search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போனஸ்"

    • டாஸ்மாக் கிடங்கில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 10 சதவீதம் வழங்க வேண்டும்.
    • சுமைப்பணி தொழிலாளர்களுக்கு நலநிதி உள்ளிட்ட நிதி பயன்களை வழங்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டக் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் முருகேசன் தலைமை வைத்தார்.

    கூட்டத்தில் சுமப்பணி சம்மேளன மாநிலத் தலைவர் குணசேகரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகையன், சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் கஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜானகிராமன், சிஐடியு நிர்வாகிகள் மாலதி, வைத்தியநாதன், லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பேரளம் ரயில்வே குட்செட் தலைவர் வீரபாண்டியன் வரவேற்றார். இறுதியில் டாஸ்மார்க் கிளைத் தலைவர் துரைராஜ் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும்.

    அரசு நுகர்வோர் வாணிபக் கழக நிர்வாகத்தில் பணி புரியும் சுமை பணி தொழிலாளர்களை அவுட்சோர்சிங் செய்யும் முறையில் தனியார் மயமாக்கும் உத்தரவினை வாபஸ் பெற வேண்டும்.

    தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக சுவைப்பணி தொழிலா ளர்கள் மற்றும் டாஸ்மாக் கிடங்கில் பணிபு ரியும் தொழிலா ளர்களுக்கு தீபாவளி போனஸ் 10 சதவீதம் வழங்க வேண்டும்.

    சுமைப்பணி தொழிலாள ர்க ளுக்கு நல நிதிஉள்ளிட்ட நிதி பயன்களை வழங்க வேண்டும்.

    பணிநேர த்தில் சுமை பணி தொழி லாளர்களுக்கு ஏற்படும் விபத்துகளுக்கு விபத்து காப்பீடு வழங்க வேண்டும்.

    தொழிலாளர் நல வாரிய த்தில் வீடு கட்டும் திட்டத்தை தொழிலா ளர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவே ற்றப்பட்டது.

    போனஸ் வழங்காவிட்டால் தீபாவளியன்று வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கதவடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று உப்பு நிறுவன தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளன. #Diwali
    சாயல்குடி:

    வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் போனஸ் வழங்காத மேலாண்மை இயக்குநரை கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

    பரமக்குடி சப்-கலெக்டர் விஸ்ணுசந்திரன் உத்தரவின் பேரில் கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன், கடலாடி வட்டாட்சியர் முத்துலட்சுமி, துணை வட்டாட்சியர் செந்தில் வேல்முருகன் ஆகியோர் விரைந்து சென்று உப்பு நிறுவன திட்ட மேலாளர் விஜயன் மற்றும் தொழிற் சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    செப்டம்பர் மாத ஊதியம் தொழிலாளர்களின் வங்கி வணக்கில் வரவு வைக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.

    போனஸ் தொகை தீபாவளிக்கு முந்தைய நாளுக்குள் வழங்கப்படாத பட்சத்தில் தீபாவளி அன்று தொழிலாளர்களின் வீடுகளில் கருப்புகொடி ஏற்றுவதுடன் தொடர்ந்து கதவு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். #Diwali
    தீபாவளி போனஸ் 25 சதவீதம் வழங்கக்கோரி போக்குவரத்து கழகத்தின் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
    பெரம்பலூர்:

    போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணமான ரூ.7 ஆயிரம் கோடியை திருப்பி கொடுக்க வேண்டும். போக்குவரத்து கழகத்தில் இருந்து ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு அன்றே பணப்பலனை முழுமையாக வழங்க வேண்டும். 2003-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும். ரிசர்வ் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். விடுப்பு சம்பளம், டி.ஏ. நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 25 சதவீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பெரம்பலூர் கிளை முன்பு போக்குவரத்து கழகத்தின் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பெரம்பலூர் கிளை செயலாளர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் துணை தலைவர் சிங்கராயர் முன்னிலை வகித்தார். அப்போது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் ஏ.ஐ.டி.யு.சி., அம்பேத்கர் தொழிற்சங்கம் உள்பட போக்குவரத்து கழகத்தின் பல்வேறு தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். காலையில் தொடங்கிய காத்திருப்பு போராட்டம் மாலையில் முடிவடைந்தது.
    டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க டாஸ்மாக் நிறுவன நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். #Tasmac
    சென்னை :

    டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குனர் கிருலோ‌ஷ் குமார், அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸூம், 11.67 சதவீதம் கருணை தொகையும் சேர்த்து 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.

    இதில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அறிவித்துள்ள அரசாணைப்படி போனஸ் பெற தகுதி உச்சவரம்பு ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    அதனடிப்படையில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களில் ரூ.21 ஆயிரம் வரை சம்பளம் பெறும் பணியாளர்கள் போனஸ் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

    அதன்படி டாஸ்மாக் கடைகளில் பணிபுரிய கூடிய மேற்பார்வையாளர்களுக்கு ரூ.16 ஆயிரத்து 800-ம், விற்பனையாளர்களுக்கு ரூ.15 ஆயிரத்து 400-ம், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.13 ஆயிரத்து 300-ம், உதவியாளர்களுக்கு ரூ.16 ஆயிரத்து 800-ம் வழங்க வேண்டும்.

    இந்த போனஸ் பட்டுவாடா சட்டம் 1956-ன்படி போனஸ் உச்சவரம்பு ரூ.7 ஆயிரம் என்ற அடிப்படை கொண்டு வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் நா.பெரியசாமி கூறியதாவது:-

    டாஸ்மாக் பணியாளர்களுக்கு கடந்த ஆண்டுகளில் 2 முறை பத்து, பத்து சதவீதமாக பிரித்து போனஸ் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஒரே முறையாக 20 சதவீதம் போனஸ் வழங்குவதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் கடுமையான உழைப்பால் தமிழக அரசின் பட்ஜெட்டில் 33 சதவீதம் வருவாயை ஈட்டித்தரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு போனஸ் உச்சவரம்பை காரணம் காட்டி வழங்கப்படும் 20 சதவீதம் என்று கூறி தடுப்பது சரியான நடவடிக்கை இல்லை.

    40 சதவீதம் போனஸ் வாங்க தகுதியான இந்த பணியாளர்களுக்கு உச்சவரம்பை தளர்த்தி முழு தொகையை வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tasmac
    ×