search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்"

    பழனி அருகே உள்ள வாய்க்காலை தூர்வாரக் கோரி விவசாயிகள் மனு கொடுத்தும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து சொந்த செலவில் வாய்க்காலை தூர்வாரினர்.
    பழனி:

    பழனி அருகே அ.கலையமுத்தூர் கிராமத்தில் உள்ளது ராஜ வாய்க்கால். இதன் மூலம் சுமார் 900 ஏக்கர் அளவுள்ள விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. இந்த நிலங்களில் தற்போது விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

    பாலாறு அணையில் இருந்து விளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டுவரும் ராஜவாய்க்காலில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர் வாரப்படாமல் செடிகள் முளைத்த நிலையில் இருப்பதால் நீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜ வாய்க்காலை தூர் வாரி தடையில்லாமல் செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுப்பணித் துறை அதிகாரிகளை சந்தித்து விவசாயிகள் பலமுறை மனு அளித்துள்ளனர்.

    இருந்தபோதும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் வாய்க்கால்களை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நிதி திரட்டினர். பின்னர் விவசாயிகள் தாங்களாகவே ஒன்றிணைந்து ரூ. 2 லட்சம் செலவில் வாய்க்கால் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் நாங்கள் பலமுறை பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் வாய்க்கால்களை தூர்வாரிய கோரி மனு கொடுத்தோம். ஆனால் அவர்கள் எங்களது கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை. பருவமழையும் தொடங்கி விட்டதால் நாங்களே பணத்தை வசூலித்து வாய்க்கால்களை தூர்வாரி வருகிறோம் என்றனர்.
    தமிழகத்தின் முக்கிய நீர் தேக்கங்களில் ஒன்றான மேட்டூர் அணையில் இருந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு 2.5 லட்சம் கன அடி நீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது. #MetturDam
    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.83 லட்சம் கனஅடியில் இருந்து 1.86 லட்சம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில், இன்று அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1.95 லட்சம் கன அடியில் இருந்து 2.05 லட்சம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    2005-ம் ஆண்டுக்கு பிறகு அதாவது 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதே மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடிக்கு கூடுதலாக நீர் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #MetturDam
    ஒவ்வொரு ஆண்டும் கோடையில் டெல்லியில் கடுமையான நீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அடுத்த ஆண்டு கோடை காலத்தில் தண்ணீர் பிரச்சனை இருக்காது என டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். #ArvindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லியின் தெற்கு பகுதியில் புதிய துணை மின்நிலையத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், இத்தனை வருடங்களாக மக்கள் அவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெறுவதற்கு அரசு அலுவலகங்களில் காத்திருந்து, லஞ்சம் கொடுத்து வாங்கி வந்துள்ளதாகவும், இனி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளே மக்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று சான்றிதழ்களை வழங்க வழிசெய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த திட்டம் குறித்து டெல்லி கவர்னர் அனில் பாய்ஜாலை நாளை நேரில் சந்தித்து பேச இருப்பதாகவும் டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும் எனவும், அதற்கு மக்களும் சிறிது பொறுமையுடன் இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும், டெல்லியின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாட்டை  போக்க பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாகவும், அடுத்த வருட கோடைக்காலத்தில் டெல்லியில் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். #ArvindKejriwal
    ×