search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சக்திவாய்ந்த கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • முன்னதாக 2021 வாக்கில் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட கார் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய XM கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ XM விலை ரூ. 2 கோடியே 60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிஎம்டபிள்யூ M பிரிவில் இரண்டாவது பி-ஸ்போக் மாடலாக புதிய பிஎம்டபிள்யூ XM அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய XM மாடலின் வினியோகம் அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் துவங்குகிறது.

    புதிய பிஎம்டபிள்யூ XM மாடலில் M ஹைப்ரிட் டிரைவ் மற்றும் 4.4 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின், கியர்பாக்ஸ் மவுண்ட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 644 ஹெச்பி பவர், 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சக்திவாய்ந்த கார் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.3 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. XM மாடலில் உள்ள ஆல் எலெக்ட்ரிக் டிரைவிங் மூலம் 88 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். புதிய பிஎம்டபிள்யூ XM மாடலில் 5-லிண்க் ரியர் சஸ்பென்ஷன் செட்டப், M டேம்ப்பர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் 48 வோல்ட் ஆக்டிவ் ரோல் ஸ்டேபிலைசேஷன் வழங்கப்பட்டுள்ளது.

    பிஎம்டபிள்யூ XM மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள், பிஎம்டபிள்யூ பாரம்பரிய கிட்னி கிரில், ப்ககவாட்டில் ரெசிடிங் விண்டோ லைன், சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள் உள்ளன. ஃபுல் சைஸ் X7 மாடலை விட புதிய XM அளவில் சற்று சிறியதாகவே இருக்கிறது. புதிய XM மாடல் 5-சீட்டர் வடிவில் மட்டுமே கிடைக்கிறது.

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய M340i ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஒட்டுமொத்தமாக கூர்மையான தோற்றம் கொண்டிருக்கிறது.
    • இதன் கேபின் முழுமையாக மாற்றப்பட்டு, புதிதாக வளைந்த ஸ்கிரீன் செட்டப் கொண்டிருக்கிறது.

    2022 பிஎம்டபிள்யூ M340i ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ M340i மாடலின் விலை ரூ. 69 லட்சத்து 20 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2022 பிஎம்டபிள்யூ M340i ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஸ்டைலிங் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் கேபின் பகுதியும் மாற்றப்பட்டு, தற்போது அதிநவீன வளைந்த ஸ்கிரீன் லே-அவுட் கொண்டிருக்கிறது.

    இதில் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய M340i மாடலுக்கான டெலிவரி ஜனவரி மாத வாக்கில் துவங்க இருக்கிறது. டிசைனை பொருத்தவரை புது கார் முன்பை விட அதிக மஸ்குலர் மற்றும் டிஸ்டிண்டிவ் தோற்றம் கொண்டுள்ளது. இதன் கிட்னி கிரில் கிளாஸி பிளாக் மற்றும் க்ரோம் ஃபிரேம், மெஷ் டிசைன் கொண்டிருக்கிறது.

    இதன் கிரில் பகுதியில் மெல்லிய ஹெட்லைட்கள், கூர்மையான எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்கள், புளூ அக்செண்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. முன்புற பம்ப்பர் ஸ்போர்ட் தோற்றம் மற்றும் ஏர் இண்டேக்குகளை கொண்டிருக்கிறது. டெயில் லைட்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    புதிய பிஎம்டபிள்யூ M340i ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் அசிஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 369ஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு டிசம்பர் மாத சலுகை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • சமீபத்தில் தான் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ Z4 வேரியண்டின் வினியோகத்தை துவங்கி இருக்கிறது.

    இந்தியாவில் இயங்கி வரும் தேர்வு செய்யப்பட்ட சில மஹிந்திரா விற்பனை மையங்களில் இம்மாதம் முழுக்க அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இவற்றை வாடிக்கையாளர்கள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் இலவச அக்சஸரீக்கள் வடிவில் பெற்றுக் கொள்ளலாம்.

    மஹிந்திரா XUV300 பெட்ரோல் மாடலுக்கு ரூ. 29 ஆயிரம் வரை தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் வரையிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. பொலேரோ மாடலை வாங்குவோர் ரூ. 6 ஆயிரத்து 500 தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ. 8 ஆயிரத்து 500 வரையிலான அக்சஸரீக்களை பெறலாம்.

    மஹிந்திரா XUV300 டர்போஸ்போர்ட் வேரியண்ட்களை வாங்கும் போது ரூ. 25 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ் கிடைக்கும். மராசோ மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரத்து 200 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இவை தவிர மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கிளாசிக், ஸ்கார்பியோ N, XUV700, தார் மற்றும் பொலிரோ நியோ போன்ற மாடல்களுக்கு எவ்வித சலுகையும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் சலுகை விவரங்கள் கார் மாடல், வேரியண்ட் மற்றும் விற்பனை மையங்களுக்கு ஏற்ப வேறுபடும்.

    • ஆடி நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மூன்று முறை தனது கார்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.
    • இதன் மூலம் ஆடி கார்களின் புதிய விலை அடுத்த ஆண்டின் முதல் நாளில் இருந்து அமலுக்கு வருகிறது.

    ஆடி இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை 1.7 சதவீதம் வரை உயர்த்துகிறது. உற்பத்தி மற்றும் உபகரணங்களின் செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதையே ஆடி இம்முறை விலை உயர்வுக்கும் காரணமாக தெரிவித்து இருக்கிறது. விலை உயர்வு 2023 ஜனவரி 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் ஆடி நிறுவனம் மூன்று முறை தனது கார்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.

    2022 ஜனழரி மற்றும் ஏப்ரல் 2022 மாதங்களில் ஆடி கார்களின் விலை அதிகபட்சம் 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. பின் பண்டிகை காலத்தை ஒட்டி செப்டம்பர் மாத வாக்கில் கார்களின் விலை 2.4 சதவீதம் உயர்த்தப்பட்டது.

    "ஆடி இந்தியாவின் வியாபார நுனுக்கம் ஒரு மாடலின் லாபம் மற்றும் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதே ஆகும். உற்பத்தி மற்றும் நிர்வாக செலவீனங்கள் அதிகரிப்பதாலேயே விலை மாற்றம் செய்யப்படுகிறது." என ஆடி இந்தியா தலைவர் பல்பிர் சிங் திலான் தெரிவித்து இருக்கிறார்.

    இந்திய சந்தையில் ஆடி நிறுவனம் தற்போது ஆடி A4, ஆடி A6, ஆடி A8L, ஆடி Q3, ஆடி Q5, ஆடி Q7, ஆடி S5 ஸ்போர்ட்பேக், ஆடி RS 5 ஸ்போர்ட்பேக், ஆடி RS Q8 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் ஆடி இ டிரான் 50, இ டிரான் 55, இ டிரான் ஸ்போர்ட்பேக் 55 மாடல்களை கொண்டிருக்கிறது. இதுதவிர இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர்கார்கள், ஆடி இ டிரான் GT மற்றும் ஆடி RS இ டிரான் GT மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    • இந்திய சந்தையில் முன்னணி கார் உற்பத்தியாளராக இருக்கும் மாருதி சுசுகி தனது கார்களை ரிகால் செய்கிறது.
    • ரிகால் செய்யப்படும் கார்களில் உள்ள பிரச்சினைகள் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி சரி செய்யப்படுகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா, பிரெஸ்ஸா, எர்டிகா, XL6 மற்றும் சியாஸ் கார்களின் 9 ஆயிரத்து 125 யூனிட்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது. நவம்பர் 2 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 28 ஆம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை மட்டும் ரிகால் செய்வதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட கார்களின் முதல் இருக்கைகளில் உள்ள சீட் பெல்ட்களில் குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது.

    இந்த குறைபாடு மிகவும் அரிதான சம்பவங்களில் சீட் பெல்ட்-ஐ செயலிழக்க செய்து விடும். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த ரிகால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை மாருதி சுசுகி தனது அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள் மூலம் தொடர்பு கொண்டு காரில் உள்ள பிரச்சினையை சரி செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    மேலும் பாதிக்கப்பட்ட கார்கள் அனைத்தும் கூடுதல் கட்டணம் இன்றி முற்றிலும் இலவசமாக சரி செய்யப்பட இருக்கிறது. மாருதி சுசுகி மட்டுமின்றி டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாலிலும் இதே போன்று சீட் பெல்ட் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டொயோட்டா நிறுவனம் தனது ஹைரைடர் எஸ்யுவி-யின் 994 யூனிட்களை திரும்ப பெற்று இருக்கிறது.

    இரண்டு மாதங்களுக்கு முன் மாருதி சுசுகி நிறுவனம் தனது வேகன்ஆர், செலரியோ மற்றும் இக்னிஸ் மாடல்களை ரிகால் செய்து இருந்தது. அப்போது மூன்று கார்களிலும் ரியர் பிரேக் அசெம்ப்ளி பின் குறைபாடு கொண்டிருந்தது. இந்த கார்கள் ஆகஸ்ட் 3 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 01 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்படவில்லை.

    • கேரளா மாநில நுகர்வோர் நீதிமன்றம் வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு கொடுக்க தீர்ப்பு வழங்கி உள்ளது.
    • ஃபோர்டு ஃபியஸ்டா மாடல் விளம்பர்த்தில் குறிப்பிடப்பட்ட மைலேஜ் கொடுக்கவில்லை என வாடிக்கையாளர் வழக்கு தொடர்ந்தார்.

    புதிதாக கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் முதலில் கருத்தில் வைப்பது அதன் மைலேஜ் எவ்வளவு என்பது மட்டும் தான். கார் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கும் மைலேஜ் மற்றும் அன்றாட பயன்பாட்டில் கார்கள் கொடுக்கும் மைலேஜ் என இரண்டிற்கும் அதிக வேறுபாடு உண்டு என்பது நம்மில் பலரும் அறிந்ததே.

    எனினும், கேரளாவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது ஃபோர்டு ஃபியஸ்டா கார் அந்நிறுவனம் விளம்பரத்தில் குறிப்பிட்ட மைலேஜை வழங்கவில்லை என நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் வாடிக்கையாளருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஃபோர்டு ஃபியஸ்டா காரின் விற்பனை 2015 முதலை நிறுத்தப்பட்டு விட்டது. இந்த காரில் 1.4 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தவிர 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் இதே காரில் வழங்கப்பட்டு இருக்கிறது. 2011 ஆண்டு வாக்கில் ஆட்டோமொபைல் செய்திகளை வெளியிடும் நாளேடு காரின் பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன்களை ஓட்டி பார்த்தது.

    அதில் இந்த கார் லிட்டருக்கு 32 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கி இருக்கிறது. மிட்-சைஸ் செடான் மாடலில் இவ்வளவு மைலேஜ் கிடைப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம் ஆகும். இதே தகவலை விளம்பரமாக வெளியிட ஃபோர்டு முடிவு செய்தது. அதன்படி இந்த செடான் மாடல் லிட்டருக்கு 32.38 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என்ற விளம்பரங்கள் வெளியாகின. இந்த விளம்பரம் தற்போது புது பிரச்சினையை ஏற்படுத்தி விட்டது.

    இந்த வழக்கை தொடர்ந்த வாடிக்கையாளர் சௌதாமினி பிபி, கார் லிட்டருக்கு 32.38 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என்ற காரணத்தால் தான் இந்த காரை தான் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் காரை வாங்கியதில் இருந்து அது அத்தனை மைலேஜ் கொடுக்கவில்லை என்பதை அறிந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றம் சென்றார். இந்த கார் லிட்டருக்கு 16 கிலோமீட்டர் மைலேஜ் மட்டுமே வழங்குகிறது என அவர் மேலும் தெரவித்தார்.

    வழக்கு விசாரணையின் போது இந்த கார் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்ததை விட 40 சதவீதம் வரை குறைந்த மைலேஜ் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் கார் உற்பத்தியாளர் ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் விற்பனையாளர் கைராளி ஃபோர்டு கார் விற்பனைக்காக அதிக மைலேஜ் வழங்குவதாக விளம்பரம் கொடுத்தது தவறு செய்துள்ளன என்று நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

    மேலும் இந்த விவகாரத்தில் ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளருக்கு கார் உற்பத்தியாளர் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமும், விற்பனையாளர் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமும் இழப்பீடாக கேரளா நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டப்போராட்டம் நடத்திய வாடிக்கையாளருக்கு ரூ. 10 ஆயிரம் கூடுதலாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டைகுன் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் மாடல் காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டிருக்கிறது.
    • புதிய ஸ்பெஷல் எடிஷன் டைகுன் மாடல் இந்தியாவில் இரண்டு விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    ஃபோக்ஸ்வேகன் பேசன்ஜர் கார்ஸ் இந்தியா நிறுவனம் டைகுன் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் மாடல் விலை ரூ. 33 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் பியூர் வைட் மற்றும் ஆரிக்ஸ் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய டைகுன் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் மாடல் லோட் ஸ்டில் ப்ரோடெக்‌ஷன், 180இன்ச் செப்ரிங் ஸ்டெர்லிங் சில்வர் அலாய் வீல்கள், அலுமினியம் பெடல்கள், டைனமிக் ஹப்கேப் போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் லிமிடெட் எடிஷன் எஸ்யுவி-இன் பூட்லிட் மேல்புறத்தில் "Exclusive Edition" பேட்ஜிங் செய்யப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் எல்இடி மேட்ரிஸ் ஹெட்லேம்ப்கள், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆம்பியண்ட் லைட்டிங், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூஃப், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், ஆறு ஏர்பேக், TPMS, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிரைவர் அலர்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் உள்ளன.

    புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் மாடலில் 2.0 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின், 7 ஸ்பீடு DSG டிரான்ஸ்மிஷன் மற்றும் 4 மோஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 187 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த எஸ்யுவி லிட்டருக்கு 12.65 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் என ARAI சான்று பெற்று இருக்கிறது.

    • கேட்பாரற்று நின்றதால் கடத்தியது யார்? போலீசார் விசாரணை
    • அருமனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் சம்பவ இடம் வந்து விசாரித்து காரை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பின்குளம் பகுதியில் வசிப்பவர் ஆல்பர்ட்.இவரது மனைவி ஷிஜி.இவர்கள் தங்களது காரை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தனர்.

    அந்தக் கார் கடந்த அக்டோபர் மாதம் 26- ந் தேதி திடீரென மாயமானது. பல இடங்களில் தேடியும் கார் கிடைக்காததால் அதனை யாரோ திருடிச் சென்றிருக்கலாம் என 28- ந் தேதி கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக போலீ சார் வழக்கு பதிவு செய்து காரை தேடி வந்தனர். இந்நிலையில் ஆல்பர்ட்டின் நண்பர், அருமனை வழியாக சென்றார். அப்போது அங்கு திருட்டு போன ஆல்பர்ட்டின் கார் நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் ஆல்பர்ட்டுக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து விசாரித்த போது ஒரு மாதத்திற்கு மேலாக கார் இப்பகுதியில் நின்று கொண்டி ருப்பதாக அங்கு உள்ளவர்கள் தெரி வித்தனர்.

    இதுகுறித்து அருமனை போலீசுக்கு ஆல்பர்ட் தகவல் தெரிவித்தார். அருமனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் சம்பவ இடம் வந்து விசாரித்து காரை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தார். கார் திருடப்பட்டு கொண்டு விடப்பட்டதா? அல்லது கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டதா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி அடிக்கடி கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் உள்ளன.
    • இதனை தடுத்து நிறுத்த போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி அடிக்கடி கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் உள்ளன. இதனை தடுத்து நிறுத்த போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் அஞ்சு கிராமம் பகுதியில் இருந்து மேற்கு கடற்கரை சாலை வழியாக காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

    அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையில், தேங்காப்பட்ட ணம் பகுதியில் சந்தேகத்தி ற்கிடமாக கார் வந்தது. அந்தக் காரை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டி னர். ஆனால் அந்தக் கார் நிற்காமல் சென்றது.

    இதுகுறித்து நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரிவிளை சந்திப்பில், அந்தக் காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்கவில்லை. இதனை தொடர்ந்து போலீசார், மோட்டார் சைக்கிளில் காரை விரட்டிச் சென்றனர்.

    நடைக்காவு சந்திப்பில் அவர்கள் காரை மடக்கினர். அப்போது காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து காரை போலீசார் சோதனை செய்த போது, 50 கிலோ எடை உள்ள 40 மூடைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதனை காருடன் போலீசார் கைப்பற்றினர்.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட GLB மாடல் இந்தியாவில் அறிமுகமானது.
    • புதிய பென்ஸ் GLB மாடல் இந்திய சந்தையில் மொத்தம் மூன்று வித வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய GLB 3-ரோ எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLB மாடல் விலை ரூ. 63 லட்சத்து 8 ஆயிரம் என துவங்குகிறது. இந்த மாடல் 200, 220d மற்றும் 220d 4மேடிக் என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய பென்ஸ் GLB பேஸ் வேரியண்ட் விலை ரூ. 63 லட்சத்து 8 ஆயிரம் என துவங்குகிறது.

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLB 220d மற்றும் GLB 220d 4 மேடிக் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 66 லட்சத்து 8 ஆயிரம் மற்றும் ரூ. 69 லட்சத்து 8 ஆயிரம் என துவங்குகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் GLB மாடலில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 7 ஸ்பீடு மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளன. இதன் பெட்ரோல் என்ஜின் 161 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 188 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    அம்சங்களை பொருத்தவரை பென்ஸ் GLB மாடலில் சதுரங்க வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லேம்ப்கள், 2-பீஸ் எல்இடி டெயில் லைட்கள், பானரோமிக் சன்ரூஃப், வெண்டிலேஷன் வசதி கொண்ட பவர்டு முன்புற இருக்கைகள், 7 ஏர்பேக், இரண்டு 10.25 இன்ச் ஸ்கிரீன்கள் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்று செயல்படுகின்றன.

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை மாற்ற திட்டமிட்டுள்ளது.
    • கார் மாடல்களின் புதிய விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ஜனவரி 2023 முதல் உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு மாருதி சுசுகியின் அனைத்து கார்களுக்கும் பொருந்தும். சர்வதேச அளவில் உதிரிபாகங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, பணவீக்கம் மற்றும் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் விலை உயர்வு அறிவிக்கப்படுவதாக மாருதி சுசுகி அறிவித்து இருக்கிறது.

    விலை உயர்வு ஒவ்வொரு கார் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும். தற்போது மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் மொத்தம் 15 கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றில் ஆல்டோ மாடல் விலை ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. மாருதி சுசுகி XL6 மாடல் விலை ரூ. 11 லட்சத்து 29 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்தியது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமலுக்கு வர இருக்கும் மாருதி கார்களின் புதிய விலை விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படலாம். முன்னதாக மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பலேனோ மற்றும் XL6 கார்களின் CNG வேரியண்டை அறிமுகம் செய்தது.

    புதிய மாருதி சுசுகி பலேனோ CNG மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம் என துவங்குகிறது. புதிய XL6 CNG மாடல் விலை ரூ. 12 லட்சத்து 24 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மாருதி சுசுகியின் எண்ட்ரி லெவல் ஆல்டோ K10 மாடலும் CNG ஆப்ஷனில் கிடைக்கிறது.

    • எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் இந்திய வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    • ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எம்ஜி ZS EV தாய்லாந்தில் எம்ஜி VS என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரபல மிட்சைஸ் எஸ்யுவி ZS மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த கார் சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. இதுதவிர ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் முன்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. எம்ஜி ZS EV தாய்லாந்து சந்தையில் எம்ஜி VS என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய எம்ஜி ZS ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறம், ரி-வொர்க் செய்யப்பட்ட முகப்பு பகுதி, அளவில் பெரிய - வட்ட வடிவம் கொண்ட கிரில் உள்ளது. இத்துடன் மெல்லிய, கூர்மையான கிடைமட்டமாக பொருத்தப்பட்ட கிரில் காணப்படுகிறது. ஹெட்லேம்ப்களும் மாற்றப்பட்டு ஷார்ப்-எட்ஜ், ஆல் எல்இடி லைட்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. முன்புற பம்ப்பர் புதிதாக மாற்றப்பட்டு, டைமண்ட் பேட்டன், பெரிய ஏர் இண்டேக் வழங்கப்பட்டுள்ளது.

    காரின் பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. இதன் மெஷிண்டு அலாய் வீல்களில் ரிவைஸ்டு டிசைன், டெயில் லேம்ப்களில் புதிய எல்இடி இன்சர்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் இண்டீரியர் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இதில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பெரிய பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    தாய்லாந்தில் புதிய எம்ஜி ZS ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்டிருக்கிறது. இதில் 1.5 லிட்டர் 115 PS NA பெட்ரோல் என்ஜின், 1.3 லிட்டர் 140 PS டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. ZS EV மாடலில் தொடர்ந்து 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படலாம். இது முழு சார்ஜ் செய்தால் 461 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

    எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிய ZS அல்லது ZS EV மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், புது மாடல்கள் அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2024 துவக்கத்திலோ இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இரு மாடல்களின் தற்போதைய வெர்ஷன் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ×