search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 162808"

    • விழிப்புணர்வு பேரணிக்கு மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார்.
    • பேரணியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்தி சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய பசுமைப்படை இணைந்து இன்று நடத்திய காற்று மாசுகட்டுப்பாடு விழிப்புணர்வு பேரணிக்கு மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். மாநகராட்சி மைய அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணியில் "மரம் நடுவோம் மழை வளம் பெறுவோம்", "புகை நமக்கு பகை" உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை மாணவ மாணவிகள் ஏந்தி சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற விழிப்புணர்வு பேரணி மீண்டும் மாகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

    விழிப்புணர்வு பேரணியில் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், உதவி ஆணையர்கள் சேகர், தனசிங், காந்திமதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலர் சத்தியராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ஹரிபாலகணேஷ், ராஜசேகர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் பிரபாகர், ஜோஸ்பர், கருணா, மணி, அல்பட், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜ்குமார் மீது பல்வேறு தொடர் திருட்டு வழக்குகள் இருந்து வருகிறது.
    • ராஜ்குமாரை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது23).

    இவர் மீது புதுக்கோட்டை, சிப்காட், தாளமுத்துநகர், தென்பாகம், வடபாகம், உட்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வீடு புகுந்து திருடுவது, மோட்டார் சைக்கிள் திருடுவது, வழிப்பறி உட்பட பல்வேறு தொடர் திருட்டு வழக்குகள் கடந்த 2020-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது.

    இதேபோல் சிப்காட் ஜோதி நகரில் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற வழக்கில் ராஜ்குமார் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    பல்வேறு தொடர் திருட்டில் ஈடுபட்டு போலீசாரிடம் பிடிபடாமல் தலைமறைவாக இருந்து வந்த ராஜ்குமாரை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். அதன்பேரில் ஏ.எஸ்.பி. சந்தீஸ் தலைமையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன், மற்றும் கணேஷ் உள்ளிட்ட தனிப்படை போலீசார் ராஜ்கு மாரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த வந்த ராஜ்குமாரை இன்று காலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    • விக்னேஷ் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
    • கண்ணன், ஆசிக் ஆகியோருடன் விக்னேஷ் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 4-வது தெருவை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவரது மகன் விக்னேஷ்(வயது 17). இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

    மின்கம்பத்தில் மோதல்

    நேற்று இரவு தனது உறவினரான லாரி டிரைவர் கண்ணன்(29), நண்பர் ஆசிக்(18) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திருச்செந்தூர் சாலையில் சத்யா நகர் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேர் மீதும் அந்த வழியாக சென்ற அரசு பஸ் மோதியது.

    பலி

    இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் ஆசிக் பரிதாபமாக இறந்தார்.

    படுகாயம் அடைந்த கண்ணனுக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் இறந்தார். இதுதொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலி பதவியிடங்களுக்கும் மறைமுக தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது.
    • 7-வது வார்டு உறுப்பினர் க.சந்திரசேகர் துணைத்தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    கோவில்பட்டி:

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண மறைமுக தேர்தல்களின் போதும், அதன்பிறகும் நடந்த சாதாரண, தற்செயல் மறைமுக தேர்தலின் போதும், குறைவெண் வரம்பின்மை, கோர்ட்டு வழக்கு மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஆகிய காரணங்களால் தேர்தல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட பதவியிடங்களுக்கும், இறப்பு, பதவி விலகல் மற்றும் பதவி நீக்கம் காரணமாக 31.7.22 வரை ஏற்பட்டு உள்ள காலி பதவியிடங்களுக்கும் மறைமுக தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது.

    தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்த செல்வக்குமார் பதவி விலகியதால் அந்த பதவி காலியாக இருந்தது. இந்த மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிக்கு நேற்று மதியம் 2.30 மணிக்கு தேர்தல் நடந்தது.

    போட்டியின்றி தேர்வு

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில், மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் ஜெயசீலி முன்னிலையில் தேர்தல் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தம் உள்ள 17 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதைத் தொடர்ந்து 7-வது வார்டு உறுப்பினர் க.சந்திரசேகர் துணைத்தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை 2-வது வார்டு மிக்கேல் நவமணி முன்மொழிந்தார். 4-வது வார்டு தங்கமாரியம்மாள் வழி மொழிந்தார். தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவராக க.சந்திரசேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    வாழ்த்து

    இதனை தொடர்ந்து கலெக்டர் மற்றும் அதிகாரிகள், தி.மு.க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் துணைத்தலைவர் சந்திரசேகர் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அப்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், முன்னாள் துணைத்தலைவர் செல்வக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார்.
    • அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, 535 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது.

    விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, 535 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    தன்னம்பிக்கை

    அப்போது, தமிழக முதல்-அமைச்சர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். பெண்கள் நல்ல, தரமான உயர்கல்வி பெற வேண்டும், பாலின சமத்துவம் இருக்க வேண்டும் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நல்ல வேலைவாய்ப்பு, தொழில் தொடங்கும் வகையில் திறன் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

    மாணவிகள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். மதிப்பெண் முக்கியமல்ல. ஒவ்வொருவரும், அவர்கள் திறமைக்கு ஏற்ப பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். பெற்றோருக்கு கீழ்படிந்து இருக்க வேண்டும். நன்றாக படியுங்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமையட்டும் என்று கூறினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பிரேம்குமார் ராஜாசிங், கவுன்சிலர் சுரேஷ்குமார், வட்ட செயலாளர் கீதா செல்வமாரியப்பன் மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்தார்.
    • தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் நெல்லை வழியாக கன்னியாகுமரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.

    தூத்துக்குடி:

    நெல்லை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். மேலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை முதல் மேற்கொள்ள உள்ள இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை தேசிய கொடி வழங்கி தொடங்கி வைக்க உள்ளார்.

    இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், அனிதா ராதா கிருஷ்ணன், கீதாஜீவன், மனோ தங்கராஜ், கலெக்டர் செந்தில்ராஜ், டி.ஆர்.பாலு எம்.பி. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.

    வரவேற்பு நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., ராதாபுரம் அலெக்ஸ் அப்பாவு, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.,

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர், இ.நடராஜன், நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் காசி ராஜன், அரசு ஒப்பந்ததாரர் மனோஜ்,

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் செல்வ லெட்சுமி அமிதாப், சுற்றுசூழல் அணி மாவட்ட அமைப்பாளர் அமிதாப், நெல்லை மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை மாநகர துணைச்செயலாளர் சுதா மூர்த்தி, பாளை யங்கோட்டை ஒன்றிய குழு தலைவர் கே.எஸ். தங்கப்பாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், முன்னாள் எம்.பி. ஜெயத்துரை, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் வக்கீல் ஜோயல்,

    தென்காசி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவபத்ம நாதன், செல்லத்துரை, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், கரையாளனூர் அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேலு, முன்னாள் எம்.பி.விஜிலா சத்தியானந்த், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, தச்சை பகுதி செயலாளர் சுப்பிரமணியன், அம்பை நகர்மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, ஆறுமுக ராஜா,

    நெல்லை கிழக்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் எரிக்ஜூட் பாண்டியன், வள்ளியூர் தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் இளங்கோவன், கிழக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மந்திரம், தகவல் தொழில் நுட்ப அணி லெட்சுமணன், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் சந்திரசேகர், பிரம்மதேசம் ஊராட்சி தலைவர் ராமசங்கர், துணை தலைவர் கோமதி, தெற்கு நாங்குநேரி ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா பாபு, தென்காசி வடக்கு மாவட்ட புன்னயைாபுரம் ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன், கண்ணநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன், துணைத்தலைவர் ராணி செல்வி,

    தூத்துக்குடி யூனியன் சேர்மன் வசுமதி அம்பா சங்கர், பஞ்சாயத்து தலைவர்கள் சரவணகுமார், ஹரி பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அவர் கார் மூலம் நெல்லை வழியாக கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது சாலையின் இருபுறமும் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • அமைச்சர் கீதாஜீவன் 62 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
    • எல்லா திட்டங்களும் மக்களுக்கு சென்றடையும் வகையில் முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி போல்பேட்டை பகுதியிலுள்ள தங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

    சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் 62 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி பேசியதாவது:-

    மக்களுக்கான ஆட்சி தி.மு.க. மட்டும் தான். எல்லா திட்டங்களும் மக்களுக்கு சென்றடையும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பார்கள். உங்களுடைய பெற்றோர்கள் தெய்வமாக இருப்பதை போல் வாழ்க்கை தரம் உயர்வதற்கு மெழுகுவர்த்தியை போல் தன்னை உருக்கி கொண்டு நல்ல அறிவுரை வழங்கி உங்கள் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தி கொடுக்கும் ஆசிரியர்களும் அதற்கு சமமானவர்கள். ஆரம்ப கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை அரசு பல்வேறு உதவிகளை உங்களுக்கு செய்து கொடுக்கிறது.

    இதன் மூலம் நன்றாக படித்து இந்த நாட்டின் பெருமையை வெளி உலகத்திற்கு நீங்கள் எடுத்துச்சென்று தாய் தந்தையர்களை மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டும். நான் படித்த காலத்தில் இது போன்ற வசதி வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை. இப்போது உள்ள மாணவ-மாணவிகள் எல்லா வகையிலும் கொடுத்து வைத்தவர்கள் இதைப் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஜீவன் ஜேக்கப், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர் சுரேஷ்குமார், மற்றும் அல்பட், பாஸ்கர், ஆசிரியர்கள், மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி சிவன் கோவில் தபசு மண்டபத்தில் உள்ள விஸ்வரூப விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
    • தூத்துக்குடி சங்குமுக கடற்கரையில் சிலைகள் விஜர்சனம் செய்யப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது.

    விழாவை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோவில் தபசு மண்டபத்தில் உள்ள விஸ்வரூப விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    இதில் மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துகுமார், துணைத் தலைவர் சிவா, மாவட்டச் செயலாளர்கள் ராகவேந்திரா,சிவலிங்கம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பலவேசம், மாவட்ட அமைப்பாளர் நாராயண ராஜ், ஒன்றிய தலைவர் சிபு,ஒன்றிய பொறுப்பாளர்கள், கிருஷ்ணா, சுடலை செல்வம், ராஜா,இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட செயலாளர் மாரியப்பன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    அப்போது மாவட்ட செயலாளர் ராகவேந்திரா கூறுகையில்,

    தூத்துக்குடியில் முக்கிய இடங்கள் சந்திப்புகளில் வைக்கப்பட்டுள்ள100 விநாயகர் சிலைகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு இந்து முன்னணி சார்பாக நடைபெறும் ஊர்வலத்தில் தபசு மண்டபத்தில் ஆரம்பித்து 1ம் கேட், மட்டகடை,திரேஸ்புரம் வழியாக தூத்துக்குடி சங்குமுக கடற்கரையில் விஜர்சனம் செய்யப்படுகிறது.

    நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் உட்பட முக்கிய நிர்வாகிகள் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர் என்றார்.

    • தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான ஆலோசனைகூட்டம் கருங்குளம் ஒன்றியம், சவலாப்பேரியில் நடைபெற்றது.
    • வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில் சென்று வீரவணக்க புகழஞ்சலி நிகழ்வில் பங்கேற்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான ஆலோசனைகூட்டம் கருங்குளம் ஒன்றியம், சவலாப்பேரியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செய லாளர் வி.கே.ஐயர், மாநில துணைப்பொதுச்செய லாளர்கள், சுப்பிரமணியன், தேனி பாலசுந்தரராஜ், நெல்லை சிவக்குமார், கிருபைராஜ் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.

    மாவட்ட துணை செய லாளர் மருதன்வாழ்வு ரவி, மாவட்ட துணை செயலாளர் ஆழ்வை பொன் அமிர்தம், குருவை சதீஷ்குமார் ஆகியோர் வரவேற்று பேசினர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கனகராஜ் பேசியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடி வரும் மாபெரும் இயக்கமாக நமது புதிய தமிழகம் கட்சி இருந்து வருகிறது.

    வருகிற 11-ந் தேதி தமிழகத்தில் சாதி ஒழிப்பு, சமநீதிக்காக போராடி உயிர் நீத்த சமநீதி போராளி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 65-வது வீர வணக்க புகழஞ்சலி செலுத்த ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள நினைவிடத்திற்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. வருடம்தோறும் இந்த வீரவணக்க நினைவஞ்சலி புதிய தமிழகம் கட்சி சார்பில் சிறப்பாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி இந்தாண்டிற்கான வீரவணக்க புகழஞ்சலி, வீரவணக்க பேரணி நமது புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெறுகிறது.

    வீரவணக்க புகழஞ்சலி நிகழ்விற்கு நமது தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஒரு ஒன்றியத்திற்கு 50 வாகனம் என குறைந்தது 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணி திரண்டு சென்று பங்கேற்றிடவேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழுஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பி.கனகராஜ் தலைமையில் சென்று வீரவணக்க புகழஞ்சலி நிகழ்வில் பங்கேற்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில், மாநில மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி, மாநில இளைஞரணி அமைப்பாளர் மாரிமுத்துகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி செந்தூர் பாண்டியன், ஓட்டப்பிடாரம் ஜேசிபி முருகன்(மேற்கு), மனோகரன்(கிழக்கு), ஆழ்வை கேசவன், விளாத்திக்குளம் பெருமாள்(தெற்கு), உமையன்(கிழக்கு), கோவில்பட்டி சண்முக நாதன், கருங்குளம் சின்னத்துரை, கோவில்பட்டி நகர செயலாளர் மாடசாமி, தூத்துக்குடி மாநகர செயலாளர் ரமேஷ், மாநகர துணை செயலாளர் துரை, மாநகர இளைஞரணி செயலாளர் மாரியப்பன், மாநகர மீனவரணி செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கருங்குளம் ஒன்றிய துணை செயலாளர் அழகர்சாமி நன்றி கூறினார்.

    • அனல் மின்நிலையத்தில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக 1 மற்றும் 2-வது அலகுகள் இன்று இயங்கவில்லை.
    • மற்ற 3 அலகுகள் இயங்கி வருவதால் 630 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அனல் மின்நிலையத்தில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக 1 மற்றும் 2-வது அலகுகள் இன்று இயங்கவில்லை. இதனால் அதில் இருந்து உற்பத்தி செய்யப்படும் 420 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    எனினும் மற்ற 3 அலகுகள் இயங்கி வருவதால் 630 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அனல்மின் நிலைய அதிகாரி களிடம் கேட்டபோது காற்றாலை மூலம் தற்போது அதிகளவு மின்சாரம் கிடைத்து வருவதால் அனல்மின் நிலையத்தின் 2 அலகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    • விழாவில் சிறுவர், சிறுமிகள் பால்குடம் எடுத்தும், பெரியவர்கள் முக்கூடல் தீர்த்த நீர் எடுத்தும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
    • அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பிரையன்ட்நகர் கீழ்பகுதியில் பிரசித்திபெற்ற செல்வ விநாயகர், சுப்பிரமணியர் கோவில் 47-வது ஆண்டு வருஷாபிஷேக விழாவை யொட்டி கணபதி ஹோமத்து டன் நடை பெற்றது.

    விழாவில் சிறுவர், சிறுமிகள் பால்குடம் எடுத்தும், பெரியவர்கள் முக்கூடல் தீர்த்த நீர் எடுத்தும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அமைச்ச ருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    இதில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், பிரையண்ட்நகர் பகுதி தி.மு.க. செயலாளரும் மாநகராட்சி நகர் நல குழு தலைவருமான ராமகிருஷ்ணன், வட்டச்செயலாளர்கள் சிங்கராஜ், சுப்பையா, முன்னாள் வட்டச்செய லாளர் சாரதி, மாநகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் பிக் அப் தனபாலன், பிரையண்ட்நகர் பகுதி இளைஞர் அணி செயலாளர் ரவி, வட்ட பிரதிநிதிகள் ரஜினிமுருகன், பாஸ்கர், சரவணன், வட்ட துணைச்செயலாளர் சத்தியபாலன், இளைஞர் அணி கோபால், கோவில் நிர்வாகி மணி, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், கருணா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் நவநீதன், செந்தில்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பேசினார்.
    • கொசுபுழுக்களை ஒழிக்க ரூ.27 லட்சத்தில் மருந்து கொள்முதல் செய்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது.

    ஆணையாளர் சாருஸ்ரீ, துணை மேயர்ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பேசினார்.

    தொடர்ந்து, மாநகராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல், கழிவு நீரில் வரும் கொசுபுழுக்களை ஒழிக்க ரூ.27 லட்சத்தில் மருந்து கொள்முதல் செய்தல், மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் பகுதி வாரியாக வடிகால் அமைக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அனுமதி வழங்குதல், மாநகராட்சி பகுதியில் அவ்வப்போது ஏற்பட்டுவரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற புதிய ஜே.சி.பி. எந்திரம் வாங்குதல், மேற்கு மண்டலம் வி.வி.டி.சிக்னல் பகுதியில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் ரவுண்டானா பகுதியில் நீரூற்று அமைத்து பசுமை புல்தரைகளுடன் அழகுபடுத்தும் பணி, தேசிய தூய காற்று திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தூத்துக்குடி மாநகராட்சிக்கு 2021-22-ம் ஆண்டு மானிய தொகை ரூ.3.06 கோடி ஒதுக்கீடு செய்து வரப்பெற்றுள்ளது.

    இதனை பயன்படுத்தி தூத்துக்குடி நகரின் காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாநகர பகுதியில் விபத்து ஏற்படும் பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து இரண்டு மடங்கு அபராதம் விதித்தல்,

    மாநகராட்சி 60 வார்டுபகுதிகளில் உள்ள இரண்டு பேருந்து நிலையங்கள், 21 அலுவலக கட்டிடங்கள், 30 நீரேற்று நிலையங்கள், 60 பூங்காக்கள், 20 மாநகராட்சி பள்ளிகள், 8 அம்மா உணவகங்கள் உட்பட கட்டிடங்களில் மின் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், பாலகுருசாமி, அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கச்சாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, சந்திரபோஸ், வெற்றிச்செல்வன், விஜயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி, உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் ரூபன் சுரேஷ், பொன்னையா, சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன் உட்பட அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×