search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்குவளை"

    கஜா புயல் சீரமைப்பு பணி நடைபெறுவதால் நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Nagai
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

    இந்நிலையில், கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூர் தாலுகாக்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Nagai
    திருக்குவளையில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த வீடு கஜா புயலில் சேதம் அடைந்து உள்ளது. #GajaCyclone #Karunanidhi
    திருவாரூர்:

    நாகை மாவட்டம், திருக்குவளையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த வீடு உள்ளது. அந்த வீடு முத்துவேலர்-அஞ்சுகம் அம்மையார் நினைவு நூலகமாக கருணாநிதி உயிரோடு இருந்தபோதே மாற்றி அமைக்கப்பட்டது.

    இந்த வீட்டில் கருணாநிதியின் தந்தை முத்துவேலர், தாய் அஞ்சுகத்தம்மாள் ஆகியோரின் உருவ சிலைகள், கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு, அவருடைய பழைய நினைவுகளை கூறும் அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இதனால் இந்த வீட்டை தி.மு.க.வினர் போற்றி பாதுகாத்து வருகின்றனர்.

    பழமை மாறாமல் அந்த ஓட்டு வீடு பராமரிக்கப்பட்டு நினைவு சின்னமாக போற்றப்படுகிறது. இந்த நிலையில் கஜா புயலின் தாக்கத்தில் இந்த வீடும் தப்பவில்லை. கருணாநிதி பிறந்த வீட்டின் அருகில் இருந்த தென்னை மரம் ஒன்று வீட்டின் மீது விழுந்தது. வீட்டுக்கு முன்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த ‘நூலகம்’ என்ற வாசகம் அடங்கிய பெயர் பலகை மரம் விழுந்ததில் சேதமடைந்தது. மேலும் சூறாவளி காற்றினால் வீட்டின் ஓடுகளும் உடைந்தன.

    இந்த தகவலை அறிந்த கருணாநிதியின் குடும்பத்தினர் மிகுந்த கவலை அடைந்ததுடன், உடனடியாக சேதம் அடைந்த பகுதிகளை சீரமைக்குமாறு கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், கருணாநிதி பிறந்த வீட்டை உடனடியாக சீரமைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.  #GajaCyclone #Karunanidhi
    திருக்குவளை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம், திருக்குவளை அருகே உள்ள மேலவாக்கரையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள மக்கள் அங்குள்ள போர்வெல் மூலமாக குடிநீர் பெற்று பயன்படுத்தி வந்தனர். தற்போது போர்வெல் பழுது ஏற்பட்டதாலும், நிலத்தடி நீர் குறைந்து விட்டதாலும், சுமார் 2 மாதமாக அந்த பகுதிக்கு குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பெண்கள் பக்கத்து ஊருக்கு சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.

    குடிநீர் பற்றாக்குறை குறித்து பல முறை அதிகாரிகளிடம் அந்த பகுதியில் உள்ளவர்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மேலவாக்கரை மெயின் ரோட்டில் இன்று காலை காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். 

    தகவலறிந்து அங்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி மற்றும் திருக்குவளை போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 1 வாரத்திற்குள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×