search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்கட்சிகள்"

    கோவையில் நடந்த பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வானதி சீனிவாசன், பாரத பிரதமர் நரேந்திர மோடியை கண்டு காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் பயப்படுவதாக பேசினார்.
    கவுண்டம்பாளையம்:

    பாரதிய ஜனதா கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் பெரிய நாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள வீரபாண்டி பிரிவு பகுதியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடந்த 4 தலைமுறைகளாக இந்திய மக்களுக்கு ஒன்றும் செய்யாத காங்கிரஸ் கட்சி நாம் நாலாரை வருடத்தில் செய்ததை பார்த்து திகைத்து நிற்கிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடியை கண்டு காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் பயப்படுகின்றன.

    பா.ஜனதா அகில இந்திய தலைவர் அமித்ஷா தந்துள்ள 23 தேர்தல் பூத் பணிகளை தினமும் பார்த்து தவறாமல் செய்தாலே தமிழகத்தில் நாம் ஆட்சியை பிடித்து விடலாம். ஒவ்வொரு பகுதிக்கும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு கட்சி வளர்ச்சிப் பணி செய்தல் வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற திட்டங்கள் வகுத்து செயல்பட வேண்டும்.

    தொடர்ந்து கட்சியில் புதிதாக இணைந்த 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு சால்வைகள் அனுவிக்கப்பட்டு உறுப்பினர் கார்டுகள் வழங்கப்பட்டன. புதிய வீரபாண்டி நகர தலைவராக ரூபேஷ் நியமிக்கப்பட்டார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

    சிறுமுகை, வதம்பச்சேரி, வாகராயம்பாளையம் போன்ற கிராமங்களில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வரவேண்டிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொள்வது,

    சூலூர் விமானப்படை விரிவாக்க பணிகளுக்கு கையகப்படுத்தும் விவசாய நிலங்களுக்கு சந்தை மதிப்பை உயர்த்தி கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
    பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வருகின்றன என்று புதுக்கோட்டை கூட்டத்தில் ப. சிதம்பரம் பேசியுள்ளார். #pchidambaram #bjp

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இளைஞர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். தற்போது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பயிர் காப்பீட்டு திட்டம் மோசடியான திட்டம். இந்த திட்டம் விவசாயிகளுக்காக கிடையாது. காப்பீட்டு நிறுவனங்கள் லாபம் அடைவதற்காக தான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் குறித்து பிரதமர் கண்டனம் தெரிவிக்கவில்லை, முதல்வர் வருத்தம் தெரிவிக்கவில்லை. நேரில் சென்று பார்க்கவில்லை. தமிழக அரசு பொம்மையாக செயல்படுகிறது. மத்திய அரசு ஒரு காலை தூக்க சொன்னால் தமிழக அரசு இரண்டு கால்களையும் தூக்குகிறது.

    பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வருகிறது. காங்கிரஸ் வலுப்பட வேண்டும் என்றால் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் . 

    இவ்வாறு அவர் கூறினார். 

    கூட்டத்திற்காக அச்சடிக்கப்பட்டிருந்த அழைப்பிதழ் மற்றும் பிளக்ஸ் பேனர்களில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் படம் இடம் பெறவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். #pchidambaram #bjp

    வேறு வேலை இல்லாமல் போனதால் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றது குறித்து தமிழகத்தில் எதிர்கட்சிகள் பேசிவருகிறார்கள் என்று கும்பகோணத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் ரெயில் நிலையத்திற்கு வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    கர்நாடக தேர்தலில் பா.ஜனதா வெற்றிப்பெற்று எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்று இருப்பது கர்நாடக மக்கள் பிரச்சனைக்கு மட்டுமின்றி தமிழக விவசாய மக்களின் பிரச்சனைக்கெல்லாம் தீர்வுக்கான தொடக்கம். கர்நாடகத்தில் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றதை தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகளும், பல அமைப்பை சேர்ந்தவர்களும் விமர்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு தமிழகத்தில் வேலை இல்லாமல் போனதால் எரிச்சலில் பேசிவருகிறார்கள்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பா.ஜனதாவால் காலூன்ற முடியாது என கூறியுள்ளார். தமிழகத்தில் பா.ஜனதா கட்சி உயர்ந்து கொண்டிருக்கிறது. நாங்கள் குட்டிக்கரணம் அடிக்கும் குட்டி அல்ல என்பதை திருமாவளவன் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×