search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 167928"

    • தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை தாக்கல்.
    • அதிமுக ஒருங்கிணைப்பாளராக 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளதாக தகவல்.

    ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுகவில் ஓ.பன்னீர்சல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யாராவது மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக்கூடாது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள அறிக்கையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளதாகவும், இன்றுவரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தாம் தான் என்றும், அதில் மாற்றம் இல்லை என்றும், கூறியுள்ளார்.

    தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டுவதற்கு தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சட்ட விதிகளின் கடந்த பொதுக்குழு நடந்ததா இல்லையா மற்றும் கடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிர்வாகிகள் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக ஜெயக்குமார் பேட்டி
    • 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என்கிறார்.

    சென்னை:

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினடையே பிளவு ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இன்றைய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என ஓபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தலைமை நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை

    ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், நிர்வாகிகள் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும், 75 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டதாகவும் கூறினார்.

    'அதிமுகவுக்கு பல துரோகங்களை செய்தவர் ஓபிஎஸ். துரோகத்தின் அடையாளம் ஒ.பி.எஸ். எந்த அதிமுக தொண்டனும் திமுகவோடு உறவு பாராட்டமாட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார். 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்' என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

    சட்ட ரீதியாக இந்த கூட்டம் நடைபெற்றது என்றும், கூட்டத்தை கூட்ட தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் உள்ளது என்றும் பொன்னையன் கூறினார்.

    • அதிமுகவுக்கு நம்பிக்கைக்குரிய, வலியுமையான தலைமையே தேவை.
    • ஜெயலலிதா மறைவுக்குபின் கண்ணீரில் தவித்தவர்களுக்கு ஈபிஎஸ் மக்கள் மனதில் நம்பிக்கை விதைத்தார்.

    இரட்டைத் தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    ஒற்றைத் தலைமை தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் ஓபிஎஸ் ஒத்துழைக்கவில்லை. ஒற்றை தலைமைக்கு ஆதரவளித்தால், ஓபிஎஸ் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

    குடும்ப நலனில் மட்டுமே ஓபிஎஸ் அக்கறை காட்டினார். அதிமுக தொண்டர்களை கண்டுகொள்ளவில்லை. அதிமுகவுக்கு நம்பிக்கைக்குரிய, வலியுமையான தலைமையே தேவை.

    அதிமுக இரட்டைத் தலைமையால் புரிதல் குழப்பம் ஏற்பட்டு தேர்தலில் கடைசியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர்.

    ஜெயலலிதா மறைவுக்குபின் கண்ணீரில் தவித்தவர்களுக்கு ஈபிஎஸ் மக்கள் மனதில் நம்பிக்கை விதைத்தார்.

    டிடிவி தினகரனோடு ஓபிஎஸ் எதற்காக ரகசியமாக பேச வேண்டும்?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • திரவுபதி முர்மு வேட்பு மனு தாக்கலின்போது ஓ.பி.எஸ், தம்பிதுரை பங்கேற்றனர்
    • எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

    குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலாளரிடம் திரவுபதி முர்மு நேற்று தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த வேட்புமனுதாக்கலின்போது அதிமுக சார்பில் ஓ.பி.எஸ், தம்பிதுரை உள்ளிட்டோரும் பாஜக ஆளும் பிற மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.

    இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்மு சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் சால்வை அணித்து ஆதரவு தெரிவித்தார். இதேபோல் மத்திய இணை மந்திரி எல் முருகனும் திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

    அப்போது, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி., ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ பி.எச்.மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ் மனுதாக்கல் செய்துள்ளார்.
    • ஈபிஎஸ் தரப்பு நடத்தவுள்ள பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்க கூடாது என மனு.

    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து அ.தி.மு.க.வை வழி நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் கடந்த வாரம் ஒற்றை தலைமை கோஷத்தை திடீரென முன் வைத்தனர்.

    எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. தலைமை பதவிக்கு கொண்டு வரும் நோக்கத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் அணி திரண்டனர். சென்னையில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

    பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அவர் அனுமதி அளித்திருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. இதனால் பாதியிலேயே ஓ.பன்னீர் செல்வம் வெளியேறினார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஒருங்கிணைப்பாளர் பதவியை காப்பாற்றிக் கொள்ள களம் இறங்கி உள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த அவர் தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று திடீரென மனு அளித்தார்.

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான வக்கீல் மனோஜ்பாண்டியன் தலைமையிலான வக்கீல்கள் குழுவினர் இந்த மனுவை அளித்துள்ளனர். அதில் இடம் பெற்றுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் வருமாறு:-

    நான் ஒருங்கிணைப்பாளராக இருந்து அ.தி.மு.க.வை வழி நடத்தி வருகிறேன். இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. விதிகளில் திருத்தம் செய்து பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வரும் நோக்கத்தில் இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    எனவே 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும்.

    பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கான அறிவிப்பை கட்சியின் அவைத் தலைவர் வெளியிட்டு உள்ளார். இதனை செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும்.

    மேலும் அ.தி.மு.க.வின் சட்ட விதிகளில் எந்தவித மாற்றத்தையும் செய்ய தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க கூடாது. அ.தி.மு.க. சட்ட விதிகளில் ஒருங்கிணைப்பாளர் அனுமதியின்றி திருத்தங்கள் செய்வது ஏற்கத்தக்கதல்ல என்பதையும் தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் தனது மனுவில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    தனக்கு எதிராக அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்த மறுநாளே ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் அவசரம் அவசரமாக மனுதாக்கல் செய்திருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அ.தி.மு.க. தலைமை பதவியான ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுத்து விடக்கூடாது என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது. தனது வக்கீல்கள் மூலமாக மனுவை அளித்துள்ள ஓ.பன்னீர் செல்வம் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நேரில் சென்றும் முறையிட முடிவு செய்துள்ளார்.

    அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் அமர்வதற்கு காய் நகர்த்தி வரும் நிலையில் அதற்கு தடை போடும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.

    நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி சென்னை ஐகோர்ட்டிலும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் விரைவில் மனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தூக்கியுள்ள இந்த 2 கவசங்களும் கட்சிக்குள் கூடுதல் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

    • அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
    • அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் நீதிபதிகள் விதிக்கவில்லை என துணை ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்.

    சென்னை:

    அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.

    இந்நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம். அதன்படி செயல்படுவோம். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் நீதிபதிகள் விதிக்கவில்லை. இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார்.

    • ஐகோர்ட் நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் நேற்றிரவு செய்யப்பட்ட மேல் முறையீட்டில் விடிய விடிய விசாரணை நடந்தது.
    • நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பைக் கேட்டதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர்.

    சென்னை:

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று இரவு உத்தரவிட்டது.

    இதற்கிடையே, அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்ததை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோரைக் கொண்ட இருநபர் அமர்வில் இரவே விசாரணை நடக்கும் என தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, நீதிபதி துரைசாமி வசிக்கும் அண்ணாநகரில் இந்த மனு மீதான விசாரணை நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கியது. இதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

    விடிய விடிய நடைபெற்ற விசாரணையின் முடிவில், அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றலாம். மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம். ஆனால் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என தெரிவித்தனர்.

    இந்நிலையில், நீதிபதிகள் தீர்ப்பைக் கேட்டதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர். கிரீன்வேஸ் சாலையில் திரண்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தீர்ப்பைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    • சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமி இல்லத்தில் விசாரணை நடைபெற்றது.
    • விசாரணை நடைபெறும் நீதிபதி வீட்டின் முன் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நேற்று உத்தரவிட்டார்.

    இதற்கிடையே, உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் நேற்று இரவு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த

    மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.

    சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமி இல்லத்தில் நள்ளிரவில் விசாரணை நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜகோபால், விஜய் நாராயண் ஆஜராகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அரவிந்த் பாண்டியன், திருமாறன் ராஜலட்சுமி ஆகியோர் ஆஜராகின்றனர்.

    இந்நிலையில், விடிய விடிய நடந்த விசாரணைக்குப் பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடை இல்லை என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும், பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றலாம். மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம். ஆனால் எந்த முடிவும் எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்தனர்.

    விசாரணை நடைபெற்ற நீதிபதி வீட்டின் முன் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
    • அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.

    சென்னை:

    அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்தக் கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. எனவே, பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வந்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சுமார் 3 மணி நேர விசாரணையில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்தலாம் என உத்தரவிட்டார்.

    இதற்கிடையே, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட இரு நபர் அமர்வில் நள்ளிரவில் விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஓபிஎஸ் வீட்டின் அருகே ஒட்டப்பட்டிருந்த ஈபிஎஸ் போஸ்டர்களுக்கு தீ வைத்தனர். மேலும், ஈபிஎஸ் ஆதரவு போஸ்டர்களை எரித்ததால் பரபாப்பு ஏற்பட்டது.

    • பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்ததால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர்.
    • அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார்.

    சென்னை:

    அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்தக் கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. எனவே, பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வந்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை.

    நாட்கள் செல்ல செல்ல எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்ததால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். இந்த பர

    இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சுமார் 3 மணி நேர விசாரணையில் பொதுக்குழு கூட்டம் தொடர்பான அனைத்துத் தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன. அதன்பின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று இரவு தீர்ப்பு வழங்கினார் நீதிபதி. அனைத்து தரப்பு வாதங்களையும் பரிசீலனை செய்த நீதிபதி, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நாளை நடத்தலாம் என உத்தரவிட்டார்.

    இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோரைக் கொண்ட இருநபர் அமர்வில் இரவே விசாரணை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரிக்கும் என நம்புவதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். #JayaDeathProbe #OPS
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும், அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகளுக்கும் தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் இது தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்திய ஆணையம் பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளது.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தருமாறு கேட்டிருந்தது. ஆனால் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகமோ, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பதிவான வீடியோ காட்சிகள் தங்களிடம் இல்லை என்றும், அப்போது பதிவான காட்சிகள் அழிந்து விட்டதாகவும் கூறியது. இதனை ஏற்க மறுத்த ஆணையம், அப்பல்லோ நிர்வாகத்திடம் மீண்டும் உரிய விளக்கம் கேட்டுள்ளது.

    இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகுமாறு அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

    இதனை ஏற்று டாக்டர்கள் ராமச்சந்திரன் அர்ச்சனா, சினேகாஸ்ரீ ஆகியோர் இன்று ஆஜரானார்கள். எக்கோ டெக்னீசியன் நளினி, செவிலியர்கள் ஷில்பா, விஜய லட்சுமி, பிரேமா ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள்.

    இவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது, நடந்தது என்ன? என்பது தொடர்பாக அவர் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை செய்தார்.

    அப்பல்லோ நிர்வாக அதிகாரியான சுப்பையா விஸ்வநாதன் நாளை ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுடன் டாக்டர்கள் பத்மாவதி, வெங்கட்ராமன் ஆகியோரும் ஆஜராகிறார்கள்.

    நாளை மறுநாள் (27-ந் தேதி) டாக்டர்கள் ரவிக்குமார், பாஸ்கரன், செந்தில் குமார், சாய்சதீஷ் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.

    ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடந்த ஓராண்டாக பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ள நிலையில் அப்பல்லோ நிர்வாகத்திடமும், டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடமும் ஆணையம் இறுதிக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.

    இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சசிகலாவிடம் விரைவில் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் விசாரணை ஆணையத்தின் முதல் கட்ட அறிக்கை வெளியாகும் என்று தெரிகிறது. 

    குறுக்கு விசாரணை முடிந்ததும் சசிகலா தரப்பு வழக்கறிஞர்  ராஜாசெந்தூர் பாண்டியன் கூறியதாவது:-

    சம்மன் அனுப்பப்பட்ட 11 பேரில் 9 பேர் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகினர். ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்க்கும்போது அவர் சுயநினைவுடன் இருந்தார் என  அப்பலோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆணையம் விசாரிக்கும் என நம்புகிறேன் .

    மருத்துவர் சிவகுமார் கொடுத்த ஜெயலலிதாவின் ஆடியோ அப்போலோ மருத்துவமனையில்தான் எடுக்கப்பட்டது. ஜெயலலிதா ஆடியோ விவகாரத்தை மருத்துவர் அர்ச்சனா உறுதி செய்துள்ளார். என கூறினார்.
    மக்களவை தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவில் விஜயகாந்த் உறுதியாக இருக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோவையில் தெரிவித்துள்ளார். #OPS #ADMK #VijayaKanth #MKStalin
    கோவை:

    தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுகவில் மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்து விட்டு கட்சிப்பணிக்கு செல்ல வேண்டும் என்பது உங்களது யூகம். அதற்கு பதில் கூற முடியாது.

    மக்களவை தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவில் இருந்து விஜயகாந்த் பின்வாங்காமல் உறுதியாக இருக்க வேண்டும். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்தால், முதல்வருடன் கலந்து ஆலோசித்து செல்வோம் 

    என ஓ.பன்னீர் செல்வம் கூறினார். 
    ×