search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமமுக"

    • கட்சி வேட்பாளரை ஆதரித்து டி.டி.வி.தினகரன் 12-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஈரோட்டில் பல்வேறு பரிமாணங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
    • இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா குறித்து புகார் எழுந்துள்ளது. இது கண்டனத்திற்குரியது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று அ.ம.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சண்முகவேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எங்களுக்கு தேர்தல் களம் புதியதல்ல. பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என பல தேர்தல்களை சந்தித்துள்ளோம். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் மக்களை சந்தித்து ஆளும் அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை எடுத்துரைப்போம். மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு போன்ற மக்கள் பிரச்சினையை முன்வைத்து களம் காணுவோம்.

    குறைந்த வாக்குகள் முந்தைய தேர்தலில் பெற்றிருந்தாலும், இந்த தேர்தல் எங்களுக்கான தேர்தலாக பார்க்கிறோம். டி.டி.வி.தினகரன் மக்களை நேரடியாக நியாயமான முறையில் சந்தித்து வாக்கு சேகரிக்க கூறியுள்ளார்.

    அ.தி.மு.க.வில் இலையைப் பிடிக்க இரு அணிகளிடையே போட்டி நடந்து வருகிறது. நாங்கள் தனி கட்சியாக நின்று செயல்படுகிறோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடிப்படை வசதி கூட செய்யப்படவில்லை. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு தற்போது 2-வது முறையாக இடைத்தேர்தலை சந்திக்கிறோம்.

    எங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து டி.டி.வி.தினகரன் 12-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஈரோட்டில் பல்வேறு பரிமாணங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா குறித்து புகார் எழுந்துள்ளது. இது கண்டனத்திற்குரியது.

    பணம் பட்டுவாடா குறித்து நாங்களும் தேர்தல் கமிஷனில் புகார் அளிப்போம். மத்திய, மாநில தேர்தல் ஆணையம் ஒருங்கிணைந்து செயல்பட்டு பணபட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் தேர்தல் ஆணையம் ராணுவத்தை கொண்டு வந்து பணம் பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
    • அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந்தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசும், அ.தி.மு.க, ஓ.பி.எஸ் அணி, தே.மு.தி.க, அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சி என முக்கிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் 10-க்கும் மேற்பட்ட சுயேச்சைகள் வினோதமான முறையில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். இதில் முதல் நாளில் 4 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டன. மற்ற 6 பேர் மனுக்கள் முறையாக பூர்த்தி செய்யாததால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் நேற்று 2-வது நாளாக வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நேற்றும் சுயேச்சைகள், சில அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். 2-வது நாளில் 6 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2 நாட்களில் மட்டும் 10 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    இதைத்தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது. இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இந்நிலையில் நாளை முக்கிய கட்சிகளான காங்கிரஸ், அதிமுக, அ.ம.மு.க ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    இதனால் நாளை ஈரோடு மாநகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் டி.எஸ்பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நாளில் 3 பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வருவதால் அனைத்து ஏற்பாடும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

    வேட்பு மனு தாக்கல் செய்ய 7-ந்தேதி கடைசி நாளாகும். 8-ந் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 10-ந் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    இதனையடுத்து தேர்தல் பிரசார களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிடும். வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

    • பா.ஜ.க., அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முயற்சி செய்வது காங்கிரசுக்கு ஏன் கசக்கிறது.
    • தி.மு.க.வின் தோளில் ஏறிக்கொண்டு எட்டிய தூரத்திற்கு எதிரி இல்லை என காங்கிரஸ் சொல்லிக் கொண்டிருக்கிறது.

    நெல்லை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அனைத்து கட்சிகளும் வேட்பாளர் அறிவிப்பதை போன்று அ.தி.மு.க.வும் வேட்பாளர் அறிவித்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. உள்ளதால் ஓ.பி.எஸ்., பா.ஜ.க.வின் நிலைப்பாடு அறிவிப்புக்கு பின் முடிவு எடுப்பதாக சொல்லி உள்ளார்.

    தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பது தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் குறிக்கோள். அதற்காக இரவு, பகல் பாராது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பாடுபடுகிறார்கள்.

    மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி மிகப்பெரிய அறிஞர். அவரின் நினைவாக பேனா சின்னம் வைப்பது தவறில்லை. கடுமையாக நிதி நெருக்கடியில் அரசு இருக்கும்போது தி.மு.க. கட்சியின் சார்பாக அந்த சின்னத்தை வைத்துக் கொள்ளலாம் .

    கடலில் வைத்து சுற்றுச்சூழலை மாசுபடச் செய்யாமல் அறிவாலயம் உள்ளிட்ட தி.மு.க.வின் சொந்த இடங்களில் வைத்துக் கொள்ளலாம்.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓர் அணியில் பணியாற்றினால் தி.மு.க.வை வீழ்த்தலாம் என்பது என்னுடைய கருத்து. இதையே தான் ஓபி.எஸ்.சும் சொல்லி உள்ளார். ஓ.பி.எஸ். வேட்பாளர் அறிவிக்கிறாரா? என்பதை பார்த்து அவரது நிலைப்பாட்டை அறிந்து, இணைந்து பணியாற்றுவது குறித்து முடிவெடுக்கலாம். இன்னும் நேரம் இருக்கிறது.

    ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் இரட்டை இலை சின்னத்திற்கு சண்டையிட்டால் 2017-ல் நான் போட்டியிடும் போது நீதிமன்றம் இரட்டை இலை சின்னம் இருவருக்கும் இல்லை என்ற முடிவெடுத்ததை போல் கூட முடிவெடுக்கலாம்.

    பா.ஜ.க., அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முயற்சி செய்வது காங்கிரசுக்கு ஏன் கசக்கிறது. தி.மு.க.வின் தோளில் ஏறிக்கொண்டு எட்டிய தூரத்திற்கு எதிரி இல்லை என காங்கிரஸ் சொல்லிக் கொண்டிருக்கிறது.

    களத்தில் தனியாக இறங்கி நின்று காங்கிரஸ் போட்டி போட்டால் அவரது நிலை தெரியும்.

    இரட்டை இலை சின்னத்திற்கு தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட வேண்டும் என்பதை நிலைப்பாடாக கொண்டுள்ளது.

    இருவரும் இணைந்து கையொப்பம் இடவில்லை என்றால் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒரு சிலரின் சுயநலத்திற்காக அ.தி.மு.க. இன்று பலவீனம் அடைந்துள்ளது. அது எங்களுக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது.

    சுயநலத்தோடும் பணத்திமிரிலும் சிலர் செயல்படுவதால் தான் 5 ஆண்டுகளுக்கு முன்பே அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கி குக்கர் சின்னத்தில் போட்டியிட்டோம்.

    கடந்த தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் வருங்காலத்தில் வாய்ப்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் போராடுகிறோம். தி.மு.க. வை வீழ்த்துவதற்கு ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணையும் காலம் வரும். காலம் அனைத்திற்கும் தீர்வு கொடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பிரச்சினையால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது. அவர்களுக்குள்ளேயே பிரச்சினை இருக்கும் போது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி என்பது சாத்தியமில்லை.
    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணிக்கு வாய்ப்பில்லை. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை.

    தேவகோட்டை:

    சிவகங்கை அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் நடந்த கொடியேற்றும் நிகழ்ச்சியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்று வருகிற 27-ந்தேதி அறிவிக்கப்படும். அங்கு நானே போட்டியிட வாய்ப்புள்ளது. அ.தி.மு.க. 2 அணிகளும் இணைவது என்பது அத்தைக்கு மீசை முளைப்பது போன்றதாகும்.

    ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பிரச்சினையால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது. அவர்களுக்குள்ளேயே பிரச்சினை இருக்கும் போது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி என்பது சாத்தியமில்லை. அதிலும் குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணிக்கு வாய்ப்பில்லை.

    தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை. இதனால் அவர்கள் மக்களை சந்திக்க அஞ்சி ஒளிகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் தோற்கடித்து தி.மு.க.வுக்கு மக்கள் அதிர்ச்சி வைத்தியம் அளிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இடையே சமரசம் ஏற்பட்டால்தான் இரட்டை இலை கிடைக்கும்.
    • தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தினால் இரட்டை இலை முடக்கப்படும்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

    அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும். தி.மு.க.வை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். தி.மு.க.வை வீழ்த்துவதே எங்கள் எண்ணம். அதே நேரத்தில் அ.ம.மு.க. போட்டியிடுவது குறித்து 27-ந்தேதி அறிவிப்பேன். நான் பெரியகுளம், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு இருக்கிறேன்.

    இடைத்தேர்தலில் போட்டியிட தயங்கவில்லை. போட்டியிடவும் தயாராக இருக்கிறேன்.

    இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சிக்கு பொதுவாக மக்கள் வாக்களிப்பார்கள். தி.மு.க.விற்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது. தொகுதியில் திட்டப் பணிகள் தொடர்வதற்கு உதவியாக இருக்கும் என்று வாக்களிப்பது வழக்கம். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் தீர்ப்பும் உள்ளது.

    எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இடையே சமரசம் ஏற்பட்டால்தான் இரட்டை இலை கிடைக்கும். தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தினால் இரட்டை இலை முடக்கப்படும்.

    இரட்டை இலை இருந்ததால்தான் அ.தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.

    தனித்து போட்டியிட்டால் எடப்பாடி பழனிசாமி பணபலத்தை நம்பிதான் நிற்பார். கஜனிமுகமது மனநிலையை பெற்றவர்கள் நாங்கள். அதனால் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
    • அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் போட்டியிட ஒவ்வொரு கட்சியும் ஆர்வம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

    டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கட்சி ஏற்கனவே நடந்த தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அ.ம.மு.க. கட்சிக்கு 1,204 வாக்குகள் கிடைத்தன.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடுமா? என்பது தொடர்பாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி செந்தமிழனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிடலாமா? என்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பி.எஸ்.வீரப்பா கையிலும், எம்.என்.நம்பியார் கையிலும் புரட்சி தலைவரின் சின்னமும் கட்சியும் உள்ளது.
    • எங்கள் இலக்கை அடையும் வரை நாங்கள் போராடுவோம்.

    சென்னை:

    அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்பே இல்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் இன்று அளித்த பேட்டி வருமாறு:-

    அ.ம.மு.க.வில் இருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே அ.தி.மு.க.வுக்கு சென்று உள்ளனர். பலர் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். அவர்களை வரச் சொல்லி இருக்கிறேன். அ.தி.மு.க.வினர் எங்கள் கட்சியை சேர்ந்த யாரையாவது பிடித்தால் அடுத்த நாளே திறமையான தகுதியான நபர்களை எங்களால் நியமிக்க முடியும்.

    அ.ம.மு.க. வீரர்களின் பட்டாளம். தொண்டர்களை நம்பித்தான் இந்த இயக்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

    இதனால் விலகி செல்லும் சிலரால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படாது. தர்மபுரியில் ஒருவர் சென்றார். என் கூடவே இருந்தவர் துணை பொதுச்செயலாளராகவும் அவர் இருந்தார். 5, 6 நிர்வாகிகளும் அவருடன் சென்றனர். அவர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளோம்.

    விலகி செல்பவர்களின் இடத்தை நிரப்ப தகுதியான பலர் உள்ளனர். இப்படி தகுதியான நபர்கள் எங்கள் கட்சியில் இருப்பதால் தான் பழனிசாமி ஆட்களை பிடி என்கிறார். சொந்த பிரச்சினை, சுயநலத்தால் கட்சியை விட்டு சிலர் செல்வார்கள். இப்படி பதவி வெறியுடன் தடம் மாறுபவர்களை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை. அது பெரிய விஷயமே இல்லை. விலகிச் சென்றவர்கள் முகத்தில் ஒருவித பதட்டம் தெரிவதையும் நீங்கள் பார்க்கலாம்.

    கட்சி தொடங்கி 5 ஆண்டுகளாகிறது. 2 தேர்தல்கள் எங்களுக்கு பின்னடைவு தான். இருந்தாலும் தொண்டர்களும், நிர்வாகிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கட்சியை மேலும் பலப்படுத்த முடிவு செய்துள்ளோம். அடுத்து பாராளுமன்ற தேர்தல் வருகிறது. அதற்கான பூத் கமிட்டியை அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கழகம், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர், பகுதி செயலாளர் இவர்களையெல்லாம் அழைத்துள்ளேன். அடுத்த கட்டமாக மாவட்டங்களுக்கு சென்று நிர்வாகிகளை அழைத்து பேச உள்ளேன்.

    அ.ம.மு.க.வில் 27 அணி உள்ளது. அவர்களையும் சந்திக்க உள்ளேன். 40 தொகுதிகளிலும் அ.ம.மு.க.வை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கூட்டணி தொடர்பாக தேர்தல் நேரத்தில் சரியான முடிவை எடுப்போம்.

    அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம் என்று கூறிய தினகரன் தற்போது அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க போகிறாரே என்று சிலர் கேட்கிறார்கள். அ.தி.மு.க. இன்று தவறானவர்கள் கையில் உள்ளது.

    பி.எஸ்.வீரப்பா கையிலும், எம்.என்.நம்பியார் கையிலும் புரட்சி தலைவரின் சின்னமும் கட்சியும் உள்ளது. எங்கள் இலக்கை அடையும் வரை நாங்கள் போராடுவோம். நீங்கள் பலமுறை கேட்டுள்ளீர்கள். அ.தி.மு.க.வுடன் இணைவீர்களா? என்று அதற்கு வாய்ப்பே இல்லை. அந்த தவறை நாங்கள் என்றைக்கும் செய்யமாட்டோம். கூட்டணிக்கு செல்வீர்களா? என்று கேட்கிறீர்கள்.

    எங்களுடைய பலமும் உயரமும் எங்களுக்கு தெரியும். சில பேர் மாதிரி ஆணவத்தில், அகம்பாவத்தில், பணத்திமிரில் எங்களது நடவடிக்கைகள் இருக்காது. நாங்கள் வளர்ந்து வரும் ஒரு இயக்கம். வரும் காலத்தில் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தக் கூடிய உறுதியான தொண்டர்கள் இயக்கம். அதை அடையும் வரை போராடுவோம். ஓயமாட்டோம்.

    இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.

    • பிப்ரவரி 4-ந்தேதி-திருச்சி, 7-ந்தேதி-கடலூர், 12-ந்தேதி-கோவை, 15-ந் தேதி-சேலம் நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்
    • பிப்ரவரி 19-ந்தேதி-சென்னை மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் நடக்கிறது

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வளர்ச்சி பணிகள் குறித்த, மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

    சென்னை ராயப்பேட்டை தலைமைக் கழக அலுவலகத்தில் டிசம்பர் 28-ந் தேதி காலை 9 மணியளவில் தொடங்கி, கீழ்காணும் விவரப்படி நடைபெறவுள்ள இக்கூட்டங்களில் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்று ஆலோசனை வழங்க இருக்கிறார்.

    இக்கூட்டங்களில் அந்தந்த வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், கழக அமைப்பு செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் மாநில செயலாளர்கள், கழக செய்தி தொடர்பாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    28-ந்தேதி-தேனி, சிவகங்கை மாவட்டத்தினர் பங்கேற்கிறார்கள். 29-ந் தேதி-மதுரை, ஜனவரி 6-ந்தேதி-புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஜனவரி 8-ந்தேதி-விருதுநகர், திருநெல்வேலி மாவட்டத்தினரும் கலந்து கொள்கிறார்கள்.

    அடுத்த மாதம் 10-ந் தேதி-தென்காசி, தூத்துக்குடி, 21-ந்தேதி-தஞ்சாவூர், 27-ந்தேதி-நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், 30-ந்தேதி-பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    பிப்ரவரி 4-ந்தேதி-திருச்சி, 7-ந்தேதி-கடலூர், 12-ந்தேதி-கோவை, 15-ந் தேதி-சேலம் நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

    பிப்ரவரி 19-ந்தேதி-சென்னை மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் நடக்கிறது.

    மார்ச் 1-ந்தேதி-ராணிப்பேட்டை, வேலூர், 4-ந் தேதி-விழுப்புரம், கள்ளக்குறிச்சி, 6-ந்தேதி-ஈரோடு, 7-ந் தேதி-செங்கல்பட்டு, காஞ்சிபுரம், 10-ந்தேதி-நாமக்கல், நீலகிரி, 12-ந் தேதி-திண்டுக்கல், 14-ந் தேதி-திருப்பத்தூர், திருவண்ணாமலை, 17-ந்தேதி திருப்பூர், 19-ந்தேதி-திருவள்ளூர், 21-ந்தேதி-கிருஷ்ணகிரி, தருமபுரி, 23-ந்தேதி-கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    • ஒரே ஆண்டில் 3 முறை நெய் விலையை உயர்த்தி லிட்டருக்கு ரூ.115 வரை அதிகப்படுத்தி இருப்பது ஏற்கத்தக்கதல்ல.
    • இது தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடிக் கூறும் சொல்லாததையும் செய்வதா?

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஆவின் நெய் விலை உயர்வு கண்டனத்திற்குரியது. ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து ஆவின் தயிர், ஆவின் பால், தற்போது நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்திக் கொண்டிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல்.

    ஒரே ஆண்டில் 3 முறை நெய் விலையை உயர்த்தி லிட்டருக்கு ரூ.115 வரை அதிகப்படுத்தி இருப்பது ஏற்கத்தக்கதல்ல.இது தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடிக் கூறும் சொல்லாததையும் செய்வதா?

    இவ்வாறு இந்த பதிவில் கூறியுள்ளார்.

    • ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள் எல்லாம் நாங்கள் எல்லாம் வாழையடி வாழையாக கட்சிக்காக பல தலைமுறைகளை உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
    • புதிதாக வந்தவர்களுக்கெல்லாம் முக்கிய பதவிகள் எல்லாம் கிடைக்கிறது.

    திருப்பூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மரத்தான் போட்டி நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டிடிவி தினகரன் பரிசு வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம், தொழில் முன்னேறிய பகுதியாக இருந்து வந்தது. தற்போது பல்வேறு பிரச்சனைகளால் சிக்கி தவிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் சரியான முறையில் அணுகி மீண்டும் திருப்பூர் ஒரு சிறந்த தொழில் நகரமாக உருவாவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    உதயநிதி ஸ்டாலின் திமுகவினுடைய எம்எல்ஏ சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அமைச்சராவதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை. அவருடைய தந்தை மு.க.ஸ்டாலின் 89ம் ஆண்டு முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது அவர் ஒன்றும் அவசரக்கதியில் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. அனுபவம் வாய்ந்தவர்கள் முன் வரட்டும் என சொல்லி, அனுபவம் வாய்ந்தவர்கள் தான் அமைச்சராக இருந்தார்கள். புதியவர்களும் வருபவதுஉண்டு. அவர் முதல்வராக இருந்த பொழுது கருணாநிதி, ஸ்டாலின் அவர்களை 96 இல் மேயராக தான் கொண்டு வந்தார். பின்பு 2006 இல் தான் உள்ளாட்சி துறை அமைச்சராக அறிவித்தார். பொறுமையாக தான் கையாண்டார். ஆனால், அவருடைய மகன் முத்துவேல் கருணாநிதியின் மகன் என சொல்லிக் கொண்டிருக்கிற திரு ஸ்டாலின் அவசரக் கதியில் அவசர அவசரமாக அமைச்சராக உதயநிதி ஸ்டாலினை அறிவித்தது ஏனோ என எல்லோர் மனதிலும் அய்யம் ஏற்படுகிறது.

    அவர் அரசியலுக்கு வந்ததும் அவசரக் கதி தான் அவர்களின் வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என முன்னர் ஸ்டாலின் தெரிவித்தார். தற்போது சொல்வதற்கு மாறாக செயல்பட்டு வருகிறார். வரும் காலத்தில் ஒரே வீட்டில் இருந்து இரண்டு முதல்வர் கூட அறிவிக்கலாம்.

    2023 நவம்பர், டிசம்பரில் அமமுக தேர்தல் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும்.

    ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள் எல்லாம் நாங்கள் எல்லாம் வாழையடி வாழையாக கட்சிக்காக பல தலைமுறைகளை உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், புதிதாக வந்தவர்களுக்கெல்லாம் முக்கிய பதவிகள் எல்லாம் கிடைக்கிறது. அதற்கு காரணம் என்ன அவர்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தி விட்டார். அதேபோல் பல பேருக்கு அந்த குமுறல் உள்ளது. திடீரென வந்தவர்களுக்கெல்லாம் அவர்கள் அமைச்சர் ஆகிறார். அதற்கு என்ன காரணம் திமுகவில் உள்ளவர்களுக்கு எல்லாம் திறமை இல்லையா? நிர்வாக திறமை இல்லையா? வேற ஏதாவது கரெக்டா கரெக்ட் பண்ணி கொடுக்கிறார்களா? கத்திரிக்கா முத்தினால் சந்தைக்கு வந்து தான் ஆக வேண்டும்.

    புரட்சித்தலைவர் என்ன காரணத்துக்காக ஆரம்பித்தாரோ? அம்மா அவர்கள் அதை என்ன காரணத்திற்காக கட்டி காத்தார்களோ, அது எல்லாம் இன்றைக்கு மாற்றி மாற்று பாதை அமைப்போம் என்பது போல அந்த பாதையில் இருந்து விலகி, ஒரு கடல் போன்ற இயக்கத்தை குட்டை மாதிரி உருவாக்குகிறார்கள். ஒரு வட்டார கட்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் நாலைந்து பேர் மட்டும் உட்கார்ந்து கொண்டு கட்சியை நடத்துவதை தான் அவர்கள் விரும்புகிறார்கள். அதிமுக வட்டாரக் கட்சி ஆகிக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு ஆவர் கூறினார்.

    • புதுச்சேரியில் தி.மு.க. ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்பது எனது கருத்து.
    • தி.மு.க. தேர்தலில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதற்கான பதில் வருகின்றன பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கும்.

    தஞ்சாவூர்:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று தனது 60-வது பிறந்தநாளை தஞ்சையில் நிர்வாகிகள், தொண்டர்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும். அப்படி இணைந்தால் தான் தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த முடியும். எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர் இல்லை என்பதை பல இடங்களில் நிருபித்து வருகிறார்.

    உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் தவறில்லை. ஆனால் ஏன் இவ்வளவு அவசரத்தில் அமைச்சராக்க மு.க.ஸ்டாலின் நினைக்கிறார் என தெரியவில்லை.

    புதுச்சேரியில் தி.மு.க. ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்பது எனது கருத்து. தி.மு.க. தேர்தலில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதற்கான பதில் வருகின்றன பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெயலலிதா தலைவராக இருந்த அ.தி.மு.க.வில் இன்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 2 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள்.
    • எடப்பாடி பழனிசாமி ஒரு மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.ம.மு.க. சுதந்திரமாக இயங்கக் கூடிய இயக்கம். நாங்கள் மற்றவர்களுடன் கூட்டணி தான் போக முடியும் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். மெகா கூட்டணி பற்றிய பேச்சு வந்துள்ளதால் அதில் சேர தயார் என்றேன். எனவே பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணியில் அ.ம.மு.க. சேரும்.

    ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் ஓரணியில் திரண்டு தி.மு.க. அணியை எதிர்க்க வேண்டும்.

    அடுத்தவர்களை தரம் தாழ்த்தி பேசுபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி தான் ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை என்பதை காண்பிக்கிறார். நான் அரைக்கால் சதவீதம் கூட எடப்பாடி பழனிசாமியுடன் செல்வேன் என்று எங்கும் சொல்லவில்லை.

    நீங்கள் அ.தி.மு.க. கூட்டணியுடன் செல்வீர்களா என்று பத்திரிக்கையாளர்கள் திரும்ப திரும்ப கேட்கிறார்கள். அ.தி.மு.க. என்பது இன்று செயல்படாத கட்சியாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்.

    ஒரு கட்சி பெரிய கட்சியாக இருந்தாலும் சரி, சின்ன கட்சியாக இருந்தாலும் சரி இடைத்தேர்தல் வரும்போது கட்சி வேட்பாளர்களுக்கு சின்னம் கொடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும். அங்கு அந்த இடத்தில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

    2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தனியாக போட்யிட்டோம். பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியாததாலேயே தோல்வியை சந்தித்தோம். தேர்தல் பின்னடைவுக்கு அதுவும் ஒரு காரணம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. ஒரு அணியை போல செயல்படும். இந்திய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் அ.ம.மு.க. தமிழ்நாட்டில், சிறப்பாக பணியாற்றும். எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

    ஏற்கனவே தேர்தலில் நாங்கள் பின்னடைவை சந்தித்ததால் வருங்காலத்தில் நாங்கள் தேர்தலில் பின்னடைவை தான் சந்திப்போம் என்று யாராவது நினைத்தால் அது அவர்களின் எண்ணம். எங்கள் இயக்கம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

    ஜெயலலிதா தலைவராக இருந்த அ.தி.மு.க.வில் இன்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 2 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி ஒரு மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார்.

    அ.தி.மு.க. தலைவர் யார் என்பதை நீதிமன்றம் போய் முடிவு செய்யும் இடத்தில் அந்த கட்சி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×