search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 145730"

    திண்டுக்கல்லை சேர்ந்த வாலிபர் ஆன்லைனில் பதிவு செய்திருந்த செல்போனுக்கு பதிலாக கூரியர் மூலம் சோப்பு கட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Onlineshopping #Cheating
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள பொன்னகரத்தை சேர்ந்தவர் வெற்றி (வயது 25). ஓட்டல் ஊழியர். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் செல்போன் வாங்குவதற்காக ஒரு தனியார் நிறுவன இணையதள முகவரியில் பதிவு செய்திருந்தார். ரூ.8 ஆயிரத்து 500 மதிப்புள்ள அந்த செல்போனை கூரியர் மூலம் பெறுவதற்காக தனது வீட்டு முகவரியையும் கொடுத்திருந்தார்.

    அதன்படி, அவருடைய வீட்டுக்கு நேற்று முன்தினம் கூரியர் மூலம் ஒரு பார்சல் வந்தது. அதனை திறந்து பார்த்த வெற்றி அதிர்ச்சி அடைந்தார். செல்போனுக்கு பதிலாக ஒரு சலவை சோப்பு கட்டி வைக்கப்பட்டிருந்தது. செல்போனுக்குரிய சார்ஜர், ஹெட்போன் ஆகியவை மட்டும் சரியாக இருந்தன. உடனே, கூரியர் நிறுவன ஊழியரை அழைத்து விவரத்தை கூறினார்.

    மேலும், தான் மோசடி செய்யப்பட்டதாக கூறி, அந்த நிறுவனத்தின் மீது புகார் அளிக்க போவதாகவும் வெற்றி தெரிவித்தார். இதையடுத்து, அந்த கூரியரை பெற்றுக்கொண்ட அந்த ஊழியர் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்தினார். இதனால், வெற்றி எங்கும் புகார் அளிக்கவில்லை. இதேபோல, ஏராளமான ஆன்லைன் மோசடிகள் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.  #Onlineshopping #Cheating
    ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய கூடாது என சென்னை ஐகோர்ட் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. #MadrasHC #MadrasHCbans #crackersalesban #onlinecrackersalesban
    சென்னை:

    தீபாவளி பண்டிகை என்றாலே இனிப்பும் பட்டாசும் தான் முதலிடம் பிடிக்கும். தற்போது, இந்த இனிப்பு வகைகள் மற்றும் பட்டாசு விற்பனை துறையில் இணையதள வர்த்தக நிறுவனங்கள் கடைவிரிக்க தொடங்கி விட்டன.

    கடைகளில் சென்று வாங்கிவதைவிட பல மடங்கு குறைவான விலையில் கிடைப்பதால் ஏராளமானவர்கள் ஆன்லைன் மூலம் பட்டாசு வகைகளுக்கு ஆர்டர் செய்து வருகின்றனர். இதற்கென புதுப்புது ஆன்லைன் நிறுவனங்கள் பெருகி வருவதாக சிவகாசியில் இருந்து கொள்முதல் செய்து பிறபகுதிகளுக்கு கொண்டுவந்து கடைகளில் வைத்து விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், இந்திய பட்டாசு உற்பத்தியை பாதிக்கும்வகையில் ஆன்லைன் மூலம் தடை விதிக்கப்பட்ட சீனப் பட்டாசுகள் புழங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

    குறிப்பாக, பட்டாசு வியாபாரம் செய்ய கடை திறக்க வேண்டுமானால், வெடிப்பொருட்கள் விற்பனை சட்டத்தின்படி பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். தீபிடிக்காத கூரை, கதவுகள் மற்றும் மின்சார கசிவுகள் இல்லாத கட்டிடம் என பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்த பின்னர்தான் பட்டாசு கடை வைக்க தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் லைசென்ஸ் அளிக்க வேண்டும் என்பது பட்டாசு விற்பனைக்கான நடைமுறையாக இருந்து வருகிறது.

    ஆனால், இதுபோன்ற எவ்வித நடைமுறைகளையும் கடைபிடிக்காமல் விதிமீறலாக ஆன்லைன் மூலம் நடைபெற்றுவரும் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என ஷேக் தாவூத் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.



    இந்த வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட், ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பதற்கு தடை விதித்து, மறுவிசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. #MadrasHC #MadrasHCbans #crackersalesban #onlinecrackersalesban
    வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து நேரடியாக பணம் பெறப்படுகிறது. அந்த முறையை மாற்றி ஆன்லைனில் பணம் செலுத்தும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. #Gas
    சென்னை:

    சென்னை மண்டலத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் மூலம் 3 லட்சம் வாடிக்கையாளர்கள் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பெறுகின்றனர்.

    சென்னை மண்டலத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் தினமும் 77 ஆயிரம் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகிறது. அவற்றை கியாஸ் சிலிண்டர் நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டுக்கே சென்று நேரடியாக வழங்கி அதற்குரிய பணத்தை பெறுகின்றனர்.

    மேலும் சிலிண்டருக்குரிய பணத்துடன் அவர்கள் எடுத்துக் கொண்டு வந்ததற்கு மறைமுக சேவை கட்டணமாக கூடுதல் பணமும் பெறுகின்றனர். இது குறித்த புகார்கள் எண்ணை நிறுவனத்துக்கு வந்த வண்ணம் உள்ளன.

    அதை தடுக்கவே ‘இ-வேலட்’ எனப்படும் ஆன்லைன் பணம் பரிவர்த்தனையை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் நடைமுறைப்படுத்த உள்ளது. சிலிண்டர் ‘புக்’ பண்ணும் போது அதற்குரிய பணத்தை ஆன்லைனில் செலுத்துமாறு தகவல் அனுப்பப்படுகிறது. அதை ஒரு சில வினியோகஸ்தர்கள் மட்டுமே நடைமுறைப்படுத்துகின்றனர். அனைவரும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. இது பெயரளவில் மட்டுமே உள்ளது. எனவே அதை விரைவில் கட்டாயமாக்க எண்ணை நிறுவனம் நடவடிக்கை எடுக்க உள்ளது.


    இது குறித்து சிலிண்டர் வினியோகஸ்தர்கள் கூறும் போது, “பல வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தும் முறையை விரும்பவில்லை. இதன் மூலம் கூடுதலாக பணம் எடுத்து விடுவார்களோ என அஞ்சுகின்றனர். அதே நேரத்தில் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்கள் கூடுதலாக பணம் கேட்பதாகவும் எங்களிடம் புகார் செய்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.

    மேலும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் பெறப்படும் பணம் உடனடியாக கிடைப்பதில்லை. இடையில் விடுமுறை நாட்கள் வந்து விட்டால் போதும் தங்களது கணக்கில் வந்து சேர 2 அல்லது 3 நாள் ஆகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.

    உடனடியாக பணம் செலுத்தினால் தான் நாங்கள் சிலிண்டர்களை பெறும் நிலை உள்ளது. ஆன்லைன் பணபரிவர்த்தனைக்கு அதற்கென்று தனியாக ஒரு ஊழியரை நியமிக்க வேண்டும். அது சரிவராது, என்றும் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் இந்தியன் ஆயில் எண்ணை நிறுவனம் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறையை விரைவில் கட்டாயப்படுத்துகிறது. அதற்காக கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்களுக்கும், டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.  #Gas #IndianOil
    தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மூன்று நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. #AnnaUniversity #TNEA2018
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால், 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. வன்முறை தொடர்பான தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற காரணங்களால் மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராக முடியாமலும், வெளியூர் செல்ல முடியாமலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர் சேர்க்கை, மதிப்பெண் மறுகூட்டல் உள்ளிட்ட பணிகளுக்காக இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே, மாணவர்களின் நலன் கருதி பி.இ படிப்புக்கு  ஆன்லைனில் விண்ணப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 30 ஆம் தேதியுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் ஜூன் 2 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இண்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை ஐகோர்ட்டில் நடந்த விசாரணையில் அண்ணா பல்கலைக்கழகம் இதை தெரிவித்ததாக தமிழக அரசு கூறியுள்ளது. இதுவரை 1.12 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

    28-ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே ஒத்தி வைத்துள்ளது. இந்த தேர்வுகள் ஜூன் 5ம் தேதி முதல் 7ம்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  #SterliteProtest #InternetSuspend #AnnaUniversity #TNEA2018
    வேளாண் படிப்புக்கு இன்று முதல் இணைய தளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 17-ந்தேதி ஆகும்.
    வடவள்ளி:

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளும், 4 தொழில் முறை பாடப்பிரிவுகளும் செயல்பட்டு வருகிறது.

    இதில் உறுப்பு கல்லூரிகளில் 987 இடங்களும், இணைப்பு கல்லூரியில் 2,160 இடங்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 147 இடங்கள் உள்ளன.

    தொழிற்நுட்ப படிப்புகளில் உறுப்பு கல்லூரிகளில் 1262 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில் 3,422 இடங்கள் நிரப்பப்படுகிறது.

    இந்த கல்வி ஆண்டு முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

    சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான பிரிவில் விண்ணப்பிப்போர் தேவையான சான்றிதழ்களை கொண்டு வந்து சரிபார்க்க வேண்டும்.

    பிளஸ்-2 மதிப்பெண்களை கொண்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர் சேர்க்கை ஆன்-லைன் மூலம் நடைபெறும்.

    அதன்படி இன்று (18-ந்தேதி) முதல் இணைய தளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 17-ந்தேதி ஆகும்.

    சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றுகள் சரிபார்ப்பு அடுத்த மாதம் 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெறும்.

    தரவரிசை பட்டியல் ஜூன் 22-ந்தேதி வெளியிடப்படுகிறது.

    இதில் 65 சதவீத மாணவர்கள் கோவை வேளாண்மை கல்லூரியிலும், 35 சதவீதம் இணை மற்றும் உறுப்பு கல்லூரிகளிலும் நடைபெறும். இதனிடையே மே 21-ந்தேதி மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை குறித்து சந்தேகம் மற்றும் முறைகள் குறித்து கல்லூரி வளாகத்தில் திறந்த வெளி கண்காட்சி நடைபெறுகிறது. இதில் ஆசிரியர்கள் மாணவர்களின் சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து விளக்க உள்ளனர்.

    இதில் மாணவர்கள் கலந்து கொண்டு விண்ணப்பிக்கும் முறையில் உள்ள சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். #Tamilnews
    வேளாண் படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி அறிவித்துள்ளார். #Agricultural #Counselling
    வடவள்ளி:

    கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் ராமசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளும், 4 தொழில் முறை பாடப்பிரிவுகளும் செயல்பட்டு வருகிறது.

    இதில் உறுப்பு கல்லூரிகளில் 987 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில் 2,160 இடங்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 147 இடங்கள் உள்ளன.

    தொழிற்நுட்ப படிப்புகளில் உறுப்பு கல்லூரிகளில் 1,262 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில் 2,160 இடங்களும் என மொத்தம் 3,422 இடங்கள் நிரப்பப்படுகிறது.

    இந்த கல்வி ஆண்டு முதல் இணைய தளம் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான பிரிவில் விண்ணப்பிப்போர் தேவையான சான்றிதழ்களை குறிபிப்பிட்ட நாட்களில் நேரில் கொண்டு வந்து சரி பார்க்க வேண்டும்.

    மேல்நிலை பள்ளி தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு தர வரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறும்.


    வருகிற 18-ந்தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள். அடுத்த மாதம் 17-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

    சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றுகள் சரிபார்ப்பு அடுத்த மாதம் 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் 22-ந் தேதி வெளியிடப்படுகிறது. சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி நடக்கிறது.

    9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை முதல் கட்ட ஆன்லைன் கவுன்சிலிங் நடக்கிறது. 16-ந் தேதி தொழில் கல்விக்கான கலந்தாய்வும், 17,18-ந் தேதிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மற்றும் நிறுவனங்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது.

    23-ந்தேதி முதல் 27-ந் தேதி வரை 2-ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. ஆகஸ்டு 1-ந் தேதி கல்லூரிகள் தொடங்குகிறது. 31-ந் தேதி வரை சேர்க்கை நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Agricultural #Counselling
    ×