search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 152272"

    • இளம்பெண் உள்பட 2 பேர் மாயமானார்கள்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நாச்சியார் பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 40). இவரது மனைவி புவனேஸ்வரி (24). சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.இதுகுறித்து கமலக்கணன் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லி புத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரை சேர்ந்தவர் கார்த்திக் (36). இவரது மனைவி பானு. நேற்று காலை வெளியே சென்ற கார்த்திக் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கணவர் வீட்டிற்கு வராமல் கள்ளக்காதலி வீட்டில் இருந்ததால் ஆத்திரத்தில் தாக்கினார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கோவிந்தநாயக்கன்பா ளையத்தை சேர்ந்தவர் 38 வயது வாலிபர். கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

    இந்தநிலையில், வாலிபருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 37 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இவர்களது கள்ளக்காதல் விவகாரம், வாலிபரின் மனைவிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது கணவரை கண்டித்தார்.

    ஆனால் அவர் அதனை கண்டு கொள்ளாமல் கள்ளக்காதலியுடனான பழக்கத்தை தொடர்ந்தார். அதன்பிறகு தனது வீட்டிற்கு வருவதையும் தவிர்த்த வாலிபர் எப்போதும் கள்ளக்காதலியின் வீட்டிலேயே இருந்தார்.

    தனது கணவர் குடும்பம் நடத்துவதற்கு பணம் தராமல் எந்நேரமும் கள்ளக்காதலியின் வீட்டில் இருப்பதால் வாலிபர் மனைவி கோபம் அடைந்தார். கணவரின் கள்ளக்காதலியை சந்தித்து, இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த அவர், சம்பவத்தன்று, தனது கணவரின் கள்ளக்காதலி வீட்டிற்கு சென்றார்.

    அங்கு அவரிடம், தனது கணவருடனான கள்ளக்காதலை கைவிட வேண்டும். இனி அவருடன் பேசக்கூடாது என கூறினார்.

    அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபரின் மனைவி, கள்ளக்காதலியை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

    இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், காயம் அடைந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் பெரியநாயக்கன்பாளையம் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகாரின் பேரில் போலீசார் கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    • கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    கோவை

    பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம் நல்லம்பள்ளியை சேர்ந்தவர் அர்ஜூன் (வயது 25). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த திவ்யா (22) என்பவரை கடந்த 2 வருடத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அர்ஜூன் அவரது உறவினர் திருமணத்துக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பினார். அப்போது அவர் குடிபோதையில் இருந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதனால் திவ்யா கோபித்து கொண்டு அவரது தாயார் வீட்டுக்கு சென்றார். உடனே அர்ஜூன் தனது அண்ணன் ஆனந்த் மற்றும் தாயார் வசந்தியை அைழத்து கொண்டு திவ்யாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு 3 பேரும் சேர்ந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அர்ஜூன், திவ்யாவை தாக்கினார். பின்னர் அங்கிருந்து 3 பேரும் சென்றனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் 3 பேரும் திவ்யாவின் வீட்டுக்கு சென்றனர்.

    அப்போது திவ்யா மற்றும் அவரது தாயாரை, அர்ஜூன் மற்றும் ஆனந்த் தாக்கினர். இதில் திவ்யா காயம் அடைந்தார். அவர்களின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் திவ்யாவை மீட்டு கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து திவ்யா கோமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அர்ஜூன், அவரது அண்ணன் ஆனந்த் மற்றும் தாயார் வசந்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2-வது திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள வடக்கு மலையடிப்பட்டி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜானகி. இவரது மகள் காளீஸ்வரி (வயது 26). இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காளீஸ்வரி அவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். 2020-ம் ஆண்டு வத்திராயிருப்பை சேர்ந்த ஆனந்த் என்பவரை காளீஸ்வரி 2-வதாக திருமணம் செய்துகொண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள ஜெகதாப்பட்டினத்தில் வசித்து வந்தனர். ஆனந்துக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் காளீஸ்வரியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை கவனித்துக்கொள்வதற்காக சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு வந்தார். நேற்று ஆஸ்பத்திரியில் இருந்த காளீஸ்வரி உணவு வாங்குவதற்காக கடை வீதிக்கு சென்றார். அப்போது அங்கு போதையில் வந்த ஆனந்த் நடு ரோட்டில் மனைவியிடம் தகராறு செய்தார். மேலும் அவர் வைத்திருந்த செல்போனை சேதப்படுத்தியதோடு, சரமாரியாக தாக்கினார். இதனால் அவமானம் அடைந்த காளீஸ்வரி தாயாரிடம் நடந்ததை கூறி வருத்தப்பட்டார். பின்னர் வீட்டுக்கு சென்ற அவர், விஷம் குடித்து தற்கொலை செய்துெகாண்டார்.

    இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகர்கோவிலில் உள்ள தனியார் கார்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள கீழமணியன்குழியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி பேபி. மகள் ரேவதி (வயது 20). ரவி இறந்து விட்ட நிலையில் நாகர்கோவிலில் உள்ள தனியார் கார்டு நிறுவனத்தில் ரேவதி வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற ரேவதி அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது தாயார் பேபி இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேவதியை தேடி வருகின்றனர்.

    • தனக்கு திருமணம் வேண்டாம் என சிவரஞ்சனி மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.
    • புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதி பனங்கால் முக்கு பகுதியை சேர்ந்தவர் லாசர். இவரது மனைவி ஜெயா ( வயது 48). இவர்கள் மகள் சிவரஞ்சினி (20).

    ஜெயா முந்திரி ஆலையில் பணி செய்கிறார். சிவரஞ்சனி தேங்காப்பட்டணம் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் மகள் சிவரஞ்சனிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து, வரன் பார்க்க துவங்கியுள்ளனர். ஆனால் தனக்கு திருமணம் வேண்டாம் என சிவரஞ்சனி மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவதினம் இது தொடர்பாக தாய்க்கும் மகளுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த சிவரஞ்சனி தாய் தந்தையர் வேலைக்கு போன பின்னர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளர்.

    இது தொடர்பாக தாய் ஜெயா புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் ராஜ் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஜேசு ராஜசேகர் சிவரஞ்சனி தற்கொலை செய்தது காதல் பிரச்சனையா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என விசாரித்து வருகிறார்.

    • இவர் கடந்த 5 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.
    • இளம்பெண் அஜித்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரை திருமணம் செய்ய மறுத்தார்.

    கோவை

    கோவை துடியலூரை அடுத்த ரங்கம்மாள் காலனி முருகன் நகரை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது 26). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 5 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் அவரை காதலித்து வந்தார். அஜித்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அந்த பெண்ணுக்கும், அஜித்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று அஜித்குமார் தான் காதலித்து வந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்வது பற்றி பேசியதாக தெரிகிறது. அப்போது அந்த பெண் அஜித்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரை திருமணம் செய்ய மறுத்தார்.

    அவர் அந்த பெண்ணை சமாதானம் செய்தும், அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் அஜித்குமார் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை கூடலுர் கவுண்டம்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் சங்கர் (31). டிரைவர். இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சங்கருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் அவரது மனைவி கோபித்து கொண்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

    இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து தூங்க சென்றார். மறுநாள் காலை அவர் எந்திரிக்கவில்லை. அவரது வீட்டுக்கு சென்ற அவரது நண்பர் அதனை பார்த்து சங்கர் எழுப்பி விட்டார்.

    அப்போது அவர் இறந்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேரும் சேர்ந்து டிராவல்ஸ் தொழில் செய்து வருகின்றனர்.
    • ரோகித்துடன் மது குடிப்பதற்காக ரேஸ்கோர்சில உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார்.

    கோவை 

    கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள ராஜா அண்ணாமலை ரோட்டை சேர்ந்தவர் துரை.இவரது மகன் விக்னேஷ் (வயது 28). இவரது நண்பர் சீர நாயக்கன் பாளையத்தை சேர்ந்த ரோகித் (26). இவர்கள் 2 பேரும் சேர்ந்து டிராவல்ஸ் தொழில் செய்து வருகின்றனர்.

    விக்னேசுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இந்தநிலையில் இளம்பெண் மன்சூர் அலி என்ற வாலிபருடன் பழகி வந்தார். இது சம்பந்தமாக விக்னேசுக்கும், மன்சூர் அலிக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று அவர் தனது நண்பர் ரோகித்துடன் மது குடிப்பதற்காக ரேஸ்கோர்சில உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார். மது குடித்த பின்னர் 2 பேரும் 5-வது மாடியில் இருந்து 1-வது மாடிக்கு வந்தனர். அப்போது அங்கு வந்த மன்சூர் அலி தான் மறைத்து வைத்து இருந்த பீர் பாட்டிலால் விக்னேசை தாக்கினார். இதனை தடுக்க சென்ற ரோகித்தையும் பீர் பாட்டிலால் குத்தினார். இதில் அதிர்ச்சியடைந்த 2 பேரும் அங்கு இருந்து தப்பி செல்ல முயன்றனர்.

    அப்போது இவர்களை பின் தொடர்ந்து சென்ற அஸ்கர் அலி என்பவர் காரில் மறைத்து வைத்து இருந்த இரும்பு கம்பியால் 2 பேரையும் தாக்கினார். 2 பேருக்கும் கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அங்கு இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் மன்சூர் அலி, அஸ்கர் அலி ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகிறார்கள். 

    • இளம்பெண் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • மது குடித்த பூமிநாதன் தகராறு செய்து மனைவியை அரிவாளால் வெட்டினார்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள உழுத்திமலையை சேர்ந்தவர் காமாட்சி. இவரது மகள் கற்பகமும், சிவகங்கை மேலபசலையை சேர்ந்த பூமிநாதனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று கற்பகம் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்திருந்தாள்.

    அங்கு மது குடித்த பூமிநாதன் தகராறு செய்து மனைவியை அரிவாளால் வெட்டினார். இதை தடுக்க வந்த அவரது பெற்றோர் பாக்கியம்-காமாட்சிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. 3பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமிநாதனை கைது செய்தனர்.

    • இளம்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • வீட்டில் மயங்கி விழுத அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பச்சகோபன்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவரது மனைவி மாலதி (வயது28). இவர் கடந்த 2 மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இன்று காலை வீட்டில் மயங்கி விழுத அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும்படி டாக்டர்கள் கூறி உள்ளனர். ஆனால் அதற்கு உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மாலதி உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.அவர்களுடன் உறவி னர்கள் வாக்குவாதம் செய்து கட்டாய பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் மாலதி உடலை கைப்பற்றி ஆட்டோவில் ஏற்றி ஊருக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

    இது குறித்து அரசு மருத்துவமனை நிர்வாகம் திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் அரசு மருத்துவமனைக்கு வந்து ஆட்டோவில் ஏற்றபட்ட மாலதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    • அறையில் பானுமதி தூக்குபோட்டு தொங்கி கெண்டிருந்தார்.
    • சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகார் அடிப்படையில் பானுமதி எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சித்தோடு:

    ஈரோடு, கொங்கம்பாளையம் கணபதி நகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பானுமதி (31). இவர்களுககு ஒருமகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த 16-ந் தேதி பானுமதி தனது தாய் பிரேமாவுக்கு போன் செய்து மகன் ரோகித்தை கூட்டி வரும் பொது சேமியா வாங்கி வர சொல்லி உள்ளதாக தெரிகிறது. பானுமதி மகன் ரோகித்துடன் அவரது தாய் சேமியா வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது வீட்டில் பானுமதி மகள் டி.வி.பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அம்மா எங்கே என் கேட்ட போது அம்மா வீட்டின் அறையை சாத்திக்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து அறையை தட்டிப் பார்த்த போது அறை தாழிட்டிருந்த நிலையில் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர்.

    அப்போது அறையில் பானுமதி தூக்குபோட்டு தொங்கி கெண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பானுமதியின் தாய் பிரேமா கூச்சலிட்டார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பானுமதியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பானுமதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக தாய் பிரேமா சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகார் அடிப்படையில் பானுமதி எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புதுக்கடை போலீசில் புகார்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே இனயம் பகுதி தோப்புவிளை யைச் சேர்ந்தவர் வினித் குமார் (வயது 37), தொழிலாளி.

    இவரது மனைவி சாந்தி (32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள னர். சம்பவத்தன்று சாந்தி தனது மகள்களுடன் தாய் வீட்டுக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார்.

    அதன் பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. மனைவி மற்றும் மகள்களை வினித் குமார் பல இடங் களிலும் தேடிப் பார்த்தார். ஆனால் எந்த தகவலும் கிடைக்க வில்லை. மேலும் சாந்தியின் செல்போனை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக வினீத் குமார் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் சேசு ராஜசேகர் சப்-இன்ஸ்பெக்டர் சுகு மாரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகள்களுடன் மாயமான சாந்தி எங்கே சென்றார்?, அவர்களை யாராவது கடத்தி இருக்கலாமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×