என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 157148"
- நாகரில் 22 மையங்களில் நடந்தது
- பலத்த சோதனைக்கு பிறகு அனுமதி
நாகர்கோவில்:
தமிழகத்தில் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர், ஊரக மேம்பாட்டு உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என 92 பணியிடங்கள் காலி யாக உள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடந்தது. குமரி மாவட்டத்தில் குரூப்-1 தேர்வு எழுதுவதற்கு 7329 பேர் விண்ணப்பித்து இருந்தனர். நாகர்கோவிலில் 22 மையங்களில் இன்று தேர்வு நடந்தது. தேர்வு மையங்களுக்கு காலை யிலேயே தேர்வு எழுதுப வர்கள் வந்திருந்தனர். இளம்பெண்கள், வாலி பர்கள் பலரும் தேர்வு மையத்திற்கு வந்தனர். கைக் குழந்தைகளுடனும் பெண்கள் வந்தனர்.
நாகர்கோவில் எஸ்.எல். பி. பள்ளியில் தேர்வு எழுதுவதற்கு வந்தவர்கள் பலத்த சோதனைக்கு பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க பட்டனர்.காலை 8.30 மணி முதல் தேர்வு எழுத வந்தவர்களின் அனுமதி சீட்டுகள் பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக்கல் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இதனால் தேர்வு எழுத வந்த இளம்பெண்கள் தங்களது உறவினர்களிடம் செல்போன்களை ஒப்படைத்து சென்றனர். சிலர் செல்போன் வைப்ப தற்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் செல்போன்களை வைத்துவிட்டு தேர்வு எழுத சென்றனர். கைக்கு ழந்தையுடன் வந்த பெண் கள் தங்களது குழந்தை களை கணவர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்ப டைத்துவிட்டு தேர்வு மையத்திற்கு சென்றனர். இளம்பெண்கள் தேர்வு எழுத சென்ற பிறகு அவர்களுடன் வந்த பெற்றோர் தேர்வு மையத்திற்கு வெளியே காத்திருந்தனர்.
டதி பள்ளி, டி.வி.டி. பள்ளி, கோலி கிராஸ் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, இந்து வித்யாலயா பள்ளி, பயோனியர் கல்லூரி, சி.எஸ்.ஐ. மெட்ரிக் பள்ளி உள்பட அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த பாதுகாப்புடன் தேர்வு நடந்தது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 12.45 மணிக்கு முடிந்தது.
தேர்வை கண்காணிக்க 2 பறக்கும் படைகள், 6 நடமாடும் குழுக்கள் மற்றும் 22 ஆய்வு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். அவர்கள் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் டதி பள்ளியில் நடந்த தேர்வு மையத்தில் கலெக்டர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார்.
- சாலையில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.
- தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், மணக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நெல்லியடிக்காடு கிராமம், காளியம்மன் கோயில் தெருவில், சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது.
இப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
200 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வெள்ள நீர் வடிய ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்ட நிலையில், சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டது.
சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு கண்டு கொள்ளாமல் அப்படியே விடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக சிறிது தூரம் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் தண்ணீரில் இறங்கி நடந்து செல்லும் அவலம் உள்ளது.
மேலும், தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் குழந்தைகளுடன் உறங்க முடியாத சூழல் உள்ளது.
தண்ணீர் தேங்கி நிற்பதால் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த இப்பகுதி பொதுமக்கள், சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வீ.கருப்பையா தலைமை வகித்தனர்.
சிபிஎம் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு உறுப்பினர் சேகர், சீனிவாசன், முத்துக்குமார், பன்னீர் செல்வம், பாக்கியம், அஞ்சம்மாள், ராஜ்குமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
- வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்க ளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்திலுள்ள போலீஸ் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நித்திரவிளை, சுசீந்திரம், வடசேரி, நேச மணி நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் நாகர்கோவில் மகளிர் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் திடீர் ஆய்வு மேற்கொண் டார். அப்போது போலீ சார் அவருக்கு அணி வகுப்பு மரியாதை அளித்த னர். அணிவகுப்பு மரியா தையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட் டார்.
இதை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பரா மரிக்கப்பட்டு வரும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் வருகை பதிவேடு ஆகிய வற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதல் தகவல் அறிக்கை புகார் மனு அளிக்க வந்தவர்களின் விபரங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். இந்த ஆண்டு இதுவரை எத்த னை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த வழக்குகளில் எத்தனை குற்றவாளிகள் கைது செய் யப்பட்டுள்ளனர். குற்றப் பத்திரிகைகள் அனைத்து வழக்குகளி லும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என் பது குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.வழக்கு களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-
மகளிர் போலீஸ் நிலை யங்களுக்கு குடும்ப பிரச்சி னைகள் பெண்கள் மீதான தொந்தரவுகள் தொடர்பான புகார் மனுக்கள் வரும்.அவ்வாறு வரும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவ டிக்கை எடுக்க வேண்டும். போலீசார் அனைவரும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அதை தெரிவிக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் புகார் பெட்டி வைக்கப் பட்டுள்ளது.
உங்களது பிரச்சினை களை புகார் பெட்டியில் போட்டால் அதை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பெண்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்க ளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- பெருநகரங்களில் பெண்களும் பாருக்கு வருகிறார்கள்.
- டெல்லியில் மதுவிற்பனை ஒட்டுமொத்தமாக 87 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.
புதுடெல்லி :
மது குடிக்கும் பழக்கம் தற்போது ஒரு 'பேஷன்' ஆகி விட்டது. பெருநகரங்களில் பெண்களும் பாருக்கு வருகிறார்கள். இந்தநிலையில் டெல்லியில் பெண்களின் மது பழக்கம், கொரோனாவுக்கு முன்பு இருந்த நிலையைவிட தற்போது அதிகரித்து உள்ளது. இதற்கு கொரோனா கால ஊரடங்கே முக்கிய காரணம் என பெண்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஒரு தொண்டு நிறுவனம் இது தொடர்பான ஆய்வை 5 ஆயிரம் பெண்களிடம் நடத்தியது. இதில் கொரோனாவுக்கு பிறகு பெண்களிடையே மது அருந்தும் பழக்கம் 37 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் தங்களை குடிகாரிகளாக மாற்றிவிட்டதாக பல பெண்கள் கூறியுள்ளனர். மேலும், டெல்லியில் மதுபானத்துக்கு அளிக்கப்பட்ட 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்', சிறப்பு தள்ளுபடி விற்பனை, டோர் டெலிவரி போன்ற சலுகைகளும் மது வாங்க தங்களை தூண்டியதாக 77 சதவீத பெண்கள் தெரிவித்து உள்ளனர்.
மது அருந்தும் பெண்களில் 38 சதவீதம் பேர் வாரத்துக்கு இருமுறையும், 19 சதவீதம் பேர் வாரத்துக்கு 4 முறையும் மது அருந்துவதாக கூறியுள்ளனர். ஒரு அமர்வுக்கு 4 'பெக்'குகள் வரை தள்ளுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பெண்களிடம் மட்டுமின்றி ஆண்களிடமும் மது அருந்தும் பழக்கம் டெல்லியில் அதிகரித்துள்ளது. இதன்மூலம் டெல்லியில் மதுவிற்பனை ஒட்டுமொத்தமாக 87 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. இதில் விஸ்கி விற்பனை 59.5 சதவீதம், பீர் விற்பனை 5.5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாட்டு பாடி விவசாய நடவுப்பணியில் பெண்கள் ஈடுபட்டனர்.
- சம்பா நடவுப்பணி தீவிரமடைந்துள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் டெல்டா பகுதிகளில் சம்பா நடவுப்பணி தீவிரமடைந்துள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களில் தூய மல்லி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவனி, ஆத்தூர் கிச்சலி சம்பா உள்ளிட்ட பல்வேறு நெல் ரகங்களை இந்தாண்டு தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் குட்டை ரகங்களில் ஐ.ஆர். 20, 1009, கோ 43 வெள்ளைப் பொன்னி போன்ற ரகங்களும் பரவலாக நடவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் கொட்டும் மழையிலும் விவசாய கூலித்தொழிலாளர்கள் நடவுப் பணிகளில் ஈடுபடும் போது வயல்வெளியில் நல்ல விளைச்சல் தர வேண்டும் என நாட்டுப்புற பாடல்களை பாடுவது வழக்கம். அண்மை காலமாக அருகி வந்த நிலையில் பாடல்களை பாடி நடவுப் பணிகளில் ஈடுபடுவது வருங்கால தலைமுறைக்கு வியப்பான ஒன்றாக உள்ளது. விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் செடி கொடிகளுக்கு இசையை உணரும் தன்மையும், நல்ல காய், கனிகளை தருகிறதை உறுதி செய்துள்ள நிலையில் கிராமப்புறத்தில் தொன்று தொட்டு நடவுப்பணியில் பாடல் பாடி வருவது நம் முன்னோர்கள் தங்களது விவசாய தொழிலை நேசித்தது தெளிவாக விளங்குகிறது என நடவுப்பணியில் ஈடுபட்ட பெண்கள் கூறினர்.
- திறந்த வெளியில் உப்பள உற்பத்தி பேக்கிங் செய்யும் சூழலில் பெண்களுக்கு அடிப்படை வசதி இல்லை.
- பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகும் சூழல் குறித்து கூட்டத்தில் எடுத்துக்கூறினர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதார ண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உப்பள தொழிலாளர்களின் பணிசூழல் தொடர்பான மாநில மனித உரிமை கழக ஆய்வு கூட்டம் கோடி யக்காட்டில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில மனித உரிமை கழக உறுப்பினர் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி மற்றும் உப்புத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம் உப்பள தொழிலாளர்களின் பணிச்சூழல், பணியில் இருக்கும் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் திறந்த வெளியில் உப்பள உற்பத்தி பேக்கிங் செய்யும் சூழலில் பெண்களுக்கு அடிப்படை வசதி இல்லாத நிலையில் பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகும் சூழல் ஆகிய குறைகள் குறித்து கூட்டத்தில் எடுத்துக்கூறினர்.
இதுகுறித்து மாநில மனித உரிமை கழக உறுப்பினர் ஜெயச்சந்திரன் கூறியதாவது:-
உப்பள தொழிலாளர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- செல்வம் வளரும், மங்கல வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
- சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அதை அணிந்து கொள்வார்கள். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைதுறை நவசக்தி விநாயகர் ஆலயத்தில் வரலட்சுமி நோம்பு நடைபெற்றது. வரலட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் வளரும், மங்கல வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
சுமங்கலி பெண்கள் இந்த பூஜையின் போது மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அதை அணிந்து கொள்வார்கள்.
இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும். அதுசமயம் திருப்பலைதுறை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளிலிருந்து திரளான பெண்கள் கலந்துகொண்டு சுவாமியை பூஜை செய்து வழிபட்டனர்.
48 நாட்கள் பெண்கள் விரதமிருந்து வரலட்சுமி விரதத்தை முடித்துக்கொண்டனர்.
- நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொள்வதாக இருந்தது
- செருப்பாலூரில் இருந்து குலசேகரம் சந்தை வழியாக திட்டமிடப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி:
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்கள் நடத்தப்படாமல் உள்ள நிலையில், ராஷ்ட்ர சேவிகா சமிதி-மகளிர் அமைப்பு சார்பில் வழக்க மாக நடைபெறுகின்ற அணிவகுப்பு ஊர்வலம் குலசேகரத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டு அனுமதி கோரப்பட்டிருந்து.
இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் தக்கலை டி.எஸ்.பி கணேசன் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந் நிலையில் செருப்பாலூரில் இருந்து குலசேகரம் சந்தை வழியாக காவல் ஸ்தலம், கூடத்தூக்கி தனியார் பள்ளியில் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் 1320 பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- நாகப்பட்டினம் மாவட்ட த்தில் தொடர் கனமழை காரணமாக சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- வயல்களில் மழை நீர் நிறைந்து விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட த்தில் தொடர் கனமழை காரணமாக சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, பாலக்குறிச்சி, செம்பியன்மகாதேவி, இறையான்குடி, ஓட்டத்த ட்டை, நீடூர், தண்ணீலபாடி, உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக வயல்களில் மழை நீர் நிறைந்து விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக வயல்களை சீரமைத்தல், நாற்று விடுதல், உழவு பணி, நாற்றுப்பறித்தல். நடவு பணி மற்றும் களை எடுக்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாய பெண் தொழிலாளர்கள் களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி உற்சாகமாக களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 100-க்கும் மேற்பட்டோர் கால்களில் சலங்கை அணிந்தபடி கும்மி ஆட்டம் ஆடியது அனைவரையும் கவர்வதாக அமைந்திருந்தது.
- ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசுகளும், பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.
அனுப்பர்பாளையம் :
கொங்கு மண்ணின் பாரம்பரிய கலையான கும்மி ஆட்ட அரங்கேற்ற விழா ஆண்டுதோறும் திருப்பூர் பாளையக்காடு பவளக்கொடி கும்மி ஆட்டக்குழு சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 35-வது கும்மி ஆட்டம் அரங்கேற்ற விழா அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இறைவணக்கத்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கால்களில் சலங்கை அணிந்தபடி கும்மி ஆட்டம் ஆடியது அனைவரையும் கவர்வதாக அமைந்திருந்தது. வாழ்த்து பாடல் மற்றும் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
நிகழ்ச்சியையொட்டி ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசுகளும், பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது. முன்னதாக பாளையக்காடு சக்தி மாரியம்மன், விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பெண்கள் ஊர்வலமாக வந்து கும்மியாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பவளக்கொடி கும்மி ஆட்டக்குழு மற்றும் பாளையக்காடு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- ஏழை எளிய, நடுத்தர பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.
- அழகுக்கலை, வெள்ளாடு வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் 50 மகளிருக்கு இலவச தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.
ஊராட்சியில் உள்ள திருக்கண்ணபுரம், ராமநந்தீஸ்வரம், காக்கமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏழை எளிய நடுத்தர பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த தையல் பயிற்சி வகுப்பு ஒரு மணி நேரத்துக்கு 5 - பேர் வீதம் தினமும் 50- பேருக்கு தையல் பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகிறது.
இதில் சாம்பிராணி தயாரித்தல், அழகுக்கலை, வெள்ளாடு வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
ஊராட்சி மன்றத் தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதில் பயிற்சியாளர் ஜெயந்தி, வார்டு உறுப்பினர் ஆல்பர்ட் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சுற்றுச்சூழல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- விவசாயி காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவரது சொந்த நிலத்திலேயே இருந்து வருகிறார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், கோடங்கிபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்டல்ஸ் நிறுவனம் முறைகேடாக அனுமதி பெற்று குவாரியை இயக்கி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால் சுற்றுச்சூழல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நிபந்தனைகளுக்கு முரணாக, சட்டத்திற்கு முரணாக வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரி விவசாயி செந்தில்குமார் காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவரது சொந்த நிலத்திலேயே இருந்து வருகிறார்.
அவரின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் அவரது உறவினர்கள் 10 பெண்கள், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு இன்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்