search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு"

    • பழமையான ஆவணங்களை பாதுகாத்திட பொதுமக்கள் ஒத்துைழப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த

    பெரம்பலூர்:

    பழமையான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் அனைத்தும் ஆய்வு பணிகளுக்கு கிடைக்கும் வகையில் தனியார் நிறுவனங்களிடமிருந்தும், தனி நபர்களிடமிருந்தும் அவற்றை சேகரித்து பாதுகாப்பாக வைத்திட தமிழ்நாடு ஆவணங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் ஆணையர், அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் தமிழ்நாடு ஆவண காப்பகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இக்குழு வினால் புணர மைக்கப்பட்டு டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் நகல் எடுத்து வைக்க நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும். மேலும் இத்தகைய பதிவுகள் கால வெள்ளத்தாலும் மனித அலட்சியத்தாலும் நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் தடயங்களை அழிவுகளில் இருந்து பாதுகாக்கப்படும்.

    அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களின் மூலமாக கிராமங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் மற்றும் உரிமையாளரின் பெயர்கள், தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் போன்றவற்றின் விவரங்கள் தமிழ்நாடு ஆவணக் காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வு துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தனிப்பட்ட பழமையான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் இருப்பின் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது சென்னை தமிழ்நாடு ஆவண காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வு ஆணையரிடம் ஒப்படைக்கலாம்.

    பெரம்பலூர் மாவட்டத்தின் வரலாற்று ஆவண சேகரிப்பு மற்றும் வரலாற்று ஆவணங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றிய செய்தியை பரப்புவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவி த்துள்ளார்.

    • மீனவ சமுதாயத்தை சேர்ந்த 300 பேர் ஊர்காவல்படையில் தேர்வு.
    • சுற்றுலா தளங்களில் கடலோர போலீசாருக்கு உதவியாக பணியாற்றுவார்கள்.

    நாகப்பட்டினம்:

    கடலோர பாதுகாப்பு காவல்துறையுடன் இணைந்து பணியாற்றுவதற்காக முதற்கட்டமாக பணியில் சேர்ந்த 24 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு பணியில் நியமனம் செய்யப்பட்டனர்.

    தமிழக அரசின் அறிவிப்பின்படி, முதன்முறையாக நாகை மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த படித்த பட்டதாரி இளைஞர்கள் 300 பேர் ஊர்காவல்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் முதற்கட்டமாக 45 நாட்கள் பயிற்சி முடித்த ஊர்காவல் படையினருக்கு நாகப்பட்டினத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

    கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் அடையாள அட்டைகளை வழங்கினார்‌.

    பணியில் நியமிக்கப்பட்ட அனைவரும் வேளாங்கண்ணி மற்றும் பூம்புகார் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கடலோர காவல்துறை பாதுகாப்பு போலீசாருக்கு உதவியாக பணியாற்றுவார்கள் என்றும், கடலில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியில் ஈடுபட உள்ளனர்.

    குறிப்பாக கடலோரங்களில் நடைபெறும் கடத்தல், அந்நியர்கள் ஊடுருவல்களை கண்காணிக்கும் பணி மற்றும் கடற்கரையோர சோதனை சாவடிகளிலும் உதவியாக பணியாற்றுவார்கள்‌‌.

    தமிழகத்திலேயே முதல் முறையாக நாகை மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர் தேர்வு செய்யப்படுள்ள நிலையில், மீனவர்கள் மற்றும் கடலோர காவல்துறை போலீசாருக்கு இணைப்பு பாலமாக திகழ்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அருங்காட்சியகம் மேம்பாட்டில் அரசு கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
    • வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்களும், கலை பொருட்களும் பாதுகாப்பின்றி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகத்தை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அங்கிருந்த அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். போதிய இட வசதி மற்றும் கட்டமைப்பு இல்லாததால், வரலாற்று சிறப்பு மிக்க சிற்பங்களும், கலைப் பொருட்களும், முக்கிய ஆவணங்களும் பாதுகாப்பின்றி உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

    ஏற்கெனவே, இது தொடர்பாக சட்டப்பே ரவையில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசியதாகவும், அதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் அருங்காட்சியகம் பழைய பாரம்பரிய கட்டடத்திற்கு மாற்றப்படும் என்றும், அந்த பாரம்பரிய கட்டிடம் ரூ.1.4 கோடி செலவில் பழுது பார்க்கப்பட்டு புதிய காட்சிக் கூடங்களுடன் மேம்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளதை எம்.எல்.ஏ சுட்டிக்காட்டினார்.

    அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டு மென்றும், நாகையின் வரலாற்றுச் சிறப்புக்கு ஏற்ப அருங்காட்சியகம் மேம்பாட்டில் அரசு கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டுமென்றும் அங்கிருந்தவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஷாநவாஸ் எம்.எல்.ஏ உறுதியளித்தார்.

    • பிட் இந்தியா ப்ரீடம் ரன் 3.0 கொண்டாடப்பட்டது.
    • ஜோதியை ஏற்றி மாணவர்களுக்கு நகர்மன்ற தலைவர் சிறப்புறையாற்றினார்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி உடற்கல்வித்துறை சார்பில் உலக ஒற்றுமை நாள் சுடர் ஓட்டமானது பிட் இந்தியா ப்ரீடம் ரன் 3.0 கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் எஸ். அறிவுடைநம்பி தலைமை வகித்தார். நகர்மன்ற துணை தலைவர் மா. சுப்பராயன் முன்னிலை வகித்தார்.

    ஜோதியை ஏற்றி மாணவர்களுக்கு நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் சிறப்புறை யாற்றினார்.ஜோதி ஓட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாட்டினை காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவல் துறையினர் செய்திருந்தனர்

    உடற்கல்வி ஆசிரியர்கள் சக்திவேல் ஹரிஹரன், ராகேஷ் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்கண்டன் செய்திருந்தனர். உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் நன்றி கூறினார்.

    • திருமாவளவன் கடலூர் அருகே கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் திடீரென்று பலத்த குண்டு வெடித்த சத்தம் கேட்டது.
    • கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீசார் பெரும் மூச்சு விட்டபடி அமைதி அடைந்தனர்.

    கடலூர்:

    கடலூரில் நேற்று பல்வேறு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சிகளில் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி. கலந்து கொண்டு கட்சிக்கொடி ஏற்றி பேசினார். அப்போது கடலூர் பகுதிகளில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் தலைவர் திருமாவளவனை பின்தொடர்ந்து சென்றனர். நேற்று இரவு திருமாவளவன் கடலூர் அருகே கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் திடீரென்று பலத்த குண்டு வெடித்த சத்தம் கேட்டது. இதனால் தலைவர் திருமாவளவன் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தலைவர் திருமாவளவனை நிர்வாகிகள் சூழ்ந்து பாதுகாத்தனர்.

    பின்னர் உடனடியாக எந்த இடத்தில் குண்டு சத்தம் கேட்டது என பார்த்த போது அங்குள்ள ஒரு காரில் ரேடியேட்டர் பலத்த சத்தத்துடன் வெடித்தது தெரியவந்தது. அப்போது இதனை பார்த்த கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீசார் பெரும் மூச்சு விட்டபடி அமைதி அடைந்தனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிகழ்ச்சி என்பதால் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கட்சி கொடியேற்று விழாவில் திடீரென்று வெடிகுண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டதால் அனைவரும் மத்தியிலும் பெரும் பரபரப்பு நிலவியது.

    • சமூக பாதுகாப்பை அளிப்பதற்காக கல்வி, வேலைவாய்ப்பு, சுய உதவி குழுக்கள் அமைப்பது.
    • தொழிற்பயிற்சி வழங்குவது நிலையான வருமானம் ஈட்டி பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுதல்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு சமூக பாதுகாப்பை அளிப்பதற்காக கல்வி, வேலைவாய்ப்பு, சுய உதவி குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சி வழங்குவது நிலையான வருமானம் ஈட்டி பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுதல் மற்றும் சமூக பாதுகாப்பிற்கு தேவையான திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் செயல்படுவதற்கு கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், பெண் விருதாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் போன்ற நபர்கள் விண்ணப்பம் பெற தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண் 303, மூன்றாவது தளம் என்ற முகவரியில் பெற்று 31.10.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பகுதிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை கிராமத்தில் பல விவசாய நிலங்களின் முக்கிய வடிகால் வாய்க்காலை தனிநபர் சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

    அதனால் மழை காலங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்–பட்டு வந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாபநாசம் தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோரிடம் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மனு கொடுத்திருந்தனர்.

    இதுகுறித்த செய்தி மாலைமலரில் வெளியிடப்–பட்டது.

    இதனை தொடர்ந்து பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, மண்டல துணை வட்டாட்சியர் விவேகானந்தன், மெலட்டூர் காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், சரக வருவாய் ஆய்வாளர் கணேஷ்பாபு ஆகியோர் முன்னிலையில் வடிகால் வாய்க்காலில் தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பகுதிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.

    வடிகாலில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக அன்னப்பன்பேட்டை பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

    • கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த வண்ணம் உள்ளது.
    • மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

    கடலூர், அக்.20-

    மத்திய கிழக்கு வங்கக்க டல் மற்றும் வடக்கு அந்த மான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த சுழற்சி பகுதியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. மேலும் வருகிற 22- ந் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும், மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று புயலாக மாறி உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த வண்ணம் உள்ளது. இந்த மழை இரவு நேரங்களில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வானமாதேவி, வடக்குத்து, லால்பேட்டை, எஸ் ஆர். சி, குடிதாங்கி, கீழ் செருவாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவ லாக மழை பெய்தது. நேற்று இரவு கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் மழை பெய்து வந்தது. இன்று காலை முதலே லேசான மழை பெய்து வருகிறது.

    தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் 3 நாட்களில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை எதிர்பார்த்திருக்கும் சாலையோர பட்டாசு வியாபாரிகள், பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான சிறு சிறு கடை வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் வருகிற 26-ந் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி யதை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இது மட்டும் இன்றி விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிக்காத வகை யில் விவசாயிகளும் வேளாண்மை துறை அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பல்வேறு மாவட்ட ங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • சிதம்பரம் பகுதியில் பல்வேறு கிராமங்களில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    கடலூர்:

    மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்த மான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த சுழற்சி பகுதியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. மேலும் வருகிற 22- ந் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும், மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று புயலாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வானமாதேவி, வடக்குத்து, லால்பேட்டை, எஸ் ஆர். சி, குடிதாங்கி, கீழ் செருவாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக கடலூர் கலெக்டர் அலுவல கம் பகுதியில் மட்டும் 2.8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது மேலும் நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு சுமார் மூன்று மணி நேரம் இடி மின்னலுடன் மழைபெய்த காரணத்தினால் மின்தடை ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து மின்சார துறை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு நெல்லிக்குப்பம் பகுதியில் மின்சார சப்ளை வழங்கினர். மேலும் கொள்ளிடம் ஆற்றங்கரையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சிதம்பரம் பகுதியில் பல்வேறு கிராமங்களில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை கலெக்டர் பாலசுப்ரமணியம் தலை மையில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு நடவடி க்கையும் மேற்கொண்டு உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து முன்னேற்ற பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் வருகிற 26 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி யதை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்த ப்பட்டு வருகின்றது இது மட்டும் இன்றி விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிக்காத வகை யில் விவசாயிகளும் வேளாண்மை துறை அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் கடலூர் மாவட்டத்தில் மில்லிமீட்டர் அளவில் மழை அளவு பின்வருமாறு:- கலெக்டர் அலுவலகம்- 28.0, எஸ்.ஆர்.சி குடிதாங்கி -20.0, கடலூர்- 16.4, வானமாதேவி-13.0, கீழ்செருவாய்-13.0, வடக்குத்து-8.0, லால்பேட்டை - 4.0, பண்ருட்டி - 2.0, மொத்த மழை - 104.40 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது

    • பணி பாதுகாப்பு ஆணையை வழங்கியதற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
    • உணவு பாதுகாப்பு அலுவலகங்களுக்கு கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    சென்னை பல்நோக்கு அரசு சிறப்பு மருத்துவ–மனையில் உள்ள அலுவலகத்தில் அமைச்சர் மா.சுப்பிர மணியனை நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தொகுதி எம்.எல்.ஏ நாகைமாலியுடன் தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் மு.சி.முருகேசன், பொதுச்செயலாளர் அ.தி.அன்பழகன், பொருளாளர் ஜான்சிம்சன், மாநில நிர்வாகிகள் ஸ்டாலின் ராசரத்தினம், ஏ.முத்துராஜா, இரா.வேலவன், ஜெ.ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

    அப்போது, கடந்த ஆட்சியின் அதிகார மையம் எதிர்பார்த்ததை நிறைவேற்றாததால் 11 ஆண்டுகளாக பழிவாங்கும் வகையில் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த பணிப் பாதுகாப்பு ஆணையை வழங்கியதற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

    மேலும் அமைச்சர் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் உறுதியளித்தபடி உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், உணவு பாதுகாப்பு அலுவலகங்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும்.

    சமூக நீதியான இட ஒதுக்கீட்டையும், முதுநிலை பட்டியலின்படியும் வெளிப்படைத்தன்மையும் இல்லாமலும் சம வாய்ப்பு மறுக்கப்பட்டும் கடந்த ஆட்சியின் அதிகார மையத்திற்கு வேண்டியவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு, இப்போதும் தொடர்ந்து வரும் மாவட்ட நியமன அலுவலர்கள் பணிக்கான பணி விதியை உடன் உருவாக்கி, அதில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளில் தகுதிகளின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கும் பதவி உயர்வு வழியாக நிரப்பிட உரிய சதவிகிதம் ஒதுக்கி மாவட்ட நியமன அலுவலர்களுக்கான பணிவிதி வெளியிட வேண்டும்.

    இந்திய அளவில் உணவு பாதுகாப்பில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்திட காரணமான உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு நிர்வாக ரீதியாக தீர்க்கப்பட வேண்டியுள்ள சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், இவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநில நிர்வாகிகளால் மனு அளிக்கப்பட்டது. பரிசீலனை செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

    • மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகப்பட்டு விசாரித்த போது எனது மனைவிக்கும் வேறு ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
    • எனது மனைவி மற்றும் அவரது கள்ளகாதலனுடன் சேர்ந்து கொண்டு கட்ட பஞ்சாயத்துக்கு வர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் சடையார் கோவிலை சேர்ந்தவர் சங்கர் (வயது 32 ) விவசாயி. இவர் தஞ்சை சரக டி. ஐ. ஜி. அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவற்றில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளன. எனது மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகப்பட்டு விசாரித்த போது எனது மனைவிக்கும் வேறு ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து நான் என் மனைவியை கண்டித்த போது அவர் என் மீது கோபப்பட்டு உன் சாப்பாட்டில் விஷம் வைத்து உன்னை கொன்று விடுவேன் என மிரட்டினார். மேலும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து நான் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால் போலீஸ்காரர் ஒருவர் எனது புகாரை வாங்க மறுத்து விட்டார். மேலும் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் எனது மனைவி மற்றும் அவரது கள்ள காதலனுடன் சேர்ந்து கொண்டு கட்ட பஞ்சாயத்துக்கு வர வேண்டும் எனக் கூறி மிரட்டுகிறார்.

    எனவே என் மனைவி அவரது கள்ளக்காதலன் மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுத்து என் உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்கள் கூடும் இடங்களில் டிரோன்கள் பறக்க விட்டு கண்காணிப்பு
    • பெண்களிடம் சில்மி ஷத்தில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும் சாதாரண உடையில் பெண் போலீசார் களம் இறங்கியுள்ளனர்.

    நாகர்கோவில்:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் மக்கள் புத்தாடைகள் எடுப்ப தற்கும், பண்டிகைக்கு தேவையான பொருட் களை வாங்குவதற்கும் கடை வீதிகளில் அலை மோதி வருகிறார்கள்.

    தீபாவளி பண்டிகையை யொட்டி ஆண்டு தோறும், பண்டிகைக்கு முந்தைய 2 ஞாயிற்றுக் கிழமைகளிலும் வணிக பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் ஞாயிற்றுக் கிழமையான நாளை வடசேரி, அப்டா மார்க்கெட், மீனாட்சிபுரம், செட்டிகுளம்,கோட்டார் பகுதிகளில் மக்கள் அதிக அளவில் சென்று பொரு ட்களை வாங்குவார்கள்.

    இது போன்று அடுத்தடுத்து வரும் 2 ஞாயிற்றுக்கிழமை களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.இதனால் அடுத்து வரும் நாட்களில் அனைத்து வணிக பகுதிகளிலும் திருவிழா கூட்டம் போல மக்கள் கூடி புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகளை வாங்கி செல்வார்கள்.

    இதனை கருத்தில் கொண்டு குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் என 4 சப்-டிவிஷன்களிலும் சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்கள் காலை, இரவு என 2 சிப்டுகள் அமைத்து பாதுகாப்பு பணி செய்கின்றர்.

    முக்கிய தெருக்களில் நெரிசல் ஏற்படும் அளவுக்கு மக்கள் கூட்டம் காணப்படும். இதையொட்டி அங்கு கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்க ளின் உதவியுடன், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் முழு வீச்சில் மேற்கொள்ள இருக்கி றார்கள். இப்போதே கண் காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    மக்கள் கூடும் இடங்கள் அனைத்திலும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்கவும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    மக்கள் கூட்டங்களில் ஊருடுருவி கண்காணிப்ப தற்கு வசதியாக டிரோன் களை பறக்க விடவும் திட்ட மிடப்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரை சுற்றுலா தலங்க ளான மண்டைக்காடு, குளச்சல், கன்னியாகுமரி பகுதிகளில் டிரோன்கள் மூலம் கண்காணிக்க திட்ட மிடப்பட்டு உள்ளது.

    குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைதான பழைய குற்றவாளிகளின் புகைப் படங்களை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேனர்களாக வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கூட்ட நெரிசலில் பிக்பாக்கெட் குற்றவாளிகள் புகுந்தால் காட்டி கொடுக் கும் வசதி கொண்ட தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளாக பயன் படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த தீபாவளிக்கும் அந்த நடைமுறையை பின்பற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் சம்பவங்களில் ஈடு படுவோரை பிடிக்க மாறு வேடத்திலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    பெண்களிடம் சில்மி ஷத்தில் ஈடுபடும் நபர்களை பிடிக்கவும் சாதாரண உடை யில் பெண் போலீசார் களம் இறங்கியுள்ளனர்.

    இப்படி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னை மாநகர் முழு வதும் தேவையான அனைத்து முன் ஏற்பாடு களையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    ×