search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 145409"

    • வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 22-ந்தேதி முதல் ஜனவரி 12-ந்தேதி வரை நடக்கிறது.
    • ஜனவரி 2-ந்தேதி பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 22-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 23-ந்தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது.

    ஜனவரி 1-ந்தேதி மோகினி அலங்காரமும், 2-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 8-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 9-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 11-ந்தேதி தீர்த்தவாரியும், 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.

    இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடும்நிகழ்ச்சி கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. இதையடுத்து ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர்பெருமாள் கோவில் சகஸ்ர தீப மகோத்சவம் நடைபெற்றது
    • 21-ம் ஆண்டு சகஸ்ரதீப வழிபாடு நடந்தது.

    திருச்சி

    ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலில் சகஸ்ரதீபம் மற்றும் சிறப்பு கூட்டு வழிபாடு நடைபெற்றது.

    கார்த்திகை மாதம் என்றாலே விளக்குகள் ஏற்றி வழிபடுவது ஐதீகம். குறிப்பாக வைணவக் கோவில்களில் இம்மாதத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றி வழிபடும் சகஸ்ரதீப வழிபாடு நடைபெறும். இதனால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான காட்டழகிய சிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சன்னதியில் 21-ம் ஆண்டு சகஸ்ரதீப வழிபாடு நடந்தது. இந்த விளக்கேற்றும் நிகழ்வுகளை ஸ்ரீரங்கம் நகர நல சங்கத்தின் மக்கள் செய்தி தொடர்பாளர் மேஜர் டோனர் ரோட்டேரியன் டாக்டர் கே.சீனிவாசன் விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக கோவில் மண்டபங்கள், பிரகாரங்கள், நந்தவனம் உள்பட கோவில் வாசல் முதல் மூலஸ்தானம் வரை ஆயிரக்கணக்கான விளக்குகளை பக்தர்கள் ஏற்றி வைத்து வழிபட்டனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது.

    இதையொட்டி காட்டழகிய சிங்கர் பெருமாள் கோவில் ஆஸ்தான நாதஸ்வர வித்துவான் திருக்கண்ணபுரம் டாக்டர் டி.எஸ்.கே.சவுரிராஜன் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் திருமஞ்சனம் ஆன்மீக சொற்பொழிவு, நாதஸ்வர இசை நிகழ்ச்சி, சங்கீத ஆராதனை மற்றும் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மாருதி ராமசாமி செய்திருந்தார்.

    • புனிதநீர் திருமஞ்சனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
    • புனிதநீர் தங்கக்குடத்தில் எடுத்து வரப்படும்.

    ஐப்பசி மாதம் (துலா மாதம்) முழுவதும் காவிரி ஆற்றின் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தினமும் காலை புனிதநீர் தங்கக்குடத்தில் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்படும்.

    அந்த புனிதநீர் நம்பெருமாள் திருவாராதனம் மற்றும் திருமஞ்சனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று துலா மாத நிறைவு, கார்த்திகை மாதப் பிறப்பு மற்றும் முடவன் முழுக்கு நாளையொட்டி காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளிக்குடங்களில் புனிதநீர் சேகரித்து யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.

    • ஜனவரி 2-ந்தேதி பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
    • ஜனவரி 11-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் டிசம்பர் 23-ந் தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது. ஜனவரி 1-ந் தேதி மோகினி அலங்காரமும், 2-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    8-ந் தேதி திருக்கைத்தல சேவையும், 9-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 11-ந் தேதி தீர்த்தவாரியும், 12-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று 12.30 மணியளவில் நடைபெற்றது.

    அப்போது, கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல மேளம், நாதஸ்வரங்கள் ஒலிக்க கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமி ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள நாலுகால் மண்டபத்தில் நின்றபடி மரியாதை செலுத்தின. அதுசமயம் முகூர்த்தக்காலில் புனிதநீர் ஊற்றி சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் முகூர்த்தக்காலை கோவில் பணியாளர்கள் நட்டனர்.

    இதையடுத்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • டிசம்பர் 23-ந்தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது.
    • ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் டிசம்பர் 23-ந் தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது.

    ஜனவரி 1-ந் தேதி மோகினி அலங்காரமும், 2-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல்(பரமபதவாசல்) திறப்பும் நடைபெறுகிறது. 8-ந் தேதி திருக்கைத்தல சேவையும், 9-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 11-ந் தேதி தீர்த்தவாரியும், 12-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.

    இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று(திங்கட்கிழமை) பகல் 12 மணி முதல் பகல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின்போது ஆயிரங்கால் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல மேளம், நாதஸ்வரங்கள் ஒலிக்க கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமி ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள நாலுகால் மண்டபத்தில் நின்றபடி மரியாதை செலுத்தும்.

    அப்போது முகூர்த்தக்காலில் புனிதநீர் ஊற்றி சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் முகூர்த்தக்காலை கோவில் பணியாளர்கள் நடுவார்கள். இதையடுத்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • காவிரித்தாய்க்கு மகா ஆரத்தி நடந்தது.
    • காவிரி தாய் உருவ சிலைக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    அகிலபாரதிய சன்னியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை உள்ளிட்ட நதிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆன்மிக சேவை அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தில் புனித நதியான காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகுமாவட்டம் தலைக்காவிரியில் தொடங்கி காவிரியாறு வங்கக்கடலில் கலக்கும் பூம்புகார் வரை நதிநீரின் புனிதத்தை பாதுகாக்கவும், நதி நீர் மாசுபடாமல் பாதுகாக்கவும் வலியுறுத்தி சிறப்பு ரதயாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வகையில் 12-ம் ஆண்டு ரதயாத்திரை குடகுமலையில் அகிலபாரதிய சன்னியாசிகள் சங்க துணைத்தலைவர் சுவாமி ராமானந்தா மகராஜ் தலைமையில் கடந்த 21-ந் தேதி தொடங்கியது. இந்த ரதயாத்திரை கடந்த 24-ந் தேதி ஒகனேக்கல் பகுதியில் தமிழக எல்லைப்பகுதிக்கு வந்தது. அங்கிருந்து காவிரிக்கரையோர புனித தீர்த்தத் தலங்களில் ரதத்தில் வரும் காவிரித்தாய் சிலைக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தி, அந்தந்த பகுதிகளில் காவிரியாற்றுக்கு மகாஆரத்தி காட்டப்பட்டு வருகிறது.

    இவ்வகையில் நேற்று மாலை ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்திற்கு வந்த காவிரி ரதயாத்திரைக்கு விஷ்வ இந்து பரிஷத், உள்ளூர் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ரதயாத்திரையில் வந்த விநாயகர், அகஸ்தியர், காவிரித்தாய் சிலைக்கு அம்மாமண்டபம் படித்துறை காவிரியில் துறவியர் மற்றும் சன்னியாசிகள் அபிஷேக, ஆராதனையுடன் கூட்டுவழிபாடு நடத்தினர்.

    தொடர்ந்து காவிரித்தாய்க்கு மகா ஆரத்தி நடந்தது. நிகழ்ச்சிகளில் சன்னியாசிகள் சங்க இணைச்செயலாளர் சிவராமானந்தா, ரதயாத்திரை ஒருங்கிணைப்பாளர் கோரக்கானந்தா, தமிழ்நாடு ரதயாத்திரை தலைவர்மேகானந்தா, விஷ்வ இந்து பரிஷத் தென்தமிழ்நாடு அமைப்பு செயலாளர் சேதுராமன், மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர், பா.ஜனதா மாவட்ட ஆன்மிக பிரிவு தீப்பு, திருவேங்கடயாதவ் உள்பட பல்வேறு ஆன்மிக சேவை அமைப்புகளைச் சேர்ந்த துறவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த காவிரி ரதயாத்திரை கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம் வழியாக வருகிற 10-ந் தேதி பூம்புகாரில் நிறைவடையும் என்று நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

    முன்னதாக பெட்டவாய்த்தலை வந்த காவிரி யாத்திரைக்கு ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். காவிரி தாய் உருவ சிலைக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து காவல்காரபாளையம், திருப்பராய்த்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

    • ஊஞ்சல் உற்சவம் வருகிற 4-ந்தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.
    • ஊஞ்சல் உற்சவ நாட்களில் மூலவர் சேவை கிடையாது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வு டோலோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வருகிற 4-ந்தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. ஊஞ்சல் உற்சவத்தையொட்டி ரெங்கநாச்சியார் நேற்று மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அங்கு ரெங்கநாச்சியார் இரவு 7 மணி முதல் இரவு 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    பின்னர் இரவு 9 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். ஊஞ்சல் உற்சவ நாட்களில் மாலை 3 மணிமுதல் மாலை 5.30 மணிவரை மூலவர் சேவை கிடையாது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • பெருமாள் திருமேனியில் தைலம் பூசும் முறைக்கு தைலக்காப்பு என்று பெயர்.
    • தைலக்காப்பு உலர்வதற்கு 48 நாட்கள் ஆகும்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மூலவர் ரெங்கநாதர் திருமேனி சுதையினால் (சுண்ணாம்பு மற்றும் காறை) செய்யப்பட்டதாகும். மூலவர் ரெங்கநாதருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை. இந்த சுதை திருமேனியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தனித்தைலத்தை பூசி பாதுகாத்து வருகின்றனர். இந்த தைலம் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களோடு, நாட்டு சக்கரை உள்ளிட்ட வேறு சில பொருட்களும் சேர்த்து பாரம்பரிய முறையில் காய்ச்சி எடுத்து பெருமாள் திருமேனியில் பூசப்படுகிறது.

    பெருமாள் திருமேனியில் தைலம் பூசும் முறைக்கு தைலக்காப்பு என்று பெயர். தைலக்காப்பின் போது பெருமாளின் அனைத்து வஸ்திரங்களும், திருவாபரணங்களும் களையப்பட்டு திருமேனி முழுவதும் தைலம் பூசப்படும். தைலக்காப்பு உலர்வதற்கு 48 நாட்கள் ஆகும். அதுவரை பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்படும். தைலக்காப்பு உலர்ந்தபின் பெருமாளுக்கு வஸ்திரங்கள், நகைகள் அணிவிக்கப்பட்டு திரை அகற்றப்படும்.

    இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலகாப்பு கடந்த செப்டம்பர் 15-ந் தேதி மூலவர் பெரிய பெருமாள் மீது பூசப்பட்டது. இதனை தொடர்ந்து பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில் தைலக்காப்பு உலர்ந்துவிட்டதை அர்ச்சகர்கள் உறுதி செய்து கோவில் நிர்வாகத்திற்கு முறைப்படி தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று காலை பூஜைகளுக்குப்பின் பெருமாள் திருமேனி மீது வஸ்திரங்கள், திருவாபரணங்கள் அணிவிக்கபட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் திருமேனியை மறைத்துக் கட்டப்பட்டுள்ள திரை அகற்றப்பட்டது. தற்போது மூலவர் ரெங்கநாதரையும் அவரது திருவடியையும் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

    • நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரரை புனித நீராட வைத்தனர்.
    • நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தபேரர் நீராடுவதை கண்டருளினார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்ககொடிமரம் அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    ஊஞ்சல் உற்சவத்தின் 7-ம் நாள் அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் தாயார் சன்னதியில் திருவந்திகாப்பு கண்டருளி இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்தபேரருடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணிக்கு நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரரை புனித நீராட வைத்தனர். நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தபேரர் நீராடுவதை கண்டருளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து திருமஞ்சனங்களும் தங்க பாத்திரத்தில் நடைபெறும்.
    • காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவார்கள்.

    ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படும். இந்த மாதத்தில் காவிரி ஆறு புனிதமாகிறது. துலா (ஐப்பசி) மாதத்தில் ஒரு நாள் ஸ்ரீரங்கம் காவிரியில் புனித நீராடி ரெங்கநாதரை தரிசனம் செய்தால் காசியில் வாசம் செய்து பல புண்ணிய செயல்கள் செய்ததற்கு சமம் என பெரியவர்கள் கூறுவர்.

    இதையொட்டி காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவார்கள். இந்த மாதம் முழுவதும் காவிரி ஆற்றின் அம்மாமண்டபம் படித்துறையில் இருந்து தினமும் காலை புனித நீர் தங்க குடத்தில் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டு நம்பெருமாள் திருவாராதனம் மற்றும் திருமஞ்சனத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. மற்ற மாதங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தான் கோவிலுக்கு புனித நீர் கொண்டு செல்லப்படுகிறது.

    துலா மாதபிறப்பையொட்டி நேற்று காலை காவிரி ஆற்றின் அம்மாமண்டபம் படித்துறையில் இருந்து தங்க குடத்தில் புனிதநீர் எடுக்கப்பட்டு யானை மீது வைத்தும், வெள்ளி குடங்களிலும் புனித நீர் எடுக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு 10.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். காலை 11 மணி முதல் பகல் 1 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 2.30 மணிக்கு சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு மாலை 3 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    துலா (ஐப்பசி) மாதத்தில் நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து திருமஞ்சனங்களும் தங்க பாத்திரத்தில் நடைபெறும். மேலும் மூலவர் பெரிய பெருமாள், உற்சவர் நம்பெருமாள், தாயார் தங்க ஆபரணங்கள் மற்றும் சாலக்கிராம மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

    • 19-ந் தேதி நம்பெருமாள் நெல்லளவு கண்டருள்கிறார்.
    • 21-ந்தேதி நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கி வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதையொட்டி ஊஞ்சல் உற்சவத்தின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளினார். பின்னர் ஊஞ்சல் மண்டபத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.

    அதன் பின் இரவு 7.15 மணிக்கு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆரத்தி கண்டருளினார். இந்நிகழ்ச்சி இரவு 8.15 மணி வரை நடந்தது. அப்போது நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் நம்பெருமாள் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ம் நாளான 19-ந் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர் இரவு 6.45 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளுகிறார்.

    அதன்பின் ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 8.15 மணிமுதல் இரவு 9.15 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானத்திற்கு சென்றடைகிறார்.

    விழாவின் நிறைவு நாளான 21-ந் தேதி நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • இந்த விழா இன்று தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது.
    • 21-ந்தேதி நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார்.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதத்தில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் சிறப்பாக நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஊஞ்சல் உற்சவம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இதையொட்டி இன்று மாலை 5 மணியளவில் உற்சவர் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, மாலை 5.30 மணியளவில் தங்கக் கொடிமரத்திற்கு கிழக்கில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு அலங்காரம் வகையறா கண்டருளிய பின் இரவு 7.15 மணி முதல் இரவு 8.15 மணிவரை பெருமாள் உபய நாச்சியார்களுடன் ஊஞ்சலில் ஆடியவாறு பக்தர்களுக்கு சேவை சாதிப்பர். இரவு 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சேருவர்.

    நாளை முதல் 18-ந் தேதி வரை நம்பெருமாள் மட்டும் தினமும் மாலை ஊஞ்சல் மண்டபம் வந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருள்வார், 7-ம் திருநாளான 19-ந் தேதி உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு மாலை 6.45 மணியளவில் கொட்டாரத்தில் நெல்அளவை கண்டருளிய பின் தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளி இரவு 7.15 மணியளவில் ஊஞ்சல் மண்டபம் சேருவர். இரவு 7.45 மணி முதல் ஊஞ்சல் உற்சவம் கண்டருளிய பின் இரவு 9 மணியளவில் மூலஸ்தானத்திற்கு புறப்படுவர்.

    நிறைவு நாளான 21-ந் தேதி காலை 9.15 மணியளவில் நம்பெருமாள் புறப்பட்டு காலை 9.45 மணியளவில் சந்திரபுஷ்கரணிக்கரையில் தீர்த்தவாரி கண்டருள்வார், பின்னர் காலை 10.15 மணியளவில் ஊஞ்சல் மண்டபம் சேர்ந்த பின் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும்.

    மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை ஊஞ்சல் சேவை நடைபெறும். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில், அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    ×