search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படகு"

    கஜா புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார். #Gaja #GajaCyclone #Minister #jayakumar
    சென்னை:

    ‘கஜா’ புயலால் மீனவ கிராமங்களில் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘ஒக்கி’ புயலில் ஏற்பட்ட அனுபவங்களை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு, கஜா புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கடந்த 11-ந் தேதியே மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.

    மீன்வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஒவ்வொரு மீனவ கிராமங்களுக்கும் சென்று கண்காணித்தனர். மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

    கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 333 மீனவ கிராமங்களில் 4 ஆயிரத்து 926 விசைப்படகுகள், 18 ஆயிரத்து 364 நாட்டுப்படகுகள் கண்டிப்பாக படகுகள் நிறுத்தும் தளத்தில் நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    அதனடிப்படையில் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாததால் எந்த மீனவர்களுக்கும் ஆபத்து ஏற்படவில்லை. ஆனால் நாட்டுப்படகுகள் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டு இருக்கிறது. தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் 200-க்கும் மேற்பட்ட படகுகள் கவிழ்ந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

    புயல் பாதித்த இடங்களில் பகுதியாக சேதமடைந்த படகுகள் எத்தனை? முழுமையாக சேதமடைந்த படகுகள் எவ்வளவு? என்பது குறித்த கணக்கெடுப்பு பணிகளை வருவாய்த்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.



    அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நிவாரணம் வழங்குவார். தமிழக அரசு மேற்கொண்ட புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகளும் பாராட்டி உள்ளன. அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gaja #GajaCyclone #Minister #jayakumar
    தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகளை கண்டித்து நாட்டுப்படகு மீனவர்கள் புன்னக்காயலில் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்து 400 நாட்டுப்படகுகள் உள்ளன. கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக விசைப்படகு மீனவர்களுக்கும், நாட்டுப்படகு மீனவர்களுக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது.

    விசைப்படகுகளால் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்த நிலையில் விசைப்படகுகளை கண்டித்து நாட்டுப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இந்த படகுகள் அனைத்தும் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன. நாட்டுப்படகு மீனவர்கள் அனைவரும் இன்று புன்னக்காயல் கடலில் கூடினார்கள். கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் படகுகளில் கறுப்பு கொடிகள் கட்டியிருந்தனர். #tamilnews
    நடுக்கடலில் வள்ளம் கவிழ்ந்து தத்தளித்துக் கொண்டிருந்த மீனவரை அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீட்டனர்.
    குளச்சல்:

    குளச்சல் துறைமுக தெருவைச் சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 48). மீனவர். இவர் இன்று அதிகாலை தனக்கு சொந்தமான பைபர் வள்ளத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென இவரது வள்ளம் பாறையில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. 

    இதில் வள்ளத்தில் இருந்த பிராங்கிளின் கடலில் மூழ்கி தத்தளித்தார். அப்போது அந்த வழியாக முட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் நடுக்கடலில் தத்தளித்த பிராங்கிளினை கண்டதும் அருகில் சென்று அவரை மீட்டனர். 

    பின்னர் அவரை முட்டம் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். இதுபற்றிய தகவல் பிராங்கிளின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உயிருடன் மீட்கப்பட்டதை அறிந்து உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    காங்கோ நாட்டின் பிரசித்தி பெற்ற காங்கோ நதியில் கடந்த புதன்கிழமை இரவு படகு கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #boat sinks #northwestDRC #CongoRiver
    கின்ஷாசா:

    காங்கோ நாட்டின் டிசாபா மாகாணம் மான்கோட்டோ கிராமத்தில் இருந்து கடந்த புதன் கிழமை அன்று பண்டக்கா என்ற பகுதிக்குச் செல்ல காங்கோ நதியில் படகு மூலம் பலர் பயணம் செய்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் முழுமையாக கிடைக்கவில்லை எனவும் டிசாபா மாகாண கவர்னர் போயோ லூகா தெரிவித்துள்ளார். #boat sinks #northwestDRC #CongoRiver
    ×