search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணமகன்"

    ஆலங்குடி அருகே மணமகன் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதால் நேற்று நடக்க இருந்த திருமணத்தை பெற்றோர் நிறுத்தியுள்ளனர். #DengueFever

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த கறம்பக்குடி அருகேயுள்ள பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 27). இவருக்கும் கறம்பக்குடியை சேர்ந்த ஜீவிதா என்ற பெண் ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

    திருமணத்திற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர்.

    கடந்த வாரம் பாண்டியனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. கறம்பக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டெங்கு அறிகுறி இருந்தது.

    அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    நேற்று, திருமணம் நடத்த திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் நடந்தன. உணவு வகைகளும் தயார் செய்யப்பட்டு இருந்தன. மணமகன் பாண்டியனை உறவினர்கள் அழைத்து வர சென்றபோது தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மறுத்துவிட்டது.

    தற்போது காய்ச்சலின் தாக்கம் குறைந்து வருகிறது. வெளியே சென்றால் விபரீதமாகிவிடும். எனவே அவர் தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.

    இதனால் நேற்று நடக்க இருந்த திருமணத்தை இரு வீட்டாரும் பேசி ஒத்தி வைத்து விட்டனர். மீண்டும் ஒரு நல்ல நாள் பார்த்து திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் முடிவெடுத்து அறிவித்தனர். இதற்கிடையே திருமண விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் தகவலறிந்து ஏமாற்றத்துடன் சென்றனர். #DengueFever

    திருவண்ணாமலையில் 2 சிறுமிகளுக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மணமகன்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #childmarriage
    திருவண்ணாமலை:

    கீழ்பென்னாத்தூர் அரும்பாக்கத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடியை சேர்ந்த அறிவழகன் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

    திருமண ஏற்பாடு நடந்துவந்த வேளையில், சமூக பாதுகாப்பு அலுவலர்கள் சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர். திருமண ஏற்பாட்டையும் தடுத்து நிறுத்தினர்.

    இந்த நிலையில், திருமண ஏற்பாடு நடந்த இடைப்பட்ட பகுதியில் ஆசைவார்த்தை கூறி மணமகன் உல்லாசம் அனுபவித்ததாக அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தரப்பில் அளிக்கப்பட்டது.

    மணமகன் அறிவழகன், இவரது பெற்றோர் மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 4பேர் மீதும் பாலியல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல், கீழ்பென்னாத்தூர் மேக்களூர் கிராமத்தை சேர்ந்த மற்றொரு சிறுமிக்கும், செஞ்சி தாலுகா அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த குருமூர்த்தி என்பவருக்கும் திருமணம் செய்துவைக்க இருத்தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

    சமூகநல பாதுகாப்புதுறை அதிகாரிகள் சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர். இந்த சிறுமியும், மணமகன் குருமூர்த்தி மீது அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார்.

    மணமகன் மற்றும் அவரது தந்தை, சிறுமியின் தாய் மற்றும் உறவினர் என 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #childmarriage
    மணமக்களுக்கு மணமகனின் நண்பர்கள் சிலர் மணமக்களிடம் பிளாஸ்டிக் கேனில் 5 லிட்டர் பெட்ரோலை திருமண பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்தனர். #FuelPriceHike #WeddingBride
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழபருத்திக்குடியை சேர்ந்த இளஞ்செழியனுக்கும், நாகை மாவட்டம் செம்மியவழுரை சேர்ந்த கனிமொழிக்கும் குமராட்சியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்தது. இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்தினர்.



    அப்போது மணமகனின் நண்பர்கள் சிலர் மணமக்களிடம் பிளாஸ்டிக் கேனில் 5 லிட்டர் பெட்ரோலை திருமண பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்தனர். இதை மணமக்களும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.

    பொதுவாக திருமண விழாவில், மணமக்களுக்கு பரிசு பொருட்கள், மொய் பணம் ஆகியவற்றை தான் வழங்குவார்கள். ஆனால் தற்போது பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை நெருங்கி வருவதால் பெட்ரோலை பரிசாக அளித்த சம்பவம் மணவிழாவுக்கு வந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த நிமிடம் முதல் நெட்டிசன்கள் ‘மீம்ஸ்’களை பறக்க விட்டனர். இதனால் டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்-அப் என்று எங்கும் இந்த மணமக்களின் ‘மீம்ஸ்’கள் தான் நிரம்பி வழிந்தன. #FuelPriceHike #WeddingBride 
    வியட்னாமில் பேருந்தும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தனது திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்று கொண்டிருந்த மணமகன் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். #Vietnam #BusAccident
    ஹனோய்:

    வியட்னாம் நாட்டின் காங்க் ட்ரி மாகாணத்தில் இருந்து திருமணத்துக்காக மணமகன் உட்பட குடும்பத்தினர் 17 பேர் மினி பேருந்தில் பின்ஹ் டின்ஹ் மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி மோசமான விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் சம்பவ இடத்திலேயெ பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மணமகன் உட்பட மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், படுகாயங்களுடன் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறுகாயங்களுடன் தப்பிய லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தனது திருமண விழாவுக்கு செல்லும் வழியில் மணமகனும் அவரது குடும்பத்தாரும் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Vietnam #BusAccident
    பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் மின்னலை பார்த்து மணமகன் பயந்ததால் மணமேடையிலேயே மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா:

    பொதுவாக, வடமாநிலங்களில் சில திருமணங்கள் வினோத காரணங்களுக்காக மேடையிலேயே நின்றுபோகும் நிகழ்வு அவ்வப்போது நடக்கிறது. உதாரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு ரசகுல்லா இல்லை என்பதற்காக நிறுத்தப்பட்ட கல்யாணம், ஐஸ் கிரீம் வைக்காததால் ஏற்பட்ட தகராறில் மண்டை உடைப்பு என திருமணம் நிறுத்தப்படுவதற்கான காரணங்கள் நீள்கின்றன.

    இந்த வரிசையில், பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த திருமணத்தின்போது மணமேடையில் இருந்த மாப்பிள்ளை மின்னலை பார்த்து பயந்து, வினோதமாக நடந்து கொண்டார். இதனைக் கண்ட மணப்பெண்ணோ மேடையிலேயே மாப்பிள்ளை வேண்டாம் எனக்கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

    இதனால் இரு வீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, மாப்பிள்ளை வீட்டார் சிலர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. சில வினாடிகள் தோன்றி மறைந்த மின்னல் மணமகனுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியா நினைவாக மாறிவிட்டது. 
    அரச்சலூர் அருகே மணமகன் வராததால் இன்று நடைபெற இருந்த திருமணம் நின்று போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரச்சலூர்:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கோப்பம் பட்டியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மகன் பொன்மணிகண்டனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் இன்று அரச்சலூரில் உள்ள கோவிலில் நடப்பதாகவும், பின்னர் விருந்து வைபவங்கள்அரச்சலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடப்பதாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    திருமணத்துக்காக நேற்று இரவே மணமகன் திருமண மண்டபத்துக்கு வந்து விடுவார் என மணமகன் வீட்டார் தெரிவித்து இருந்தனர். அதன்படி மணமகன் வீட்டை சேர்ந்த பலரும் திருமண மண்டபத்துக்கு வந்து விட்டனர்.

    ஆனால் மணமகன் வர வில்லை எனவே மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். திருமண மண்டபத்துக்கு வந்திருந்த மணமகன் வீட்டாரிடம் இதுபற்றி கேட்டனர். ஆனால் அவர்களிடம் சரியான பதில் கிடைக்கவில்லை.

    மணமகனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். போன் ரிங் ஆனது. ஆனால் போனை மணமகன் எடுக்கவில்லை. மணமகன் திடீரென மாயமானதால் மணமகள் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் செய்வதறியாது விழித்தனர்.

    நேற்று இரவு நடக்க வேண்டிய திருமண நிகழ்ச்சிகள் ஏதும் நடக்க வில்லை. இதனால் திருமண கனவில் இருந்த மணமகள் அதிர்ச்சி அடைந்தார்.

    மணமகன் வரவில்லை என்ற தகவல் அறிந்த அவர் திருமண மண்டப அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார். அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணமகளை மீட்டனர்.

    இதற்கிடையே இன்று காலை திருமணம் நடக்க இருப்பதால் மணமகன் வந்துவிடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் காலையிலும் மணமகன் திருமண மண்டபத்துக்கு வரவில்லை. இதனால் இன்று நடக்க இருந்த திருமணம் நின்றது.

    திருமண நிகழ்ச்சிக்காக நேற்று இரவு சாப்பாடு தயார் செய்யப்பட்டிருந்தது. மணமகன் மாயமானதால் விருந்து நிகழ்ச்சி நடைபெற வில்லை. இன்று காலை சாப்பாடு தயார் செய்யப்படவில்லை.

    திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மணமகள் மற்றும் மணமகன் உறவினர்கள் திருமண மண்டபத்துக்கு வந்தனர். திருமணம் நின்றுபோன தகவல் அறிந்து அவர்கள் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் அரச்சலூர் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    ×