search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாத்திரைகள்"

    தமிழகத்தில் பன்றி காய்ச்சலை தடுக்க 5 லட்சம் மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன என சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்தார். #Swineflu
    நெல்லை:

    நெல்லையில் நேற்று பொது சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடந்த டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தொடங்கி வைத்து பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாநிலம் முழுவதும் இதுவரை பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 17 பேர் இறந்துள்ளனர். 268 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



    பன்றி காய்ச்சலை தடுக்க தமிழகம் முழுவதும் 5 லட்சம் மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது 20 லட்சம் மாத்திரைகள் கையிருப்பு உள்ளன. அரசு ஆஸ்பத்திரிகளை தவிர, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பன்றி காய்ச்சல் தடுப்பு மாத்திரை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    டெங்கு காய்ச்சலுக்கு நில வேம்பு கசாயம் வழங்குவதை போல், பன்றி காய்ச்சலுக்கு இந்திய மருத்துவம் ஹோமியோபதி கழகம் அறிவுறுத்தலின் படி, கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    15 வகையான மூலிகை அடங்கிய இந்த குடிநீர் அரசு சித்த மருத்துவ ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Swineflu

    சீர்காழியில் தேவையான மாத்திரைகள் இல்லாததால் ஆரம்ப சுகாதார நிலையத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    சீர்காழி:

    சீசீர்காழி ஈசானியத்தெருவில் நகர ஆரம்ப சுகாதாரநிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கும், சிகிச்சைப்பெறவும் வந்து செல்கின்றனர். 

    இந்நிலையில் கடந்த கடந்த 25 நாட்களுக்கு மேலாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும், மருத்துவ பரிசோதனைகளுக்கு வரும் கர்ப்பிணி பெண்களும் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் மருத்துவர் இல்லாமல் கடந்த 20நாட்களுக்கு மேலாக அலைக்கழிப்பு செய்வதாலும், சுகர் மாத்திரை உள்ளிட்ட தேவையான மாத்திரைகள் கடந்த 6மாதமாக இருப்பு இல்லாததாலும் ஆவேசமடைந்து மருத்துவமனை முன்பு திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர். 

    முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை பணியிலிருந்த மருத்துவ செவிலியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×