search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 150339"

    • நெல்லையில் மீட்கப்பட்ட பெண் யானை திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது
    • திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது

    மண்ணச்சநல்லூர்,

    திருச்சியை அடுத்த சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் யானைகள் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. அனுமதியின்றி தனியாரால் வளர்க்கப்படும் யானைகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட யானைகள் மீட்கப்பட்டு இந்த மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த யானைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது இந்து, சந்தியா, ஜெயந்தி, மலாச்சி, இந்திரா, கோமதி, சுமதி, கிரபி, ரூபாலி ஆகிய 9 யானைகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. 9 யானைகளுக்கு தலா ஒரு பாகன் உடனிருந்து கவனித்து வருகிறார்கள்.இந்த நிலையில் திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் அனுமதியின்றியும், போதிய பராமரிப்பு இல்லாமலும் வளர்க்கப்பட்ட யானையை பிச்சை எடுக்க வைத்து துன்புறுத்துவதாக தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் வனத்துறையினருக்கு புகார் அளித்தனர்.இதன்படி வனத்துறையினர் சுமார் 67 வயதான சுந்தரி என்ற பெண் யானையை மீட்டு திருச்சியை அடுத்த எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர். மறுவாழ்வு மையத்தின் புதிதாக வந்துள்ள சுந்தரி யானையை தலைமை வனப் பாதுகாவலர் சதீஷ் ஆலோசனையின் படி திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண், உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார் மற்றும் வனச்சரக அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.மேலும் வனக் கால்நடை மருத்துவ அலுவலர் யானையை பரிசோதித்து அதன் வயது, உடல் நிலை, எடை அளவு ஆகியவற்றின் அடிப்படையில் யானைக்கு வழங்க வேண்டிய உணவு வகைகள் குறித்து அறிக்கை கொடுக்க இருக்கிறார். அதன் அடிப்படையில் தொடர் சிகிச்சை மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. அது மட்டுமின்றி யானைக்கு காச நோய் உள்ளிட்ட ஏதேனும் நோய்கள் உள்ளதா என்பதை அறிய யானையின் சளி, சாணம், சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகளை கால்நடை மருத்துவர்கள் எடுத்து பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பரிசோதனை அறிக்கை முடிவு வந்த பிறகு சில நாட்களில் ஏற்கனவே மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுடன் இந்த யானையும் சேர்க்கப்படும். அதுவரை சுந்தரி யானை தனிமையில் வைத்து பராமரிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.புதிதாக வந்துள்ள யானை சுந்தரியை சேர்த்து மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.நெல்லையில் இருந்து மீட்கப்பட்ட யானை சுந்தரி திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து வரப்பட்ட காட்சி.

    • மகுடஞ்சாவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்து, கை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார்.
    • எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்து, கை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதைக் கண்ட அந்த பகுதி மக்கள், உடனடியாக இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இறந்தவர் ரெயி லில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்தும், அந்த பகுதியில் காணாமல் போனவர்கள் பட்டியல் எடுத்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி மெயின் ரோட்டில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு அருகே சுமார் 52 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார்.
    • சேலம் ஆனந்தா பாலம், தனியார் மருத்துவமனை அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.

    சேலம்:

    சேலம் டவுன் போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட, திருச்சி மெயின் ரோட்டில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு அருகே சுமார் 52 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் டவுன் போலீசார், அவரது உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல், சேலம் ஆனந்தா பாலம், தனியார் மருத்துவமனை அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.

    அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரது உடலை மீட்ட டவுன் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். பிணமாக மீட்கப்பட்ட 2 பேர் குறித்து அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • வெள்ளியணை அருகே 20 அடி ஆழ விவசாயத்திற்கான கிணற்றில் துார் வாரும் போது விழுந்த 2 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்
    • தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    கரூர், 

    கரூர் நகரை சேர்ந்தவர்கள் சந்தோஷ் குமார் (வயது 24), சரவணன் (33) சாமிநாதன் (32), ஆனந்த் (30). இவர்கள் அனைவரும் கூலி தொழிலாளர்கள். இவர்கள், நான்கு பேரும், கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே ஆட்டையாம்பரப்பு பகுதியில், 20 அடி ஆழ விவசாய கிணற்றை, துார் வாரும் வேலைக்கு சென்றனர்.முதலில் சாமிநாதனும், ஆனந்தும் ராட்டையில் கயிறு கட்டி, அதன் மூலம் பாதுகாப்பாக கிணற்றில் இறங்கினர். பிறகு, சந்தோஷ்குமாரும், சரவணனும், கயிறு மூலம் கிணற்றில் இறங்கிய போது, ராட்டை அறுந்து விழுந்ததால், இருவரும் கிணற்றில் விழுந்தனர். தகவல் அறிந்த, கரூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று 'ஸ்ட்ரெச்சர்' மூலம், இருவரையும் உயிருடன் மீட்டு, சிகிச்சைக்காக, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெண்கள், குழந்தைகள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டனர்.
    • தேவையான வசதிகள் மற்றும் மருத்துவ உதவிகளை ராணுவ வீரர்கள் செய்து வருகின்றனர்.

    சிக்கிம்:

    கிழக்கு சிக்கிம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சிகாங்கு ஏரிப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டனர். அவர்களது வாகனங்களை அங்கிருந்து நகரத்தை முடியாமல் தவித்தனர்.

    இதுபற்றி அறிந்த ராணுவ வீரர்கள் அவர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் மருத்துவ உதவிகளை ராணுவ வீரர்கள் செய்து வருகின்றனர்.

    • 4 நாய்க்குட்டிகள் சாலையில் குறுக்கே அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்தது.
    • செல்ல பிராணிகளை சாலையில் விடாமல் பாதுகாக்க முன்வர வேண்டும்.

    கோபி:

    கோபிசெட்டி பாளை யத்தில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் பாரியூர் கோவில் அருகே பிறந்து சில நாட்களே ஆன 4 பெண் நாய்க்குட்டிகளை அடையாளம் தெரியாத நபர்கள் சாலையோரமாக விட்டு சென்றுள்ளனர்.

    அப்போது பசியில் தவித்த அந்த 4 நாய்க்குட்டிகள் சாலையில் குறுக்கே அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்தது. இந்த நாய்க்குட்டிகளுக்கு அந்த வழியாக சாலையில் செல்லும் சில வாகன ஓட்டிகள் பால் ஊற்றி சென்று வந்தனர்.

    இந்த நிலையில் கோபியில் இருந்து அத்தாணி சாலையில் செல்லும் பாரியூர் அருகே சாலையோரம் கைவிடப்பட்ட நாய்க்குட்டி களின் பரிதாப நிலை கண்டு ஆப்பக்கூடல் நர்சிங் கல்லூரி முதல்வர் கலை வாணி என்பவர் நாய்க்குட்டி களை மீட்டு சென்று உள்ளனர்.

    அப்போது கூகலூர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் நாய்க்குட்டிகளுக்கு பிஸ்கட் கொடுத்து நாய்க்குட்டிகளை மீட்க உடன் இருந்து உதவினார்.

    இதனையடுத்து 4 நாய்க் குட்டிகளையும் தாய் அன்புடன் மீட்டு சென்ற சம்பவத்தை நேரில் பார்த்த சாலையோர வாகன ஓட்டிகள் மற்றும் பிராணிகள் நல ஆர்வலர்கள் சிலர் நாய்க்குட்டிகளை மீட்டு சென்ற நபருக்கு உணர்வுபூர்வமாக நன்றி தெரிவித்து சென்றதையும் காண முடிந்தது.

    பூனைக்குட்டி மற்றும் நாய்க்குட்டி உள்ளிட்ட வீட்டு செல்ல பிராணிகளை சாலையில் விடாமல் பாதுகாக்க முன்வர வேண்டும். அல்லது பிராணிகள் நல அமைப்பு தொடர்பு கொண்டு பாதுகாக்க வேண்டும் என்பதே பிராணிகள் நல ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

    • கடந்த ஓராண்டாக பாதுகாப்பின்றி சுற்றி திரிந்தவர் மீட்பு
    • தனியார் மனநல காப்பகத்தில் ஒப்படைப்பு

    கரூர்,

    அரவக்குறிச்சி தாலுகா, ஈசநத்தம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க மன நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கடந்த ஓராண்டாக, பாதுகாப்பின்றி சுற்றித்திரிவ தாகவும், அவரை மீட்டு, மன நல காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க கோரி, சமூக ஆர்வலர்கள் அரவக்குறிச்சி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், குளித் தலை அருகே, சாந்தி வனம் மனநல காப்பகத்தினரை போலீசார் தொடர்பு கொண்டு, அந்த பெண்ணை மீட்டு, மருத்துவ சிகிச்சை, பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, சாந்திவனம் மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் அனிதா, டிரைவர் வேல்மு. ருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஈசநத்தம் சென்று அந்த பெண்ணை மீட்டு, திருச்சியில் ள்ள தனியார் மன நல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    • ஜகைய்யா பேட்டை செருவு பஜாரை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் ஷில்பாவுடன் சேர்ந்து கடந்த ஒரு ஆண்டில் 4 குழந்தைகளை விற்பனை செய்துள்ளனர்.
    • மீட்கப்பட்ட குழந்தைகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் ஜக்கையா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    திருப்பதி:

    மகாராஷ்டிரா மாநிலம், பிரமணி மாவட்டம் பாலம் போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு முதல் இதுவரை 17 குழந்தைகள் காணாமல் போனதாக புகார் பதிவாகி இருந்தது. போலீசார் விசாரணையில் 2 முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் காணாமல் போனதாக தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் சங்கீதா ஆனந்த். இவர் மும்பையை சேர்ந்த ருக்சன் சந்த் பாஷா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் கருத்தரிப்பு மையத்தில் கருமுட்டை தானம் செய்யும் முகவராக பணியாற்றி வருகிறார்.

    சங்கீதா தனது கணவரை சந்திக்க அடிக்கடி மும்பைக்கு சென்று வந்தார். அப்போது மகாராஷ்டிராவில் குழந்தைகளை கடத்தி விற்கும் சுல்தானா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சுல்தானா கடத்தி வரப்படும் குழந்தைகளை விற்க இருவரும் ஒப்பந்தம் செய்தனர். அதன்படி சங்கீதா தனக்கு தெரிந்த விஜயவாடாவை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் பகடலாவை சேர்ந்த ஷிரவாணியை சந்தித்து குழந்தை இல்லாத தம்பதிகளை அடையாளம் கண்டு கடத்தி வரப்பட்ட குழந்தைகளை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.

    இதேபோல் ஜகைய்யா பேட்டை செருவு பஜாரை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் ஷில்பாவுடன் சேர்ந்து கடந்த ஒரு ஆண்டில் 4 குழந்தைகளை விற்பனை செய்துள்ளனர். வட்சவாய், தூக்கு பாலத்தில் 2 குழந்தைகளும், ஜக்கைய்யா பேட்டையில் ஒரு குழந்தையும், விசன்னானா பேட்டையில் ஒரு குழந்தையும், ரூ.2 லட்சம் முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    அதன்படி சரண், சையத் சுபானி, சயத் அயன் ஆகிய 3 குழந்தைகள் மீட்கப்பட்டது.

    மீட்கப்பட்ட குழந்தைகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் ஜக்கையா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    குழந்தைகள் கடத்தி விற்பனை செய்யப்பட்டதால் வழக்கு பதிவு செய்து பின்னர் குழந்தைகளை ஒப்படைக்கப்படும் என போலீசார் பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து குழந்தைகள் விற்பனை செய்ததாக தனியார் ஆஸ்பத்திரி நர்சுகள் ஷிரவாணி, ஷில்பா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடந்த 5-ந்தேதி ஒரு சிறுவன் மற்றும் இரண்டு குழந்தைகள் அடையாளம் கண்டு மீட்கப்பட்டு மகாராஷ்டிராவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    மேலும் ஜக்கையா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சங்கீதா, மும்பையை சேர்ந்த சுல்தானா ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • 17 வயது சிறுவனை மீட்ட போலீசார்
    • வி.ஏ.ஓ. அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை

    கரூர்,

    கரூர் மாவட்டம், செல் லாண்டிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும், பிளீச்சிங் கம்பெனியில், குழந்தை தொழி லாளர்கள் பணியமர்த்தப்பட் டுள்ளதாக, தோரணக்கல்பட்டி வி.ஏ.ஓ., நாக மணிகண்டன், தான்தோன்றி மலை போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து வருவாய் துறை அலுவலர்களுடன், போலீசார், சம்பந்தப் பட்ட கம்பெனியில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த, செல்லாண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவனை, தான்தோன்றி மலை போலீசார் மீட்டனர்.

    • பொதுமக்கள் தகவல் அளித்தின் பேரில் வனத்துறையினர் மீட்பு
    • சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டது

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்ட உடையார்பாளையம் ரெங்கசமுத்திரம் ஏரி அருகே மான் ஒன்று காயங்களுடன் துடித்து கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.இதனை தொடர்ந்து வனக்காப்பாளர்முத்துராஜ் தலைமையில் அங்கு வந்த வனத்துறையினர் மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது மர்ம விலங்கு கடித்து மானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மான் பாதுகாப்புடன் வேனில் ஏற்றப்பட்டு கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவரால் அந்த ஆண் மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. துள்ளி குதித்து ஓடும் அளவிற்கு மானின் உடல் நிலை தேறிய பின்னர் வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

    • கடந்த 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் திருடுபோன ரூ.23 கோடி மதிப்புள்ள நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டது.
    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தமிழக டி.ஜி.பி. சைலேந் திரபாபு ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

    ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கள் தங்கதுரை (ராமநாதபுரம்), செல்வராஜ் (சிவகங்கை) உள்ளிட்ட போலீஸ் அதிகா ரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் திருடுபோன ரூ.46 லட்சம் மதிப்புள்ள 146 பவுன் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து 2 மாவட்டங்களிலும் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சான்றிதழ் மற்றும் வெகுமதியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.

    முன்னதாக ராமநாத புரம் வந்த டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, போலீஸ் சூப்பிரண்டுகள் ெ தங்கதுரை, செல்வராஜ் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்ட சைலேந்திரபாபு சிறப்பாக பணியாற்றிய 30 போலீசாருக்கு சான்றிதழ் களை வழங்கினார்.

    தொடர்ந்து டி.ஜி.பி. நிருபர்களிடம் கூறியதா வது:-

    ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் திருடுபோன ரூ.46 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதே போல் கடந்த 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் திருடுபோன ரூ.23 கோடி மதிப்புள்ள நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பிற மாநிலத்தவர் தாக்கப்படுவது போல் பொய்யான தகவலை சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இவ்வாறு 2 வீடியோக்களை முகம்மது ரஸ்பி என்பவர் பதிவிட்டுள்ளார். இவர் வெளியிட்ட வீடியோவில் ஒன்று பிற மாநிலத்தவர் அவர்களுக்குள் மோதிக்கொண்ட சம்பவம், மற்றொன்று கோவையில் உள்ளூர்காரர்கள் மோதிக்கொண்டது. இதுபோன்ற தவறான வீடியோ வெளியிட்ட முகம்மது ரஸ்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதே போன்று தவறான செய்திகள் வெளியிடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகள் போலீஸ் அதிகாரிகளை தாக்கினால் சூழ்நிலைக்கேற்ப அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும் கைது செய்ய தயங்கமாட்டார்கள். ராமநாதபுரத்தில் 1200 போலீசார் பணியாற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பட்டாலியன் விரைவில் வரவுள்ளது.

    காவல்நிலைய துன்பு றுத்தல்கள் இந்தாண்டு ஏதும் நடைபெறவில்லை. சென்ற ஆண்டு 4 நிகழ்வுகள் நடைபெற்றன. தற்போது பொதுமக்களிடம் போலீசார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் குற்றவாளிகளிடம் அறிவியல் பூர்வமாக விசாரணை மேற்கொள்ளப்படுவதால் துன்புறுத்தல்களுக்கு வேலை இல்லை. 18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனங்கள் ஓட்ட பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆக்கிரமிப்பில் இருந்த 1.60 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டன.
    • ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு ஒருங்கிணைந்த வளாகம் கட்டும் பணி தொடங்கப்படும்

    சோழவந்தான்

    வாடிப்பட்டி யூனியனுக்கு உட்பட்ட காடுபட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.40லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம், ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகம், சேவை மையம் என ஒருங்கி ணைந்த வளாகம் கட்ட கடந்தாண்டு நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது.

    இதற்காக காடுபட்டி கிராமத்தில் சர்வே எண் 566/37 மற்றும் 293/2-ல் அமைந்துள்ள அரசு நத்தம் நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளதால் வருவாய் துறை மூலம் சர்வே பணி செய்து கொடுக்க காடுபட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் வாடிப்பட்டி தாலுகா அலுவலத்தில் உள்ள வட்ட அளவையர் பிரிவில் சர்வே பணிக்குறிய தொகையான ரூ.1600-ஐ இ-சலான் மூலம் கடந்தாண்டு நவம்பர் 14-ல் செலுத்தப்பட்டது.

    ஆனால் இதுவரை அரசு நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெறா மல் 4 மாதங்களாக சர்வே பிரிவினர் இழுத்தடிப்பு செய்து வந்தனர். இந்த நிலையில் தென்கரை குறுவட்ட அளவையர் சந்திரா தலைமையில் காடுபட்டி அரசு நத்தம் சர்வே எண். 566/37 மற்றும் வடகாட்டுபட்டி மந்தைகளம் சர்வே எண் 293/2-ல் உள்ள 1 ஏக்கர் 60 செண்ட் நிலத்தை அளவீடு செய்து எல்லைக்கல் ஊன்றி நிலத்தை மீட்டனர்.

    அப்போது ஊராட்சி தலைவர் ஆனந்தன், யூனியன் பொறியாளர் பூம்பாண்டி, மேற்பார்வை யாளர் கருப்பையா, கிராம நிர்வாக அலுவலர் மணிவேல் ஆகியோர் உடனி ருந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், முத்துபாண்டி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு ஒருங்கி ணைந்த வளாகம் கட்டும் பணி தொடங்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    ×