search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 168147"

    • குறுந்தகவல் செயலிகளில் முதன்மையானதாக விளங்கும் வாட்ஸ்அப் பாதுகாப்பு குறித்து மார்க் ஜூக்கர்பர்க் கருத்து தெரிவித்துள்ளார்.
    • முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் கூகுள் நிறுவன அதிகாரி ஒருத்தர் ஐமெசேஜ் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

    ஐபோன் மற்றும் மேம்பட்ட ஐமெசேஜ் ஆப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான கருத்துக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதோடு தான் சொந்தமாக நடத்தி வரும் வாட்ஸ்அப் செயலி பயனர்களுக்கு அதிக பாதுகாப்பான மற்றும் நம்பத்தகுந்த சூழலை வழங்கி வருவதாக தெரிவித்து இருக்கிறார்.

    இத்துடன் ஐமெசேஜ் செயலியுடன் வாட்ஸ்அப் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கிறது என்பதையும் தெரிவித்து இருக்கிறார். வாட்ஸ்அப் வழங்கி வரும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் சேவையை விளம்பரப்படுத்தும் வகையிலும், புளூ மற்றும் கிரீன் நிற சாட் பபுள்கள் மூலம் ஆப்பிள் ஐமெசேஜை சீண்டும் வகையிலான வரைபடத்தை மார்க் ஜூக்கர்பர்க் பகிர்ந்து இருக்கிறார். ஐமெசேஜ் உடன் ஒப்பிடும் போது தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வழங்குவதில் வாட்ஸ்அப் சிறப்பானது என அவர் தெரிவித்து இருக்கிறார்.

    வாட்ஸ்அப்-இன் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்குகிறது. மேலும் க்ரூப் சாட்களிலும் இந்த அம்சம் தொடர்ந்து செயல்படும் என அவர் மேலும் தெரிவித்தார். ஒரு பட்டனை க்ளிக் செய்ததும், புது சாட்களை மறைந்து போகச் செய்யும் வசதி வாட்ஸ்அப்-இல் வழங்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார். இன்னமும் ஐமெசேஜ் செயலியில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்படவில்லை.

    மார்க் ஜூக்கர்பர்க்-ஐ தொடர்ந்து வாட்ஸ்அப் தலைவர் கேத்கார்ட் தனது ட்விட்டரில், வாட்ஸ்அப் மற்றும் ஐமெசேஜ் செயலிகளை ஒப்பிட்டுள்ளார். இதில் ஐமெசேஜ் செயலியில் மறைந்து போகச் செய்யும் அம்சம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து இருக்கிறார். மெட்டா மட்டும் இன்றி சமீபத்தில் கூகுள் நிறுவனமும் ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் கருத்துக்களை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்படும் புது அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
    • புது அம்சம் செயலியின் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே அனுப்பிய குறுந்தகவல்களை எடிட் செய்யும் வசதி வழங்கப்பட இருக்கிறது. இதற்கான சோதனை வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் நடைபெற்று வருகிறது. அதன்படி எடிட் செய்யப்படும் மெசேஜ்களில் எடிட் செய்யப்பட்டதை குறிக்கும் லேபல் இடம்பெற்று இருக்கிறது. மேலும் குறுந்தகவலை அனுப்பிய 15 நிமிடங்கள் வரை எடிட் செய்ய முடியும்.

    "எடிட் மெசேஜ்" அம்சம் கொண்டு அனுப்பிய குறுந்தகவலை குறிப்பிட்ட காலக்கட்டம் வரை எடிட் செய்ய முடியும். இந்த அம்சம் "டெலிட் மெசேஜ்" அம்சத்திற்கு மாற்றாக உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும் இந்த அம்சத்தை பயன்படுத்தி எடிட் செய்யப்படும் குறுந்தகவலில் எடிட் செய்யப்பட்டதை குறிக்கும் லேபல் இடம்பெற்று இருக்கிறது.

    இந்த அம்சம் தற்போது உருவாக்கும் பணிகளில் இருப்பதால் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் எப்போது வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. முன்னதாக வாட்ஸ்அப் செயலியின் பிஸ்னஸ் வெர்ஷனில் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் சந்தா முறையை வழங்க துவங்கியது. இந்த அம்சம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது.

    Photo Courtesy: WABetaInfo

    • பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப்-இல் குரூப் பயனர்கள் எண்ணிக்கை மாற்றப்படுகிறது.
    • முன்னதாக வாட்ஸ்அப் செயலியின் தனியுரிமை அம்சங்கள் புதிதாக வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் பயனர்களுக்கு தொடர்ச்சியாக புது அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் வாட்ஸ்அப் உருவாக்கி வரும் புது அம்சம், குரூப் பயனர்கள் எண்ணிக்கையை 1024 ஆக அதிகரித்து இருக்கிறது.

    முன்னதாக ஜூன் மாத வாக்கில் வாட்ஸ்அப் குரூப் பயனர்கள் எண்ணிக்கை 512 ஆக அதிகரிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் குரூப்களில் அதிகபட்சமாக 1024 பேரை இணைத்துக் கொள்ளலாம்.

    வாட்ஸ்அப் குரூப்களில் 1024 பேரை சேர்த்துக் கொள்ளும் வசதி வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷன்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. உங்களது அக்கவுண்டிலும் புது வசதி வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள புதிதாக வாட்ஸ்அப் குரூப் உருவாக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள வாட்ஸ்அப் குரூப்-இல் புதிதாக நபர்களை சேர்க்க முயற்சிக்கலாம்.

    இவ்வாறு செய்யும் போது வாட்ஸ்அப் குரூப்-இல் எத்தனை பேரை சேர்த்துக் கொள்ள முடியும் என பார்க்கலாம். இந்த அம்சத்துடன் Pending Participants பெயரில் மற்றொரு வசதியை வழங்கி இருக்கிறது. இதில் குரூப் அட்மின்கள் எத்தனை பேர் குரூப்-இல் உள்ளனர் என்பதை பார்க்க வழி செய்கிறது. இவர்களை அட்மின்கள் எப்போது வேண்டுமானாலும் அங்கீகரிக்கலாம். இந்த அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    Photo Courtesy: WABetaInfo

    • வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புது அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
    • இத்துடன் சில அம்சங்களுக்கான சோதனை துவங்கி நடைபெற்று வருகிறது.

    வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் கால் லின்க்ஸ் பெயரில் புது அம்சம் வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இந்த புது அம்சம் கொண்டு பயனர்கள் புதிதாக அழைப்பை உருவாக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள அழைப்பில் இணையவும் முடியும். கால் லின்க்ஸ் ஆப்ஷன் வாட்ஸ்அப் செயலியின் கால்ஸ் டேபில் சேர்க்கப்படுகிறது. இதை கொண்டு ஆடியோ அல்லது வீடியோ அழைப்பிற்கான லின்க்-ஐ உருவாக்க முடியும்.

    இந்த அம்சம் வரும் வாரங்களில் அனைவருக்கும் வழங்கப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்து இருக்கிறது. எனினும், இதனை பயன்படுத்த பயனர்கள் வாட்ஸ்அப் செயலியின் புது வெர்ஷனை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். இது மட்டுமின்றி வாட்ஸ்அப் செயலியின் க்ரூப் வீடியோ கால் அம்சத்தில் அதிகபட்சம் 32 பேருடன் பேசும் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான சோதனையும் துவங்கி இருக்கிறது.

    கால் லின்க்ஸ்-ஐ உருவாக்கி அதனை பல்வேறு தளங்களில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி எளிதில் வாட்ஸ்அப் கால் மேற்கொள்ளலாம். கால் லின்க்ஸ்-ஐ ஒரு முறை க்ளிக் செய்தால் நேரடியாக அழைப்பில் இணைய முடியும். இந்த அம்சம் கூகுள் மீட் அல்லது மைக்ரோசாப்ட் டீம்ஸ் தளங்களில் செயல்படுவதை போன்றே இயங்குகிறது. இந்த அம்சம் எந்தெந்த தளங்களில் இயங்கும் என்பது குறித்து வாட்ஸ்அப் எந்த தகவலையும் வழங்கவில்லை.

    வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் கால் அம்சத்தில் ஏற்கனவே 32 பேருடன் பேசும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. வாய்ஸ் கால் வரிசையில் தற்போது க்ரூப் வீடியோ கால் சேவையிலும் 32 பேருடன் பேசும் வசதி வழங்கப்பட இருக்கிறது. தற்போது இந்த அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது.

    • ஐஆர்சிடிசி நிறுவனத்தின் உணவு டெலிவரி சேவையான சூப் உணவு ஆர்டர் செய்ய வாட்ஸ்அப்-இல் புது வசதியை வழங்குகிறது.
    • இந்த வசதியை கொண்டு பயணத்தின் போது வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் உணவு ஆர்டர் செய்து சாப்பிடலாம்.

    இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உணவு டெலிவரி சேவையான சூப் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஹாப்டிக் உடன் இணைந்து ரெயில்களில் வாட்ஸ்அப் மூலம் ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம். இதற்கு எந்த விதமான கூடுதல் செயலியையும் டவுன்லோட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    பயணத்தின் போது பயணிகள் சாட்பாட் மூலம் உணவு ஆர்டர் செய்தால், ரெயிலில் அமர்ந்து இருக்கும் இருக்கைக்கே ஆர்டர் செய்த உணவு வந்து சேரும். பயணிகள் தங்களின் பிஎன்ஆர் நம்பரை பதிவிட்டு, உணவை முன்பதிவு செய்யலாம். அதன் பின் ஆர்டர் செய்த உணவின் நிலை குறித்து ரியல்-டைம் டிராக்கிங் செய்யலாம். இது குறித்து ஹாப்டிக் சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.


    ஐஆர்சிடிசி-இன் சூப் ஹாப்டிக் உடன் இணைந்து ரெயிலில் வாட்ஸ்அப் மூலம் உணவு டெலிவரி சேவையை அறிமுகம் செய்கிறது. இந்த பிளாட்பார்ம் மூலம், ரெயில் பயணத்தின் போது பயணிகள் உணவு ஆர்டர் செய்து சாப்பிடலாம். இதற்கு வாட்ஸ்அப் சாட்பாட் "சிவா" உடன் இணைய +91 7042062070 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். பின் தங்களின் பிஎன்ஆர் எண்ணை பதிவிட்டு உணவு ஆர்டர் செய்யலாம்.

    சாட்பாட் உங்களின் பயண விவரங்களை உறுதிப்படுத்திக் கொண்டு உணவு எந்த ரெயில் நிலையத்தில் டெலிவரி செய்யப்பட வேண்டும் என கேட்கும். இதன் பின் ஆர்டர் செய்த உணவுக்கு ஆன்லைன் மூலமாகவோ அல்லது ரொக்கம் மூலமாகவோ பணம் செலுத்த முடியும். 

    • வாட்ஸ்அப் செயலியில் இருந்தபடி ஷாப்பிங் செய்ய ஏதுவாக ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப் சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
    • இந்த சேவையின் மூலம் பயனர்கள் ஜியோமார்ட் பொருட்கள் அனைத்தையும் வாட்ஸ்அப்பில் இருந்தபடி வாங்கிக் கொள்ள முடியும்.

    ஜியோ பிளாட்பார்ம்ஸ் மற்றும் மெட்டா இணைந்து எண்ட்-டு-எண்ட் வாட்ஸ்அப் ஷாப்பிங் அனுபவத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் மூலம் ஜியோமார்ட் பொருட்கள் அனைத்தையும் சாட் மூலம் வாங்கிக் கொள்ளலாம். முதல் முறையாக ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப் மூலம் பயனர்கள் ஜியோமார்ட்-இல் கிடைக்கும் மளிகை பொருட்கள் மற்றும் அனைத்து விதமான பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம்.

    பொருட்கள் வாங்குவதோடு, பணம் செலுத்துவது என அனைத்தையும் வாட்ஸ்அப் சாட் மூலமாகவே செய்து கொள்ளலாம். சமீபத்தில் மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் பொருட்களை நேரடியாக சாட் விண்டோவில் இருந்தபடி வாங்கிக் கொள்ளும் வசதியை வழங்கி இருந்தது. மெட்டா மற்றும் ஜியோ பிளாட்பார்ம்ஸ் இடையேயான கூட்டணியின் அங்கமாக இந்த சேவை வழங்கப்பட்டு இருக்கிறது.


    ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப் மூலம் பல லட்சம் வியாபாரங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதி கிடைக்கும். சேவை அறிமுகம் செய்து இருப்பதோடு ஷாப்பிங் அனுபவத்தை எளிமையாக்கி, இதுவரை இல்லாத வகையில் சவுகரியமானதாக மாற்ற ஜியோமார்ட் முடிவு செய்துள்ளது.

    ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப்-பில் ஷாப்பிங் செய்வது எப்படி?

    வாட்ஸ்அப்-இல் இருந்தபடி ஜியோமார்ட்டில் ஷாப்பிங் செய்ய +917977079770 என்ற எண்ணிற்கு "Hi" என்று குறுந்தகவல் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்த பின் ஜியோமார்ட் பொருட்களை வாட்ஸ்அப்-இல் வாங்க துவங்கலாம். 

    • வாட்ஸ்அப் செயலியில் பயனர்களுக்கு அசத்தலான புது அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.
    • இந்த அம்சம் கொண்டு ஈசியாக ஸ்டேட்டஸ் பார்க்க முடியும்.

    மெட்டா நிறுவனத்தின் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ நேரடியாக வாட்ஸ்அப் சாட் லிஸ்ட்டில் இருந்தே பார்க்கும் வசதியை வழங்கி வருகிறது. இந்த அம்சம் தற்போது ஐஓஎஸ் பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் ஐஓஎஸ் பீட்டா 22.18.0.70 வெர்ஷனில் ஸ்டேட்டஸ் அப்டேட்களை சாட் லிஸ்ட்டில் இருந்தே நேரடியாக பார்க்க வழி செய்கிறது. இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை பயன்படுத்தி ஸ்டோரிஸ் போன்றே புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவைகளை 24 மணி நேரத்தில் மறையும் வகையில் செட் செய்து கொள்ளலாம்.


    Photo Courtesy: WABetainfo

    இந்த அப்டேட் சாட் லிஸ்ட் ஓரத்தில் ஸ்டேட்டஸ் வைக்கப்பட்டு இருப்பதை காண்பிக்கும். இந்த அம்சம் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தி வரும் சில பயனர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற பீட்டா பயனர்களுக்கு விரைவில் வழங்கப்பட்டு அதன் பின் தான் அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்பட உள்ளது.

    இது தவிர சாட்டில் இருந்து அழிக்கப்பட்ட குறுந்தகவலை மீண்டும் பெற செய்யும் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மிக முக்கிய உரையாடலின் போது தவறுதலாக குறுந்தகவலை அழித்து விட்டால் அதனை இந்த அம்சம் கொண்டு மீண்டும் பெற முடியும்.

    • வாட்ஸ்அப் செயலியில் பயனர் பாதுகாப்பை அதிகப்படுத்தும் புது அம்சங்கள் அடங்கிய அப்டேட் வெளியிடப்படுகிறது.
    • இந்த அம்சங்கள் ஏற்கனவே செயலியின் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    வாட்ஸ்அப் க்ரூப்களில் போன் நம்பர் ஷேர் செய்வது, லாக்-இன் அப்ரூவல் என ஏராளமான அம்சங்கள் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வந்தது. இத்துடன் வாட்ஸ்அப்-இல் அனுப்பிய குறுந்தகவல்களை இரண்டு நாட்கள் கழித்தும் அழித்துக் கொள்ளும் வசதி சமீபத்தில் வழங்கப்பட்டது.

    இந்த வரிசையில், வாட்ஸ்அப் மேலும் அதிக பாதுகாப்பு அம்சங்களை தனது செயலியில் வழங்க இருக்கிறது. இவற்றை கொண்டு ஆன்லைன் ஸ்டேட்டஸ்-ஐ மறைத்து வைப்பது, வாட்ஸ்அப் க்ரூப்களை விட்டு சத்தமின்றி வெளியேறுவது, உரையாடல்களில் இருந்து ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்படுவதை தடுப்பது என ஏராள வசதிகளை பெற முடியும்.


    "வாட்ஸ்அப்-க்கு புதிய பிரைவசி அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. யாருக்கும் தெரியப்படுத்தாமல் க்ரூப் சாட்களில் இருந்து வெளியேறலாம், நீங்கள் ஆன்லைனில் இருப்பதை யார் பார்க்க வேண்டும் என்பதை கண்ட்ரோல் செய்வது, வியூ ஒன்ஸ் மெசேஜ்கள் மூலம் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்படுவதை தவிர்க்கலாம். உங்கள் குறுந்தகவல்களை பாதுகாத்து, தனியுரிமையை வழங்க தொடர்ந்து புது வழிகளை உருவாக்குவோம்," என மார்க் ஜூக்கர்பர்க் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்து இருக்கிறார்.

    • உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தி வரும் குறுந்தகவல் செயலி வாட்ஸ்அப்.
    • இதில் பயனர்களுக்கு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    உலகின் முன்னணி குறுந்தகவல் செயலி வாட்ஸ்அப். சந்தையில் டெலிகிராம், சிக்னல் மற்றும் சில குறுந்தகவல் செயலிகளுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் தொடர்ந்து புதுப்புது அம்சங்களை தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது.

    அந்த வகையில் வாட்ஸ்அப் இன்று வெளியிட்டு இருக்கும் புதிய அப்டேட் பயனர்கள் அனுப்பிய குறுந்தகவல்களை இரண்டு நாட்கள் கழித்தும் அழிக்க வழி வகுக்கிறது. இந்த புது அம்சமாகும் கடந்த ஜுலை மாத வாக்கில் சோதனை செய்யப்பட்டது. இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.22.15.8-இல் வழங்கப்பட்டு இருந்தது.

    பீட்டா டெஸ்டிங் நிறைவு பெற்றதை அடுத்து இந்த அம்சம் தற்போது செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் பலருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்க அதிகபட்சமாக 1 மணி நேரம் 8 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகளாக இருந்தது.

    பின் இந்த அளவு தற்போது இரண்டு நாட்கள் 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அனுப்பிய குறுந்தகவல்களை அதிக பொறுமையாக அழித்துக் கொள்ள முடியும்.

    • வாடகை டாக்சி சேவையை வழங்கி வரும் உபெர், சமீபத்தில் தனது கார்களை பயணிக்க புது வசதியை அறிமுகம் செய்தது.
    • இதன் மூலம் உபெர் செயலி இல்லாமலேயே டாக்சியை புக் செய்யலாம்.

    முன்னணி டாக்சி சேவை வழங்கும் நிறுவனம் உபெர் சமீபத்தில் உபெர் ரைடுகளை வாட்ஸ்அப் செயலியில் இருந்த படி புக் செய்வதற்கான வசதியை அறிமுகம் செய்தது. இந்த அம்சம் கொண்டு உபெர் செயலி இன்ஸ்டால் செய்யாதவர்களும் உபெர் ரைடு செய்ய வாட்ஸ்அப் செயலியில் இருந்தபடியே புக் செய்து பயணிக்கலாம்.

    சேவையை அறிவிக்கும் போது உபெர் நிறுவனம் பயனர்கள் ரைடுகளை புக் செய்ய ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி மொழியையும் பயன்படுத்தலாம் என கூறி இருந்தது. மேலும் முதற்கட்டமாக இந்த வசதி டெல்லி-என்சிஆர் பகுதியில் மட்டும் அறிமுகப்படுத்தப்படும் என உபெர் அறிவித்தது. அறிமுகம் செய்வதற்கு முன் இந்த சேவை கடந்த ஆண்டு லக்னோவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.


    வாட்ஸ்அப் மூலம் உபெர் ரைடுகளை புக் செய்வது எப்படி?

    வாட்ஸ்அப் செயலியில் உபெர் ரைடு புக் செய்ய விரும்பும் பயனர்கள் வாட்ஸ்அப் டு ரைடு (WA2R) எனும் சாட்பாட்-ஐ பயன்படுத்த வேண்டும். இது வாட்ஸ்அப் செயலியின் பிஸ்னஸ் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு செய்ய சேவையின் பிஸ்னஸ் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பினாலே போதுமானது. இதை அடுத்து பிக்கப் மற்றும் டிராப் லொகேஷன்களை வழங்க வேண்டும்.

    வழிமுறை 1: முதலில் +917292000002 என்ற எண்ணிற்கு உங்களின் வாட்ஸ்அப் எண்ணில் இருந்தபடி குறுந்தகவல் அனுப்ப வேண்டும். இல்லை எனில், https://wa.me/91792000002?text=Hi%20Uber எனும் வலைதள முகவரிக்கு சென்றும் உபெர் பிஸ்னஸ் அக்கவுண்டிற்கு குறுந்தகவல் அனுப்பலாம்.

    வழிமுறை 2: உபெர் செயலியில் கேட்கப்படுவதை போன்றே, சாட்பாட் உங்களின் பிக்கப் மற்றும் டிராப் லொகேஷன் விவரங்களை வழங்க கேட்கும்.

    வழிமுறை 3: இனி தோராயமான கட்டண விவரம் மற்றும் ஓட்டுனர் வர எவ்வளவு நேரம் ஆகும் என்ற விவரங்கள் திரையில் தோன்றும்.

    • விதிமீறல் தொடர்பாக அளிக்கப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
    • சமூக வலைதள நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிப்பதற்கான தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    புதுடெல்லி:

    50 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்களை கொண்ட சமூக வலைதள நிறுவனங்கள், சமூக வலைதள புகார்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த தகவல் தொழில்நுட்ப விதிகளில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி புகார்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வாட்ஸ்அப் நிர்வாகம் மாதந்தோறும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் 22 லட்சத்து 10 ஆயிரம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    விதி மீறல்கள் தொடர்பாக நிறுவனத்துக்கு வந்த புகார்களின் அடிப்படையிலும், விதிமீறல்களை கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கடந்த மே மாதத்தில் 19 லட்சம் கணக்குகளையும், ஏப்ரல் மாதம் 16 லட்சம் கணக்குகளையும், மார்ச் மாதம் 18.05 லட்சம் கணக்குகளையும் வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கி இருந்தது. ஜூன் மாதத்தில் அது 22 லட்சமாக அதிகரித்துள்ளது.

    விதிமீறல் தொடர்பாக அளிக்கப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் சமூக வலைதள நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிப்ப தற்கான தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    • குறிப்பாக வாட்ஸ்அப்பில் மாவட்ட கலெக்டர் பெயரில், மாவட்ட கலெக்டர் புகைப்படத்துடன் அமேசான் செயலிகள் மூலம் ஆன்லைன் வாயிலாக கிஃட் கார்டு உள்ளிட்டவற்றிற்கு தங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்திட கேட்டு செய்திகள் அனுப்பப்படுகின்றன.
    • மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 9442626792 என்ற வாட்ஸ் அப் எண்களில் புகார் அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மயிலாடுதுறை:

    வாட்ஸ்அப் உள்ளிட்ட இணையதளத்தில் போலியான பெயரில் கணக்குகளை வைத்திருக்கும், பொதுமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களிடம் பணமோசடிக்கான முயற்சிகள் தற்பொழுது நடத்தப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.

    குறிப்பாக வாட்ஸ்அப்பில் மாவட்ட கலெக்டர் பெயரில், மாவட்ட கலெக்டர் புகைப்படத்துடன் அமேசான் செயலிகள் மூலம் ஆன்லைன் வாயிலாக கிஃட் கார்டு உள்ளிட்டவற்றிற்கு தங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்திட கேட்டு செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதுபோன்ற பணமோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்படுள்ளது.

    எனவே பொதுமக்கள், அரசுத்துறை அலுவலர்கள் கவனமாக இருப்பதுடன் போலியாக உருவாக்கப்படும் வெவ்வேறு செல்போன் எண்கள் வயிலாக பணம் கேட்பவர்களை முற்றிலும் புறக்கணித்து உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 9442626792 என்ற வாட்ஸ் அப் எண்களில் புகார் அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ×