search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 167928"

    • சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளுக்காக பேசக்கூடிய இடம்.
    • மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    திருவாரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சசிகலா நேற்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணி வந்தார். அப்போது நாகை மாவட்ட ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சசிகலாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளுக்காக பேசக்கூடிய இடம். அந்த இடத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக எந்த தீர்மானம், எது வந்தாலும் அதை மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் தாராளமாக பேசலாம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளது.

    தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க. யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும் என்ற கேள்வியை அ.தி.மு.க. தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும். சட்டமன்றத்தில் அ.தி.மு.க. சார்பாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை வரவேற்பதாக ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டது கண்டனத்திற்குரியது.

    நான் இவ்வாறு கூறுவதால் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பது என்று கூறமுடியாது. அதே வேளையில் சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மோதல் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் தி.மு.க.விற்கு சாதகமான சூழ்நிலையாக அமையாது. அப்படி ஏற்படும் அளவிற்கு நான் விடமாட்டேன். ஓ. பன்னீர்செல்வம் என்னை வந்து சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    எங்களுடைய கட்சிக்காரர்கள் இடையே வித்தியாசம் ஒன்றும் நாங்கள் பார்ப்பது கிடையாது. கண்டிப்பாக எல்லோரும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம். தற்போது அ.தி.மு.க.வின் தோல்விக்கு பிரிந்து இருப்பது ஒன்று தான் முக்கியமான காரணம் ஆகும்.

    அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கு நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது.
    • ஓபிஎஸ் தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை காலை வரை அவகாசம் வழங்கப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கட்சியின் விதிகள் திருத்தப்பட்டுள்ளதாகவும், அந்த விதிகளை திருத்தி நிபந்தனைகளை நீக்கி பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட அனுமதித்தால், ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட தயாராக உள்ளார் என்றும், ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். நிபந்தனைகளை நீக்கினால் வழக்கை வாபஸ் பெறவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

    தாங்கள் தான் உண்மையான கட்சி என்றால் தேர்தல் ஆணையத்தில், மக்கள் மன்றத்தில் தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும், திமுகவை எதிர்கொள்ள தெளிவான, வலுவான ஒற்றைத் தலைமை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை வீழ்த்தும் நோக்கில் தான் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்து. எனவே, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கூடாது என ஈபிஎஸ் வழக்கறிஞர் வாதிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களும் இன்று மாலையில் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஓபிஎஸ் தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை காலை வரை அவகாசம் வழங்கப்பட்டது.

    • பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
    • ஓபிஎஸ் தரப்பு மக்கள் மன்றத்தில் தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும்

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கு, ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கட்சியின் விதிகள் திருத்தப்பட்டுள்ளதாகவும், அந்த விதிகளை திருத்தி நிபந்தனைகளை நீக்கி பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட அனுமதித்தால், ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட தயாராக உள்ளார் என்றும், ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். நிபந்தனைகளை நீக்கினால் வழக்கை வாபஸ் பெறவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார். அவர் மேலும் கூறியதாவது:-

    ஓபிஎஸ் தனக்கென தனி கட்சியை நடத்தி வருகிறார். அவர் எங்களை நீக்கியுள்ளார், நிர்வாகிகளை நியமித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொதுச்செயலாளர் என உலகத்துக்கே தெரியும். பொதுக்குழு முடிவுகளே இறுதியானது: முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும்.

    தாங்கள் தான் உண்மையான கட்சி என்றால் தேர்தல் ஆணையத்தில், அவர்கள் மக்கள் மன்றத்தில் தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும். ஓபிஎஸ் தனது சொந்த சகோதரரை எந்த நோட்டீசும் கொடுக்காமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.

    திமுகவை எதிர்கொள்ள தெளிவான, வலுவான ஒற்றைத் தலைமை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குறை கூற முடியாது. கட்சியினரின் குரலாக பொதுச்செயலாளர் தேர்தல் நடப்பதால் அதை தடுக்க முடியாது. வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை வீழ்த்தும் நோக்கில் தான் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்து. எனவே, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கூடாது.

    இவ்வாறு ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

    • பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஆலோசிக்காமல் தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக வாதம்

    சென்னை:

    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அவருக்கு ஆதரவாக 37 பேர் விருப்பமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். எடப்பாடியை எதிர்த்து வேறு யாரும் இதுவரை மனுதாக்கல் செய்யவில்லை. எனவே, எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

    ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எதுவுமே முறைப்படி இல்லாமல், பிக்பாக்கெட் அடித்து செல்வது போல பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதாக குற்றம்சாட்டி உள்ளார்.

    தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு சார்பாக மனோஜ்பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு நீதிபதி குமரேஷ்பாபு முன்பு நாளை அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.

    இந்நிலையில், தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் சட்டத்துக்கு புறம்பாக நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

    அதிமுக ஒருங்கிணைப்பாளரான என்னிடம் ஆலோசிக்காமல் தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதிமுக தேர்தல் நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஜூலையில் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கிறது. எனவே, இந்த தேர்தலை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • நம் இயக்கத்தை தி.மு.க.விடம் அடகு வைக்கவும், தனித் தன்மையை சீர்குலைக்கவும் முயன்ற பன்னீர்செல்வத்திடமிருந்து கழகத்தை மீட்டெடுத்து பெருமையைக் காத்தவர் எடப்பாடியார்.
    • அ.தி.மு.க.வின் மீது அசைக்க முடியாத பற்றுகொண்ட 44 ஆயிரம் பேர் வாக்களித்ததுதான் உண்மையான வெற்றி.

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புரட்சித் தலைவி அம்மாவின் மறைவுக்குப் பின், ஓ. பன்னீர்செல்வத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும் முட்டாளின் மூளையில் முன்னூறு பூ மலரும் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளன.

    அவரை உருவாக்கிய மாபெரும் இயக்கத்தை அழிக்க சதித்திட்டமிட்டு, நம் பரம்பரை எதிரி தீயசக்தி தி.மு.க.-வோடு சேர்ந்து செயல்படும் துரோகி ஓ. பன்னீர்செல்வம். நம் இயக்கத்தைக் காக்கப் போராடி வரும் அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை ஓ. பன்னீர்செல்வம் தனது அறிக்கையில், விரக்தியின் உச்சியில் உளறியுள்ளார்.

    நம் இயக்கத்தை தி.மு.க.விடம் அடகு வைக்கவும், தனித் தன்மையை சீர்குலைக்கவும் முயன்ற ஜீரோ பன்னீர்செல்வத்திடமிருந்து, நம் கழகத்தை மீட்டெடுத்து கட்டிக் காப்பாற்றி, கழகத்தின் பெருமையைக் காத்தவர் எடப்பாடியார்.

    சட்டமன்றத்தில், அம்மாவின் அரசை எதிர்த்து வாக்களித்து துரோகம் செய்தபின், பதவி சுகத்திற்காக தேடி வந்த ஓ.பன்னீர்செல்வத்தை அரவணைத்து துணை முதலமைச்சராக மட்டுமல்ல, கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் ஆக்கியவர் எடப்பாடியார். உடனிருந்தே தொல்லை கொடுக்கும் வியாதிபோல், பல்வேறு துரோகச் செயல்களில் ஈடுபட்டதையும் பொறுத்துக் கொண்டவர் எடப்பாடியார்.

    இந்த சுயநலவாதி திருந்துவார் என்று காத்திருந்த நிலையில், தன் மகனை, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்திக்க வைத்து, பாராட்டுப் பத்திரம் படிக்க வைத்து, சரணாகதி அடைந்ததை அறிந்த பின்புதான், புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்ட இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டிக்காக்கும் நடவடிக்கைகளில் எடப்பாடியார் ஈடுபட்டார்.

    தி.மு.க. எதிர்ப்பு என்ற நமது தொப்புள் கொடி கொள்கையை சீர்குலைக்க, இந்த சுயநலவாதி முயன்றதை உணர்ந்ததால்தான் ஒட்டுமொத்த இயக்கமும் கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் பின்னால் அணிவகுத்து நின்றது.

    வெறும் நான்கு பேருடன், வாயை வாடகைக்கு விடும் ஒருசிலரை மட்டுமே வைத்துக்கொண்டு, எடப்பாடியாரின் தனித் தன்மையை சீர்குலைக்க முயன்ற இவர், தன் நிலை அறியாமல், தன்னை மறந்து புத்தி தடுமாறி தாறுமாறாக உளறி வருகிறார்.

    நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத் தேர்தலில், ஆளும் கட்சி ரூ. 360 கோடியைக் கொட்டி, மக்களை பட்டியில் அடைத்து நம்மிடமிருந்து தட்டிப் பறித்த வெற்றியை, இந்த துரோகி கொண்டா டுவது வெட்கக்கேடு. நாம் நடத்திய புனித வேள்வியில், தர்மம் காக்க உண்மைத் தொண்டர்களின் துணையுடன் களமாடிய எடப்பாடி யாருக்கு, அ.தி.மு.க.வின் மீது அசைக்க முடியாத பற்றுகொண்ட 44 ஆயிரம் பேர் வாக்களித்ததுதான் உண்மையான வெற்றி.

    இந்த இடைத் தேர்தலில் கழகத்திற்கு டெபாசிட் கூட கிடைக்கக்கூடாது என்ற தனது எண்ணத்தில் மண்விழுந்த ஆத்திரத்திலும், தன் அரசியல் வாழ்வு இப்படி சூனியமாகிபோய்விட்டதே என்ற ஆற்றாமையிலும் பித்துக்குளிபோல் உளறத் துவங்கி உள்ளார் பன்னீர்செல்வம்.

    இதுவரை இவரைப்பற்றி தவறாக ஒரு வார்த்தைகூட எடப்பாடியார் சொன்னதில்லை. இவர் செய்த பல்வேறு துரோகங்களை பெரிதுபடுத்தாமல் இந்த இயக்கத்தை கட்டிக் காக்கும் தியாக வேள்வியில் ஈடுபட்டு வருகிறார்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் முறையாக ஒரு வேட்பாளரைக்கூட நிறுத்த முடியாத இந்த காகிதப் புலி, அவராலேயே குற்றம் சாட்டப்பட்ட சசிகலா வகையறாவையும் சேர்த்தால்தான் இயக்கம் வலுப்பெறும் என்ற மாய விதையை விதைக்க ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து முயன்று வருகிறார்.

    இவருக்கும், இவரைச் சார்ந்தவர்களுக்கும் தகுதி, திறமை இருந்தால் தனிக் கடை தொடங்கி எடப்பாடி யாருடன் அரசியல் ரீதியாக மோதிப் பார்க்கட்டும். அதைவிடுத்து, தனி மனிதத் தாக்குதலில் ஈடுபட்டால் கைகட்டி வேடிக்கைப் பார்க்க உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் கோழைகள் அல்ல என்று எச்சரிக்கிறேன்.

    புரட்சித் தலைவர் உருவாக்கிய அ.தி.மு.க. என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தை அழிக்க நினைக்கும் உங்களை புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி ஆகியோரது ஆன்மா என்றுமே மன்னிக்காது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
    • பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் உள்ள இல்லத்தில் பழனியம்மாள் உடலுக்கு இறுதி அஞ்சலி

    தேனி:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (வயது95), நேற்று இரவு காலமானார். பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. இது குறித்து சென்னையில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் விமானம் மூலம் திருச்சி வந்து பின்னர் அங்கிருந்து காரில் தனது வீட்டிற்கு வந்து தாயாரின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.

    தாயாரை இழந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

    பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தாயாரின் உடலுக்கு இன்று காலையில் இருந்தே அதிமுக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், அமமுக, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் என பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அமைப்பினர் மற்றும் உறவினர்கள், குடும்பத்தினர் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். திமுக சார்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி, மகாராஜன் எம்எல்ஏ, தேனி மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது.

    அதன்பின்னர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைக்கப்பட்ட ஓபிஎஸ் தாயார் பழனியம்மாளின் உடல், வடகரை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே உள்ள பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அங்கு தனது தாயாரின் சிதைக்கு ஓ.பன்னீர்செல்வம் தீ மூட்டினார்.

    • ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல்நலக் குறைவால் காலமானார்.
    • பழனியம்மாள் நாச்சியார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95). நேற்று முன்தினம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் நேற்று மருத்துவமனைக்குச் சென்று அவரது தாயாரைப் பார்த்து வந்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு விசாரித்தார். தொடர்ந்து ஓபிஎஸ் தாயாருக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் மரணம் அடைந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டறிந்த ஓ.பன்னீர்செல்வம் அவசர அவசரமாக சென்னையிலிருந்து தேனிக்கு புறப்பட்டு பெரியகுளம் விரைகிறார்.

    இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை.
    • ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க.வினர் சர்வதிகாரி போன்று அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விடியா அரசு ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பணத்தை வாரி இரைக்கிறார்கள். வீட்டுக்கு வீடு குக்கர், கொலுசு வழங்கப்படுகிறது. குறுக்கு வழிகளில் தேர்தலை எதிர்நோக்கி வருகிறார்கள்.

    பெண்களுக்கான உரிமை தொகை ஆயிரத்தை தி.மு.க. அரசு இதுவரை வழங்கவில்லை. ஆனால் தேர்தல் வருவதை ஒட்டி அமைச்சர் உதயநிதி இன்னும் ஐந்து மாதத்தில் உரிமை தொகை வழங்கப்படும் என்கிறார் இதை எப்படி நம்புவது.

    நூல் விலை உயர்வால் 40 சதவீத தொழில்கள் முடங்கிப் போய் உள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போலீஸ், ராணுவத்தினர், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. என்னை பார்த்த பெண்மணி ஒருவர் தி.மு.க.வினர் தேர்தலுக்காக பணத்தை வாரி வாரி இரைக்கிறார்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம் எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என்கிறார். மக்கள் மத்தியில் இரட்டை இலைக்கு வரவேற்பு உள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க.வினர் சர்வதிகாரி போன்று அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றனர். 150 இடங்களில் பட்டியில் மாடுகளை அடைப்பது போல் மக்களை அடைத்து வைத்துள்ளார்கள். பல கோடி ரூபாய்களை வாரி இரைத்துள்ளனர். மாவட்ட தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார். பணம் பரிசுப் பொருட்கள் விநியோகப்பதை தடை செய்ய வேண்டும். தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகிறது.

    எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அவர்கள் எத்தனை முறை டெல்லி சென்றார்கள். எத்தனை பேர் சந்தித்து அழுத்தம் கொடுத்தார்கள். நாங்கள் தேர்தலில் மக்களை நம்பி தான் நிற்கிறோம். பணத்தை நம்பி நிற்கவில்லை. மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை.

    கள்ள ஓட்டு போட்டவரை பிடித்துக் கொடுத்ததற்காக எனக்கு கிடைத்த பரிசு சிறை தண்டனை. இரவு 11 மணிக்கு வந்து என்னை கைது செய்தனர். உடைமாற்றி வருகிறேன் என்று சொன்னால் கூட கேட்காமல் என்னை கைது செய்தனர். இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை.

    ஓ.பன்னீர்செல்வம் களத்திலேயே இல்லை. அவர் பின்னால் இனிமேல் யாரும் இருக்கமாட்டார்கள். அ.தி.மு.க.விற்கு ஓ பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் இவர்களை தவிர யார் வந்தாலும் அவர்களை அரவணைத்து ஏற்றுக் கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவதாக கிருஷ்ணமூர்த்தி எச்சரித்தார்.
    • கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டது எனது குரல்தான் என கே.பி.முனுசாமி தெரிவித்தார்

    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு கே.பி.முனுசாமி 1 கோடி ரூபாய் கேட்டதாக கூறியதுடன், பணம் கேட்பது தொடர்பான ஆடியோவை வெளியிட்டார்.

    ஓபிஎஸ் அண்ணனை தரம் தாழ்ந்து பேசுவதால் அவர் பேசிய ஆடியோவை தற்போது வெளியிடுகிறேன். கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவன் என்றும் கிருஷ்ணமூர்த்தி எச்சரித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றி விளக்கம் அளித்துள்ள கே.பி.முனுசாமி, "கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டது எனது குரல்தான்" என்றார். ஆனால் தேர்தல் செலவுக்காக கடனாக பணம் கேட்டதை தவறாக திரித்து கூறுவதாகவும், ஆடியோ, வீடியோ எதை வெளியிட்டாலும் பயப்படப் போவதில்லை என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

    • கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல்
    • ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபடுகின்றனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு அரசியல் அரங்கில் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கட்சி தலைமைக்காக சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். தேர்தல் முடியும்வரை இரு தரப்பினரும் அமைதியாக இருப்பார்கள் என்று தொண்டர்கள் நினைத்தனர். ஆனால் இரு தரப்பினரும் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபடுகின்றனர்.

    சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்வது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் கே.பி.முனுசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தார். சாதாரண தொண்டன் போன்று ஓ.பன்னீர்செல்வத்தால் உண்மையாக உழைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள கே.பி.முனுசாமி மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியதுடன், அவர் தொடர்பான ஒரு ஆடியோவை வெளியிட்டார். அதில், கே.பி.முனுசாமியிடம், ரூ.50 லட்சம் இப்போது ரெடி, 50 லட்சம் பின்னர் தருகிறேன் என கிருஷ்ணமூர்த்தி பேசுகிறார்.

    இதுபற்றி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

    2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு கே.பி.முனுசாமி என்னிடம் 1 கோடி ரூபாய் கேட்டார். பணம் கொடுப்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வேண்டாம் என்று கே.பி.முனுசாமி கூறினார். என்னைப்போல் பலர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.

    ஓபிஎஸ் அண்ணனை தரம் தாழ்ந்து பேசுவதால் அவர் பேசிய ஆடியோவை தற்போது வெளியிடுகிறேன். கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவன்.

    அவர் பணம் சம்பாதிப்பதற்காகவே எடப்பாடி அணியில் இருக்கிறார். கே.பி.முனுசாமிக்கு பதவி கொடுத்ததே ஓ.பன்னீர்செல்வம்தான். நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கு அவர் பணம் கேட்கிறார். தொண்டர்களிடமும் பணம் வசூலிக்கிறார்.

    இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து முறையான அழைப்பு வந்தால் தான் பிரசாரத்துக்கு செல்வோம்.
    • இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைவர்கள் ஒன்றாக இருந்து பிரசாரம் செய்தால் தான் சரியாக இருக்கும்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்வாரா? என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    ஈரோடு தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்கி விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரான செந்தில்முருகனை வாபஸ் பெற வைத்தார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகி விட்டது. இந்த சூழலில் அ.தி.மு.க. வெற்றிக்கு அனைவரும் பிரசாரம் செய்ய தயாராக உள்ளோம்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான செம்மலை கூறுகையில், ஓ.பி.எஸ் பிரசாரத்துக்கு வருவது பற்றி எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்யணும் என்று கூறி இருக்கிறார்.

    இதுவரை குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு இரட்டை இலைக்கு பிரசாரம் செய்ய வருவதா? என்ற வகையில் பேசி இருக்கிறார்.

    எங்களை பொறுத்த வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து முறையான அழைப்பு வந்தால் தான் பிரசாரத்துக்கு செல்வோம்.

    இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைவர்கள் ஒன்றாக இருந்து பிரசாரம் செய்தால் தான் சரியாக இருக்கும். வெற்றி கிடைக்கும். எனவே அதை மனதில் வைத்து தான் நாங்கள் பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்று கூறினோம்.

    எங்களை வேண்டா வெறுப்பாக நடத்தினால் தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்தால் அவர்களுக்கு தான் இழப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி ஈபிஎஸ் இடையீட்டு மனு.
    • மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை களம் இறக்கி உள்ளார். எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு போட்டியிடும் நிலையில், ஓ.பி.எஸ். அணி செந்தில் முருகன் என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ள நிலையில் கடந்த 30-ந் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை ஏற்றுக் கொண்டு சின்னத்தை ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக ஓ.பன்னீர்செல் வம் தரப்பினரும், தேர்தல் ஆணையமும் 3 நாளில் பதில் அளிக்க உத்தரவிட்டது.

    இது தொடர்பான வழக்கு விசாரணை பிப்ர வரி 3-ந் தேதி (நாளை) நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தது. இதன்படி இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை ஏற்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் 24 பக்கத்தில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள அந்த மனுவில் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழலில் தான் சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி மனுதாக்கல் செய்து உள்ளார்.

    பொதுக்குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவில் அனைத்து சரத்துக்கள் மற்றும் விவரங்களும் அடங்கி உள்ள நிலையில், இடையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு என்பது விசாரணைக்கு உகந்தது கிடையாது.

    ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் காலாவதியாகிவிட்டது என்பதை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு மூலமே மேற்கண்ட பதவிகள் ரத்தாகிவிட்டனவா என்பது முடிவாகும், அதுவரை எடப்பாடிக்கு கட்சியில் அதிகாரத்தை உரிமை கோர முடியாது.

    மேலும் தற்போது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நீதிமன்ற நடவடிக்கையை தவறாக பயன்படுத்துவது ஆகும். தற்போதைய கோரிக்கையை ஏற்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அது பொதுக்குழு வழக்கின் தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். எந்தவொரு முந்தைய வழக்கிலும் தேர்தல் ஆணையம் ஒரு பிரதியாக இல்லாத நிலையில் தற்போது எவ்வாறு அதனை ஒரு கட்சியாக சேர்க்க வேண்டும் என கோர முடியும்?

    அவரது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமல் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    இவ்வாறு ஓ.பி.எஸ். பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 7ம் தேதி கடைசி நாளாகும். அதற்கு இன்னும 4 நாட்களே இருக்கும் நிலையில் தான் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை நாளை நடைபெற இருக்கிறது.

    இந்த வழக்கு விசாரணைக்கு முட்டுக் கட்டை போடும் வகையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்திருக்கும் பதில் மனு எடப்பாடி பழனிசாமி அணியினரை கலக்கம் அடைய செய்துள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தொடங்கி இரட்டை இலை சின்னம் விவகாரம் வரையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஐகோர்ட்டில் தொடங்கிய ஓ.பன்னீர் செல்வத்தின் சட்ட போராட்டம் சுப்ரீம் கோர்ட்டு வரை நீண்டுள்ளது. இதையடுத்து இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு நாளை எந்த மாதிரியான தீர்ப்பை வழங்கப்போகிறது என்பது அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியின் மனுவுக்கு தேர்தல் அணையம் இன்று பதில் மனுவை தாக்கல் செய்ய உள்ளது.

    இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வேகம் காட்டி இருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    இரு தரப்பும் முட்டி மோதுவதால் இரட்டை இலை சின்னம் விவகா ரத்தில் இருவரும் தேர்தல் ஆணையத்தை நாடி தீர்வு காணவே உத்தரவிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் ஆபத்தும் ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். ஒரு வேளை அப்படி ஒரு நிலமை ஏற்பட்டால் இரு அணியினரும் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் பொது சின்னத்தில் போட்டியிடவும் தயாராகி வருகிறார்கள்.

    ×