search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 166567"

    • சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
    • பிஞ்சியூர் பகுதியில் சாராயம் விற்ற செல்லத்துரை கைது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் போலீசாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது திருத்துறைப்பூண்டி அருகே அருகே சாராயம் விற்ற நந்திமாங்குடி பகுதியை சேர்ந்த செல்வராஜ்(வயது58), பிஞ்சியூர் பகுதியில் சாராயம் விற்ற செல்லத்துரை(48) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களின் சாகுபடி பெருமளவு குறைந்ததாக வேளாண் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
    • இதற்கான ஏற்பாடுகளை உதவி விதை அலுவலர் சரவணன் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத் துறை மற்றும் கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இணைந்து சிறு தானியங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி குறித்த பயிற்சி கீழராமநதி ஊராட்சி மன்ற அலுவலர் கட்டிட மையத்தில் நடந்தது.

    இதில் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி பேசுகையில், பாரம்பரிய தானியங்களான கேழ்வரகு, வரகு, பனிவரகு, சாமை, தினை ஆகியவற்றின் சிறப்புகள் பற்றி கூறினார். முன்பு தமிழகத்தில் பரவலாக உற்பத்தி செய்யப்பட்டு உணவாக பயன்படுத்தப்பட்ட இந்த தானியங்கள் கடந்த 20 வருடங்களாக பெருமளவு குறைந்து சில பகுதிகளில் மட்டும் சாகுபடி செய்யப்படும் பயிர்களாக மாறிவிட்டது.

    அதன் சிறப்பு பண்புகளை உணர்ந்து அதிக அளவில் பயிரிடவும் விதைப்பண்ணை அமைக்கவும் வலியுறுத்தினார். சிறு தானியங்களை மதிப்பு கூட்டிய உணவாக மாற்றி உணவில் சேர்த்து ஆரோக்கியத்தைப் பேணி காக்கவும் அறிவுறுத்தினார்.

    விதைச்சான்று அலுவலர் சீராளன், அதிக அளவு ராகி விதைப்பண்ணை அமைத்து லாபம் பெறும் வழிமுறைகள் மற்றும் விதைச்சான்று நடைமுறைகள் பற்றி எடுத்துரைத்தார். வேளாண்மை அலுவலர் வீரபாண்டி, அங்கக வேளாண்மை குறித்து விளக்கினார்.

    கமுதி வேளாண்மை உதவி இயக்குநர் சிவராணி, வேளாண் திட்டங்கள் குறித்து விளக்கினார். நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் மூத்த வேளாண்மை அலு வலர் மண்மாதிரி எடுப்ப தன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்து விவசாயி களிடம் இருந்து மண் மாதிரி மற்றும் தண்ணீர் மாதிரிகளை பெற்றுக் கொண்டார்.

    இதற்கான ஏற்பாடுகளை உதவி விதை அலுவலர் சரவணன் செய்திருந்தார். 

    • சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள்.
    • திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் மப்டியில் நின்று கண்காணிப்பு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 4 மாவட்டங்களிலும் சேர்த்து 3000-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தஞ்சை பெரிய கோவில், மணிமண்டபம் பூங்கா, வேளாங்கண்ணி தேவாலயம், மயிலாடுதுறை அமிர்தகடேஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜர் கோவில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோவில்கள், சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர அங்கு சந்தேகப்படும்படி யாராவது நடமாடுகிறார்களா எனவும் கண்காணித்து வருகின்றனர். மேலும் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    குறிப்பாக ஹோட்டல்களில் பாதுகாப்பை உஷா ர்படுத்தி உள்ளனர். மேலும் குடித்துவிட்டு வாகனம் யாராவது ஓட்டுகிறார்களா எனவும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    பஸ், ரெயில் நிலையங்கள், கடைவீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் மப்டியில் நின்று கண்காணித்து வருகின்றனர். நாளை வரை இந்த பாதுகாப்பு தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 9 வருடங்களாக சவுதி அரேபியாவில் டேங்கர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
    • கடந்த 23-ம் தேதி நடந்த சாலை விபத்தில் அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் சித்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 51). இவரது மனைவி கோமதி (40). இவருக்கு லட்சுமி, ஷாலினி, சிவானி என்கிற மூன்று மகள்கள் உள்ளனர்.

    செந்தில்குமார் கடந்த 2013 ஆண்டு முதல் 9 வருடங்களாக சவுதி அரேபியாவில் டேங்கர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி அங்கு சாலை விபத்தில் செந்தில்குமார் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இறந்த செந்தில்குமாரின் மனைவி உடல்நிலை பாதி க்கப்பட்டு இருப்பதாலும், அவருக்கு மூன்று பெண் குழந்தைகளாக இருப்பதாலும் அவரது உடலை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    செந்தில்குமாரின் மனைவி கையெழுத்திட்ட மனுவை உறவினர் நவநீதகி ருஷ்ணன், சேமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு உள்ளிட்டோர் திருவாரூர் மாவட்ட கலெக்ட ரிடம் அளித்தனர்.மனுவை பெற்றுக்கொ ண்ட மாவட்ட கலெக்டர் உரிய நடவ டிக்கைகள் மேற்கொள்வ தாக தெரிவித்தார்.

    • மதுரை வடக்கு மண்டலத்தில் குறைதீர்க்கும் முகாம் 27-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமைதோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 27-ந் தேதி (செவ்வாய்கிழமை) ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி வடக்கு மண்டலம்-2 அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட விளாங்குடி, கரிசல்குளம், ஜவஹர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின் ரோடு, அய்யனார்கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்னசொக்கிகுளம், கே.கே.நகர், அண்ணா நகர், சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • பண்ருட்டி பகுதிகளில் ஓட்டல்கள், லாட்ஜ்களில் போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர்.
    • உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

    கடலூர்:

    பண்ருட்டியில் லாட்ஜ்களில்காவல் ஆய்வாளர் நந்தகுமார் தலைமையிலான காவல் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சிறப்புச்சோதனையில் பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா, ஆயுதங்கள், போதைப் பொருட்கள் வைத்துள்ளனரா என்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து தகவல் அறிந்தால் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவும், உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

    • உசிலம்பட்டியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
    • இத்தகவலை மதுரை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டியில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை (20-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை உசிலம்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலந்து கொள்கிறார்.

    எனவே உசிலம்பட்டி மின் கோட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து தீர்வு காணலாம். இத்தகவலை மதுரை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

    • அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் செல்வராஜை தேடி விவசாய நிலத்திற்கு சென்றனர்.
    • இது குறித்து பகண்டை கூட்ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு அருகே மரூர்மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 54) விவசாயி. இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள இவரது விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் செல்வராஜ் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் செல்வராஜை தேடி விவசாய நிலத்திற்கு சென்றனர். அப்போது மின்சாரம் தாக்கி செல்வராஜ் இறந்து கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜின் குடும்ப த்தினர் இது குறித்து பகண்டை கூட்ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சூர்யா, சோலை ஜெயராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செ ல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறி த்து போ லீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொட்டறை நீர்த்தேக்கத்திலிருந்து விரைவில் சாலைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
    • வயல்களுக்கு செல்லும் வகையில்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனூரில் ரூ.64 லட்சம் மதிப்பீட்டிலான ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டுமான பணிகளையும், கொட்டரை அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய 3 கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பணிகளையும், கொளத்துாரில் பகுதிநேர நியாயவிலைக் கடையினையும், புதுக்குறிச்சியில் முழுநேர நியாயவிலைக்க டையினையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

    குன்னம் சட்டமன்றத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொட்டறை நீர்த்தேக்கத்திலிருந்து வயல்களுக்கு செல்லும் வகையில் சாலை அமைத்துதர வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்களின் கோரிக்கைகள் எதற்கும் கடந்தகால அரசு செவிசாய்க்க வில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற நாள் முதல் ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் கோரிக்கைகளை அறிந்து அவற்றை நிறைவேற்ற உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    அரசுப்பேருந்துகளில் கட்டண உயர்வு என்ற பேச்சுக்க இடமில்லை. டீசல் விலை உயர்வு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சூழல்கள் இருக்கும்போதும், மக்களின் மீது அந்த சுமையை வைக்காமல், அரசே அந்த சுமையினை ஏற்றுக்கொள்ளும், பேருந்து கட்டணத்தை உயர்த்த கூடாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது மக்களின் நலன் காக்கும் அரசு, மக்களுக்கான அரசு எனவே, அரசுப்பேருந்துகளின் கட்டணம் உயர்வு என்ற பொய்யான செய்தியினை யாரும் நம்ப வேண்டாம்.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    • மதுரை மேற்கு மண்டலத்தில் வருகிற 13-ந் தேதி குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது
    • இந்த தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்களின் குறை களை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்க ளுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 13-ந் தேதி (செவ்வாய்கிழமை) திருப்பரங்குன்றம் நகர்ப்புற சுகாதார நிலையம் அருகில் உள்ள மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டலம் 5-ம் எண் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    இதில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாடக்குளம், முத்துராமலிங்கபுரம், முத்துப்பட்டி அழகப்பன் நகர் மெயின் ரோடு, பழங்காநத்தம், கோவலன் நகர், டி.வி.எஸ்.நகர் மெயின் ரோடு, தென்னகரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரம், எம்.கே.புரம், வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு.

    மீனாட்சி நகர் அவனியாபுரம், பாம்பன் சுவாமி நகர், பசுமலை, திருநகர், சவுபாக்யாநகர், ஹார்விப்பட்டி, திருப்பரங்குன்றம், சன்னதி தெரு, பாலாஜி நகர், அவனியாபுரம்- அருப்புக்கோட்டை மெயின் ரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • மதுரை-விழுப்புரம் ெரயில் வழக்கம் போல இயங்கும்.
    • இந்த தகவலை மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை-விழுப்புரம் ெரயில் இன்று (10-ந் தேதி) முதல் வருகிற 15-ந் தேதி வரை திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் அங்கு பராமரிப்பு பணிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனவே மதுரை-விழுப்புரம் ெரயில் வழக்கம் போல் இயங்கும் என்று மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • தினந்தோறும் வீட்டில் இருந்து ஆட்டோவில் ஏறி பள்ளிக்கு சென்று வருவார்.
    • தன்னுடைய தாய் வீட்டு வேலை செய்ய சொல்லியதாக கூறியுள்ளார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா ராஜகிரி ஜின்னா தெருவை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 50).

    இவர் மலேசியாவில் உள்ள ஒரு பள்ளிவாசலில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செளவுதா பேகம் (வயது 40).இவருடைய மகள் ஹாரிஸா (வயது 13).

    இவர் ராஜகிரியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினந்தோறும் வீட்டில் இருந்து ஆட்டோவில் ஏறி பள்ளிக்கு சென்று வருவார்.

    இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவி ஹாரிஸா வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய தாயார் மகள் வீட்டிற்கு வரவில்லை என்று பள்ளிக்கு தேடி வந்துள்ளார்.

    அப்பொழுது ஹாரிஸா காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்களும், பெற்றோர்களும், ஊர் மக்களும் பள்ளி முன்பு கூட்டமாக குவிந்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பாபநாசம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

    சம்பவ இடத்திற்கு பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப் - இன்ஸ்பெக்டர்கள் இளமாறன், குமார், மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து சோதனை செய்த போது அவர் பள்ளி முடிந்து பள்ளியிலிருந்து நடந்து சென்று ராஜகிரி பகுதியில் பஸ்சில் ஏறி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

    நேற்று இரவு பள்ளி மாணவி ஹாரிஸா கும்பகோணத்தில் பஸ்சில் ஏறி சென்னைக்கு சென்று ள்ளார். அங்கு கீழ்பாக்கத்தில் இறங்கியுள்ளார்.

    அங்கு தனியாக வந்து கொண்டிருந்த பள்ளி மாணவி ஹாரிஸாவை பார்த்த சென்னை பெருநகர காவல் ரோந்து பணி போலீசார்கள் அந்த மாணவியை மீட்டு விசாரணை செய்ததில் தன்னுடைய தாயார் வீட்டு வேலை செய்ய சொல்லி கூறியதாக கூறியுள்ளார்.

    அதனால் கோபத்தில் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சென்னைக்கு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார். உடனே குரோம்பே ட்டையில் உள்ளஅவரது சித்தப்பாவை வரவழைத்து அவரிடம் சென்னை கீழ்ப்பாக்கம் போலீசார்மாணவி ஹாரி சாவை ஒப்படைத்தனர்.

    பின்னர் மகள் கிடைத்த வுடன் ராஜகிரியிலிருந்து அவருடைய பெற்றோர்கள், உறவினர்கள் ஹாரிஸாவை அழைத்து வரசென்னைக்கு விரைந்துள்ளனர்.

    ×