search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புது பிரெஸ்ஸா மாடலின் மற்றொரு வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது.
    • விரைவில் பிரெஸ்ஸா CNG மாடலின் விற்பனை இந்தியாவில் துவங்க இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது பிரெஸ்ஸா CNG மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. வரும் மாதங்களில் புதிய மாருதி பிரெஸ்ஸா CNG மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. தற்போது மாருதி அரினா விற்பனை மையங்களில் CNG ஆப்ஷன் இல்லாத ஒற்றை மாடலாக பிரெஸ்ஸா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், பிரெஸ்ஸா CNG மாடல் காட்சிக்கு வைத்து விட்டது. காட்சிக்கு வைக்கப்பட்ட பிரெஸ்ஸா CNG மாடல் மேட் பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற CNG மாடல்களை போன்றே பிரெஸ்ஸா மாடலிலும் CNG டேன்க் பூட் பகுதியில் வைக்கப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை CNG மாடலில் அதன் பெட்ரோல் வேரியண்டில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    புது CNG வேரியண்ட் விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், பிரெஸ்ஸா மாடலின் VXi மற்றும் ZXi வேரியண்ட்களில் CNG ஆப்ஷன் வழங்கப்படலாம். பிரெஸ்ஸா CNG மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 99 ஹெச்பி பவர், 136 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிது. இது CNG மோடில் 87 ஹெச்பி பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் போது, சப் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் CNG ஆப்ஷன் பெறும் முதல் மாடலாக பிரெஸ்ஸா இருக்கும்.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் பல்வேறு கார்களை காட்சிக்கு வைத்து இருக்கிறது.
    • அடுத்த சில ஆண்டுகளில் பல்வேறு புது கார்களை அறிமுகம் செய்யும் பணிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டு வருகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் பல்வேறு புது மாடல்களை காட்சிக்கு வைத்துருக்கிறது. இவற்றில் ICE (பெட்ரோல்), EV மற்றும் CNG போன்ற மாடல்களும் இடம்பெற்று இருந்தன. இந்த புது மாடல்கள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து டாடா மோட்டார்ஸ் அதிக விவரங்களை வெளியிடவில்லை.

    அந்த வகையில் தற்போது நெக்சான் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 1.5 லிட்டர் என்ஜின் மற்றும் ஹேரியர், சஃபாரி போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் 2.0 ஃபியாட் என்ஜின் மேலும் சில காலத்திற்கு தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும் என தெரிகிறது. இம்முறை ஆட்டோ எக்ஸ்போவில் அனைவரையும் கவர்ந்த மாடல்களில் ஒன்றாக டாடா சியெரா EV கான்செப்ட் இரண்டாவது வெர்ஷன் இருந்தது.

    தற்போது இந்த மாடல் நான்கு கதவுகள், கன்வென்ஷனல் கண்ட்ரோல் மற்றும் ஸ்விட்ச்கியர் கொண்ட இண்டீரியர் உள்ளது. அந்த வகையில், இந்த கார் உற்பத்திக்கு பெருமளவு தயாராகி விட்டது என்றே தெரிகிறது. இந்த எலெக்ட்ரிக் வாகனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜென் 2 ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஜென் 2 ஆர்கிடெக்ச்சர் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்ட ஆல்ஃபா பிளாட்பார்ம் வெர்ஷன் ஆகும்.

    இந்த மாடலில் டாடாவின் புதிய தலைமுறை 1.5 லிட்டர் டைரெக்ட் இன்ஜெக்ஷன் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 160 முதல் 180 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் என தெரிகிறது. இந்த என்ஜின் ஹேரியர், சஃபாரி மற்றும் கர்வ் எஸ்யுவி மாடல்களில் வழங்கப்படலாம். இத்துடன் 2022 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா அவின்யா மாடல் முதல் முறையாக பொது வெளியில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மாடல் பிஸ்போக் ஸ்கேட்போர்டு பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 2025 வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. அவின்யா மாடல் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வெர்ஷனில் மட்டுமே அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த காரின் ICE வெர்ஷன் அறிமுகமாகாது.

    டாடா ஹேரியர் எலெக்ட்ரிக் வெர்ஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரில் பிளான்க்டு-ஆஃப் கிரில், ஏரோ-எஃபிஷியண்ட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் கொண்ட ஆப்ஷனும் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் வெர்ஷனும் அறிமுகமாகும் என தெரிகிறது.

    டாடா கர்வ் கான்செப்ட் மாடலும் ஆட்டோ எக்ஸ்போ 2023-இல் இடம்பெற்று இருக்கிறது. இந்த கார் கிரில், ஃபாக் லேம்ப், வீல், டயர், பாடிவொர்க் மற்றும் இண்டீரியர் போன்ற அம்சங்களுடன் உற்பத்திக்கு தயாரான நிலையிலே காட்சியளிக்கிறது. சியெரா போன்றே இந்த மாடலும் எலெக்ட்ரிக் மற்றும் ICE என இருவித பவர்டிரெயின்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த பெட்ரோல் என்ஜின்கள் 1.5 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ, புது தலைமுறை 1.2 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ யூனிட் வழங்கப்படலாம்,

    டாடா டியாகோ EV காரின் ஸ்போர்ட் வேரியண்ட் ஆக டியாகோ EV ப்ளிட்ஸ் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த மாடலில் கருப்பு நிற அலாய் வீல்கள், வெளிப்புறம் சிறு அப்டேட்கள், EV பேட்ஜ் அருகில் புளூ போல்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதிவர இந்த காரின் பவர்டிரெயின் பற்றி எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த கார் 2024 வாக்கில் அறிமுகமாகிறது.

    அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா பன்ச் EV மாடல் காட்சிக்கு வைக்கப்படவில்லை. மாறாக பன்ச் மற்றும் அல்ட்ரோஸ் மாடல்களில் iCNG வெர்ஷன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. தோற்றத்தில் பன்ச் CNG மாடல் எவ்வித மாற்றமும் பெறவில்லை. இரு கார்களிலும் ட்வின் சிலிண்டர் யூனிட் வழங்கப்படுகிறது. இவற்றுடன் டாடா ஹேரியர் மற்றும் சஃபாரி டார்க் எடிஷன் மாடல்கள் இந்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கின்றன.

    டாடா அல்ட்ரோஸ் ரேசர் எடிஷன் மாடலும் ஆட்டோ எக்ஸ்போ 2023-இல் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த மாடல் அல்ட்ரோஸ் i டர்போ காரின் டாப் எண்ட் வேரியண்ட் ஆக இருக்கும் என தெரிகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 120 ஹெச்பி பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. அல்ட்ரோஸ் ரேசர் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறத்தில் எவ்வித மாற்றமும் பெறவில்லை. இதன் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜிம்னி 5-டோர் வெர்ஷன் சர்வதேச சந்தையில் அறிமுகம்.
    • புதிய மாருதி சுசுகி ஜிம்னி 5-டோர் மாடல் குருகிராம் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

    மாருதி சுசுகி ஜிம்னி 5-டோர் மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வின் மூலம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. உலகளவில் ஜிமினி 5-டோர் மாடல் முதன்முதலில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய மாருதி சுசுகி ஜிம்னி 5-டோர் மாடல் மே மாத வாக்கில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் உள்ள மாருதி சுசுகி குருகிராம் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஜிம்னி 5-டோர் மாடல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்தியாவில் புதிய மாருதி சுசுகி ஜிம்னி 5-டோர் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. மற்ற காம்பேக்ட் எஸ்யுவி மாடல்களை போன்று இல்லாமல், இந்தியாவுக்கான ஜிம்னி 5-டோர் மாடல் பெயருக்கு ஏற்றார் போல் ரக்கட் அம்சங்கள் கொண்ட ஆஃப் ரோடர் ஆகும். ஜிம்னி 5-டோர் நீளமான எஸ்யுவி மாடலின் அம்சங்கள் அதன் 3-டோர் வெர்ஷனில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    நீண்ட வீல்பேஸ், இரண்டு கூடுதல் கதவுகள், ரிடிசைன் செய்யப்பட்ட ரியர் குவார்ட்டர் தவிர, ஜிம்னி 5-டோர் வெர்ஷன் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் ஜிம்னி 3-டோர் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. புது மாடலில் அப்ரைட் பில்லர்கள், வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப்கள், ஸ்லாட் கிரில், அகலமான டயர்கள், ஃபிலேர்டு வீல் ஆர்ச்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அளவீடுகளை பொருத்தவரை புதிய ஜிம்னி மாடல் 3985mm நீளம், 2590mm வீல்பேஸ் கொண்டிருக்கிறத. இதன் உயரம் 1720mm, அகலம் 1645mm ஆக இருக்கிறது.

    இந்த காரின் உள்புறம் ஆல்-பிளாக் தீம் ரக்கட் டிசைன், ஹை-மவுண்ட் செய்யப்பட்ட 9 இன்ச் டச் ஸ்கிரீன், HVAC கண்ட்ரோல்கள், வட்ட வடிவ டயல்கள், டேஷ்போர்டில் மவுண்ட் செய்யப்பட்ட கிராப் ஹேண்டில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மாருதி சுசுகி நிறுவனத்தின் மாருதி ஸ்மார்ட்பிளே ப்ரோ பிளஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ஆர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    என்ஜினை பொருத்தவரை புதிய மாருதி சுசுகி ஜிம்னி 5-டோர் மாடலில் புதிய K15C யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் அல்லது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 105 ஹெச்பி பவர், 134 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. ஆஃப் ரோடர் என்பதால் இந்த காரில் 4WD சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எஸ்யுவி கூப் மாடல் இந்தியாவில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
    • புதிய மாருதி சுசுகி Fronx மாடல் நெக்சா பிராண்டிங்கின் கீழ் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் தனது புதிய Fronx பலேனோ சார்ந்த உருவாக்கப்பட்ட எஸ்யுவி கூப் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி சுசுகி Fronx மாடலுக்கான முன்பதிவு துவங்கி விட்ட நிலையில், விற்பனை ஏப்ரல் மாத வாக்கில் நடைபெற இருக்கிறது. மாருகி சுசுகி Fronx மாடல் மாருதி சுசுகியின் நெக்சா பிராண்டிங்கின் கீழ் நடைபெற இருக்கிறது.

    நெக்சா பிராண்டிங்கில் அறிமுகமாகி இருக்கும் முதல் காம்பேக்ட் எஸ்யுவி கூப் மாடலாக Fronx அமைந்துள்ளது. பலேனோ சார்ந்து உருவாகி இருக்கும் நிலையில், இந்த கார் ஹார்டெக்ட் மோனோக் பிளாட்ஃபார்ம்-ஐ பயன்படுத்துகிறது. சில பாடி பேனல்கள் தவிர இந்த காரில் அப்ரைட் நோஸ் மற்றும் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப் உள்ளிட்டவை கிராண்ட் விட்டாரா மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் சற்று திடமனாக இருக்கின்றன. இருபுறமும் பிரத்யேக ஃபாக்ஸ் ஸ்கிட் பிலேட்கள் உள்ளன. இத்துடன் 17 இன்ச் அலாய் வீல்கள், புதிய ரியர் டிசைன் கொண்டிருக்கிறது. புதிய Fronx மாடலின் அம்சங்களில் சில ஏற்கனவே பலேனோ ஹேச்பேக் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை மாருதி சுசுகி Fronx 3995mm நீளம், 1550mm உயரம் மற்றும் 1765mm அகலமாக இருக்கிறது.

    காரின் உள்புறமும் பெரும்பாலான அம்சங்கள் பலேனோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் டேஷ்போர்டு, இருக்கை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவையும் அடங்கும். இரு மாடல்களிலும் வெவ்வேறு டெக்ஸ்ச்சர் மற்றும் சில வேறுபாடுகள் இருக்கும் என தெரிகிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் மற்றும் ஒற்றை டர்போ பெட்ரோல் என்ஜின் - 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் யூனிட் 2017 வாக்கில் அறிமுகமான முந்தைய தலைமுறை பலேனோ மாடலில் வழங்கப்பட்டது. இந்த என்ஜின் ஸ்டாண்டர்டு யூனிட்களின் ஸ்போர்ட் மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது. இது பலேனோ RS டாப் எண்ட் மாடலில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. குறைந்த விற்பனை மற்றும் கடினமான புகை விதிகள் காரணமாக இந்த என்ஜின் திரும்பப் பெறப்பட்டது.

    தற்போது Fronx மாடலில் டர்போ யூனிட் மீண்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 100 ஹெச்பி பவர், 147.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 1.2 லிட்டர் K சீரிஸ் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 90 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய மாருதி சுசுகி Fronx மாடல் ஏப்ரல் மாத வாக்கில் விற்பனைக்கு வருகிறது. சிட்ரோயன் C3, டாடா பன்ச், நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கிகர் போன்ற மாடல்களுக்கு புதிய மாருதி சுசுகி Fronx போட்டியாக அமையும்.

    • சமூக வலைதளத்தில் வைரலான விபத்து காட்சிகளால் பரபரப்பு
    • படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை அழகியமண்ட பம் அருகே சம்பவத்தன்று ஒரு கார் வேகமாக சென்றது. அந்தக் கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    அதே வேகத்தில் சென்ற கார் சாலையின் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது.மேலும் சாலையோரமாக நின்று கொண்டிருந்த ஆட்டோ வையும் இடித்து சேதப்படு த்தியது. இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையில் கட்டுப் பாட்டை இழந்த கார், இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது மோதிய காட்சிகள் சமூக வலை தளத்தில் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனைத் தொடர்ந்து விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்தது கருங்கல் பகுதியைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவர் என்பதும் அவர் தனது பெண் நண்பருடன் வந்த போது தான் விபத்து ஏற்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

    விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் வந்த பிலாங்காலை சேர்ந்த சோனி (வயது43) படுகாய மடைந்த நிலையில், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்து வமனைக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தில் சேத மடைந்த ஆட்டோவில் இருந்த டிரைவர் இரவி புதூர் கடை பகுதியை சேர்ந்த எட்வின் வசந்த் என்பவரும் காயம் அடைந்தார்.

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புது 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலில் புது ஒஎஸ் கொண்ட 14.9 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது.
    • இந்த காரின் அளவீடுகளில் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து நீண்ட வீல்பேஸ் கொண்ட மாடலாக நீடிக்கிறது.

    பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் 2023 3 சீரிஸ் கிரான் லிமோசின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 57 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2021 ஜனவரி வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடம்பர செடான் மாடல் தற்போது முதல் முறையாக அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.

    மாற்றங்களை பொருத்தவரை தோற்றத்தில் புது காரில் ரிடிசைன் செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள், ட்வீக் செய்யப்பட்ட கிரில் வழங்கப்பட்டுள்ளது. பம்ப்பர்கள் மாற்றப்பட்டு, புதிய அலாய் வீல்கள், பின்புறம் டெயில் லேம்ப்கள் மாற்றப்பட்டு இருக்கிறது. உள்புறம் i4 செடான் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. ரிடிசைன் செய்யப்பட்ட டேஷ்போர்டு, வளைந்த டிஸ்ப்ளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் ஏசி வெண்ட்களும் ரிடிசைன் செய்யப்பட்டுள்ளது.

    உள்புறம் வளைந்த டூயல் ஸ்கிரீன் செட்டப் உள்ளது. இது 12.3 இன்ச் மற்றும் 14.9 இன்ச் ஃபிரேம்லெஸ் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிநவீன ஒஎஸ் 8 உள்ளது. இதன் செண்டர் கன்சோல் டிசைனில் வழக்கமான கியர் லீவருக்கு மாற்றாக கியர் ஸ்விட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பவர்டு சீட்கள், பானரோமிக் சன்ரூஃப், லெதர் இருக்கை மேற்கவர்கள், ஹார்மன் கார்டன் ஸ்டீரியோ சிஸ்டம் மற்றும் பார்கிங் அசிஸ்டண்ட் உள்ளது.

    என்ஜினை பொருத்தவரை புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி புது காரில் 330i மற்றும் 320d மாடலில் உள்ளதை போன்ற 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் 330i மாடலின் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 254 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 320d டீசல் எனஜின் 187 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் விலை தற்போதைய வெர்ஷனை விட சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும்.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் CNG என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • புதிய ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் மேம்பட்ட ஸ்டைலிங், இண்டீரியர் மற்றும் ஐந்து வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் தனது ஆரா சப்காம்பேக்ட் செடான் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. மேலும் இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்பதிவு ஹூண்டாய் நிறுவன வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுடன் ஆரா ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்புறம் புது கிரில் மற்றும் பம்ப்பர் கொண்டிருக்கிறது. இந்த காரின் கிரில் தற்போது அகலமாகவும், அதிக செங்குத்தான வடிவம் கொண்டிருக்கிறது. இத்துடன் பாடி நிறத்திலான இன்சர்ட்கள், L வடிவம் கொண்ட எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள இரண்டாவது கிரில் தற்போது ஹெட்லேம்ப்களிடையே உள்ளது.

    பின்புறம் ரியர் ஸ்பாயிலர் மற்றும் மூன்றாவது ஸ்டாப் லைட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹூண்டாய் ஆரா மாடல் - போலார் வைட், டைட்டன் கிரே, டைஃபூன் சில்வர், ஸ்டாரி நைட், டியல் புளூ மற்றும் ஃபியரி ரெட் என ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது. காரின் உள்புறம் டேஷ்போர்டு டிசைன் அதிகளவு மாற்றப்படவில்லை. எனினும், புது இருக்கை மேற்கவர் நிறங்கள், புது நிறம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் CNG ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 82 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 1.2 லிட்டர் CNG வெர்ஷன் 68 ஹெச்பி பவர், 95.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் மாடல்- E, S, SX, SX(O) மற்றும் SX+ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. பெட்ரோல் என்ஜின் அனைத்து வேரியண்ட்களும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் CNG ஆப்ஷன் S மற்றும் SX வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கிறது. இந்திய சந்தையில் புது ஆரா மாடல் மாருதி சுசுகி டிசையர், டாடா டிகோர் மற்றும் ஹோண்டா அமேஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • ஹோண்டா நிறுவனம் உருவாக்கி வரும் புது எஸ்யுவி மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் அறிமுகமாகிறது.
    • புதிய எஸ்யுவி மாடல் ஹோண்டா ஆசியா பசிபிக் R&D நிறுவனத்தில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது புது எஸ்யுவி மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய ஹோண்டா எஸ்யுவி வரும் மாதங்களில் வெளியாக இருக்கிறது. விற்பனை கோடை காலத்தில் துவங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த எஸ்யுவி மாடல் ஹோண்டா ஆசியா பசிபிக் R&D லிமிடெட் நிறுவனத்தில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

    இந்திய வாடிக்கையாளர்களின் மாறி வரும் வாழ்க்கை சூழல் மற்றும் எதிர்பார்ப்பு உள்ளிட்டவைகளை அறிந்து கொள்ள ஹோண்டா நிறுவனம் ஏராளமான ஆய்வுகளை நடத்தியது. இதன் தொடர்ச்சியாகவே புது எஸ்யுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. டீசரின் படி புது எஸ்யுவி பிரமாண்ட தோற்றம், ஹை-ரைடிங் பொனெட், மெல்லிய எல்இடி டேடைம் ரன்னிங் லைட்களின் கீழ் மெல்லிய ஹெட்லைட்கள் இடம்பெறுகிறது.

    இத்துடன் பிரமாண்ட கிரில், ஃபிலார்டு வீல் ஆர்ச்கள், பிளாஸ்டிக் கிலாடிங், ரூஃப் ரெயில்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி மாடல் இந்திய சந்தைக்காக விசேஷமாக டிசைன் செய்யப்பட்டு, உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த கார் அமேஸ் மாடல் உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்மிலேயே உருவாகி இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதோடு ஹோண்டா நிறுவனம் அமேஸ் மாடலின் டீசல் வேரியண்ட்களை சமீபத்தில் நிறுத்தியது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் 2WD மாடல் இரண்டு புது நிறங்களில் கிடைக்கிறது.
    • மஹிந்திரா தார் 2WD மாடல் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய தார் 2WD மாடலை அறிமுகம் செய்தது. அறிமுக சலுகையாக மஹிந்திரா தார் 2WD மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது மஹிந்திரா தார் எண்ட்ரி லெவல் மாடல் ஆகும். இந்த கார் மூன்று வேரியண்ட்கள், இரண்டு புது நிறங்கள் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் கிடைக்கிறது.

    தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் அறிமுக சலுகை காரை முன்பதிவு செய்யும் முதல் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே பொருந்தும். புதிய மஹிந்திரா தார் 2WD மாடலின் வினியோகம் ஜனவரி 14 ஆம் தேதி துவங்க இருக்கிறது. மாற்றங்களை பொருத்தவரை மஹிந்திரா தார் 2WD மாடல் - பிளேசிங் பிரான்ஸ் மற்றும் எவரஸ்ட் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இவைதவிர ரெட் ரேஜ், கேலக்ஸி கிரே, நபோலி பிளாக் மற்றும் அக்வா மரைன் போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது.

    புதிய காரின் பின்புற ஃபெண்டரில் 4x4 பேட்ஜிங் நீக்கப்பட்டு இருப்பதை தவிர இந்த கார் தோற்றத்தில் அதன் 4WD வெர்ஷன் போன்றே காட்சியளிக்கிறது. மஹிந்திரா தார் 2WD மாடலில் 2.0 லிட்டர் எம்ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 150 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    டீசல் என்ஜின் 117 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் இண்டீரியர் பெருமளவு மாற்றப்படவில்லை. மஹிந்திரா தார் 4WD மாடலில் தற்போது எலெக்டிரானிக் பிரேக் லாக்கிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் LX டீசல் மாடலில் மெக்கானிக்கல் லாக்கிங் டிஃபரென்ஷியல் அம்சம் ஆப்ஷாக வழங்கப்படுகிறது.

    ஸ்டைல் பேக், முன்புறம் மற்றும் பின்புற ஆர்ம் ரெஸ்ட்கள், கூடுதல் பி-ஸ்போக் அக்சஸரீக்களை மஹிந்திரா புதிய தார் மாடலுடன் வழங்குகிறது. புதிய மஹ்ந்திரா தார் 2WD LX டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஹார்டு-டாப் விலை ரூ. 10 லட்சத்து 99 ஆயிரம் என்றும் 2WD LX பெட்ரோல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஹார்டு டாப் விலை ரூ. 13 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • வட்ட வழங்கல் அதிகாரி அதிரடி
    • கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை வட்ட வழங்கல் அதிகாரி கே.புரந்தரதாஸ் தலைமை யில் வருவாய் ஆய்வா ளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு ஐரேனிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக சொகுசு கார் ஒன்று வந்துக் கொண்டிருந்தது.

    அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். இருந்தும் அந்த கார் நிறுத்தப்படாமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று காப்பிக்காடு பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர். ஆனால் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    காரை சோதனை செய்து பார்த்த போது சுமார் 800 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த ரேசன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    பிறகு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை வட்டாட்சியர் அலு வலகத்திலும் ஒப்படைக் கப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    • இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மாருதி சுசுகி விளங்குகிறது.
    • சமீபத்தில் தான் மாருதி சுசுகி தனது கிராண்ட் விட்டாரா CNG மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

    இந்திய சந்தையில் குறைந்த விலை 7 சீட்டர் பிரிவில் மாருதி சுசுகி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறைந்த விலை மாடல்களை வாங்குவோர் தேர்வு செய்வது எர்டிகா அல்லது XL6 ஆகவே இருந்து வருகிறது. இதுதவிர மாருதி சுசுகி நிறுவனம் ஈகோ மாடலை மிக குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. எனினும், இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்ட 2010 ஆண்டு முதல் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டிருக்கிறது.

    அவ்வப்போது இந்த மாடலுக்கு சிறு அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஈகோ மாடலுக்கு பெரும் அப்டேட் கொடுக்க மாருதி சுசுகி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஈகோ மாடலின் வெளிப்புறம் புது டிசைன், புதிய பம்ப்பர்கள், ரிவொர்க் செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள், புது கிரில் மற்றும் மேம்பட்ட டெயில் லேம்ப் டிசைன் வழங்கப்பட இருக்கிறது.

    இதுதவிர ஸ்டாண்டர்டு வீல் கவர்கள், ஃபாக் லேம்ப்கள் வழங்கப்படும். இவை தவிர ஈகோ மாடலின் ஒட்டுமொத்த தோற்றம் வேன் போன்றே காட்சியளிக்கும். ஈகோ மாடல் அதன் வேன் போன்ற தோற்றத்திற்கு பெயர் பெற்று இருக்கிறது. சமீபத்தில் மாருதி அறிமுகம் செய்த புது ஈகோ மாடலில் 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் டிசையர், ஸ்விஃப்ட் மற்றும் இதர மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 80 ஹெச்பி பவர், 104 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த என்ஜின் 71 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே என்ஜின் புதிய தலைமுறை ஈகோ மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். புது அப்டேட்கள் கொண்ட மாருதி சுசுகி ஈகோ மாடல் இந்த ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்படலாம். இதன் விலை ரூ. 5 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து துவங்கலாம்.

    • மேம்பாலத்தின் கீழ் வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதை வழியாக சிறிது நேரம் திருப்பி விடப்பட்டது.
    • போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை

    நாகர்கோவில்:

    பார்வதிபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி இன்று மதியம் கார் ஒன்று வந்தது. மேம்பாலத்தின் கீழ் பகுதி யில் வந்த போது டிரைவர் காரை மெதுவாக ஓட்டி சென்றார். இதையடுத்து பின்னால் வந்த அரசு பஸ் டிரைவர் பஸ்ஸை நிறுத்தினார்.

    அதனால் பின்னால் வந்த காரும் நின்றது.ஆனால் அதன் பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக முன்னால் நின்ற கார் மீது மோதியது.மோதிய வேகத்தில் அந்த கார் பஸ்மீது மோதி நின்றது. இதில் இரண்டு கார்களும் சேதம் அடைந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இதையடுத்து போக்கு வரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேம்பாலத்தின் கீழ் வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதை வழியாக சிறிது நேரம் திருப்பி விடப்பட்டது.

    ×