search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் ஸ்பெஷல் எடிஷன் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புது மாடல் ஸ்கோடா குஷக் சீரிசில் இரண்டாவது ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஆகும்.

    இந்தியாவில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை அடுத்து கார் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் அசத்தல் சலுகை மற்றும் புது மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றனர். இந்த வரிசையில் ஸ்கோடா குஷக் ஆனிவர்சரி எடிஷன் இணைந்துள்ளது.

    ஏற்கனவே ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷன் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், ஆனிவர்சரி எடிஷன் குஷக் சீரிசில் இரண்டாவது ஸ்பெஷல் எடிஷன் மாடலாக அமைந்துள்ளது. ஸ்கோடா குஷக் ஆனிவர்சரி எடிஷன்- கேண்டி வைட் மற்றும் கார்பன் ஸ்டீல் என இரண்டு விதமான நிறங்களில் உருவாகி இருப்பதை உறுதிப்படுத்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் காரின் பக்கவாட்டு கிளாடிங், டோர் எட்ஜ் கார்டு உள்ளிட்டவைகளில் சில்வர் இன்சர்ட் மற்றும் சி பில்லர் டீக்கல் மீது ஆனிவர்சரி எடிஷன் எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர புதிய ஆனிவர்சரி எடிஷனில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குஷக் ஸ்பெஷல் எடிஷன் மாடல் குஷக் டாப் எண்ட் ஸ்டைல் வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்பெஷல் எடிஷன் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், 17 இன்ச் அலாய் வீல்கள், ஸ்ப்லிட் டெயில் லேம்ப்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 10 இன்ச் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    தற்போது ஸ்கோடா குஷக் மாடல் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என இருவித என்ஜின், மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. விலையை பொருத்தவரை புதிய ஸ்கோடா குஷக் ஆனிவர்சி எடிஷன் ரூ. 15 லட்சத்து 59 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 19 லட்சத்து 09 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • டொயோட்டா நிறுவனம் முற்றிலும் புதிய இன்னோவா கார் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய இன்னோவா மாடல் இந்திய சந்தையில் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தியாளர் டொயோட்டா, தனது புதிய சி-எம்பிவி மாடல் இன்னோவா ஹைகிராஸ் பெயர் மாருதி சுசுகி நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய விவரங்கள் டொயோட்டா பதிவு செய்து இருக்கும் ஒழுங்குமுறை விண்ணப்பத்தில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

    டொயோட்டா மற்றும் சுசுகி நிறுவனங்கள் இடையே கையெழுத்தாகி இருக்கும் ஒப்பந்தத்தின் படி புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் மாருதி சுசுகி பிராண்டிங்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். மேலும் இந்த மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் இன்னோவா மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது டொயோட்டா நிறுவனம் ரிபேட்ஜ் செய்யப்பட்ட மாருதி சுசுகி பலேனோ (கிளான்சா), பிரெஸ்ஸா (அர்பன் குரூயிசர்) மாடல்களை விற்பனை செய்யப்படுகிறது.

    இது மட்டுமின்றி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வேரியண்ட் ஆகும். மேலும் இந்த காரை டொயோட்டா நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது ஆலையில் உற்பத்தி செய்து வருகிறது. புதிய டொயோட்டா சி-எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் முற்றிலும் புது வெர்னா மாடல் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
    • இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான செடான் மாடல்களில் ஒன்றாக ஹூண்டாய் வெர்னா இருந்து வந்தது.

    ஹூண்டாய் வெர்னா மாடல் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இது மட்டுமின்றி ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையான கார் மாடலாகவும் வெர்னா விளங்கியது. எனினும், கடந்த சில ஆண்டுகளாக ஹூண்டாய் வெர்னா மாடல் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.

    இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் வென்யூ எஸ்யுவி மாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதை அடுத்து ஹூண்டாய் வெர்னா விற்பனை சரிவடைந்து இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் செடான் பிரிவில் புது மாற்றங்களுக்கு ஏற்ப ஹூண்டாய் வெர்னா அப்டேட் செய்யப்படவில்லை. இது செடான் கார்களை வாங்குவோரை கவர மறுத்துவிட்டது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹூண்டாய் நிறுவனம் அடுத்த தலைமுறை ஹூண்டாய் வெர்னா செடான் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் சோதனை நடத்தப்படும் படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி உள்ளன. அந்த வகையில் புதிய ஹூண்டாய் வெர்னா செடான் மாடல் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    வெளிப்புறம் மட்டுமின்றி காரின் உள்புறத்திலும் அதிக மற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இதில் பெரிய இன்போடெயின்மெண்ட் யூனிட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்படும் என தெரிகிறது.

    புதிய ஹூண்டாய் வெர்னா மாடலில் எல்இடி ஹெட்லைட்கள், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், எலெக்ட்ரிக் சன்ரூப், ஆர்கமிஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், 8 இன்ச் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, பின்புறம் ஏசி வெண்ட்கள், வெண்டிலேடெட் சீட்கள், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ORVM-கள் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்படும் என தெரிகிறது.

    • மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது.
    • தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு மட்டும் இந்த சலுகைகள் அக்டோபர் மாத இறுதி வரை வழங்கப்பட இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை மையங்களில் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகை, தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் இலவச அக்சஸரீ வடிவில் வழங்கப்படுகின்றன.

    சலுகைகளை பொருத்தவரை மஹிந்திரா ஸ்கார்பியோ பழைய மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் வரை தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. இதே போன்று XUV300 வாங்குவோருக்கு ரூ. 29 ஆயிரம் வரையிலான தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா பொலிரோ வாங்குவோருக்கு ரூ. 6 ஆயிரத்து 500 தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 8 ஆயிரத்து 500 மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 5 ஆயிரத்து 200 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அக்டோபர் மாதத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஸ்கார்பியோ N, ஸ்கார்பியோ கிளாசிக், XUV700 மற்றும் தார் உள்ளிட்ட மாடல்களுக்கு எந்த விதமான சலுகளோ, பலன்களோ அறிவிக்கப்படவில்லை.

    • ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது.
    • சிறப்பு சலுகை மற்றும் பலன்கள் ஹூண்டாய் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி ஹூண்டாய் கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. கோனா எலெக்ட்ரிக் எஸ்யுவி, ஆரா செடான், கிராண்ட் ஐ10 நியோஸ் மற்ரும் ஐ20 ஹேச்பேக் கார் மாடல்களுக்கு ஹூண்டாய் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    அக்டோபர் மாதத்திற்கான சலுகைகள் எக்சேன்ஜ் போனஸ், தள்ளுபடி மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இதில் கோனா எலெக்ட்ரிக் மாடலுக்கு தள்ளுபடி சலுகை மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த காரை வாங்குவோருக்கு எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. கோனா எலெக்ட்ரிக் காரை வாங்கும் போது ரூ. 1 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலை வாங்கும் போது ரூ. 48 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த கார் மூன்று விதமான பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை 100 ஹெச்பி பவர் வழங்கும் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 83 ஹெச்பி பவர் வழங்கும் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் ஆரா மாடலை வாங்குவோருக்கு ரூ. 33 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ஆரா மாடல் மாருதி சுசுகி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ஹூண்டாய் ஐ20 வாங்கும் போது ரூ. 20 ஆயிரம் வரை பலன்கள் கிடைக்கும். இதில் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. தள்ளுபடி சலுகை ஐ20 மாடலின் மேக்ரனா மற்றும் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஐ20 மாடல் மாருதி சுசுகி பலேனோ, டாடா அல்ட்ரோஸ் மற்றும் டொயோட்டா கிளான்சா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • நிசான் நிறுவனத்தின் முற்றிலும் புதிய X டெரியில் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புது கார்கள் பற்றிய தகவல்களை நிசான் வெளியிட்டு உள்ளது.

    நிசான் இந்தியா நிறுவனம்- நிசான் ஜூக், நிசான் கஷ்கெய் மற்றும் நிசான் X டிரெயில் என மூன்று சர்வதேச மாடல்களை காட்சிப்படுத்தி இருக்கிறது. இவற்றில் இரு மாடல்கள் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என நிசான் அறிவித்து இருக்கிறது. இவை இந்திய சந்தைக்கு ஏற்ற மாடல்களாக இருக்குமா என்ற ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    இந்திய சந்தையில் எட்டு ஆண்டுகளுக்கு பின் ரி-எண்ட்ரி கொடுக்கும் நிசான் X டிரெயில் பல்வேறு விஷயங்களில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய X டிரெயில் மாடல் பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷன்களில் வாங்கிட முடியும். இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 161 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    ஹைப்ரிட் வெர்ஷன் "இ-பவர்" என்ற பெயரில் அழைக்கப்பட இருக்கிறது. இதில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் இயங்கும் போது, வீல்களில் இருந்து பேட்டரி சார்ஜ் செய்யப்படும். முன்புற வீல் மற்றும் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷன்களில் இந்த வேரியண்ட் கிடைக்கும்.

    இதன் முன்புற வீல் டிரைவ் மாடல் 201 ஹெச்பி பவர், 330 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆல்-வீல் டிரைவ் வேரியண்ட் 210 ஹெச்பி பவர், 525 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை இந்த மாடலில் வி மோஷன் முன்புற கிரில், பம்ப்பரில் மவுண்ட் செய்யப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய நிசான் X டிரெயில் மாடல் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். மேலும் இந்த கார் ஐந்து மற்றும் ஏழு பேர் பயணம் செய்யும் வகையில் இருவித இருக்கை அமைப்புகளுடன் வெளியிடப்படும் என தெரிகிறது.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக் பரிசளித்து வியாபாரி அசத்தி இருக்கிறார்.
    • மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் மற்றும் கார் என ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான பரிசுகளை ஊழியர்களுக்கு கொடுத்தார்.

    தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட இருக்கிறது. பண்டிகை காலத்தை ஒட்டி ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது வியாபாரம் செய்வோரின் பழக்கம். அந்த வகையில் சென்னையை சேர்ந்த சல்லானி ஜூவல்லரி மார்ட் கடை உரிமையாளர் ஊழியர்களுக்கு பரிசளிக்கும் வழக்கத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார்.

    நகை கடை உரிமையாளரான ஜெயந்தி லால் சயந்தி தனது ஊழியரகளுக்கு ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை கொடுத்துள்ளார். இதில் எட்டு நான்கு சக்கர வாகனங்கள், மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் என மொத்தம் 18 இருசக்கர வாகனங்கள் அடங்கும். பரிசு வாகனங்களாக மாருதி சுசுகி ஸ்விப்ட், ஹோண்டா ஆக்டிவா 110 மற்றும் ஹோண்டா ஷைன் போன்ற மாடல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    "அவர்களின் பணியை பாராட்டி, வாழ்க்கையில் சிறப்பு சேர்க்கும் வகையில் இதுபோன்ற பரிசு கொடுத்திருக்கிறோம். வியாபாரத்தின் அனைத்து காலக்கட்டத்திலும் அவர்கள் நாங்கள் லாபம் ஈட்ட உழைத்துள்ளனர். இவர்கள் ஊழியர்கள் மட்டுமில்லாது எங்களின் குடும்பத்தினர் ஆவர். இதன் காரணமாகவே எனது குடும்பத்தாருக்கு செய்வதை போன்றே, எதிர்பாராத பரிசுகளை வழங்க முடிவு செய்தேன்."

    "இவ்வாறு பரிசு அளித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொருத்தரும் இது போன்று அவர்களின் ஊழியருக்கு மதிப்பு கொடுத்து, அவர்களுக்கு பரிசளித்து மேலும் ஊக்கப்படுத்த வேண்டும்," என ஜெயந்தி லால் தெரிவித்து இருக்கிறார்.

    • ஜீப் நிறுவனத்தின் புதிய கிராண்ட் செரோக்கி எஸ்யுவி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய தலைமுறை ஜீப் கிராண்ட் செரோக்கி கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஐந்தாம் தலைமுறை ஜீப் கிராண்ட் செரோக்கி எஸ்யுவி இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஜீப் இந்தியா நிறுவனம் புதிய எஸ்யுவி வெளியீட்டை உணர்த்தும் டீசரை முதல் முறையாக வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் புதிய தலைமுறை கிராண்ட் செரோக்கி மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

    புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எனினும், இதன் ஒட்டுமொத்த டிசைனில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. தோற்றத்தில் இந்த எஸ்யுவி பாக்ஸ் வடிவ டிசைன், கூர்மையான கோடுகள், புதிய கிரில், 7 இன்ச் ஸ்லாட் பேட்டன், சதுரங்க வடிவ வீல் ஆர்ச்கள், மெல்லிய ஹெட்லைட், டெயில் லைட் மற்றும் எல்இடி யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மற்ற அப்டேட்களுடன் இந்த காரில் ஆப் ரோடிங் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த மாடலில் 10.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 10 இன்ச் ஹெட்-அப் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் ஸ்கிரீன், யுகனெக்ட் யுஐ உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

    சர்வதேச சந்தையில் கிடைக்கும் ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் 3.6 லிட்டர் பெண்டாஸ்டார் வி6 பெட்ரோல் என்ஜின், 5.7 லிட்டர் ஹெமி வி8 மற்றும் புதிய 4xe பிளக்-இன் ஹைப்ரிட் வெர்ஷன் என பல்வேறு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலின் பெட்ரோல் என்ஜின் கொண்ட வெர்ஷன் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய M சீரிஸ் ஸ்பெஷல் எடிஷன் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • M சீரிசின் 50-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் 50 ஜாரெ எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய M5 50 ஜாரெ M எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ M5 50 ஜாரெ M எடிஷன் விலை ரூ. 1 கோடியே 79 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எட்டாவது 50 ஜாரெ எடிஷன் மாடல் ஆகும். இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கார் இந்தியாவுக்கு சிபியு முறையில் கொண்டுவரப்படுகிறது.

    50 ஜாரெ எடிஷன் மாடலில் லிமிடெட் எடிஷன் M5 கார் பிஎம்டபிள்யூ தனித்துவம் மிக்க பெயிண்ட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இது அவென்டியுரைன் ரெட் மற்றும் 50 ஜாரெ M எடிஷன் லோகோ அடங்கிய பிஎம்டபிள்யூ பாரம்பரியம் மிக்க கிட்னி கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே M எடிஷன் லோகோ காரின் பின்புறம், வீல் ஹப் கேப்களிலும் வழங்கப்பட்டு உள்ளது.

    பிஎம்டபிள்யூ கிட்னி கிரில் சரவுண்ட், M சீரிஸ் டபுள் பார்கள், M கில், மிரர் கேப் உள்ளிட்டவைகளில் மெஷ் உள்ளது. காரின் உள்புறம் M5 50 ஜாரெ M எடிஷன் மாடலில் அரகோன் பிரவுன் நிற மெரினோ லெதர், பிஎம்டபிள்யூ தனித்துவம் மிக்க ஹெட்லைனர், ஹெட் ரெஸ்ட்ரெயிண்ட்களில் M5 லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய பிஎம்டபிள்யூ M5 50 ஜாரெ எடிஷனில் ட்வின் டர்போ 4.4 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 625 ஹெச்பி பவர், 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு M ஸ்பெக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் மற்றொரு காரின் சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய சிஎன்ஜி கார் அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட ரூ. 95 ஆயிரம் வரை விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சிஎன்ஜி காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இம்முறை எஸ் பிரெஸ்ஸோ சிஎன்ஜி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் துவக்க விலை ரூ. 5 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    இந்த கார் LXi மற்றும் VXi என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய எஸ் பிரெஸ்ஸோ சிஎன்ஜி விலை அதன் ஸ்டாடர்டு மாடல் விலை ரூ. 95 ஆயிரம் அதிகம் ஆகும். இந்தியாவில் மாருதி சுசுகி அறிமுகம் செய்து இருக்கும் பத்தாவது சிஎன்ஜி மாடலாக எஸ் பிரெஸ்ஸோ சிஎன்ஜி அமைந்துள்ளது.

    இந்த மாடலில் 1.0 லிட்டர் டூயல் ஜெட், டூயல் விவிடி பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 56 ஹெச்பி பவர், 82.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய எஸ் பிரெஸ்ஸோ சிஎன்ஜி மாடல் லிட்டருக்கு 32.73 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    புதிய சிஎன்ஜி காரில் சிஎன்ஜி டேன்க் மட்டுமின்றி எஸ் பிரெஸ்ஸோ மாடலின் சஸ்பென்ஷன் செட்டப் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ VXi சிஎன்ஜி மாடலின் விலை ரூ. 6 லட்சத்து 10 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    • லெக்சஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ES300h மாடல் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.
    • முன்னதாக 2020 வாக்கில் லெக்சஸ் ES சீரிஸ் இந்தியாவில் முதன் முதலில் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

    லெக்சஸ் இந்தியா நிறுவனம் மேட்-இன்-இந்தியா ES300h மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லெக்சஸ் ES300h விலை ரூ. 59 லட்சத்து 71 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2020 ஆண்டு லெக்சஸ் நிறுவனம் ES சீரிஸ் மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய துவங்கியது. அந்த வகையில் புதிய ES300h லெக்சஸ் இந்தியாவில் உற்பத்தி செய்யும் நான்கவாது மாடலாக அமைந்துள்ளது.

    மேட்-இன்-இந்தியா லெக்சஸ் ES300h மாடல்- எக்ஸ்குசிட் மற்றும் லக்சரி என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது. புது மாடலில் அதநவீன டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, குரல் மூலம் அம்சங்களை இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ES மாடலின் செண்டர் கன்சோல் ரி-டிசைன் செய்யப்பட்டு கூடுதலாக ஸ்டோரேஜ் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய லெக்சஸ் ES300h மாடலில் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 88 கிலோவாட், 202 நியூட்டன் மீட்டர் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 175 ஹெச்பி பவர், 221 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. என்ஜின் மற்றும் ஹைப்ரிட் சிஸ்டம் இணைந்து 215 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் e-CVT ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய லெக்சஸ் ES300h லக்சரி வேரியண்ட் விலை ரூ. 65 லட்சத்து 81 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பேஸ் வேரியண்டை விட ரூ. 6 லட்சம் வரை விலை அதிகம் ஆகும்.

    • நெல்லையில் இருந்து நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல்
    • மேட்டுக்கடை பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியில் அந்த கார் சிக்கிக்கொண்டது.

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மண்எண்ணை ஆகியவை கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக பல்வேறு பகுதியில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். எனினும் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமாருக்கு நெல்லையில் இருந்து நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் மற்றும் அதிகாரிகள் தக்கலை பகுதி மற்றும் புலியூர்குறிச்சி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை வழி மறித்தனர். காரை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக சென்றார். எனினும் அதிகாரிகள் காரை பின் தொடர்ந்து சென்றனர். இதையடுத்து மேட்டுக்கடை பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியில் அந்த சொகுசு கார் சிக்கிக்கொண்டது.

    இதனால் டிரைவர் சொகுசு காரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து அதிகாரிகள் சொகுசு காரை சோதனை செய்தனர். சோதனையில் 35 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை வருவாய் ஆய்வாளர் விஜிமாறன், வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் ஆகியோர் குளச்சலில் உள்ள கிட்டங்கிக்கு அனுப்பி வைத்தனர்.

    ×