search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 166567"

    • விருத்தாசலம் அருகே ெரயிலில் இருந்து விழுந்து அடையாளம் தெரியாத நபர் பலியானார்.
    • இறந்த கிடந்த நபரின் சட்டைப் பையில் 22-ந்தேதியிட்ட ரெயில் டிக்கெட் இருந்தது.

    கடலூர்:

    விருத்தாசலத்தில் இருந்து சென்னை செல்லும் ெரயில்வே இருப்பு பாதை அருகே ஆண் பிணம் கிடந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் விருத்தாசலம் போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்கள் விருத்தாசலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த கிடந்த நபரின் சட்டைப் பையில் 22-ந்தேதியிட்ட ரெயில் டிக்கெட் இருந்தது. இதில் இவர் பெண்ணாடத்தில் இருந்த தாம்பரம் செல்ல டிக்கெட் எடுத்துள்ளார். ரெயிலில் பயணம் செய்த அந்த நபர் தவறி விழுந்து இறந்து 3 நாட்கள் ஆகி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தொழிலாளர் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) மை விழிச்செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் ஆணையின்படி திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களை விநியோ கிக்கும் நிறுவனங்கள் மற்றும் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

    அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களை விநியோ கிக்கும் நிறுவனங்கள் மற்றும் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் குறைந்த பட்ச கூலிச் சட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன.

    இதில் தொழிலா ளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 10 நிறுவனங்கள் மீது முரண்பாடு காணப்பட்டு மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் அந்த நிறுவ னங்களின் மீது கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஏப்ரல் மாதம் குறைந்த பட்ச ஊதியம் வழங்காத 7 நிறுவனங்கள் மீது மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அந்த நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலா ளர்களுக்கு குறைவு சம்பளம் ரூ.4 லட்சத்து 71 ஆயிரத்து 879 மதுரை தொழிலாளர் இணை ஆணையரால் பெற்று வழங்கப்பட்டது.

    அனைத்து நிறுவ னங்களும் குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் கீழ் அந்தந்த தொழில் நிறுவ னங்களுக்கு நிர்ணயி க்கப்பட்ட குறைந்த பட்ச ஊதியத்தை (ஊதியம்+ அகவிலைப்படி) அளிக்க வேண்டும். குறைவு ஊதியம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 04562 225130 என்ற விருதுநகர் தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண்ணை, அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட சிறப்பாய்வினை விருதுநகர், அருப்புக் கோட்டை, சிவகாசி முதல் மற்றும் 2-ம் சரகம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபா ளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்கள் மேற்கொ ண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகரில், 26-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் மே மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் அனல் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திரம் பொது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நேற்று மட்டும் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியது. இரவு நேரத்தில் வெயிலின் தாக்கம் கார ணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வறண்ட பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் காற்று குறைந்து அனல் காற்று வீசும்.

    எனவே பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்கவும், அந்நேரங்களில் பயணம் செல்ல நேரிட்டால் குடிதண்ணீர் எடுத்துச் செல்வதுடன் கண்ணாடி மற்றும் காலனி அணிந்து குடையுடன் பாதுகாப்பாக செல்லவும். அனல் காற்று வீசும் காலங்களில் தாகம் எடுக்காவிட்டாலும் கூட அவ்வப்போது போதுமான தண்ணீர் அருந்தவும். வீட்டில் தயாரித்து நீர் மோர், லஸ்ஸி, புளித்த சோற்று தண்ணீர், எலுமிச்சைசாறு போன்ற பானங்களை அருந்தவும். அனல் காற்று வீசும் காலங்களில் வெளிர் நிறமுள்ள காற்றோட்டமான பருத்தி ஆடைகள் அணிய வேண்டும். மேலும் குழந்தைகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக்கூடாது. அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பம் அதிகமாகி குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடும்.பொதுமக்கள் குழந்தைக ளுக்கான வெப்ப தொடர்பான நோய்கள் எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை அறியவும், குழந்தைகளின் சிறுநீரை சோதித்து பார்க்கவும், மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீரிழப்பை குறிக்கலாம். உடனே அருகில் அரசு மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்ளவும்.

    வீடுகளில் தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்க்கவும். தொலைபேசி முதியவர்களின் அருகாமையில் உள்ளதா என்பதை உறுதிபடுத்தி கொள்ளவும். முதியவர்கள் வெப்ப அழுத்ததால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால் அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளை கழுத்து மற்றும் கைகளில் வைக்கவும் குளிர்ந்த நீரில் குளிப்பதுடன் போதிய இடைவேளைகளில் நீர் அருந்தவும்.

    தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கிய மேற்கண்ட பாதுகாப்பு குறிப்புகளை கடைபிடித்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருந்திட வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23-ந் தேதி (செவ்வாய்கிழமை) மாலை 4.30 மணியளவில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமை தாங்குகிறார். இதில் எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், எரிவாயு நுகர்வோர்கள், எரிவாயு முகவர்கள் மற்றும் தொழிலாளர் நல ஆய்வாளர், அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.மேற்கண்ட தகவலை மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • மது கடத்தல் மற்றும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படும்.
    • காவல்துறைக்கு 7418846100 மற்றும் 04142- 284353 என்ற காவல் உதவி எண்களில் தகவல்கள் தெரிவிக்கலாம்.

    கடலூர்:

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் மது கடத்தல் மற்றும் கள்ளச்சாராய விற்பனை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மது கடத்தல், மது விற்பனை மற்றும் கள் விற்பனை செய்பவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டு சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடலூர் மாவட்டத்தில் முக்கிய பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போலி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் பற்றி தகவல்களை காவல்துறைக்கு 7418846100 மற்றும் 04142- 284353 என்ற காவல் உதவி எண்களில் தகவல்கள் தெரிவிக்கலாம். இந்த புகார் எண்ணுக்கு வரும் புகார்களின் அடிப்படையில் உடனடியாக சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தகவல் தெரிவிக்கும் நபர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கடந்த ஆண்டு முதல் காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
    • பருப்பு கொப்பரை தேங்காய் ரூ.108.60 - க்கும், பந்து கொப்பரை தேங்காய் ரூ.118 - க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டுமென மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு காரமடை,மேட்டுப்பாளையம்,சிறுமுகை மட்டுமல்லாது பொள்ளாச்சி,நெகமம் உள்ளிட்ட கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொப்பரை தேங்காய் கொண்டு வரப்படுகிறது.

    இங்கு பருப்பு கொப்பரை தேங்காய் ரூ.108.60 - க்கும், பந்து கொப்பரை தேங்காய் ரூ.118 - க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஈரப்பதமானி கொண்டு கொப்பரை ஈரப்பதத்தின் அளவு ஆறுக்கும் கீழ் இருந்தால் மட்டுமே கொப்பரை கொள்முதல் நடைபெறுகிறது. இப்பணிகளில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை தர ஆய்வுப்பணியில் ராமகிருஷ்ணன் ஈடுபட்டு வருகிறார்.

    இதுகுறித்து ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் யுவராஜ் கூறுகையில் விவசாயிகள் தங்களது பட்டா,சிட்டா அடங்கல் உள்ளிட்டவற்றை கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார். தற்போது கொப்பரை தேங்காய் ரூ.108.60 பைசாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும், ஏப்ரல் 1-ந் தேதி முதல் இதுவரை 149 விவசாயிகளிடமிருந்து 250 டன் கொப்பரை தேங்காய் ரூ.2.71 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தங்களுடைய இலக்கான 1000 டன் கொப்பரை தேங்காயினை விரைவில் கொள்முதல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும்,சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள மெகா மார்க்கெட் வளாகத்தில் அரசுக்கு சொந்தமான 500 மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள குளிர்பதன கிடங்கு உள்ளதாகவும், இந்த கிடங்கில் மஞ்சள், மிளகாய், காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை இருப்பு வைத்துக் கொள்ளலாம் எனவும், ஏற்றுமதி செய்யும் வியாபாரிகளுக்கு இந்த மையம் பேருதவியாக இருக்கும். எனவே இந்த மையத்தினை வியாபாரிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். 

    • தனியார் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சென்னை வாயிலாக மதுரை மாவட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் உற்பத்தி செய்து ஈட்டும் தனியார் தொழில் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி திட்டம் வழங்க இணையதளம் வாயிலாக GREEN CHANNEL PARTNER REGISTRATION செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இந்த பயிற்சி வழங்கும் தனியார் தொழில் நிறுவனங்கள் தங்களின் தொழில் நிறுவனத்திற்கு தேவையான திறன் பயிற்சிகளை தாங்களே வழங்கி மேற்படி பயிற்சி பெற்றவர்களுக்கு அந்த நிறுவனத்தில் திறன்மிகு பணியாளர்கள் பணிபுரியமர்த்த வாய்ப்பும் கிடைக்கிறது.

    பயிற்சியின் போது பயிற்சி வழங்கும் நிறுவனத்திற்கு பயிற்சி கட்டணமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்படுவதால் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மேலும், கூடுதல் விபரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மூன்று மாவடி, மதுரை-7 என்ற முகவரியில் இயங்கி வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக அலைபேசி எண் (94990 55748)-க்கு தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகள் மானியம் பெறுவதற்கு பதிவு செய்து பயன்பெறலாம்.
    • மேற்கண்ட தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக 2023-24ம் ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் மூலம் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியை ஊக்குவித்து, உற்பத்தியை பெருக்கிட பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் நடப்பாண்டிற்கு ரூ.515.534 கோடி நிதி ஒதுக்கீடு முன்மொழிவு பெறப்பட்டு, திட்ட இனங்களில் பயனாளி கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

    மா பரப்பு விரிவாக்கம், வீரிய ஒட்டு ரக காய்கறிகள் பரப்பு விரிவாக்கம், கொய்யா பரப்பு விரி வாக்கம், பப்பாளி பரப்பு விரிவாக்கம், பலா பரப்பு விரிவாக்கம், நெல்லி பரப்பு விரிவாக்கம், முந்திரி பரப்பு விரிவாக்கம், மல்லிகை மற்றும் கிழங்கு வகை பூக்கள் (சம்பங்கி) பரப்பு விரிவாக்கம், பழைய தோட்டங்கள் புதுப்பித்தல் (மா மற்றும் முந்திரி), பசுமை குடில் மற்றும் நிழல்வலை கூடம் அமைத்தல், தேனீ வளர்ப்பு, பண்ணைக்குட்டை அமைத்தல், சிப்பம் கட்டும் அறை அமைத்தல், வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.

    விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நில வரைபடம், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், மண் மற்றும் நீர் பரிசோதனை அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வந்து tnhorticulture.tn.gov.in/thnortinet/registration-new.php என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து சொட்டு நீர் பாசனம் அமைக்க பெயரை பதிவு செய்து பயன்பெற லாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • கடந்த 2 மாதங்களில் 110 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது.
    • ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மையில் கோடை உழவு முக்கிய தொழில்நுட்பமாகும்.

    கோவை,

    கோவையில் தற்போது பெய்து வரும் மழையைப் பயன்படுத்தி கோடை உழவு மேற்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கா.முத்துலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 110 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக நிலங்கள் ஈரத்தன்மையுடன் காணப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்ளலாம்.

    கோடை உழவு மேற்கொள்ளப்படும் போது மண்ணில் புதையுண்டு கிடக்கும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் வெளியே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுகின்றன.

    தீமை செய்யும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்களும், முட்டைகளும் அழிக்கப்படுவதால் அடுத்து சாகுபடி செய்யப்படும் பயிர்களில் நோய், பூச்சி தாக்குதல் குறைந்து பயிர்களின் வளர்ச்சியும், மகசூலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மையில் கோடை உழவு முக்கிய தொழில்நுட்பமாகும். அதேபோல, உழவின் போது களைச்செடிகளும், அதன் விதைகளும் அழிக்கப்படுவதால் பயிர் சாகுபடியின் போது களைகள் பிரச்சனையும் குறைகிறது. கோடை உழவின் மூலம் கிடைக்கும் மழைநீரை வீணாக்காமல் நிலத்துக்குள் சேகரிக்க முடியும். இது மண்ணின் தன்மையை அதிகரித்து காற்றோட்டத்தை ஏற்படுத்தி, நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.

    கோடை உழவை சரிவுக்கு குறுக்கே உழவு செய்ய வேண்டும். இதனால், மண் அரிமானம் கட்டுப்படுத்தப்படுகிறது. கோடை உழவு செய்யாத வயல்களில் நீர் வேகமாக வழிந்ேதாடி மண் அரிமானம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, கோடை உழவு செய்வது விவசாயிகளுக்கு பல்வேறு வழிகளில் பயன்களைத் தருகிறது.

    கோடை உழவின் போது ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு உழவு செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு மேலும் பல நன்மைகள் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மின்தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (12ந்தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    எனவே மேற்குறிப்பிட்ட நேரத்தில் மாட்டுத்தாவணி நெல் வணிக வளாகம் பூ மார்க்கெட், பஸ் நிலையம், டி.டி.சி. நகர், லேக் ஏரியா பகுதி, சம்பக்குளம், 120 அடி ரோடு, கொடிக்குளம், சர்வேயர் காலனி, விவேகானந்தா நகர், ஆனந்தராஜ் நகர், மகாத்மா பள்ளி பகுதிகள், டென்னிஸ் கார்னர், வைரம் அபார்ட்மெண்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோ கம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய செயற்பொ றியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    இதேபோல ஆரப்பாளை யம் துணைமின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்ப தால் நாளை (12ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படு கிறது.

    எனவே மேற்கண்ட நேரத்தில் சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணிநகர் மெயின் 1-வது, 2-வது தெரு, ஒர்க்ஷாப் ரோடு, பேச்சி யம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரகாரம், தமிழ்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரகாரம், திலகர் திடல் சந்து ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    மேலும் கோவில் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தொட்டியன்கிணற்று சந்து, கீழபட்டமார் தெரு, மேல பட்டமார் தெரு, வடக்கு ஆவணி மூல வீதி, தெற்கு ஆவணி மூலவீதி, ஜடாமுனி கோவில் தெரு, மீனாட்சி கோவில் தெரு, சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, வெள்ளியம்பலம் தெரு ஆகிய இடங்களிலும்,

    அனுப்பானடி துைண மின் நிலையத்துக்கு உட்பட்ட தாய் நகர், கங்கா நகர், ராஜமான் நகர், நேரு நகர், மல்லிகை நகர், மாருதி நகர், சோனையார் தெரு, சரவணா நகர், ஜே.ஜே.நகர், அம்மன் தெரு, சிந்தாமணி குறுக்கு ரோடு, கம்மாக்கரை ஆகிய இடங்களிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்கு ரூ.30 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்.
    • இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுயஉதவி குழுக்க ளுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்க ளுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    திட்டம்-1ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புற மாயிருப்பின் ரூ.98 ஆயிரத்துக்கும் மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம்-2ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் மிகாமல் இருத்தல் வேண்டும்.

    திட்டம்-1ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-ன்கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.30 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

    கைவினை கலைஞர்க ளுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சுயஉத விக்குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்கப்படு கிறது.

    திட்டம் 2-ன்கீழ் ஆண்களுக்கு 8சதவீதமும், பெண்களுக்கு 6சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 50ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மையின மாணவ- மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம்-2ன் கீழ் மாணவர்களுக்கு 8சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்தி லும் ரூ.30 லட்சம் வரையி லும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

    எனவே மதுரை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய மதங்களை சேர்ந்த சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச்சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, ெசலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்க ளின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்ப ட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து சிறுபான்மையினர் இனத்தைச்சார்ந்த மக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரி வித்துள்ளார்.

    ×