என் மலர்
நீங்கள் தேடியது "slug 152997"
- கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து செயற்பொறியாளரிடம் கேட்டறியப்பட்டது.
- சானல் தூர்வாரும் பணியையும் பார்வையிட்டார்
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட பள்ளி கட்டிடங்களை மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார். சானல் தூர்வாரும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதி களில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. நாகர் கோவில் மாநகராட்சிக்குட்பட்ட நாகர்கோவில் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் 20 ஆண்டு களுக்கு மேல் கட்டப்பட்ட வகுப்பறையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பழுதடைந்த பகுதிகளை சீரமைக்குமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இடலாக்குடி அரசு தொடக்கப் பள்ளி வகுப் பறை கட்டிடத்தினை யும் பார்வையிட்டு, கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து செயற்பொறியாளரிடம் கேட்டறியப்பட்டது.
ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட ஆத்திக்காட்டுவிளை ஊராட்சி, சீயோன்புரம் அரசு தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம், கணியாகுளம் ஊராட்சி புளியடி அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறை கட்ட டம், புத்தேரி அரசு தொடக் கப்பள்ளி கட்டடத்தினை ஆய்வு மேற்கொண்டு அக் கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்து தலைமை யாசிரியர்கள், ஆசிரியர்கள், துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. வட கிழக்கு பருவமழை பெய்து வருவதால் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பழுதடைந்த கட்டிடங்களை விரைந்து சரிசெய்யவும், மிகவும் பழுதடைந்த கட்டிடங்களை உடனடியாக அப்புறப்ப டுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து தர்மபுரம் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட் டத்தின்கீழ் அத்திக்கடை கால்வாயினை தூர்வாரும் பணியினை நேரில் பார் வையிட்டு, வாய்க்கால் வழியாக வரும் தண்ணீரை வீணாக்காமல் விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் நலிவடைந்த மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்வதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- பொது விநியோகத்திட்டத்தின் மூலம் பெற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுர மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் முன்னேற விழையும் மாவட்டமாக ஆக மத்திய அரசால் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இ்ந்த மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியை, பொது விநியோகத்திட்டத்தின் மூலமாக குடும்ப அட்டைதாரா்களுக்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் மூலமாக அங்கன்வாடி குழந்தைகளுக்கும் மற்றும் பிரதமரின் போஜன் மதிய உணவுத்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவா்களுக்கும் வழங்க அரசாணை வரப்பெற்றுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் 2022 முதல் அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவா்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி மூலம் உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. பொது விநியோகத்திட்டத்தின் மூலமாக குடும்ப அட்டைதாரா்களுக்கும் அடுத்தாண்டு மார்ச்் வரை விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசால் சாதாரண நலிவடைந்த மக்களின் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்தவும் பொது சுகாதார நலன்களை கருத்தில் கொண்டு உணவுப்பொருள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே சாதாரண நலிவடைந்த மக்கள் இந்த அரிசியை பொது விநியோகத்திட்டத்தின் மூலம் பெற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகங்கையில் இந்திய அரசின் தர நிலைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடந்தது.
- தரப்படுத்தப்பட்ட பொருட்களை கொள்முதல் செய்வதால் உற்பத்தி யாளர்களின் தரமும் மேம்படுகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்திய நிர்ணய அமைவனம், மதுரை கிளை அலுவலகத்தின் சார்பில் இந்திய அரசின் தர நிலைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-
நுகர்வோர் நலனை பாதுகாப்பதற்காக தரப்படுத்தப்பட்ட பொருட்களின் உற்பத்தி மற்றும் கொள்முதலின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தரப்படுத்தப்பட்ட பொருட்களை கொள்முதல் செய்வதால் உற்பத்தி யாளர்களின் தரமும் மேம்படுகிறது.
இதில் பங்கேற்பாளர் களும் தங்கள் கொள்முதல் டெண்டர்களில் இந்திய தர நிர்ணயத்தை இணைத்து கொள்வதன் திட்டத்தின் நோக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த விளக்கத்தை அளித்துள்ளனர்.
தயாரிப்புக்களை அடையாளம் காண புகார் தீர்க்கும் நெறிமுறைகள் போன்றவைகள் குறித்தும், தரமான பொருட்களை வாங்குவதற்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை பதித்த பொருட்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பது குறித்தும், தனிப்பட்ட துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஐ.எஸ்.ஓ. 9001 போன்ற மேலாண்மை அமைப்பு சான்றிதழ்களுடன் செயல்படுத்தப்படுவது குறித்தும் எடுத்துரைக்க ப்பட்டுள்ளது. இதனை பொதுப்பணித்துறை, கல்வித்துறை, தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகம், மாநில நெடுஞ்சாலைகள் துறை , சுகாதாரத்துறை, மாவட்ட வழங்கல் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவத்துறை, கூட்டுறவு சங்கம், மாவட்ட சுற்றுலா, சுய உதவிக்குழு, சட்டம் வல்லுநர்கள் போன்ற சம்பந்தப்பட்ட துறைகள் ரீதியாக விழிப்புணவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், மதுரை கிளை அலுவலக தலைமை விருந்தினர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 8 அரசு மருத்துவமனைகள் மற்றும் 28 தனியாா் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- 5,29,428 பேருக்கு மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
திருப்பூர் :
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் திருப்பூா் மாவட்டத்தில் 17,094 நபா்களுக்கு ரூ.48 கோடி மதிப்பீட்டில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது திருப்பூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாராபுரம், உடுமலை, காங்கயம், பல்லடம், அவிநாசி, மடத்துக்குளம், ஊத்துக்குளி ஆகிய 8 அரசு மருத்துவமனைகள் மற்றும் 28 தனியாா் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலமாக 5,29,428 பேருக்கு மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த 2021 ம் ஆண்டு மே 7 ந்தேதி முதல் 2022 ம் ஆண்டு அக்டோபா் 11 ந் தேதி வரையில் 17,094 நபா்களுக்கு ரூ.48 கோடி மதிப்பீட்டில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை எடுக்காதவா்கள் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்குள்) ஆகிய அவணங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 3 ல் சமா்ப்பித்து அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.
- இந்த ஆய்வின் போது ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பராமரிப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு, விவரங்களை சரிபார்த்தார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பராமரிப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு, விவரங்களை சரிபார்த்தார்.
நில அளவை பதிவேடு, வழக்குகள் பதிவேடு, பொதுமக்களின் கோரிக்கைகள் விவர பதிவேடு அலுவலர்கள், பணியாளர்களின் வருகை பதிவேடு, தன்பதிவேடு, வழங்கல் துறை பதிவேடு உள்ளிட்ட அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா, ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் தங்கம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- செங்கிப்பட்டி, டி.பி.சானிடோரியம் மகாத்மா காந்தி நினைவு காசநோய் மற்றும் மார்பு நோய் மருத்துவமனையை புதிய பல்நோக்கு மருத்துவமனையாக அமைத்து தர வேண்டும்.
- தஞ்சாவூர் மாவட்டம், கொள்ளிடம் வலது கரையில் கல்லணையில் இருந்து அணைக்கரை வரை (26 கி.மீ முதல் 107.60 கி.மீ வரை) கரையை ஒரு வழி குறுகலான சாலையை இரு வழிச்சாலையாக தரம் உயர்த்தி அமைக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
முதலமைச்சர் திட்டத்தின் கீழ் திருவையாறு தொகுதிக்கு உட்பட்ட 10 கோரிக்கை மனுக்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
பூதலூர், தஞ்சாவூர் வட்டங்களில் புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் மைல் 71/0 முதல் 83/5 வரை 63 ஏரிகள் மூலம் 4295 ஏக்கர் நிலங்களின் பாசன வசதி பெறுவதை உறுதி செய்து மேம்பாட செய்து தர வேண்டும்.
பூதலூர் வட்டம், தோகூர் கிராமத்தில் 2000 ஆண்டுகள் பழமையான உலக பாரம்பரிய சின்னமான கல்லணை அருகே காவேரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் திருச்சி நகர வெள்ள நீர் வடிகாலில் புதிய ஒருங்கிணைந்த உயர் மட்ட சுற்றுப்பாலம் அமைக்க வேண்டும்.
பூதலூர் வட்டம் நீர்வளத்துறை உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் 16 ஏரிகள் மூலம் 2440 ஏக்கர் நிலங்களின் பாசன வசதி பெறுவதை உறுதி செய்து மேம்பாடு செய்து தர வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம் செங்கிப்பட்டி பகுதி 14 கிராமங்களில் நீர்வளத்துறையின் 14 ஏரிகளின் மூலம் 1958 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி இல்லாத வானம் பார்த்த பூமியை புதிய பாசன வசதி திட்டம் ஏற்படுத்த வேண்டுகிறேன்.
கள்ளபெரம்பூர் நீர்வளத்துறையின் கள்ளபெரம்பூர் ஏரியை மேம்படுத்தி 2662 ஏக்கர் நிலங்களின் பாசன வசதியை உறுதி செய்து தர வேண்டுகிறேன்.
செங்கிப்பட்டி, டி.பி.சானிடோரியம் மகாத்மா காந்தி நினைவு காசநோய் மற்றும் மார்பு நோய் மருத்துவமனையை புதிய பல்நோக்கு மருத்துவமனையாக அமைத்து தர வேண்டும்.
திருவையாறு வட்டம், தென்பெரம்பூர் கிராமம் வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு வி.வி.ஆர் அணைக்கட்டிற்கு மேல்புறம் புதிய உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.
பள்ளியக்ரஹாரம்- வெண்ணாறு- வெட்டாரு- தலைப்பு- அம்மன்பேட்டை - தென்பெரம்பூர்- விண்ணமங்கலம் வரையிலான ஆற்றுக்கரை ஒரு வழி குறுகலான சாலையை இரு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்து தர வேண்டும்.
திருக்காட்டுப்பள்ளி -வளப்பக்குடி- மேலஉத்தமநல்லூர் -ஒத்தைவீடு காவேரி ஆற்றுக்கரை ஒரு வழி குறுகலான சாலையை இருவழிச் சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்ய வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம், கொள்ளிடம் வலது கரையில் கல்லணையில் இருந்து அணைக்கரை வரை (26 கி.மீ முதல் 107.60 கி.மீ வரை) கரையை ஒரு வழி குறுகலான சாலையை இரு வழிச்சாலையாக தரம் உயர்த்தி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மயிலாடுதுறை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா தொடங்கி வைக்கப்படுகிறது.
- இப்புத்தக்கண்காட்சியில் 60-–க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள்அமைக்கப்ட்டுள்ளன.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம், ஏ.வி.சி திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளார்கள் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவினை் மாவட்ட கலெக்டர் கலெக்டர் லலிதா முதல் புத்தக விற்பனையை தொடங்கி வைத்து பேசியதாவது:-
முதலமைச்சர் உத்தரவு்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா தொடங்கி வைக்கப்படுகிறது. இப்புத்தக்கண்காட்சியில் 60-–க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள்அமைக்கப்ட்டுள்ளன.
வாசிப்பு ஒன்றே நம் வாழ்வை மேம்படுத்தும்.
பார்வையைவி சாலப்படுத்தும் மனிதனை மனிதனாகவும், சாதாரண மனிதனை சாதனை மனிதனாகவும் மாற்றவல்லது வாசிப்பு ஒன்றே.
"ஒரு நூலகம்திறக்கப்படும் பொழுது 100 சிறைச்சா லைகள் மூடப்படுகிறது" என்பார் சுவாமி விவேகானந்தர்.
இன்று இங்கு நூற்றுக் கணக்கான நூலகங்கள் போல் இப்புத்தகத் திருவிழாதுவக்கப்படுகிறது.
இதை பயன்படுத்தி நம் அறிவை ஆற்றலை மேம்படுத்திக்கொள்வது நமது கடமை.
உங்கள் விட்டுப்பிள்ளைகளைத் தவறாது அழைத்து வந்து, கையில் காசு கொடுத்து அவர்கள் விரும்புகின்ற புத்தகங்களை வாங்க செய்யுங்கள்.
'புதிதாக மலர்ந்திருக்க மயிலாடுதுறை மாவட்டம் புத்தகத் திருவிழா மூலம்புதிய வரலாறு படைக்க வேண்டும்'நூலகத்தில் அதிக நேரம் செலவளித்தால் அறிவு வளரும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதா எம்.முருகன், பன்னிர்செல்வம், ராஜகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், ஒன்றியக்குழுத்தலைவர்கள் காமாட்சி மூர்த்தி (மயிலாடுதுறை), கமலஜோதிதேவேந்திரன் (சீர்காழி), ஜெயபிரகாஷ் (கொள்ளிடம்), மகேந்திரன்(குத்தாலம்), சீர்காழி நகரமன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி, ஊரக வளர்ச்சி(ம) ஊராட்சிகள் துறை இணை இயக்குநர்முரு கண்ணன்இணைஇயக்குநர் (வேளாண்மை) சேகர் உதவிஆணையர் (கலால்) கோ.அர.நரேந்திரன், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) மஞ்சுளா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்தமிழ்செல்வன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (வேளாண்மை) ஜெயபால், ஜெ.பாலாஜி (பொது), துணைப்பதிவாளர் (கூட்டுறவு) ராஜேந்திரன், நாகப்பட்டினம் மாவட்ட நூலகர் ராஜேந்திரன், மற்றும் முன்னால் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன், ஏ.வி.சி கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவி்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- காரைக்குடியில் நடந்த பசுமை திருவிழாவில் மாணவர்கள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார்.
- 3 ஆண்டுகளுக்குள் 50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என திட்டமிடப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக்கழகம் காரைக்குடி கிளை சார்பில் பசுமை திருவிழா நடந்தது.
கலெக்டர் மதுசூதன் ரெட்டி விழாவை தொடங்கி வைத்து பொதுமக்கள், மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் பசுமையான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில், "பசுமை தமிழ்நாடு" இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார்.அதனடிப்படையில் நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு, அதனை முறையாக பராமாிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்குள் 50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என திட்டமிடப்பட்டு, பொது மக்கள் பங்களிப்புடன் அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.
இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை தானாக முன்வந்து அரசுடன் இணைந்து ஒருவார காலத்தில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மரக்கன்றுகளை முறையாகப் பராமரித்திடவும், அதே போன்று பொதுமக்களும் தங்களுக்கு வழங்கப்படும் மரக்கன்றுகளை வீடுகளில் நல்லமுறையில் பராமாித்து, பசுமையான மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பசுமை திருவிழாவினை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பரதநாட்டியம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மரக்கன்றுகள் வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்த வா்களை கலெக்டர் கவுரவித்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை மருத்துவா்கள் சந்திர மோகன், குமரேசன், பாலாஜி, வட்டாட்சியா் மாணிக்கவாசகம், வட்்டார வளா்்ச்சி அலுவலா்கள் திருப்பதிராஜன், கேசவன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
- துங்காவி மற்றும் மெட்ராத்தி ஊராட் சிகளில் கலெக்டர் வினீத் ஆய்வு மேற்கொண்டார்.
- 420 விவசாய குடும்பங்களுக்கு வேளாண் துறை மூலம் மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
திருப்பூர் :
மடத்துக்குளம் வட்டாரம் துங்காவி மற்றும் மெட்ராத்தி ஊராட் சிகளில் கலெக்டர் வினீத் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2021- 2022-ம் நிதி ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட துங்காவி கிராமத்தில் வேளா ண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளில் செயல்படு த்தப்பட்ட திட்டங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
துங்காவியில் 200 பண்ணைக் குடும்பங்களுக்கு தலா 3 தென் னங்கன்றுகள், 5 விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான்கள், 22 சிறு,குறு விவசாயிகளுக்கு பண்ணைக்கருவிகள், 33 எண்ணிக் கையில் தார்ப்பாய்கள், 5 தெளிப்பான்கள், மின்கலத்தெளிப்பான் கள் ஆகியவை வழங்கப்ப ட்டுள்ளது. மேலும் 50 ஏக்கர் பரப்பளவில் வரப்புப் பயிரில் உளுந்து சாகுபடி செய்வதற்கும், பசுமைப்போர்வை திட்டத்தின் கீழ் 8ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கும், தென்னையில் கருந்தலைப்புழு மற்றும் வெள்ளை ஈயைக்கட்டு ப்பாட்டுக்கு ஏற்ற ஒட்டுண்ணிகள், கரும்பு ஒட்டுண்ணி, உயிர் உரங்கள், உளுந்து மற்றும் பிற விதைகள் வினியோகம் என மொத்தம் 420 விவசாய குடும்பங்களுக்கு வேளாண் துறை மூலம் மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் வினீத் பயனாளிகள் விவர ங்களைக்கே ட்டறிந்தார். அத்துடன் விவசாயிகளின் திட்டங்கள், எந்திரங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வேளாண் துணை இயக்குனர் சுருளியப்பன், மாவட்ட கலெக்டரின் (வேளாண்துறை) நேரடி உதவியாளர் மகாதேவன், மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- வன விலங்குகளுக்காக 16 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- இதற்காகவே 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை விலங்குகள், பறவைகள், மரங்கள் கணக்கெடுக்கப்படுகின்றன.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சார்பில் வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் திலீப்குமார் முன்னிலை வகித்தார். கலெக்டர் மேகநாதரெட்டி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் அவர் பேசியதாவது:-
இந்தியாவில் வன விலங்குகளுக்காக 44 தேசிய பூங்கா, 247 வன விலங்கு சரணாலயங்கள் உள்ளன. வனப் பாதுகாப்புக்கு பல்வேறு சட்டங்கள் இருந்தாலும் காலநிலை மாற்றம், வேட்டையாடுதல், வறட்சி, பிளாஸ்டிக் பயன்பாடு, ஆக்கிரமிப்பு போன்றவற்றால் விலங்குகளுக்கு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
தமிழ்நாட்டில் களக்காடு, முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் புலிகள் காப்பகம் உள்ளது. விருதுநகர், மதுரை, தேனி ஆகிய 3 மாவட்டங்களை இணைத்து 5-வது புலிகள் காப்பகமாக விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இது இந்தியாவில் 51-வது புலிகள் காப்பகமாக உள்ளது.
விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதற்காக விருதுநகர் மாவட்டத்தில் 60 வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளனர். விலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்வதற்காக 16 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு வனம் ஆரோக்கியமாக இருப்பது, அங்கு உயிரினங்களின் பெருக்கத்தை பொறுத்து உள்ளது. இதற்காகவே 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை விலங்குகள், பறவைகள், மரங்கள் கணக்கெடுக்கப்ப டுகின்றன.
வனப் பரப்பை அதிகரிக்க பல்வேறு வகையான மரங்கள் நடப்பட்டு உள்ளது. காடுகள் இல்லையென்றால் மனித குலமே இல்லை என்று சொல்லலாம். காடுகள் என்பது அதில் வசிக்கும் விலங்குகளையும் சேர்த்துதான். சுற்றுச்சூழல் பாதுகாப்பு காடுகளை பாதுகாப்பதில் தான் இருக்கிறது. காடுகளையும் விலங்குகளையும் பாதுகாப்பதை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இயற்கையை பாதுகாத்தால் அது நம்மை வாழ வைக்கும். எனவே நாம் அனைவரும் நம்மால் இயன்ற வரை காடுகளையும், காடுகளில் வாழும் வன உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மத்திய அரசு நிதியுதவியுடன் கூடிய தேசிய கால்நடை இயக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- செம்மறியாடுகள் இனவிருத்திக்காக தொழில் முனைவோரை உருவாக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தொழில் முனைவோர் மத்திய அரசு நிதியுதவியுடன் கூடிய தேசிய கால்நடை இயக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தொழில் முனைவோரை உருவாக்கு வதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் சேர்ந்து தொழில் முனைவோராக விரும்புவோர் தனிநபர், சுய உதவிக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை தொழில் முனைவோராக உருவாக்க மானியம் வழங்கப்படும்.
மானியம் கிராமப்புற கோழிகள் இன மேம்பாட்டுக்கு தொழில் முனைவோரை உருவாக்க 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25 லட்சம் மானியம், வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் இனவிருத்திக்காக தொழில் முனைவோரை உருவாக்க 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.50 லட்சம் மானியம், பன்றி வளர்ப்பில் தொழில் முனைவோரை உருவாக்க 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.30 லட்சம் மானியமாகவும், தீவன உற்பத்தியை பெருக்கவும், சேமிப்பு பிரிவு அமைக்கவும் 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.50 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விருப்பம் உள்ள பயனாளிகள் பொதுத்துறை வங்கிகள் மூலமாகவோ அல்லது சுயநிதி நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்று திட்டத்தை செயல்படுத்தலாம். உரிய ஆவணங்கள் மற்றும் விரிவான திட்ட அறிக்கைகளுடன் உதயமித்ரா போர்ட்டலில் பதிவேற்றம் செய்யலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மாவட்ட ஊராட்சித் தலைவர் பாலசுப்ரமணியன், மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- இதில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மூலம் கிராமங்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டாரத்திற்குட்பட்ட மேலத்திருப்பாலக்குடி ஊராட்சியில் காந்தியடிகளின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டார். இக்கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
மாவட்ட ஊராட்சித் தலைவர் பாலசுப்ரமணியன், மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பேசியதாவது;-
கிராம சபா கூட்டத்தில் ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு கிராம வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்களை வழங்கி, கோரிக்கைகளை தெரியப்படுத்திட வேண்டும். கிராம சபா கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மூலம் கிராமங்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.
அதனைத்தொடர்ந்து வேளாண்மைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தார்பாய் மற்றும் இடுப்பொருட்களும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும் கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக கிராம சபா கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம், சுகாதாரம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட 24 தீர்மானங்கள் பொதுமக்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, மகளிர் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ரவீந்திரன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் பொன்னியின் செல்வன், வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஷோபா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், பக்கிரிசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.