search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கல்"

    வேளச்சேரி-செயிண்ட் தாமஸ் வரை பறக்கும் ரெயில் திட்டம் நீட்டிப்பு பணி 2011-ல் தொடங்கப்பட்டது. இதில் 500 மீட்டர் நிலம் கையப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. #FlyingTrainProject
    சென்னை:

    சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் சேவை தற்போது நடந்து வருகிறது. பறக்கும் ரெயிலில் தினமும் 50 ஆயிரம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் பறக்கும் ரெயில் திட்டத்தை வேளச்சேரி- செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தன.

    தெற்கு ரெயில்வே, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், சென்னை மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து பறக்கும் ரெயில் திட்டத்துக்கான நில ஆர்ஜித பணிகளில் ஈடுபட்டு வந்தது.

    நிலம் கையகப்படுத்துவதில் அதிகாரிகளுக்கும், குடியிருப்பு வாசிகளுக்கும் இடையே பிரச்சனைகள் உருவானது. நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பை விட கூடுதல் பணம் கேட்டு குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    2017-ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பு படி சதுர அடிக்கு ரூ.3,151 வழங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் சதுர அடிக்கு ரூ.4,500 வழங்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கேட்டு வந்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள், குடியிருப்பு வாசிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 40 சதவீதம் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் அதிகாரிகள் மீண்டும் குடியிருப்பு வாசிகளிடம் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். வருகிற வியாழக்கிழமை இந்த பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

    பறக்கும் ரெயில் திட்டம் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2004-ல் திருவான்மியூர் வரை நீட்டிக்கப்பட்டது. 2007-ல் வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது.

    வேளச்சேரி-செயிண்ட் தாமஸ் வரை பறக்கும் ரெயில் திட்டம் நீட்டிப்பு பணி 2011-ல் தொடங்கப்பட்டது. இதில் 500 மீட்டர் நிலம் கையப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    நிலம் கையகப்படுத்துவது குறித்து குடியிருப்புவாசிகளிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. வருகிற வியாழக்கிழமை இந்த பேச்சுவார்த்தை நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #FlyingTrainProject
    பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. #ImranKhan #Pakistan
    இஸ்லாமாபாத்:

    அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

    கிரிக்கெட் வீரராக இருந்து, அரசியல்வாதியாக மாறிய இம்ரான்கானின் (வயது 65) தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்து, சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று கூட்டணி அரசு அமைக்கும் நிலை உள்ளது.

    தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள இம்ரான்கான் என்றைக்கு பதவி ஏற்பார் என்பதில் நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது. முன்னதாக அவர் 14 அல்லது 15-ந் தேதி பதவி ஏற்கக்கூடும் என தகவல்கள் வெளிவந்தன.

    இந்த நிலையில் இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அது விவரம் வருமாறு:-

    பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிக்கையை அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் வெளியிட்டது.

    அதில் 9 நாடாளுமன்ற தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் கமிஷன் நிறுத்தி வைத்து உள்ளது. இதன் காரணமாக இம்ரான்கான் கட்சியின் பலம் 116-ல் இருந்து 112 ஆக குறைந்து விட்டது. அதன் கூட்டணி கட்சியான பலுசிஸ்தான் அவாமி லீக் கட்சியின் பலமும் 4 என்ற எண்ணிக்கையில் இருந்து 3 ஆக குறைந்து இருக்கிறது.

    நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள 9 நாடாளுமன்ற தொகுதி முடிவுகளில், இம்ரான்கான் போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 தொகுதிகளில் இரண்டான என்.ஏ. 53 (இஸ்லாமாபாத்), என்.ஏ. 131 (லாகூர்) தொகுதிகளும் அடங்கும்.

    என்.ஏ. 53 (இஸ்லாமாபாத்) தொகுதியில் இம்ரான்கான், முன்னாள் பிரதமர் அப்பாசியை தோற்கடித்து இருந்தார். என்.ஏ. 131 (லாகூர்) தொகுதியில் முன்னாள் மந்திரி கவாஜா சாத் ரபீக்கை வீழ்த்தி இருந்தார்.

    இம்ரான்கான் வெற்றி பெற்று உள்ள எஞ்சிய 3 தொகுதிகளான என்.ஏ.35 (பான்னு), என்.ஏ. 95 (மியான்வாலி-1), என்.ஏ.243 (கராச்சி கிழக்கு-2) தொகுதி முடிவுகளும் நிபந்தனையின் கீழ் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்த 3 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இம்ரான்கான் மீது தொடரப்பட்டு உள்ள வழக்குகளின் முடிவுக்கு கட்டுப்பட்டதாகும்.

    தேர்தல் நடத்தை விதிகள் என்று பொதுவாக குறிப்பிட்டு இருந்தாலும், அது இஸ்லாமாபாத் தொகுதியில் தேர்தலின்போது இம்ரான்கான் ஓட்டு போடுவதற்கு திரைக்கு பின்னால் செல்லாமல், தேர்தல் அதிகாரியின் மேஜை மீது ஓட்டுச்சீட்டில் முத்திரை குத்தி, வாக்கு ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை மீறியது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், இம்ரான்கான் தேர்தல் வெற்றியில் 2 தொகுதிகளின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதும், எஞ்சிய 3 தொகுதிகளின் முடிவுகள் நிபந்தனைக்கு உட்பட்டது என்பதும் அவர் பிரதமர் பதவியை ஏற்பதில் சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படு கிறது.

    மொத்தத்தில் இம்ரான்கான் கட்சியின் பலம் 116-ல் இருந்து 112 ஆக குறைந்து இருப்பதுவும் பிரச்சினைக்கு உரியதாக அமைந்து உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    இதேபோன்று நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள 9 நாடாளுமன்ற தொகுதி முடிவுகளில், 3 தொகுதிகள் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் மக்கள் கட்சி வென்ற ஒரு தொகுதியிலும், பலுசிஸ்தான் அவாமிலீக் கட்சி வெற்றி பெற்ற ஒரு தொகுதியிலும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    மொத்தத்தில் பாகிஸ்தானில் தற்போது கள நிலவரம், நிச்சயமற்றதாக உள்ளது.  #ImranKhan #Pakistan #tamilnews
    கட்டுமான பொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால் வீடுகள் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளதாக ஆதிவாசி மக்கள் ஜமாபந்தியில் குற்றம்சாட்டினர்.
    குன்னூர்:

    குன்னூர் அருகே கொலக்கொம்பை செங்குட்ராயன் மலை ஆதிவாசி குடியிருப்பு உள்ளது. இங்கு 8 ஆதிவாசி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மேலூர் ஊராட்சியின் 14-வது வார்டுக்குட்பட்டதாகும். இங்கு வசிக்கும் மக்களுக்கு குன்னூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலம் வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

    முதல்கட்டமாக 4 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணி தொடங்கப்பட்டது. ஆனால் வீடுகள் கட்டும் பணி தற்போது பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கு தனியார் எஸ்டேட் நிர்வாகம் அப்பகுதி இரும்பு கதவு அமைத்து உள்ளதால் வாகனம் மூலம் கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை என்று ஆதிவாசி மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து குன்னூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் செங்குட்ராயன் மலை ஆதிவாசி மக்கள் மனு கொடுத்து உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் செங்குட்ராயன் மலை பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 4 வீடுகள் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டது. இதற்கு தேவையான கட்டுமான பொருட்கள் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தனியார் எஸ்டேட் நிர்வாகம் அப்பகுதியில் இரும்பு கதவு அமைத்து உள்ளதால் கட்டுமான பொருட்கள்கொண்டு செல்ல முடியவில்லை.

    இதனால் கடந்த 3 மாதங்களாக பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் கடிதம் அனுப்பியும் தனியார் எஸ்டேட் நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வீடுகள் கட்டி தர ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டியில் பலியான 6 பேரின் உறவினர்கள் வராத காரணத்தால் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. #Thoothukudifiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் தடியடி சம்பவத்தில் பலியான 13 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சென்னை ஐகோர்ட்டில் 3 வக்கீல்கள் பொது நல வழக்கு தொடர்ந்தனர்.

    அதன்படி பலியான 13 பேரின் உடல்களை மறு உத்தரவு வரும் வரை பதப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலேயே அனைத்து உடல்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. நீதிபதிகள் முன்னிலையில் நடத்தப்படும் இந்த பிரேத பரிசோதனை முழுவதுமாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

    நேற்று முன்தினம் வரை 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மற்ற 6 பேரின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த 6 பேரின் உறவினர்கள் யாரும் வராததால் அந்த உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இன்றும் அந்த 6 பேரின் உறவினர்கள் வராத காரணத்தால் அந்த உடல்களை பிரேத பரிசோதனை செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. #Thoothukudifiring
    ×