search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாலத்தீவு"

    • மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் சர்ச்சை கருத்து.
    • மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் ஆகியோர் ராஜினாமா.

    மாலே:

    இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவின் அதிபர் முகமுது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். சீன ஆதரவாளரான அவர் மாலத்தீவில் இருந்த இந்திய ராணுவத்தை வெளியேற உத்தரவிட்டார்.

    மேலும் இந்திய பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் சர்ச்சை கருத்தை தெரிவித்தனர்.

    இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியர்கள் பலர் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்தனர். இதனால் மாலத்தீவில் சுற்றுலாத்துறை, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன்பின் பிரதமர் மோடியை விமர்சித்த மந்திரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    தற்போது இந்தியாவுடன் மாலத்தீவு அரசு இணக்கமான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக கடந்த ஜனவரி மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்ட மந்திரிகள் மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

    மாலத்தீவு அதிபர் முகமுது முய்சு, விரைவில் இந்தியாவுக்கு அரசு முறை பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மந்திரிகள் 2 பேர் பதவி விலகியுள்ளனர்.

    இதுகுறித்து அதிபர் அலுவலகத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஹீனா வலீத் கூறும்போது, அதிபர் முகமுது முய்சு மிக விரைவில் இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்திற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இரு தரப்பினரும் ஒரு தேதியை விவாதித்து வருகிறோம் என்றார்.

    • இன்று முதல் 11-ந்தேதி வரை மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்வார்.
    • மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை சந்திக்கிறார்.

    புதுடெல்லி:

    இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் 3 நாட்கள் பயணமாக இன்று மாலத்தீவுக்கு செல்கிறார்.

    இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இன்று முதல் 11-ந்தேதி வரை மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்வார்.

    இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த ஜெய்சங்கரின் பயணம் நோக்கமாக உள்ளது.

    இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது மற்றும் இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராயப்படும் என்று தெரிவித்தது. ஜெய்சங்கர் தனது பயணத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை சந்திக்கிறார்.

    மேலும் மாலத்தீவின் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து பேசுகிறார். இதில் ஒப்பந்தங்கள் கையெழுத்ததாக வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாலத்தீவில் அதிபராக பதவியேற்றவுடன் முகமது முய்சு தனது நாட்டில் உள்ள இந்திய படைகளை வெளியேற உத்தரவிட்டார். சீன ஆதரவாளரான அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்.

    மேலும் இந்திய பிரதமர் மோடியை மாலத்தீவு மந்திரிகள் விமர்சனம் செய்தனர். இதையடுத்து இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் தவிர்த்தனர். இதனால் அந்நாட்டு பொருளாதாரம் கடுமையாக பாதித்தது.

    இதையடுத்து இந்திய எதிர்ப்பு நிலையை அதிபர் முகமது முய்சு கைவிட்டார். அவர் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரின் மாலத்தீவு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • மாலத்தீவில்இருந்து இந்திய படைகளை வெளியேற்றியது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்
    • அவர்களது பதவிகள் பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்

    இந்தியப் பெருங்கடலில் அமைத்துள்ள தீவு நாடான மாலத்தீவில், மாலத்தீவு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு கடந்த 2023 ஆம் ஆண்டு அதிபாராக பதவியேற்பட்டார். மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை வெளியேற்றியது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முய்சு சீன ஆதரவாளராக பார்க்கப்படுகிறார்.

    இந்நிலையில் அதிபர் முகமது முய்சுவுக்கு எதிராக பிளாக் மேஜிக் மூலம் பில்லி சூனியம் வைக்க முயன்றதாக அவரது கட்சியைச் சேர்த்த 2 அமைச்சர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    மாலத்தீவு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஷாம்னாஸ் சலீம் மற்றும் அதிபர் அலுவலகத்தில் அமைச்சராக பணியாற்றிவரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் சேர்ந்து அதிபர் முகமது முய்சுவுக்கு பில்லி சூனியம் வைக்க முயன்றதால் அவர்களது பதவிகள் பறிக்கப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

     

    முகமது முய்சு மாலத்தீவு தலைநகர் மாலேவில் மேயர் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் இருந்தே நகர சபை உறுப்பினர்களாக ஷாம்னாஸ் சலீம் மற்றும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் அவருடன் பணியாற்றிய நிலையில் தற்போது அவர்கள் இவ்வாறு செய்ததற்கான காரணம் தெரியாவரவில்லை. இதற்கிடையில், கைது செய்யப்பட்ட நால்வரும் 7 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  அதிபர் முய்சு சமீபத்தில் இந்திய பிராமராக மோடி பதிவேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

    • சீனாவுடன் முய்சு அதிக நெருக்கம் காட்டி வருவது இந்தியாவின் புவிசார் அரசியலில் பெரும் புகைச்சலைக் கிளப்பியது.
    • அதிபர் முகமது முய்சுவுக்கும் அங்கு வாழும் 98.69 சதவீத இஸ்லாமியர்களுக்கும் மோடி பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் கவனம் பெற்றுள்ளது.

     உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய பெருங்குடி மக்களால் இன்று (ஜூன் 17) திங்கட்கிழமை பக்ரீத் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகத் தலைவர்கள் முதல் தேசியத் தலைவர்கள் வரை மக்களுக்கு பக்ரீத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடான மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கும் அங்கு வாழும் 98.69 சதவீத இஸ்லாமியர்களுக்கும் மோடி பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் கவனம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மாலத்தீவின் அதிபராக பதவி ஏற்றதிலிருந்து முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

     

    குறிப்பாக மாலத்தீவில் இருக்கும் இந்தியப் படைகளை வெளியேற்றினார். சீனாவுடன் முய்சு அதிக நெருக்கம் காட்டி வருவது இந்தியாவின் புவிசார் அரசியலில் பெரும் புகைச்சலைக் கிளப்பியது. இலங்கை உட்பட அண்டை நாடுகளை சீனாவின் பக்கம் செல்லாமல் தன் கைவசம் வைத்துக்கொள்ள ஆரம்பம் முதலே இந்தியா மெனக்கிட்டு வருகிறது. எனவே மாலத்தீவுடன் இணக்கத்தை ஏற்படுத்துவது இந்தியாவுக்கு இன்றியமையாததாகிறது.

     

    இதற்கு வலு சேர்க்கும் வகையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்ற நிகழ்ச்சியில் முய்சு கலந்துகொண்டார். இந்த நிலையில்தான் மோடியின் இந்த பக்ரீத் வாழ்த்துச் செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தனது வாழ்த்துச் செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளதாவது, தியாகத்தாலும் சகோதரதத்துவதாலும் இந்த திருநாள் உருவானது. ஒரு இணக்கமாக உறவை கட்டமைப்பதற்கும் சகோதரத்துவமும் தியாகமும் இன்றியமையாததாகும் என்று தெரிவித்துள்ளார். 

    • மாலத்தீவில் உள்ள இஸ்ரேலியாளர்கள் உடனே வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
    • கடந்த காலங்களிலும் இஸ்ரேல் மீது மலாத்தீவு தடைகளை விதித்துள்ளது.

    தீவு நாடான மாலத்தீவில் இஸ்ரேல் குடிமக்கள் நுழைய தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் முகமது முய்சு அறிவித்துள்ளார். பாலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட இதுவரை 36,439 மக்கள் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த மே 27 ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பொதுமக்கள் கொள்ளப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

     

    முன்னதாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் அதை தனி நாடாக அங்கீகரித்தன. ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் பாலஸ்தீனத்தில் மீண்டும் அமைதி நிலவ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

    போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு அளித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் சமயத்தில் போர் நிறுத்தத்த்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு அழைப்பு விடுத்துள்ளளார். இந்த நிலையில்தான் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாலத்தீவு இஸ்ரேல் குடிமகன்கள் மாலத்தீவுக்குள் நுழைய தடை விதித்துள்ளது.

     

    இதைத்தொடர்ந்து மாலத்தீவில் உள்ள இஸ்ரேலியாளர்கள் உடனே வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதையும் மீறி இங்குள்ள இஸ்ரேலியர்களுக்கு ஏதேனும் அசமபாவித்தம் நிகழ்ந்தால் அவர்களுக்கு அரசு உதவி செய்வதில் சிக்கல் ஏற்படும் என்று என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசானது மாலத்தீவில் உள்ள இஸ்ரேலியர்கள் உடனே நாடு திரும்பும்படி அறிவுறுத்தியுள்ளது.

     

    சுற்றுலாவுக்கு பெயர் போன மாலத்தீவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சூழலில் இந்த அறிவிப்பானது அதன் பொருளாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    கடந்த காலங்களிலும் இஸ்ரேல் மீது மலாத்தீவு தடைகளை விதித்துள்ளது.இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை தீவிரமாக நடந்து வந்த 1990 களில் மாலத்தீவில் இஸ்ரேலியர்களுக்கு தடைவிதிக்கபப்ட்டு, பின் 2010 இல் அதனை நீக்கி இஸ்ரேலுடன் அரசாங்க உறவுகளை மீண்டும் மாலத்தீவு புதுப்பித்தது குறிப்பிடத்தக்கது. 

    • 89 ராணுவ வீரர்கள் மாலத்தீவில் இந்தியா வழங்கிய ஹெலிகாப்டர்களை பராமரித்து வந்தனர்.
    • ஏற்கனவே இரண்டு கட்டமாக 51 வீரர்களை இந்தியா திரும்பப் பெற்றிருந்தது.

    மாலத்தீவில் நடைபெற்ற தேர்தலில் முகமது முய்சு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர். தேர்தல் பிரசாரத்தின்போது மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள், திருப்பி அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

    தேர்தலில் வெற்றி பெற்றபின், அதற்கான வேலையில் மும்முரமாக இறங்கினார். இருநாட்டு அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தையில் ராணுவ வீரர்களை திரும்பப்பெற இந்தியா ஒப்புக்கொண்டது.

    மே 10-ந்தேதிக்குள் படிப்படியாக அனைத்து வீரர்களையும் திரும்பப்பெற இந்தியா சம்மதம் தெரிவித்தது.

    அதன்படி கடந்த மார்ச் முதல்கட்டமாக சில வீரர்களை இந்தியா திரும்பப் பெற்றது. ஏப்பரல் மாதம் 2-வது கட்டமாக ஏப்ரல் மாதம் சில வீரர்களை திரும்பப்பெற்றது. 2 கட்டங்களாக 51 வீரர்களை திரும்பப்பெற்றது.

    இந்த நிலையில் இன்றோடு அனைத்து வீரர்களையும் இந்தியா திரும்பப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்தியா ராணுவ வீரர்களை திரும்பப்பெற மே 10-ந்தேதி (இன்று) கடைசி நாளாகும். இந்த நிலையில் வீரர்களை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது.

    இந்தியாவைச் சேர்ந்த 90 ராணுவ வீரர்கள் மூன்று ராணுவ தளங்களில் பணியாற்றி வந்தனர்.

    இந்தியா வீரர்கள், மாலத்தீவுக்கு இந்தியா வழங்கிய இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் டோர்னியர் ஏர்கிராஃப்டை இயக்கி வந்ததுடன், பராமரித்து வந்தனர். மேலும், மாலத்தீவுக்கு இந்திய நிர்வாகத்தால் வழங்கப்பட்ட உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பிற வளங்களைப் பயன்படுத்துவதில் பங்களித்தனர்.

    • மாலத்தீவு தனது பொருளாதாரத்துக்கு சுற்றுலா வருவாயை நம்பி இருக்கிறது.
    • நாட்டின் பொருளாதாரத்திற்கு இந்தியர்கள் பங்களிக்க வேண்டும்.

    மாலே:

    இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு தனது பொருளாதாரத்துக்கு சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பி இருக்கிறது. அங்கு இந்தியர்கள் ஏராளமானோர் சுற்றுலா சென்று வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அதிபர் தேர்தலில் வென்ற முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.

    மேலும் இந்திய பிரதமர் மோடியை மாலத்தீவு மந்திரிகள் விமர்சனம் செய்தனர். இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் பலர் தவிர்தனர். இதனால் மாலத்தீவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது.

    இது மாலத்தீவின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது. இதையடுத்து இந்தியர்கள் மாலத்தீவுக்கு முன்பு போல் சுற்றுலாவுக்கு வர வேண்டும் என்று மாலத்தீவு வலியுறுத்தியது.

    இந்த நிலையில் தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.

    இதுகுறித்து அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் இப்ராகிம் பைசல் கூறும்போது, எங்களுக்கு ஒரு வரலாறு உண்டு. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களது அரசும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது. நாங்கள் எப்போதும் அமைதி மற்றும் நட்பு சூழலை ஊக்குவிக்கிறோம்.

    இந்திய சுற்றுலா பயணிகளுக்கு எங்களது மக்களும் அரசாங்கமும் அன்பான வரவேற்பை வழங்குவார்கள். சுற்றுலாத் துறை அமைச்சர் என்ற முறையில், இந்தியர்களிடம் தயவு செய்து மாலத்தீவின் சுற்றுலாவின் ஒரு பகுதியாக இருக்குமாறு நான் கூற விரும்புகிறேன்.

    எங்கள் பொருளாதாரம் சுற்றுலாவை சார்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கு இந்தியர்கள் பங்களிக்க வேண்டும் என்றார்.

    • பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப படகின் விலைகள் உள்ளன.
    • தற்போது அந்தமான், மாலத்தீவு உள்ளிட்ட கடல் சுற்றுலா பகுதிகளில் இந்த படகிற்கான தேவை அதிகளவு உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட கண்டெய்னர்கள் டெலிவரி செய்யும் பணி நடந்து வந்தது.

    திடீரென இந்த சேவை நிறுத்தப்பட்டு, இதற்கு பயன்படுத்தப்பட்ட ஹோப்செவன் கப்பல் பயன்பாடின்றி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் துறைமுக வளாகத்தில் பின்புறம் தனியார் நிறுவனம் சொகுசு படகுகளை தயார் செய்து அந்தமான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறது.

    அதிகபட்சமாக 'செமி சம்மெரின் பாட்டம் கிளாஸ்' என்ற சொகுசு படகுகளை தயாரிக்கிறது.

    நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்தால் எப்படி ஆழ்கடல் அதிசயங்களை காணமுடியுமோ அதே போல் இந்த படகில் கடலில் பயணம் செய்யும் போது படகில் மூழ்கி இருக்கும் கீழ் பகுதியில் பயணிகள் அமர்ந்து கொண்டு ஆழ்கடலை ரசித்தவாறே பயணிக்கலாம்.

    இதற்காக படகின் கீழ், பகுதியில் ஏ.சி. வசதியுடன் பயணிகள் அமர்ந்து கொண்டு கண்ணாடி வழியே பார்க்கும் வகையில், இந்த படகு தயார் செய்யப்படுகிறது. 12 மீட்டர் நீளம் 2.9 மீட்டர் அகலத்தில் 16 பேர் பயணம் செய்யும் வகையில் ஒரு படகு தயாரிக்க ரூ.70 லட்சம் ஆகிறது.

    பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப படகின் விலைகள் உள்ளன. தற்போது அந்தமான், மாலத்தீவு உள்ளிட்ட கடல் சுற்றுலா பகுதிகளில் இந்த படகிற்கான தேவை அதிகளவு உள்ளது. அதன் காரணமாக புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் அந்தமானிற்கு கொண்டு செல்ல 4 செமிசம்மெரின் பாட்டம் கிளாஸ் படகுகள் வேகமாக தயார் செய்யப்பட்டு வருகிறது.

    மாலத்தீவிற்கும் இதே போன்று படகுகள் விரைவில் தயார் செய்து அனுப்பப்படுகிறது. சொகுசு படகுகள் தயார் செய்யும் மையமாக புதுச்சேரி மாறி வருகிறது.

    • 93 இடங்களில் அதிபரின் முய்சு கட்சி 60-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியுள்ளது.
    • முக்கிய எதிர்க்கட்சியால் 12 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

    மாலத்தீவில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 284,663 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். நேற்று மாலை 5 மணி வரைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் 72.96% வாக்குகள் பதிவாகின. ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 826 ஆண்களும், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 867 பெண்களும் வாக்களித்திருந்தனர்.

    93 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற தேர்தலில் மொத்தமாக 368 வேட்பாளர்கள் களம் கண்டனர். அதில் 130 பேர் சுயேட்சையாக போட்டியிட்டனர். இதில் அதிபராக இருக்கும் மொய்சு தலைமையிலான பிஎன்சி கட்சி 90 தொகுதிகளிலும் போட்டியிட்டது. முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி 89 இடங்களிலும் போட்டியிட்டது.

    வாக்குப்பதிவு முடிந்த கையோடு, வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மொய்சுவின் பிஎன்சி கட்சி பெரும்பலாலான இடங்களில் முன்னணி வகித்தன.

    மொய்சு தலைமையிலான பிஎன்சி 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று சூப்பர் மெஜாரிட்டியை பெற்றுள்ளது. அதேவேளையில் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 10 இடங்களில் சுயேட்சையாக நின்றவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

    இந்த தேர்தலில் மூன்று பெண்கள் மட்டும் வெற்றி பெற்றுள்ளனர். பிஎன்சி கட்சி சார்பில் மூன்று பெண்கள் களம் நிறுத்தப்பட்டனர். அந்த மூன்று பெண்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

    கடந்த 2019 தேர்தலில் மாலத்தீவு ஜனநாயக கட்சி 64 இடங்களை கைப்பற்றி சூப்பர் மெஜாரிட்டி பெற்றது. பிஎன்சி-பிபிஎம் கூட்டணி எட்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மாலி, அட்டு, ஃபுவாஹ்முலாஹ் ஆகிய நகரங்களில் பிஎன்சி ஆதிக்கம் செலுத்தி அதிகப்படியான இடங்களை பிடித்துள்ளன.

    மாலத்தீவு அதிபர் முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். சீனாவுடன் நட்பை மேம்படுத்த விரும்புகிறார். இந்திய ராணுவம் மலேசியாவில் இருந்து வெளியேற உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தலில் அதிபர் முகமது முய்சுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
    • அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டும் எழுந்துள்ளதால் அவர் பதவி விலக வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 368 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இதனால் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது.

    இந்த தேர்தலில் அதிபர் முகமது முய்சுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. சீன ஆதரவாளரான அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்து வருகிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டும் எழுந்துள்ளதால் அவர் பதவி விலக வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே இந்த பாராளுமன்ற தேர்தல், அதிபர் முகமது முய்சுவின் செல்வாக்கை சோதிக்கும் களமாக இருக்கும்.

    • பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் லட்சத்தீவு சென்றிருந்த போது அவரது பயணத்தை மாலத்தீவு மந்திரிகள் கேலி செய்து கருத்துக்களை பதிவிட்டனர்.
    • இந்தியர்கள் வருகை தற்போது குறைந்துள்ளதால் தற்போது 5 - வது இடத்துக்கு சென்றுவிட்டது. இதனால் மாலத்தீவு அரசு கவலை அடைந்துள்ளது.

    மாலே:

    நமது அண்டை நாடான மாலத்தீவு சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இயற்கை அழகு கொட் டிக்கிடக்கும் மாலத்தீவுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம்.

    அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் செல்வார்கள்.சுற்றுலா துறை மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி தான் அந்த நாடு உள்ளது.ஆனால் சமீபத்தில் மாலத்தீவு அதிபராக சீன ஆதரவாள ரான முகமது முஸ்சு பதவி ஏற்ற பிறகு இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது.

    மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.

    மேலும் பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் லட்சத்தீவு சென்றிருந்த போது அவரது பயணத்தை மாலத்தீவு மந்திரிகள் கேலி செய்து கருத்துக்களை பதிவிட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியதால் 3 மந்திரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    இந்த பிரச்சினைக்கு பிறகு மாலத்தீவு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. கடந்த ஆண்டு மாலத்தீவுக்கு மொத்தம் 17 லட்சம் சுற்றுலா பயணிகள் சென்றனர். இதில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 198 பேர் இந்தியர்கள் ஆவார்கள்.

    அதற்கு அடுத்த இடத்தில் ரஷியா மற்றும் சீனர்கள் இருந்தனர். இந்த நிலையில் இந்தியர்கள் வருகை தற் போது குறைந்துள்ளதால் தற்போது 5 - வது இடத் துக்கு சென்று விட்டது. இதனால் மாலத்தீவு அரசு கவலை அடைந்துள்ளது.

    இதையடுத்து இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்க மாலத்தீவை சேர்ந்த சுற்றுலா அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் முக்கிய நகரங்களில் வாகனங்களில் ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாலத்தீவு சுற்றுலா குறித்த முக்கிய அம்சங்கள் மற்றும் பயணங்களை எளிதாக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் இடம் பெறும் வகையில் இந்த ரோடு ஷோ நடத்தப்பட உள்ளது.

    இது தொடர்பாக அவர்கள் மாலத்தீவு தலைநகர் மாலேவில் இந்திய அதிகாரி முனு மஹாவரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இந்தியர்கள் வருகையை அதிகரிக்க எடுக்கப்படும் முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    • மாலத்தீவின் புதிய அதிபர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.
    • இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து வெளியே நடவடிக்கை எடுத்தார்.

    மாலத்தீவு அதிபராக முகமது முய்வு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சீனாவுக்கு ஆதரவாக செயல்படக் கூடியவர் எனப் பார்க்கப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து வெளியேற நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் இந்தியா- மாலத்தீவு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும் என முகமது முய்வு கேட்டிருந்தார்.

    இந்த நிலையில் முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ், முதலில் பிடிவாதமாக இருப்பதை நிறுத்துங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக இப்ராஹிம் முகமது சோலிஹ் கூறுகையில் "மாலத்தீவு அதிபர் முகமது முய்வு இந்தியாவிடம் கடன் சீரமைப்பு கேட்க விரும்புகிறார். ஆனால், நிதி சவால்கள் இநதியாவிடம் வாங்கிய கடன் காரணமாக ஏற்பட்டதில்லை.

    எனினும், நம்முடைய அண்டை நாடுகள் உதவி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நாம் பிடிவாதத்தை கட்டாயம் நிறுத்த வேண்டம். பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் காரணமாக ஏராளமானோர்கள் நமக்கு உதவிய செய்ய முடியும். ஆனால் முய்சு சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை. முய்வு அரசு தற்போதுதான் நிலைமை புரிந்து கொள்ள தொடங்கியுள்ளனர் என நினைக்கிறேன்" என்றார்.

    கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முய்சு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வந்த நிலையில் சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.

    ×