைபெற வேண்டி நேற்று மாலை உச்சிஷ்ட கணபதி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    மேலும் தாமிரபரணி ஆற்றில் ஆரத்தி எடுத்து, மலர் தூவப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பக்தானந்தா சுவாமி, புளியரை ராஜா, சிதம்பரம், சங்கரநாராயணன், நல்லபெருமாள், சுந்தர் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    தாமிரபரணி புஷ்கர திருவிழா நடைபெறும் 12 நாட்களும் தானம் செய்வது மிகவும் விசேஷம் என்று புராணங்களில் கூறப்பட்டு உள்ளது. ஒருமுறை தானம் செய்தால் அது பலமடங்கு பெருகுவதாக ஐதீகம்.



    pushkaram, worship, pushkaram thamirabarani, guru peyarchi, புஷ்கரம், வழிபாடு, குருப்பெயர்ச்சி





    தாமிரபரணி புஷ்கர திருவிழா நடைபெறும் 12 நாட்களும் தானம் செய்வது மிகவும் விசேஷம் என்று புராணங்களில் கூறப்பட்டு உள்ளது. ஒருமுறை தானம் செய்தால் அது பலமடங்கு பெருகுவதாக ஐதீகம்.

    அதன்படி விழா தொடங்கும் முதல் நாள் தங்கம், வெள்ளி, தானியங்கள், பூமி ஆகியவற்றை தானமாக வழங்கலாம். 2-ம் நாள் வஸ்திரம் (துணி), உப்பு, மாடு, ரத்தினம். 3-ம் நாள் வெல்லம், காய்கறிகள், குதிரை, பழங்கள், வண்டி, 4-ம் நாள் நெய், எண்ணெய், தேன், பால். 5-ம் நாள் எருமை, காளை. 6-ம் நாள் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம், வாசனை திரவியங்கள். 7-ம் நாள் வீடு, மனை, நாற்காலி, கிழங்கு, இஞ்சி. 8-ம் நாள் சந்தனக்கட்டை, பூக்கள். 9-ம் நாள் மஞ்சள். 10-ம் நாள் புத்தக தானம். 11-ம் நாள் யானை, குதிரை. 12-ம் நாள் எள், ஷோடசதானங்கள் ஆகியவற்றை வழங்கலாம்.

    காவிரியில் அந்திம புஷ்கர விழா

    புஷ்கரமானவர் குருபெயர்ச்சி சமயத்தில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் வாசம் செய்கிறார். குருபெயர்ச்சி ஆரம்பித்து முதல் 12 நாட்கள் ஆதிபுஷ்கரம் என்றும், அடுத்த குருபெயர்ச்சிக்கு முன்புள்ள 12 நாட்கள் அந்திம புஷ்கரம் என்றும் கொண்டாடப்படுகிறது. சென்ற வருடம் துலாம் ராசிக்கு அதிபதியான காவிரியில் ஆதிபுஷ்கரமானது 12-9-2017 முதல் 24-9-2017 வரை 12 நாட்கள் மயிலாடுதுறை துலா கட்டத்தில் கொண்டாடப்பட்டது.

    அந்திம புஷ்கர விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் 11-10-2018 வரை 12 நாட்கள் காவிரியில் கொண்டாடப்பட உள்ளது. மயிலாடுதுறை துலா கட்டத்தில் காவிரியில் அந்திம புஷ்கர விழா 8-10-2018, 9-10-2018 ஆகிய தேதிகளில் வேதபாராயணத்துடன், சிறப்பு பூஜையுடன் கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி வீணாக கடலுக்கு செல்லும் தாமிரபரணி தண்ணீரை சேமிக்க முடியாமல் தூர்ந்து போய் உள்ள பாசன குளங்களை தூர்வாரிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Thamirabaraniriver
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாபநாசம் மலையில் பூங்குளம் என்ற இடத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியில் கடலில் கலக்கின்றது. இரு மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றில் பல தடுப்பணைகள் உள்ளன. இதில் மருதூர் அணை மற்றும் கடைசி அணையான ஸ்ரீவைகுண்டம் அணை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.

    மருதூர் அணை சுமார் 800 ஆண்டுகள் பழமையானது. இந்த அணையில் கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு அணை பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறவில்லை.

    இதைபோல், ஸ்ரீவைகுண்டம் அணை விவசாயிகளின் நலனுக்காக விவசாயிகளிடத்தில் பணம் வசூலித்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 140 ஆண்டுகளுக்கு அமைக்கப்பட்டதாகும். இவ்வணையிலும் பொதுப்பணித்துறையினரின் பராமரிப்பு பணிகள் நடைபெறாத நிலையில் கடந்த 2015ம் ஆண்டு தூர்வாரும் பணி தொடங்கியது.

    இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தியதுடன் வழக்கும் தொடர்ந்ததால் தூர்வாரும் பணிக்கு தடைவிதித்து 2017-ம் ஆண்டு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    மேலும், பொதுப் பணித்துறையினரின் முறையற்ற தண்ணீர் விநியோக முறைகளினால் விவசாயிகளின் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ள பாசன குளங்களுக்கு மழைக்காலத்தில் வரும் அதிகப்படியான வெள்ள நீரை சேமித்து வைக்க முடியாத அளவிற்கு பாசன குளங்கள் அனைத்தும் தூர்ந்து போய் உள்ளன.

    இதனால் தாமிரபரணியை ஆண்டுதோறும் ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி வீணாக கடலுக்கு செல்வதை தடுக்க முடியாதது மட்டும் இன்றி கோடைக்காலங்களில் வறட்சியான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும், விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடும் தொடர்கிறது.

    முக்கியத்துவம் வாய்ந்த குளங்கள் அனைத்தும் பொதுப்பணித்துறையினரின் முறையான பராமரிப்பு ஏதும் இல்லாத நிலையில் தூர்ந்து போய் உள்ளதால் அதிகப்படியான தண்ணீரை சேமிக்க முடியாத நிலையில் உள்ளது.

    பாசன குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வாய்க்கால்களும் தூர்ந்து போய் இருப்பதுடன் அமலைச் செடிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளதாலும் குளத்தின் மதகுகள் உடைந்த நிலையில் உள்ளதாலும் பாசன குளங்களுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் பாசன குளங்கள் அனைத்தையும் தூர்வாரிட வேண்டும் என கோரிக்கை வருகின்றனர்.

    இதுகுறித்து நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கூறியதாவது:-

    விவசாயிகளின் நலன் கருதி அமைக்கப்பட்ட குளங்கள் அனைத்தையும் பாதுகாக்க பொதுப்பணித்துறையினர் தவறிவிட்டனர். கடந்த 20 ஆண்டு காலக்கட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணை மற்றும் பாசன குளங்களில் நடைபெற்று முடிந்ததாக கணக்கு காட்டப்பட்ட பணிகளை மாவட்ட நிர்வகம் மறு ஆய்வு செய்தால் பொதுப்பணித்துறையினரின் பொறுப்பற்ற செயல்கள் அம்பலமாகிவிடும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 53 பாசன குளங்களிலும் 10 டிஎம்சி தண்ணீரை தேக்க முடியும். ஆனால், சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வாண்டு பெய்த தென்மேற்கு பருவமழையினால் கிடைத்த சுமார் 15 டிஎம்சி தண்ணீர் வீணாக ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி கடலுக்கு சென்றுள்ளது.

    மிகப்பெரிய குளமான தென்கரை குளம் உள்ளிட்ட அனைத்து குளங்களுமே முழு கொள்ளவை தேக்க முடியாத அவலநிலை தொடர்கிறது. பாசன வாய்க்கால் மற்றும் குளங்களை சீரமைத்து புதிய தடுப்பணைகளை கட்டிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க வழியில்லாத நிலையில் பொதுப்பணித்துறையினரின் முறைகேடுகளும் அலட்சியப் போக்கும் தொடர்ந்தால் விவசாயிகளை திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நதிநீர் மேலாண்மை சங்க ஒருங்கிணைப்பாளர் கண்ணன் கூறுகையில், “மருதூர் அணை நிரம்பி ஸ்ரீவைகுண்டம் அணை வழியான தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லும் நிலையில் பாசன வாய்கால்களில் அமலைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் பெரிய குளமான தென்கரை குளத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே அமலைச் செடிகளை அகற்றி பாசன குளங்களில் அதிகப்படியான தண்ணீரை சேமிப்பதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்” என்றார்.



    மருதூர் மேலக்கால் வாய்கால் பாலங்களை ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் விவசாயி சுரேஷ், படுக்கப்பத்து சமூக ஆர்வலர் சரவணன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து அமலைச் செடிகளை அகற்றும் பணியிலும் பழுடைந்த நிலையில் உள்ள மதகுகளை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

    இப்பணிகளை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரராகவன் உள்ளிட்ட வருவாய் துறையினர் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினர். #Thamirabaraniriver
    தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி பாளையங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவிலில் வைத்து தாமிரபரணி தேவி, அகஸ்தியர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாமிரபரணி மகா புஷ்கர விழா நடைபெறும். அதன்படி வருகிற அக்டோபர் 11-ந் தேதி தொடங்கி, 22-ந் தேதி வரை புஷ்கர விழா நடைபெற உள்ளது. 149 தீர்த்த தலங்களில் இந்த விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த விழாவுக்கான முயற்சிகளை அகில பாரத துறவியர் சங்கம் மற்றும் தாமிரபரணி புஷ்கர கமிட்டியினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த விழா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அகஸ்தியர், தாமிரபரணி தேவி சிலைகள் புதிதாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த சிலைகளுக்கு பாளையங்கோட்டையில் உள்ள சிருங்கேரி மடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பார்த்ததீர்த்த சுவாமி தலைமையில் இந்த பூஜைகள் நடந்தன. பின்னர் அங்கிருந்து தாமிரபரணி தேவி, அகஸ்தியர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு ரத யாத்திரை ஊர்வலத்தில் பல ஊர்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் நெல்லைக்கு வந்தது.

    நெல்லை மாநகரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் தாமிரபரணி தேவி, அகஸ்தியர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று பாளையங்கோட்டையில் உள்ள முப்புடாதி அம்மன் கோவிலுக்கு இந்த சிலைகள் எடுத்து செல்லப்பட்டது. அங்கு இந்த சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 
    நெல்லை தாமிரபரணி நதிக்கு 144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகாபுஷ்கர விழா வருகிற அக்டோபர் மாதம் 11-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    நெல்லை தாமிரபரணி நதிக்கு 144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகாபுஷ்கர விழா வருகிற அக்டோபர் மாதம் 11-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழா 12 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இதற்கான ஏற்பாட்டை தமிழக அரசும், துறவிகள் கூட்டமைப்பும் செய்து வருகிறார்கள்.

    இதற்காக அரசு சார்பாகவும் பல்வேறு அமைப்புகள் சார்பாகவும் தாமிரபரணி நதிக்கரையை சுத்தப்படுத்தும் பணி பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. தாமிரபரணி நதியில் புஷ்கர விழா கொண்டாடுவது தொடர்பாக அமைச்சர் ராஜலட்சுமி, கலெக்டர் மற்றும் அதிகாரிகளும் பல்வேறு இடங்களை சுற்றி பார்வையிட்டனர். புஷ்கர விழாவிற்காக தாமிரபரணி நதி கரையில் படித்துறைகள், தாமிரபரணிதேவி சிலை உள்பட பல அடிப்படை கட்டமைப்புகள் கட்ட வேண்டும் என்றும் துறவிகள் கூட்டமைப்பினர் அரசிடம் மனு கொடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் துறவிகள் கூட்டமைப்பு மற்றும் அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் சார்பாக அருகன்குளத்தில் உள்ள தாமிரபரணி நதியின் ஜடாயு தீர்த்த கட்டத்தில் படித்துறை கட்ட பூமிபூஜை இன்று காலை நடந்தது.


    நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த கட்டத்தில் படித்துறை கட்ட துறவிகள் பூமி பூஜை நடந்தபோது எடுத்தபடம்.

    இதில் நாங்குநேரி வானமாமலை ஜீயர், ஆழ்வார்திருநகரி எம்பெருமான் ஜீயர், கொங்கு மண்டல நாராயணஜீயர், திருச்சி ஸ்ரீரங்கம் பவுன்புகரபுரம் ஜீயர், பெருங்குளம் செங்கோல் ஆதினம், துறவிகள் சங்க தலைவர் ராமானந்தா சுவாமிகள், நெல்லை பக்தானந்த சுவாமி மற்றும் எட்டெழுத்து பெருமாள் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து பூமிபூஜையை நடத்தினர்.

    பின்னர் ஜடாயு தீர்த்தத்தில் தண்ணீர் தெளித்து பல்வேறு அடிப்படை பணிகளுக்கான தொடக்க விழாவையும் நடத்தினர்.

    இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கார்பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணையிலிருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

    திருநெல்வேலி:

    கார்பருவ சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் தாமிரபரணி ஆற்றில் நீர் திறந்துவிடப்படும்.

    இந்தாண்டு கார்பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணையிலிருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி ஜூன் 24-ம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதி 120 நாட்களுக்கு தண்ணீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அம்பாசமுத்திரம், நாங்குனேரி உள்ளிட்ட பகுதிகளில் 20,729 ஏக்கர் நிலம் பயன்பெரும். #tamilnews
    ×