search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலைகள்"

    ரன்வீர்ஷாவின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் திருவாரூர் பகுதியில் உள்ள கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்பது தெரிய வந்துள்ளது. #IdolWingRaids #PonManickavel
    ரன்வீர்ஷாவின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எப்படி? யாரால் திருடப்பட்டது? இவரிடம் விற்பனை செய்தது யார்? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த சிலை திருட்டுக்கு அரசு அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும்.

    இது தொடர்பாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மாலைமலர் நிருபரிடம் இன்று கூறியதாவது:-

    ரன்வீர்ஷாவுக்கு இந்த சிலைகள் யார் மூலமாக எப்படி வந்தது என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. இதன் பின்னணியில் எப்படியும் மிகப்பெரிய நெட்வொர்க் இருக்கும் என்பதால் முழு அளவில் விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.

    எங்களது கை காசில் இருந்தே சிலைகளை எடுத்துச் சென்றுள்ளோம். வழக்கு செலவுக்காக முதலில் செலவு செய்து விட்டு பின்னர் எழுதி வாங்கும் நிலை போலீசில் மாற வேண்டும்.

    இந்த சிலைகளை ரன் வீர்ஷா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் பெரும்பாலான சிலைகளை ரன்வீர்ஷா தனது வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்துள்ளார்.

    சிலைகள் அனைத்தையும் கோர்ட்டில் ஒப்படைத்த பின்னர் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துவோம். தவறு செய்தவர்கள் தப்ப முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #IdolWingRaids #PonManickavel
    மாலத்தீவில் அமைக்கப்பட்ட உலகின் முதல் கடல் அலை அருங்காட்சியகம் இஸ்லாமுக்கு எதிரானது என மதகுருக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இடிக்கப்பட்டு வருகிறது. #Maldives
    மாலே:

    சுற்றுலா நாடான மாலத்தீவில் கடந்த ஜூலை மாதம் உலகின் முதல் கடல் அலை அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. கடலுக்கு மேலேயும், கடலுக்கு அடியிலும் இருக்கும் வண்ணம் இந்த அருங்காட்சியகம் பல சிலைகளுடன் மிக நவீனமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இயற்கை சூழல் காரணமாக கடலில் நீர் மட்டம் குறையும் போது கடலுக்கு அடியில் இருக்கும் சிலைகள் மேலே தெரியும்.

    இந்நிலையில், இந்த அருங்காட்சியம் இஸ்லாம் மதத்திற்கு எதிராக உள்ளதாக அந்நாட்டில் உள்ள மத குருக்கள் குற்றம் சாட்டி வந்தனர். சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முகம்மது வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து, தற்போதைய அதிபர் அப்துல்லா யாமின், அருங்காட்சியத்தை இடிக்க உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து, அதில் உள்ள சிலைகள் உடைக்கப்பட்டு வருகின்றன. 

    இந்த அருங்காட்சியகத்தை உருவாக்கிய பிரிட்டன் சிற்பி ஜேசன் டிகேய்ர்ஸ் டெய்லர் கூறுகையில், “அந்த சிலைகள் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. கலையை பிரதிபலிக்கிறது அவ்வளவே” என தெரிவித்துள்ளார்.
    சிலைகள் குறித்து பேசிய ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கருத்து வருத்தமளிக்கிறது என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார். #hraja #gst #tamilnadustatue

    நெல்லை:

    நெல்லையில் பா.ஜ.க.தேசிய செயலாளர் எச். ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு 1 ஆண்டு ஆகிறது. இதை அமல்படுத்தும் முன்பு பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். மாநிலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டால் அதை மத்திய அரசு ஈடுசெய்யும் என்று கூறி தான் ஜி.எஸ்.டி.யை அமுல்படுத்தினோம். ஆனால் இப்போது தமிழக அரசுக்கு மறைமுகமாக 6 ஆயிரம் கோடி அதிக வருவாய் கிடைத்துள்ளது.

    எனவே மாநில அரசுக்கு வருவாய் இழப்பு இல்லை. வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கோர்ட்டில் தங்களது நடவடிக்கைகளுக்கு தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என கூறியுள்ளது வருத்த மளிக்கிறது. சிலைகள் மட்டுமல்ல அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களே மாயமாகியுள்ளன.

    அறநிலையத்துறைக்கு 38 ஆயிரத்து 635 கோவில்களும், 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலமும் இருந்தன. தற்போது 2 ஆயிரம் கோவில்கள் வரை காணவில்லை. மதுரை உயர்நிதிமன்றம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்து கோவில்களின் சொத்துகளை மீட்க வேண்டும் என கூறியுள்ளது. இந்த தீர்ப்பை அமுல்படுத்த வலியுறுத்தி இந்து ஆலய மீட்பு குழு சார்பாக இம்மாத இறுதியில் சென்னையில ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    அடுத்த 3 மாதங்களில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடி சரியான பாதையில் கொண்டு செல்கிறார். 

    இவ்வாறு அவர் கூறினார். #hraja #gst #tamilnadustatue

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள 152 சிலைகளின் நீளம், அகலம் கணக்கெடுக்கும் பணி இன்று நடைபெற்று வருகிறது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு இணை ஆணையராக ஞானசேகரன் பொறுப்பேற்றார்.

    புதிய இணை ஆணையர் பொறுப்பேற்ற பிறகு கோவிலில் உள்ள அனைத்து ஆவணங்கள், கோவிலுக்கு சொந்தமான நகைகள், சிலைகள் குறித்த குறிப்பேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்வது வழக்கம்.

    அதன்படி நேற்று இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில் சென்னையை சேர்ந்த தொல்லியியல் துறை அலுவலர் சேகர் முன்னிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சிலைகள் நீளம், அகலம் மற்றும் எடை ஆகியவை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

    இதுகுறித்து இணை ஆணையர் ஞானசேகரன் கூறியதாவது:-

    புதிதாக இணை ஆணையர் பொறுப்பேற்ற பிறகு கோவிலில் உள்ள சிலைகளின் நீளம், அகலம் குறித்து பார்வையிடுவது வழக்கம். இதில் கூடுதலாக சிலைகளின் எடை பார்க்கப்பட உள்ளது. இதன் மூலம் சிலைகள் மாற்றப்படுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது தவிர்க்கப்படலாம்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) சோமாசிபாடி முருகன் கோவில், சின்னக்கடை தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவில், கிரிவலப் பாதையில் உள்ள அடி அண்ணாமலை கோவிலிலும் சிலைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. கோவிலுக்கு சொந்தமான 152 சிலைகள் கணக்கெடுக்கப்படுகிறது. கோவிலில் சில இடங்களில் உள்ள பழைய பூட்டுகள் மாற்றப்பட்டு புதிய பூட்டுகள் போடப்படுகிறது. மேலும் கோவில்களில் சிலை பாதுகாப்பிற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ×