என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 157065"
- கிருஷ்ணருக்கு இந்த லட்டை நைவேத்தியம் செய்யலாம்.
- இதை குழந்தைகள் விரும்பி உண்பர்; சுவையும், சத்தும் நிறைந்தது.
தேவையான பொருட்கள்:
அவல் - 1 கப்,
பால் - 100 மில்லி லிட்டர்,
வெல்லம் - 1 கப்,
நெய் - சிறிதளவு,
ஏலக்காய் - சிறிதளவு,
முந்திரி - சிறிதளவு,
பாதாம் - சிறிதளவு.
செய்முறை:
வாணலியில், சிறிது நெய் ஊற்றி, ஏலக்காய், முந்திரி, பாதாம் போன்றவற்றை வறுத்து, அரைக்கவும்.
அவலில் சூடான பால், வெல்லம், நெய் மற்றும் அரைத்து வைத்திருக்கும் பொடி சேர்த்து, உருண்டை பிடித்தால், அவல் லட்டு தயார்!
- இன்று உருளைக்கிழங்கு பிரட் சேர்த்து வடை செய்யலாம்.
- இந்த வடை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள் :
உருளைக் கிழங்கு - 2
பிரெட் துண்டுகள் - 10
வறுத்த ரவை - அரை கப்
அரிசி மாவு - இரு டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
கேரட் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை - சிறிது
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பிரெட்டை போட்டு உதிர்த்துக் கொள்ளுங்கள்.
இதனுடன் வறுத்த ரவை, அரிசி மாவு, உப்பு, கேரட் துருவல், வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி துருவல், மிளகாய் தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம். கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.
சூப்பரான பிரெட் உருளைக்கிழங்கு வடை ரெடி.
விருப்பப்பட்டால் சாஸ், தேங்காய் சட்னி, மல்லி சட்னியுடன் சாப்பிடலாம்.
- குழந்தைகளுக்கு அடிக்கடி கருப்பு உளுந்து உணவுகளை கொடுத்தால் ரத்த சோகை வராது.
- கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகம் உள்ளது.
தேவையான பொருட்கள் :
கருப்பு உளுந்து - 1 கப்
வெண்ணெய், மிளகு - 2 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
கருப்பு உளுந்தை வெறும் கடாயில் வாசனை வரும் வரையில் வறுக்க வேண்டும். அதன் பிறகு மிக்ஸியில் ரவை போன்று கரகரப்பாக பொடியாக்க வேண்டும்.
அதோடு கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, மிளகுப் பொடி, வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
இதையடுத்து 15 நிமிடங்கள் ஊற வைத்து வடையாக தட்டி, கடாயில் சூடான எண்ணெயில் போட்டு எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான கருப்பு உளுந்து வடை ரெடி.
- குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும்
- இன்று ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
மில்க் பிஸ்கட் - 12
கோகோ பவுடர் - 3 தேக்கரண்டி
கன்டன்ஸ்டு மில்க் - 1/4 டின்
கேக் ஸ்பிரிங்க்ஸ் - 1/4 கப்
பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல் - 1/4 கப்
செய்முறை
* பிஸ்கட்டுகளை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
* பொடித்த பிஸ்கட் தூளுடன் கோகோ பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
* அதனுடன் கன்டன்ஸ்டு மில்க் சேர்த்து அழுத்தி பிசையாமல் விரல்களால் மிருதுவாக ஈரப்பதமாக பிசைந்து கொள்ளவும்
* சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து உருட்டி தேங்காய் துருவலில் பிரட்டி எடுக்கவும்.
* சில உருண்டைகளை ஸ்பிரிங்கிஸ்ஸில் பிரட்டி எடுக்கவும். டேஸ்டி பிஸ்கட் சாக்லேட் பால்ஸ் ரெடி.. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
பிஸ்கட் சாக்லேட் பால்ஸ்
- குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று தோசையில் சாக்லேட் சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 1 கப்
சாக்லேட் சிரப் - 1/4 கப்
நெய் - 4 ஸ்பூன்
முந்திரி - தேவையான அளவு
திராட்சை - தேவையான அளவு
பாதாம் - தேவையான அளவு
செர்ரி பழம் - தேவையான அளவு
வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசையாக ஊற்றவும்.
அதன் மேல் வெண்ணெயை தடவவும்.
அடுத்து அதன் மேல் சாக்லேட் சிரப்பை ஊற்றி வேக விடவும்.
அடுத்து அதன் மேல் முந்திரி, திராட்சை, பாதாம், செர்ரி பழத்தை தூவவும்.
இந்த தோசையை திருப்பி போட கூடாது. அப்படியே ரோல் செய்யவும்.
பிறகு சிறிய துண்டுகளாக கட் செய்து அதன் மேல் சாக்லேட் சிரப்பை ஊற்றி பரிமாறலாம்.
எளிதில் செய்யக்கூடிய சாக்லேட் தோசை தயார்
- சோயாவில் பல்வேறு வகையான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று சோயா லாலிபாப் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மீல்மேக்கர் - கால் கப்
உருளைக்கிழங்கு - 1
ப.பட்டாணி - ஒரு கைப்பிடி
பெ.வெங்காயம் - 1
கேரட் - 1
குடை மிளகாய் - 1
உப்பு - தேவைக்கு
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
ஐஸ் குச்சிகள் - 5
செய்முறை :
வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட் துருவிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்து அதில் சோயாவை போட்டு கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும் தண்ணீரை அப்புறப்படுத்திவிட்டு மிக்சியில் லேசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் குடை மிளகாய், கேரட், பட்டாணியை கொட்டி வதக்கவும்.
அவை நன்கு வதங்கியதும் சோயாவை போட்டு கிளறி இறக்கவும்.
நன்கு ஆறியதும் சோயா கலவையுடன் மசித்த உருளைக்கிழங்கு, மிளகு தூள் கலந்து உருண்டைகளாக தயார் செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் உருண்டைகளை போட்டு பொரித் தெடுக்கவும்.
பின்னர் உருண்டைகளின் நடுவில் ஐஸ் குச்சிகளை சொருகினால் சோயா லாலிபாப் ரெடி.
- குழந்தைகளுக்கு காலிபிளவர் சில்லி மிகவும் பிடிக்கும்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காலிபிளவர் - 1
மைதா - அரை கப்
சோள மாவு - கால் கப்
அரிசி மாவு - ஒரு கைப்பிடி அளவு
மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
செய்முறை :
காலி பிளவர் பூவை தனித்தனியாக பிரித்தெடுத்துக்கொள்ளவும்.
கடாயில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து காலிபிளவரை கொட்டி சிறிது நேரம் வேகவைத்து இறக்கவும்.
வேக வைத்த காலிபிளவரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பிரட்டி வைத்த காலிபிளவர் பூவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
இப்போது ருசியான காலிபிளவர் சில்லி ரெடி.
- குழந்தைகளுக்கு இந்த லட்டு மிகவும் பிடிக்கும்.
- விருந்தினர் திடீரென வந்தால் இந்த லட்டு செய்து கொடுத்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
நெய் - 2 தேகரண்டி
முந்திரி, திராட்சை - தேவைக்கு
ஏலக்காய் - 3 (பொடித்தது)
செய்முறை
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை போட்டு பொன்னிறம் வந்தவுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.
சர்க்கரை உருகியதும் தேங்காய் துருவல் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
7 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு தட்டில் எடுத்து வைத்துகொள்ளவும். மீதமான சூட்டில் லட்டு பிடிக்கவும்.
எளிய முறையில் இந்த ஸ்வீட் செய்யலாம்.
- இது வறுத்த நிலக்கடலை மற்றும் வெல்லப் பாகு சேர்த்து செய்யப்படும் ரெசிபி.
- நிலக்கடலை மிட்டாய் எல்லா குழந்தைகளும் எப்பவும் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் ஆகும்.
தேவையான பொருட்கள் :
வேர்க்கடலை - 200 கிராம்,
நெய் - 200 கிராம்,
சர்க்கரை - 300 கிராம்,
முந்திரி, பாதாம் - தேவையான அளவு,
ஏலக்காய் தூள் - சிறிதளவு,
தேங்காய்த் துருவல் - சிறிதளவு.
செய்முறை :
வேர்க்கடலையை ஒரு மணி நேரம் ஊறவைத்து தோல் நீக்கி மிக்ஸியில் மையாக அரைக்கவும்.
பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்க வைத்து, கம்பி பாகு பதம் வந்தவுடன், அதில் அரைத்த வேர்க்கடலை விழுதைச் சேர்த்துக் கிளறவும்.
சிறிது சிறிதாக நெய் சேர்த்தபடி கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
அடுத்து தேங்காய்த் துருவல், பாதாம், முந்திரி, ஏலக்காய் தூள் கலந்து, கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியவுடன் வில்லைகள் போட்டுப் பரிமாறவும்.
சூப்பரான தித்திப்பான வேர்க்கடலை பர்ஃபி ரெடி.
- குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும்.
- வீட்டிலேயே சாக்லேட் பர்ஃபி செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க.
தேவையான பொருட்கள்:
பால் பவுடர் - 1/4 கப்
கோகோ பவுடர் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1/3 கப்
தண்ணீர் - 1/4 கப்
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி, பாதாம் - தேவையான அளவு
செய்முறை :
அச்சு தட்டில் நெய் தடவி தயாராக வைக்கவும்.
முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், கோகோ பவுடர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சக்கரையுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் .
ஒரு நூல் பதம் வந்ததும் முன்பே கலக்கி வைத்துள்ள பால் பவுடர் கலவையை சேர்த்து கலக்கவும். இதனை மிதமான சூட்டில் இடைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும் இல்லையேல் அடிபிடித்து விடும்
இதனுடன் நெய் சேர்த்து கிளறி ஓரங்களில் ஒட்டாமல் ஒன்று திரண்டு வரும் பொழுதுமுன்பு நெய் தடவி வைத்துள்ள தட்டில் ஊற்றி நறுக்கிய பாதாம், முந்திரியை மேலே தூவி அலங்கரிக்கவும். பாதாம், முந்திரியை லேசாக தட்டி விடவும் அப்பொழுது தான் சாக்லேட் துண்டுகளில் நன்றாக ஒட்டிக் கொள்ளும். சிறிது ஆறியவுடன் கத்தி கொண்டு வில்லைகள் போடவும்.
இப்போது சுவையான சாக்லேட் பர்ஃபி தயார்
- இந்த வெங்காய பஜ்ஜி தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
- இன்று இந்த பஜ்ஜி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 2
கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* வெங்காயத்தை தோல் நீக்கி வட்டமாக வெட்டிகொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு போட்டு அதனுடன் ஓமம், மிளகாய் தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, நீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காய துண்டுகளை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், அருமையான வெங்காய பஜ்ஜி தயார்.
- இந்த வடையை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
- டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வடை.
தேவையான பொருட்கள் :
பிரெட் துண்டுகள் - 6,
உளுத்தம் பருப்பு - 100 கிராம்,
வெங்காயம் - 2,
இஞ்சி - சிறு துண்டு,
பச்சை மிளகாய் - 1,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பிரெட்டை பொடித்துக் கொள்ளவும்.
உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும்.
அரைத்த மாவுடன் பிரெட் தூள், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
இப்போது சூப்பரான பிரெட் வடை ரெடி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்