search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 157065"

    • பன்னீரில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்தனுப்ப சூப்பரான ரெசிபி இது.

    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி - 5,

    பன்னீர் துருவல் - கால் கப்,

    கேரட் துருவல் - சிறிதளவு,

    நறுக்கிய குடைமிளகாய் - சிறிதளவு,

    வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்),

    தக்காளி சாஸ், சோயா சாஸ் - தலா 2 டீஸ்பூன்,

    வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வாணலியில் சிறிதளவு வெண்ணெய்விட்டு உருகியதும் வெங்காயம், பன்னீர் துருவல், குடைமிளகாய், கேரட் துருவல், உப்பு, தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்கி இறக்கவும்.

    தோசைக்கல்லில் சிறிதளவு வெண்ணெய் விட்டு உருகியதும், சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் சூடு செய்து எடுக்கவும்.

    சப்பாத்தியின் ஓரத்தில் தயாரித்து வைத்துள்ள பன்னீர் கலவையை வைத்து, சுருட்டி லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுத்தனுப்பவும்.

    சூப்பரான பன்னீர் ஃப்ராங்கி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • உளுந்து வைத்து பல்வேறு வெரைட்டி வடைகளை செய்யலாம்.
    • இன்று அரிசி மாவில் வடை செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பச்சரிசி மாவு - 200 கிராம்,

    தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 4,

    சீரகம் - அரை டீஸ்பூன்,

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,

    பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு.

    செய்முறை:

    கொத்தமல்லி, கறிவேப்பிலை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    2 கப் நீரைக் கொதிக்கவிட்டு… அதில் உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.

    ஒரு நிமிடத்துக்குப் பிறகு கொத்தமல்லி, அரிசி மாவைத் தூவி கட்டியின்றி கிளறி, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மேலும் கிளறி இறக்கி ஆறவிடவும்.

    இந்த மாவில் சிறிதளவு எடுத்து வடைகளாக தட்டி வைக்கவும்.

    கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டி வைத்த வடைகளை சூடான எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும்.

    விரைவில் பொரிந்துவிடும் இந்த வடை.

    இப்போது சூப்பரான அரிசி வடை ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பல வகையான அல்வா சாப்பிட்டு இருப்பீங்க.
    • இன்று வாழை இலையை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    வாழை இலை - 2

    சோள மாவு - கால் கப்

    சர்க்கரை - கால் கப்

    முந்திரி - தேவையான அளவு

    பூசணி விதை - 1 டேபிள் ஸ்பூன்

    எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்

    நெய் - 6 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    * இளசாகவோ, முற்றியதாகவோ இல்லாமல் நடுத்தரமான இரண்டு வாழை இலைகளை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி விழுதாக அரைக்கவும்.

    * அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரி மற்றும் பூசணி விதைகளை தனித்தனியாகப் போட்டு, நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    * அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், வாழை இலை விழுதைக் கொட்டி அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    * சோள மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைக்கவும்.

    * வாழை இலை விழுது வதங்கி கெட்டியானதும், அதனுடன் சோள மாவு கரைசலை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கிளறவும். பின்னர் ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    * இப்போது அதில் சிறிது சிறிதாக நெய்யை ஊற்றிக் கிளறி, கலவை வாணலியில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.

    * இந்த அல்வாவை நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரி, பூசணி விதையை மேலே தூவி அலங்கரிக்கவும்.

    * இப்போது சூப்பரான வாழை இலை அல்வா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஹோட்டலில் கிடைக்கும் இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
    • குழந்தைகளுக்கு விதவிதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    காய்கறி மசாலா செய்ய

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    கேரட் - 1

    பீன்ஸ் - 10

    பட்டாணி - 1/2 கப்

    உருளைக்கிழங்கு - 4

    பன்னீர் - 100 கிராம்

    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி

    சீரக தூள் - 1/2 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

    உப்பு - 1 தேக்கரண்டி

    ஆம்சூர் தூள் - 1/2 தேக்கரண்டி

    கொத்தமல்லி இலை நறுக்கியது

    எண்ணெய் - தேவையான அளவு

    சோள மாவு கலவை செய்ய

    சோள மாவு - 1 மேசைக்கரண்டி

    மைதா - 2 மேசைக்கரண்டி

    உப்பு - 1/4 தேக்கரண்டி

    மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி

    தண்ணீர்

    கார்ன் பிளேக்ஸ்

    செய்முறை:

    * வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    * பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    * பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.

    * ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் பாதி வதங்கியதும் காய்கறிகளைச் சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.

    * காய்கறிகள் வெந்த பிறகு வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.

    * பின்பு காஷ்மீரி மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரக தூள்,கரம் மசாலா தூள், உப்பு, ஆம்சூர் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    * பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து கலந்து விட்டு, மசித்து கொள்ளவும்.

    * அடுத்து அடுப்பை அணைத்து விட்டு துருவிய பன்னீர், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும்.

    * ஒரு தட்டில் எண்ணெய் தடவி, மசாலாவை பரப்பி ஆறவிட்டு, 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.

    * கார்ன் பிளேக்ஸை பொடியாக்கி கொள்ளவும்.

    * சோள மாவு கலவை செய்ய, சோள மாவு, மைதா, உப்பு, மிளகு தூள், தண்ணீர் சேர்த்து கட்டியின்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்..

    * பிரிட்ஜில் வைத்த மசாலாவை எடுத்து உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டவும்.

    * பின்பு அதை சோள மாவு கலவையில் முக்கி கார்ன் பிளக்ஸில் பிரட்டி எடுத்து 5 நிமிடம் பிரீஸரில் வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த நக்கெட்ஸை சூடான எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

    * இப்போது சூப்பரான வெஜிடபிள் நக்கெட்ஸ் ரெடி.

    * கெட்சப் அல்லது மயோனைஸ் உடன் சூடாக பரிமாறவும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சிக்கனில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்

    பிரெட் - 1 துண்டு

    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

    வால்நட் - 1/2 கப்

    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

    சீரக தூள் - 1 தேக்கரண்டி

    இட்டாலியன் சீசனிங் - 1 1/2 தேக்கரண்டி

    எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழத்தின் சாறு

    சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி

    மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி

    சோளமாவு - 1/4 கப்

    மைதா - 1/4 கப்

    தண்ணீர்

    உப்பு - 1/4 தேக்கரண்டி

    எண்ணெய் - பொரிப்பதற்கு

    செய்முறை:

    * சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    * பிரெட்டை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனை போட்டு அதனுடன் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், சீரக தூள், இட்டாலியன் சீசனிங், எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய் 2 டீஸ்பூன் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.

    * மிக்ஸியில் நறுக்கிய பிரெட் துண்டு, வால்நட், சில்லி பிளேக்ஸ், உப்பு, மிளகு தூள், இட்டாலியன் சீசனிங் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    * ஒரு கிண்ணத்தில் மைதா, சோளமாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    * ஊற வைத்த சிக்கனை மாவில் தோய்த்து பிறகு வால்நட் பிரெட் தூளில் பிரட்டி வைத்து கொள்ளவும். இவ்வாறு அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்து வைக்கவும்.

    * கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * சூப்பரான சிக்கன் டென்டெர்ஸ் தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகள் வேக வைத்த முட்டையை சாப்பி மாட்டார்கள்.
    • முட்டையை இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 3

    வெங்காயம் - 1

    பூண்டு - 5 பல்

    காய்ந்த சிவப்பு மிளகாய் - 10

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    உப்பு கரைத்த தண்ணீர்- தேவையான அளவு

    எலுமிச்சை தண்ணீர்- தேவையான அளவு(எலுமிச்சை சாறில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்தது)

    புளி தண்ணீர்- தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    * முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விடவும்.

    * பூண்டு, வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்.

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். வெங்காயம் ஆறியதும் மொறு மொறு என்று இருக்கும்.

    * அடுத்து பூண்டை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * அடுத்து காய்ந்த மிளகாயை போட்டு பொரிந்ததும் எடுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் பொரித்த பூண்டை நன்றாக கைகளால் பொடித்து போடவும். அடுத்து அதில் வெங்காயம், காய்ந்த மிளகாயை போட்டு நன்றாக கலக்கவும்.

    * வேகவைத்த முட்டையின் நடுவில் சிறிதளவு வெட்டி அதனுள் பொரித்த வெங்காயம் பூண்டு கலவையை வைக்கவும்.

    * இதன்மேல் சிறிதளவு எலுமிச்சை சாறு, புளித்தண்ணீர், பொரித்த எண்ணெய், உப்பு கரைத்த தண்ணீர் போடவும். இவை அனைத்தையும் சில துளிகள் மட்டும் போடவும்.

    * இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    * சூப்பரான பர்மா ஸ்டைல் முட்டை பேஜோ ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸை சுத்தமான முறையில் வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மைதா - 1 கப்

    மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்

    உப்பு - 1 டீஸ்பூன்

    வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை

    * ஒரு பாத்திரத்தில் மைதா, மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், வெண்ணெய், உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.

    * அதில் தண்ணீரை விட்டு மாவை மிருதுவாகப் பிசைந்து குறைந்தது அரை மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.

    * ஒரு எலுமிச்சம்பழ அளவு மாவை எடுத்து உருட்டி, மெல்லிய சப்பாத்தியாக இட்டு கத்தியால் குறுக்கும், நெடுக்கும் கோடிட்டு, சிறு சதுர வில்லைகளாக வெட்டி எடுக்கவும். எல்லா மாவையில் இப்படியே செய்து, வில்லைகளை ஒரு பெரிய தட்டில் தனித்தனியாகப் போட்டு வைக்கவும்.

    * ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு சூடானதும் செய்து வைத்திருக்கும் துக்கடாவை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    * இப்போது சூப்பரான கார துக்கடா ரெடி

    இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • அன்னாசிப்பழத்தில் வைட்டமின் 'சி' சத்து நிறைந்துள்ளது.
    • இன்று இந்த அல்வா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    அன்னாச்சிப் பழத்துண்டுகள் - 1 கப்

    பால் - 1 கப்

    சர்க்கரை - 1 கப்

    ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி

    உப்பு - 1 சிட்டிகை

    நெய் - 3/4 கப்

    கேசரிப் பவுடர் - 1/4 தேக்கரண்டி

    தண்ணீர் - 1/4 டம்ளர்

    செய்முறை :

    முதலில் அன்னாசிப்பழத் துண்டுகளை ஆவியில் வேக வைக்கவும்.

    ஆறியபின் பால் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

    தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கம்பிப்பதம் வரும் வரை கிளற வேண்டும்.

    இதில், அரைத்து வைத்துள்ள அன்னாசிப்பழ விழுது, ஒரு சிட்டிகை உப்பு, நெய், ஏலப்பொடி, கேசரிபவுடர், நெய்யில் வறுத்த திராட்டை ஆகியவை சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

    அன்னாச்சிப்பழ ஜூஸ் எடுத்து தண்ணீருக்குப் பதில் ஜூஸை ஊற்றி, இதே முறையில் அல்வா தயார் செய்யலாம்.

    இப்போது சூப்பரான அன்னாசி அல்வா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தயிர் வடை கேள்விப்பட்டிருப்பீங்க. அது என்ன தயிர் பக்கோடா?
    • வாங்க இன்னைக்கு இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    தயிர் - 400 கிராம்

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

    கரம் மசாலா - அரை டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தண்ணீர் - 3 கப்

    பக்கோடா செய்ய :

    கடலை மாவு - 1 கப்

    சீரகம் - 4 டீஸ்பூன்

    மஞ்சள் - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    உப்பு - 1/2 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    கொத்தமல்லி - சிறிதளவு

    தாளிக்க :

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    சீரகம் - 1/4 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    செய்முறை :

    வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் , நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் ஊற்றி கடலை மாவுக் கலவையை பக்கோடா போல் உதிர்த்து போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் தயிர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். இறுதியாக தண்ணீர் ஊற்றி கலந்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், கரம் மசாலா பொடி சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.

    இவை நன்கு வதக்கியபின் கலந்து வைத்துள்ள தயிர் கலவையை அதில் ஊற்றவும்.

    ஒரு முறை கொதித்ததும் வறுத்து வைத்துள்ள பக்கோடாவை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி இறக்கி பரிமாறவும்.

    அடுப்பில் இருந்து இறக்கி அரை மணி நேரம் கழித்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    இப்போது சூப்பரான தயிர் பக்கோடா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மீனை குழம்பு, வறுவல், பிரை என விதவிதமாக சமைத்து சாப்பிட்டிருப்பீர்கள்.
    • இன்று மீனை வைத்து வடை செய்யலாம் வாங்க..

    தேவையான பொருட்கள்

    மீன் துண்டுகள் - 500 கிராம்

    முட்டை - 1

    உருளைக்கிழங்கு - 100 கிராம்

    மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    பச்சைமிளகாய் - 3

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை

    மீனை கழுவி சுத்தம் செய்து வாணலியில் சிறிதளவு நீர்விட்டு வேக வைக்கவும்.

    பின்னர் அதை எடுத்து முள், தோல் நீக்கி நன்கு பிசையவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக வெட்டவும்.

    ஒரு பாத்திரத்தல் உதிர்த்த மீன், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, முட்டை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் மசாலாவை சிறுசிறு வடைகளாகத் தட்டிப் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும்.

    ருசியான மீன் வடை தயார்.

    இதை தோசைக்கல்லில் தட்டி வைத்து கட்லெட் போல செய்யலாம். சுவை சூப்பராக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மட்டன் வைத்து தான் கோலா உருண்டை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள்.
    • இன்று வாழைக்காய் வைத்து கோலா உருண்டை செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    வாழைக்காய் - 3

    வெங்காயம் - 2

    பொட்டுக்கடலை - 1 கையளவு

    தேங்காய் - 1/4 மூடி துருவியது

    பச்சை மிளகாய் - 3

    சோம்பு - 1 ஸ்பூன்

    பூண்டு - 10 பற்கள்

    இஞ்சி - சிறிய துண்டு

    பட்டை - 1 இன்ச்

    கிராம்பு - 1

    ஏலக்காய் -3

    கசகசா - 1 ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    கொத்தமல்லித்தழை- கையளவு

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வாழைக்காயின் தோல் நீக்கி விட்டு அதனை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

    தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

    வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்சி ஜாரில் சோம்பு, பொட்டுக்கடலை, இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை, ஏலக்காய், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கசகசா, வெங்காயம், கொத்தமல்லித்தழை, பெருங்காயம், மஞ்சள் ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பேஸ்ட் போன்று அரைத்து ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதே மிக்ஸி ஜாரில் துருவிய வாழைக்காயை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைத்து அதில் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு ஒரே மாதிரியான அளவிலான உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ள வேண்டும். உருண்டை பிடிச்ச முடியவில்லை என்றால் சிறிது கடலை மாவு சேர்த்துகொள்ளலாம்.

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அடுப்பின் தீயினை மிதமாக வைத்து ஒவ்வொரு 4 முதல் 5 உருண்டைகளை போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்தால் சுவையான மொறுமொறுவென வாழைக்காய் கோலா உருண்டை ரெடி!

    இதற்கு டொமேட்டோ கெட்ச் அப் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சூடான டீ, காபியுடன் சாப்பிட இந்த வடை சூப்பராக இருக்கும்.
    • இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    காலிஃபிளவர் - ஒரு கப்

    கடலை பருப்பு - அரை கப்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    கசகசா - கால் டீஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு - தேவைகேற்ப

    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - ஒன்று

    செய்முறை

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப்பருப்பை நன்றாக கழுவி 2 மணிநேரம் ஊறவைத்த பின் மிக்சியில் போட்டு அதனுடன் சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    காலிஃபிளவரை நன்றாக சுத்தம் செய்து துருவிக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதில் துருவிய காலிஃபிளவர் போட்டு ஒரு கொதி வந்ததும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்து கொள்ளவும்.

    இன்னொரு கிண்ணத்தில் தண்ணீரை வடிகட்டிய காலிஃபிளவர், அரைத்த கடலை மாவு, கசகசா, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் காலிஃபிளவர் மசாலாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

    சூப்பரான காலிஃபிளவர் பருப்பு வடை ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×