என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்து தகராறு"

    • ஓம் பிரகாஷ் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.
    • ஓம் பிரகாஷுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சொத்து பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஓம் பிரகாஷ் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். ஓம் பிரகாஷுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சொத்து பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஓம் பிரகாஷின் மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் 10 முறை கத்தியால் அவரது மனைவி பல்லவி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஓம் பிரகாஷின் மனைவியையும் கொலை செய்ததற்கு உதவியாக இருந்ததாக அவரது மகளையும் கைது செய்தனர்.

    • ராம்குமாரை முருகேசன் உள்ளிட்ட 2 பேர் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றனர்.
    • மாரியம்மாளுக்கும், அவரது அண்ணன் முருகேசனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அண்ணா நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் மாயா என்ற ராம்குமார் (வயது 45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மாரியம்மாள் (42).

    இவரது அண்ணன் முருகேசன் (49) என்பவர் அதே தெருவில் மேற்கு பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

    கணவன்-மனைவி கொலை

    நேற்று இரவு ராம்குமார் தனது வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகேசன் உள்ளிட்ட 2 பேர் சேர்ந்து ராம்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றனர்.

    பின்னர் முருகேசன் உள்ளிட்ட 2 பேரும், ராம்குமார் வீட்டிற்கு சென்று அங்கிருந்த ராம்குமாரின் மனைவியும், தனது சகோதரியுமான மாரியம்மாளையும் சரமாரியாக வெட்டி கொன்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தந்தை-மகனுக்கு வலைவீச்சு

    அதில் மாரியம்மாளுக்கும், அவரது அண்ணன் முருகேசனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. சமீபத்தில் அந்த சொத்து மாரியம்மாள் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், அவரது மகன் மகேஷ் (20) ஆகியோர் ராம்குமார் மற்றும் மாரியம்மாளை கொலை செய்தது தெரியவந்தது.

    இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தர வின்பேரில் டி.எஸ்.பி. சத்தியராஜ் மேற்பார்வை யில் இன்ஸ்பெக்டர் ராஜா ராமன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.

    தலைமறைவான தந்தை-மகன் எங்கு உள்ளனர் என போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர். 

    • சுரேஷ்குமார் (வயது 52). வார்டு உறுப்பினர், தி.மு.க. கிளைச் செயலாளர், இவரது தம்பி ரமேஷ் (50). பா.ஜ.க. பிரமுகர்.இவர்களுக்குள் சொத்து தகராறு அடிக்கடி ஏற்படும். .
    • இவர்களுக்கு நடந்த தகராறில் நிலை தடுமாறிய ரமேஷ் அங்கேயே மயங்கி விழுந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் சென்னை சாலையில் வ.வு.சி. நகர் உள்ளது. இங்கு சுரேஷ்குமார் (வயது 52). வார்டு உறுப்பினர், தி.மு.க. கிளைச் செயலாளர். வெட்கிரைண்டர் சர்வீஸ் செய்யும் பணி செய்கிறார். இவரது தம்பி ரமேஷ் (50). பா.ஜ.க. பிரமுகர். இவர் கட்டில், பீரோ செய்து விற்பனை செய்கிறார். இவர்கள் 2 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது தந்தை மறைவிற்கு பின்னர், இவர்களுக்குள் சொத்து தகராறு அடிக்கடி ஏற்படும்  இந்நிலையில், இன்று காலை சுரேஷ்குமார் மனைவிக்கும், ரமேஷின் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் 2 பேரும் ஈடுபட்டனர். அப்போது 4 பேருக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ரமேஷை, சுரேஷ்குமார் பிடித்து தள்ளினார். இதில் வீட்டின் சுவற்றில் ரமேஷின் தலை மோதியது.

    இதனால் நிலை தடுமாறிய ரமேஷ் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரமேஷ் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ரமேஷின் மனைவி அனு பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும், தள்ளுமுள்ளு நடந்த போது ரமேஷின் மகள் செல்போனில் வீடியோ எடுத்திருந்தார். இதனையும் போலீசாரிடம் காண்பித்து ரமேஷின் மனைவி அனு புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, சரண்யா தலைமையிலான போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தாயாரிடம் வீடு மற்றும் வங்கியில் உள்ள நகை பணத்தை சரிபாதியாக பிரித்து தர வேண்டுமென அவரது மகள்கள் வற்புறுத்தி வந்தனர்.
    • தாயார் மறுப்பு தெரிவித்ததால், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தாயாரை ஆஸ்பத்திரியில் தனியாக தவிக்க விட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் ஆர்பி நகர் காலனி சேர்ந்தவர் கிஷ்டவ்வா (வயது 70). இவருக்கு சுடோ, ஏலா என 2 மகள்கள் உள்ளனர்.

    கிஷ்டவ்வாவுக்கு கடந்த மாதம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களது மகள்கள் தாயாரை சிகிச்சைக்காக காமரெட்டி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கிஷ்டவ்வாவுக்கு ஆர்.பி. நகரில் சொந்த வீடும், அங்குள்ள வங்கியில் ரூ. 1.70 லட்சம் பணம், நகைகள் உள்ளன. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தாயாரிடம் வீடு மற்றும் வங்கியில் உள்ள நகை பணத்தை சரிபாதியாக பிரித்து தர வேண்டுமென அவரது மகள்கள் வற்புறுத்தி வந்தனர்.

    இதற்கு அவரது தாயார் மறுப்பு தெரிவித்ததால், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தாயாரை ஆஸ்பத்திரியில் தனியாக தவிக்க விட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிஷ்டவ்வா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மகள்களுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர்.

    ஆஸ்பத்திரிக்கு மகள்கள் மற்றும் உறவினர்கள் வந்தனர். மகள்கள் இருவரும் தாயின் வீடு மற்றும் நகை, பணத்தை சரிபாதியாக பிரித்துக் கொடுத்தால் தான் பிணத்தை வாங்கி செல்வோம் என உறவினர்களிடம் தெரிவித்தனர்.

    இதுகுறித்து டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து மகள்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இருப்பினும் அவர்கள் வீடு, நகை, பணத்தில் மட்டும் குறியாக இருந்தனர். தொடர்ந்து தாயின் உடலை வாங்க மறுத்தனர். வேறு வழியின்றி அவரது தாயாரின் பிணத்தை பிணவறையில் வைத்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பிணமாக கிடந்த அமலோற்பவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • சொத்து பிரச்சினையில் தாய், தந்தையரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே திட்டுவிளை பெருங்கடை தெரு பகுதியை சேர்ந்தவர் பவுல். இவரது மனைவி அமலோற்பவம் (வயது 68). இவர்களுக்கு மோகன்தாஸ் (50) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி விட்டது. மோகன்தாஸ் மனைவி குழந்தைகளுடன் வீட்டின் மாடியில் வசித்து வருகிறார்.

    பவுல், அமலோற்பவம் இருவரும் வீட்டின் கீழ் பகுதியில் வசித்து வந்தனர். தந்தை-மகனுக்கு இடையே சொத்து பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மோகன்தாஸ் நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். வீட்டின் கீழ் பகுதியில் தாய்-தந்தை வசித்து வந்த வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த பவுல், அமலோற்பவத்திடம் தனக்கு சொத்து தருமாறு கேட்டு தகராறு செய்தார்.

    அப்போது அவர்கள் மோகன்தாஸிற்கு சொத்து கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மோகன்தாஸ், தந்தை பவுல், தாய் அமலோற்பவம் இருவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் அமலோற்பவத்திற்கு கழுத்து, முதுகு பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பவுலுக்கு முதுகு, கழுத்து, தோள்பட்டை பகுதியில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றிய தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கிடந்த அமலோற்பவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாயாரை வெட்டி கொலை செய்த மோகன்தாஸ் பூதப்பாண்டி போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரிடம் அவர் கூறியதாவது:-

    நான் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இது எனது தந்தைக்கு பிடிக்கவில்லை. இதனால் அவரது சொத்துக்களை எனக்கு தர மறுத்தார். எனது சகோதரிகளுக்கு சொத்துக்களை கொடுத்தார். மேலும் சொத்துக்களை விற்று வந்த பணத்தையும் எனக்கு தரவில்லை.

    கடந்த 10-ந்தேதி சிறமடம் பகுதியில் 5 ஏக்கர் சொத்தை ரூ.30 லட்சத்திற்கு விற்பனை செய்தார். அதில் கிடைத்த ரூ.15 லட்சம் பணத்தை எனது சகோதரிகளுக்கு கொடுத்தார். எனக்கு பணம் தராதது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எனது தாய், தந்தையிடம் எனக்கும் சொத்தில் பங்கு தரவேண்டும். சொத்து விற்பனை செய்து வந்த பணத்தை எனக்கு தர வேண்டும் என்று கேட்டேன்.

    ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட தகராறில் அவர்களை அரிவாளால் வெட்டினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போலீசார் தொடர்ந்து மோகன்தாசிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். சொத்து பிரச்சினையில் தாய், தந்தையரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முதியவர் குமரகுரு தனது தலையை சுவற்றில் மோதி தற்கொலைக்கு முயன்றார்.
    • படுகாயம் அடைந்த குமரகுரு, மங்கை லட்சுமி, ராணி ஆகிய 3 பேருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி பிராடிஸ் ரோடு, பகுதியை சேர்ந்தவர் மங்கை லட்சுமி (வயது84). இவரது மகள் ராணி (61). மங்கைலட்சுமியின் தம்பி கூத்து என்ற குமரகுரு (72). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சொத்து தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குமரகுரு அருகில் கிடந்த சுத்தியலால் மங்கைலட்சுமி, அவரது மகள் ராணி ஆகியோரை தலையில் பலமாக தாக்கி கொல்ல முயன்றார். இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் குமரகுரு தனது தலையை சுவற்றில் மோதி தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயம் அடைந்த குமரகுரு, மங்கை லட்சுமி, ராணி ஆகிய 3 பேருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுந்தரேசன் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார்.
    • போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு மாவுத்தன்பட்டியை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 40) கூலித்தொழிலாளி. கடந்த 25ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு கொடைரோடு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் மறுநாள் ஏட்டுநாயக்கர் காலனி பகுதியில் உள்ள புளியமரத்தோப்பில் சுந்தரேசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மைய நாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரேசன் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகன், இன்ஸ்பெக்டர் குருவத்தாய் தலைமையில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை முடிவில் சுந்தரேசன் தலையில் வெட்டுக்காயம் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுந்தரேசனின் தாய் ராஜாமணி, சகோதரர் முருகன் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் சுந்தரேசன் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் அடிக்கடி தாய் மற்றும் வீட்டில் உள்ளவர்களை அடித்து தாக்கியுள்ளார். சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் முருகன் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த சுந்தரேசன் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 செண்ட் நிலம் தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • பெற்ற மகனையே தந்தை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பள்ளக்காடு நடுவீதி பகுதியை சேர்ந்தவர் விவசாயி வையாபுரி (வயது 85). இவருக்கு பூமாலை, துரைராஜ் (வயது 55) என்கிற 2 மகன்களும், சகுந்தலா என்ற 1 மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் மூத்த மகன் பூமாலை இறந்துவிட்ட நிலையில், 2-வது மகன் துரைராஜூடன், வையாபுரி வாழ்ந்து வருகிறார். இதனிடையே இவர்களுக்கு சொந்தமான 3 செண்ட் நிலம் தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக, துரைராஜின் மனைவி மல்லிகா மற்றும் அவரது மகன் கோபி, மகள் சத்யா ஆகியோர் நேற்றிரவு காமக்காபாளையத்திற்கு சென்று விட்டனர்.

    இதனால் தந்தை, மகன் இருவர் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர். அப்போது சொத்து சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    பின்னர் துரைராஜ் வீட்டின் அருகில் உள்ள மாட்டுக் கொட்டகையில் குடிபோதையில் படுத்து தூங்கினார். இதையறிந்த தந்தை வையாபுரி, வீட்டில் இருந்த பெரிய சுத்தியலை கொண்டு மகன் துரைராஜின் தலையில் பலமாக தாக்கினார். இதில், ரத்த வெள்ளத்தில் துரைராஜ் துடி துடித்து பரிதாபமாக பலியானார்.

    மகன் உயிரிழந்ததை அறிந்த வையாபுரி, கொலை செய்ய பயன்படுத்திய சுத்தியலுடன் கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கெங்கவல்லி போலீசார், கொலையான துரைராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, வையாபுரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து பிரச்சினையில் பெற்ற மகனையே தந்தை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம், கெங்கவல்லி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சொத்து தகராறில் மாமியாரை மருகளே தீர்த்துக் கட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • வேறொருவரை திருமணம் செய்ய முயற்சி செய்தேன். அதையும் மாமியார் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி புதிய பஸ்நிலையம் எதிரே உள்ள அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை சாமி. அவரது மனைவி மேரி டெய்சி (வயது 72). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை. இவரது கணவர், முதல் மகன் இறந்து விட்டனர். 2-வது மகன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். எனவே வீட்டின் முதல் தளத்தை வாடகைக்கு கொடுத்து விட்டு 2-வது தளத்தில் மேரிடெய்சி தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி வீட்டில் வெட்டுக்காயங்களுடன் மேரிடெய்சி உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது குன்னூரில் வசித்து வரும் அவரது மருமகள் ரபெக்கா ரோஸ்லின் நிஷா (36) மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவரை பிடித்து விசாரித்தபோது கூலிப்படை ஏவி தனது மாமியாரை கொல்ல முயன்றதாக ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கூலிப்படைகளாக செயல்பட்ட நெல்லை பெருமாள்புரத்தை சேர்ந்த ராஜேஷ் (27), சிம்சன் (19), முத்து (18) மற்றும் 14 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான ரபெக்கா ரோஸ்லின் நிஷா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் மெரி டெய்சியின் மூத்த மகன் அந்தோணி சேவியரை 2-வதாக திருமணம் செய்தேன். எனது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பின் நான் குன்னூர் சென்று விட்டேன். அங்கு உயர்தர நாய்கள் விற்பனை செய்து வருகிறேன்.

    எனது மாமியார் வீடு, நிலங்களை வாங்கி விற்பது போன்ற தொழில்கள் செய்து வருகிறார். நான் எனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தரும்படி மாமியாரிடம் கேட்டேன். அவர் பிரித்து தரவில்லை.

    மேலும் நான் வேறொருவரை திருமணம் செய்ய முயற்சி செய்தேன். அதையும் அவர் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்.

    எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதற்காக என்னிடம் வேலை செய்யும் நெல்லையை சேர்ந்த ராஜேஷ் (27) என்பவரிடம் உதவி கேட்டேன். ரூ.15 லட்சம் தருவதாக ஆசைவார்த்தை கூறினேன். எங்களது திட்டம் படி கடந்த 13-ந் தேதி ராஜேஷ் தலைமையில் 4 பேர் புதுவைக்கு வந்து மேரி டெய்சியை கொலை செய்ய முயற்சி செய்தனர்.

    எனது மாமியாருக்கு பலரிடம் கொடுக்கல்-வாங்கல் தகராறு இருப்பதால் நான் கொலை செய்தாலும், என் மீது சந்தேகம் வராது என்று நினைத்தேன். இருப்பினும் போலீசார் துரிதமாக செயல்பட்டு என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரபெக்கா ரோஸ்லின் நிஷா உள்பட 4 பேர் காலாப்பட்டு சிறையிலும், சிறுவன் அரியாங்குப்பம் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். சொத்து தகராறில் மாமியாரை மருகளே தீர்த்துக் கட்ட முயன்ற சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பெற்ற மகனே தந்தையை கொலை செய்தது தெரியவந்தது.
    • கடல்கனியை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

    நெல்லை:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 73). இவருக்கு கடல்கனி என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    கடல்கனி கேரள மாநிலம் கொட்டாரக்கரையில் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார். நேற்று முன்தினம் தனது தந்தையை பஸ்சில் நெல்லைக்கு அழைத்து வந்த கடல்கனி, வண்ணார்பேட்டை பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் இருந்து தரதரவென இழுத்துச்சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு இடையே வைத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினார்.

    இதுதொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பெற்ற மகனே தந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடல்கனியை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். அவர் கேரளாவில் வியாபாரம் செய்து வருவதால் அங்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல் சவுத்திரி தலைமையிலான போலீசார் அங்கு சென்று முகாமிட்டு கொலையாளியை தேடி வந்த நிலையில் நேற்று இரவு கொட்டாரக்கரையில் வைத்து கடல்கனியை கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், அவர் கூறியதாவது:-

    எனது தந்தையின் பெயரில் இருந்த ஒரு சொத்தை அவர் ஏற்கனவே விற்றுவிட்டார். தற்போது மற்றொரு சொத்தையும் விற்கப்போவதாக சொன்னார். இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன். அதே நேரத்தில் அவர் வயது முதிர்ச்சியால் நோய் வாய்ப்பட்டார். அவரை ஒவ்வொரு ஆஸ்பத்திரிக்கும் அழைத்துச்சென்று வெறுப்படைந்துவிட்டேன். இதனால் மன விரக்தியில் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்து விட்டேன் என்றார். இதனை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்து கொண்டனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சொத்து பிரச்சனையில் தாயை மகனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • ராணியை கொலை செய்த மகன் இளங்கோவனை போலீசார் கைது செய்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி ராணி வயது (63), ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர். இவர்களது மகன் இளங்கோவன் (47). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இளங்கோவன் ரெயில் விபத்தில் சிக்கினார். அப்போது அவரது கால் துண்டானது. இதையடுத்து அவருக்கு மரத்திலான செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சரியாக வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தார். மேலும் மது போதைக்கும் அடிமையானார். இதனால் அடிக்கடி குடிபோதையில் இருந்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் தனது தாய் ராணியின் பெயரில் உள்ள 1, 822 சதுர அடி காலி வீட்டு மனையை உறவினர் ஒருவருக்கு விற்று விடலாம் என இளங்கோவன், ராணியிடம் கூறினார். அப்போது ராணி கையெழுத்திட மாட்டேன் என கூறினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இளங்கோவன் தனது செயற்கை காலை கழற்றி, ராணியை சரமாரியாக தாக்கினார். இதில் ராணிக்கு தலை உள்பட பல இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டது. மேலும் மண்டையில் பலமான அடி விழுந்ததால் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதனால் அவர் மயங்கி விழுந்தார்.

    இதனை பார்த்த உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அவரை மீட்ட உறவினர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ராணியை கொலை செய்த மகன் இளங்கோவனை கைது செய்தனர். சொத்து பிரச்சனையில் தாயை மகனே அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நிலம் விற்பது தொடர்பாக தாய், மகன் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் பாவாயி (75). இவரது மகன் ராசு (55). விவசாயி. இவரது மனைவி சாந்தி (50).

    நிலம் விற்பது தொடர்பாக தாய், மகன் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாவாயி மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

    இதன் காரணமாக கடந்த 4-ந் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த பாவாயி தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் தற்கொலை செய்து கொண்டதை பார்த்த அவரது மகன் ராசுவும் வீட்டில் இருந்த விஷத்தை சாப்பிட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

    இதனை பார்த்த ராசுவின் மனைவி சாந்தியும் வீட்டில் இருந்த எலி பேஸ்டை தின்றுள்ளார். இதனால் வயிறு எரிச்சல் ஏற்படவே சத்தம் போட்டுள்ளார். சாந்தியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

    அப்போது அங்கு பாவாயி தூக்கில் தொங்கிய நிலையிலும், ராசு வாயில் நுரை தள்ளிய நிலையிலும் இறந்து கிடந்தனர். எலி பேஸ்ட் சாப்பிட்ட சாந்தி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சாந்தியை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாந்திக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சாந்தியும் உயிரிழந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×