search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 151061"

    • காரில் வந்த கும்பல் சத்யபிரகாஷை கத்தியால் குத்தி உருட்டுக்கட்டையால் தாக்கியது.
    • டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் பேரையூர் சமத்துவ புரத்தை சேர்ந்தவர் சங்கரன். இவரது மகன் சத்யபிரகாஷ் (வயது23). கல்லூரி மாணவரான இவர் சம்பவத்தன்று ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் ஆடுகள் மீது மோதுவது போல் சென்றது. இதனை சத்யபிரகாஷ் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த காரில் வந்த கும்பல் சத்யபிரகாஷை கத்தியால் குத்தி உருட்டுக்க ட்டையால் தாக்கியது.

    இதுகுறித்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் பாலமுருகன், பாறைப்பட்டி முனியாண்டி உள்பட 4 பேரிடம் விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • தேர்வு அறையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.
    • திடீரென ஆவேசமடைந்த உதயசங்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்ரீஹரி சாய் பிரசாத்தை சரமாரியாக வெட்டினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ராஜமகேந்திராவரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி சாய் பிரசாத்(வயது14). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே வகுப்பில் உதயசங்கர் என்ற மாணவரும் படித்து வருகிறார்.

    மாணவர்கள் 2 பேரும் தங்களுடன் படிக்கும் ஒரு மாணவியை காதலித்தனர்.

    இதனால் ஸ்ரீஹரி சாய் பிரசாத்துக்கும் உதயசங்கருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்றுடன் தேர்வு நிறைவடைவதால் ஸ்ரீஹரி சாய் பிரசாத்தை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உதயசங்கர் வீட்டில் இருந்த கத்தியை மறைத்து எடுத்து வந்தார்.

    தேர்வு அறையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். திடீரென ஆவேசமடைந்த உதயசங்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்ரீஹரி சாய் பிரசாத்தை சரமாரியாக வெட்டினார்.

    இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீஹரி சாய் பிரசாத் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனைக் கண்ட ஆசிரியரும் சக மாணவர்களும் உதயசங்கரை தடுத்து நிறுத்தினர்.

    காயமடைந்த ஸ்ரீஹரி சாய் பிரசாத் சிகிச்சைக்காக ராஜாநகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக ராஜமகேந்திராவரத்துக்கு மாற்றப்பட்டார்.

    மாணவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் ஸ்ரீஹரி சாய் பிரசாத்தின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வெள்ளிங்கிரியிடம் பணம் கேட்டு 2 வாலிபர்கள் மிரட்டியுள்ளனர்.
    • மேட்டுப்பாளையம் போலீசார் தலைமறைவான சூர்யாவை தேடி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் எஸ்.எம். நகரை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (29). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு டாஸ்மாக் கடையில் மது அருந்தினார். அப்போது அங்கு 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள், வெள்ளிங்கிரியிடம் பணம் கேட்டனர். ஆனால் அவர் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரம் அடைந்த 2 பேரும் அவரை தாக்கி கீழே தள்ளி கத்தியால் குத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தொழிலாளியை கத்தியால் குத்தியது மேட்டுப்பாளையம் பழைய முனிசிபல் ஆபீஸ் சாலையைச்சேர்ந்த சூர்யா (21),நீலகிரி மாவட்டம் கோத்தகிரி முல்லை நகரை சேர்ந்த அன்பு என்ற சந்தோஷ் (19) என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார், அன்பு என்ற சந்தோசை கைது செய்தனர்.

    தொடர்ந்து தலைமறைவான சூர்யாவை தேடி வருகின்றனர்.

    • சாத்தூர் அருகே கோவில் திருவிழாவில் அண்ணன்- தம்பியை கத்தியால் குத்திய 5 பேரை போலீஸ் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    • காதல் திருமணம் செய்தது தொடர்பாக முத்துகுமாரிடம் தகராறு செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நடுசூரங்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது25). இவர் அதே பகுதியை சேர்ந்த சந்திரகுமார் என்பவரின் மகள் மகாலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று ஊர் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடந்தது. இதில் முத்துகுமார், அவரது அண்ணன் அஜித்குமார், தம்பி அரவிந்த்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது சந்திரகுமார் அவரது மகன் சூர்யா, பார்த்திபன், பாலமுருகன், தாஸ்குட்டி ஆகிய 5 பேரும் காதல் திருமணம் செய்தது தொடர்பாக முத்துகுமாரிடம் தகராறு செய்தனர். இதில் ஏற்பட்ட மோதலில் அஜித்குமார், அரவிந்த்குமார் ஆகிய இருவரையும் கத்தியால் குத்திவிட்டு 5 பேரும் தப்பி சென்றுவிட்டனர்.

    இதில் காயமடைந்த 2 பேரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி முத்துகுமார் புகார் செய்ததின்பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கத்தியால் குத்திய 5 பேரையும் தேடி வருகின்றனர்.

    • கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கொத்தனாருக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி:

    திருச்சி வடக்கு காட்டூர் சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராமன் (வயது 51). கொத்தனாரான இவருக்கும் வடக்கு காட்டூர் காந்தி தெரு பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு இளம் பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த அவரது கணவர் ஜெகன் (வயது 40) அதிர்ச்சி அடைந்தார்.லாரி டிரைவரான இவர் வெளியூர் செல்லும் நாட்களில் விஜயராமன் தனது சேட்டையை செய்து வந்ததாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து ஜெகன் தனது மனைவி மற்றும் விஜயராமனை கண்டித்தார்.

    ஆனால் இதனை கொத்தனார் கண்டுகொள்ளவில்லை.தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்ததால் ஆத்திரமடைந்த ஜெகன் வடக்கு காட்டூர் பாரதிதாசன் தெரு பகுதியைச் சேர்ந்த நல்லான் (40), வடக்கு காட்டூர் காந்திநகர் ஒன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்த ராமர் (49 )ஆகிய நண்பர்களுடன் சென்று பாப்பா குறிச்சி சாலை பகுதியில் நின்று கொண்டிருந்த விஜயராமனிடம் தகராறு செய்தார். பின்னர் ஜெகன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினர்.

    இதில் விஜயராமனுக்கு இடது கை விரல் மற்றும் வலது பக்க கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த வருகின்றனர். இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகனை கைது செய்தனர். தப்பி ஓடிய நல்லான்,ராமர் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

    • மதுரை அருகே வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அண்ணா மெயின்ரோட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்ற மன்னர் கார்த்தி (வயது28). இவர் நேதாஜி தெருவில் உள்ள மண்டபம் அருகே நடந்து சென்றார். அங்கு வந்த 6பேர் கும்பல், அவரை கத்தியால் குத்திவிட்டு, மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூம்பிசதீஷ், குட்டமணி, ஆந்தை மணி, ராகுல், குண்டுவிஜய் ஆகிய 6 பேரை கைது செய்தனர். விசாரணையில் கார்த்திகேயன் நேதாஜி பற்றி அவமரியாதையாக பேசினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை கத்தியால் குத்தியது தெரியவந்தது.

    திருப்பரங்குன்றம் பாம்பன் நகரை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது42). இவர் நேற்று மதியம் ஆஞ்சநேயர் கோவில் அருகே நடந்து சென்றார். பின்தொடர்ந்து சென்ற 2பேர் சிவலிங்கத்தை கல்வீசி தாக்கி செல்போனை பறித்து தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநகர் வேழவர் தெருவை சேர்ந்த சுதாகரன் மகன் கவிக்காரன் (24), கீழத்தெரு மாரிமுத்து மகன் செந்தூர்பாண்டி (22) ஆகியோரை கைது செய்தனர்.

    • பணம் கொடுக்க மறுத்ததால் 2 வாலிபர்கள் கத்தியால் குத்தினர்.
    • போத்தனூர் போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை வெள்ளலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன்(23). இவர் மாநகராட்சி லாரியில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் கோகுலகிருஷ்ணனிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் 2 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் குத்தினர். பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

    காயம் அடைந்த கோகுலகிருஷ்ணனை அவரது நண்பர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகராட்சி லாரி கிளீனரை கத்தியால் குத்திய வெள்ளலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சர்புதீன்(25), கிஷோர்(25) ஆகிய 2 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • ஸ்ரீராமுக்கும், 19 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது
    • பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கோவை,

    குனியமுத்தூர் பிள்ளையார் கோவில் வீதி யை சேர்ந்தவர் ஸ்ரீராம் (22). கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீராமுக்கும், கோவை போத்தனூர் சிட்கோ பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒரு வரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. 2 பேரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் மகளிடம், அந்த வாலிபரிடம் பேசுவதை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கினர். இதையடுத்து இளம்பெண்ணும் வாலிபருடன் பேசுவதை தவிர்த்தார்.

    நேற்று அந்த பெண் தான் வேலை பார்க்கும் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியில் இருந்தார். அப்போது ஸ்ரீராம் நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்தார்.

    பின்னர் அந்த பெண்ணிடம் ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த ஸ்ரீராம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணை சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடிவிட்டார்.

    இதில் அந்த பெண் கழுத்து, காதில் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய ஸ்ரீராமை தேடி வருகிறார்கள்.

    • மனைவியுடன் தொழிற்சாலை விடுதியில் தங்கி உள்ளார்.
    • பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு தென்காசியை சேர்ந்த சுடலை முத்து என்பவரது மகன் கனி(வயது 21) என்பவர் கடந்த 4 மாதமாக வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் தேவகோட்டையைச் சேர்ந்த முஸ்தபா என்பவரது மகன் அசாருதீன்(24) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். அசாருதீனுக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவியுடன் தொழிற்சாலை விடுதியில் தங்கி உள்ளார். அதன் அருகே உள்ள அறையில் கனி தங்கி உள்ளார். சம்பவத்தன்று அசாருதீனுக்கும் அவர் மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் அவரது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனை அருகில் இருந்த கனி ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அசாருதீன் வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து கனியின் முகம் மற்றும் கழுத்து ஆகிய இடங்களில் குத்தியுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

    மற்ற தொழிலாளர்கள் ஓடிவந்து கனியை காப்பாற்றி பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் நாகதேவி (வயது 47). இவருடைய கணவர் ஜெயச்சந்திரன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
    • இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    சேலம்:

    சேலம் டவுன் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் நாகதேவி (வயது 47). இவருடைய கணவர் ஜெயச்சந்திரன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருடன் நாகதேவிக்கு பழக்கம் ஏற்பட்டது. பிறகு இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த நபர் வீட்டில் இருந்த குழவிக்கல்லை எடுத்து நாகதேவியை தாக்க முயன்றார். ஆனால் அவர் தப்பித்துவிட்டார். இருப்பினும் ஆத்திரத்தில் கத்தியால் நாகதேவியை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுதூர் அருகே கடனை திருப்பிக் கேட்ட வாலிபரை கத்தியால் குத்தினார்.
    • இதில் படுகாயம் அடைந்த தியாகராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுதூர் அருகே உள்ள வானகாரன் காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் தியாகராஜன் (வயது 26). இவரது தம்பி அசோக், அதே பகுதியைச் சேர்ந்த சித்தேஸ்வரன் மகன் முனுசாமி என்கிற விஷால் (28) என்பவருக்கு ரூ.200 கடன் கொடுத்துள்ளார்.

    வாங்கிய பணத்தை திருப்பி தராததால், இதுகுறித்து நேற்று மாலை விஷாலிடம், எனது தம்பியிடம் வாங்கிய பணத்தை ஏன் திருப்பி தரவில்லை என தியாகராஜன் கேட்டுள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த விஷால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தியாகராஜனை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த தியாகராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விஷாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.
    • கத்தியை எடுத்து நாகமாணிக்கத்தின் தோள் பட்டையில் குத்தினர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் நாகமாணிக்கம்(வயது51). இவர் கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடி டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு நாகமாணிக்கம் வழக்கம் போல கடையை மூடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.

    டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் சென்றபோது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் ஹெல்மெட் அணிந்தபடி வந்தனர்.

    அவர்கள் நாகமாணிக்கத்தின் மோட்டார் சைக்கிள் அருகே வந்ததும், மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.

    அவரிடம் பொள்ளாச்சிக்கு எப்படி செல்ல வேண்டும் என வழி கேட்டனர். நாகமாணிக்கம் அவர்களுக்கு வழி கூறிக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நாகமாணிக்கத்தின் தோள் பட்டையில் குத்தினர்.

    இதில் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். உடனடியாக அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் ஏறி தப்பி சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய டாஸ்மாக் விற்பனையாளரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள்.

    ×