search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல்"

    • ஜூலை 17-ந்தேதி முகமது டெய்ஃப் மறைந்து இருந்த இடத்தை குறிவைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது.
    • வான் தாக்குதலில் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், முகமது டெய்ஃப் கொல்லப்பட்டரா? என்பது உறுதி செய்யப்படவில்லை.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீரென்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். அவர்களில் சுமார் 100 பேர் விடுவிக்கப்பட்டனர்.

    அக்டோபர் 7-ந்தேதி தாக்குதல் நடத்திய நிலையில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுப்பதாக அறிவித்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தற்போது வரை நடைபெற்று வருகிறது.

    காசாவின் தெற்கு நகரான ரஃபாவைத் தவிர மற்ற நகரங்களை அடையாளம் தெரியாத அளவிற்கு இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் மூலம் சின்னாபின்னமாக்கியுள்ளது.

    இதில் ஒரு நகரம்தான் கான் யூனிஸ். கான் யூனிஸ் நகரில் எங்களுடைய நோக்கம் முடிவடைந்தது என இஸ்ரேல் தெரிவித்து, இந்த நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாலஸ்தீனர்கள் குடியேறலாம் என பாதுகாப்பு பகுதியாக அறிவித்தது.

    இதற்கிடையே பாலஸ்தீன மக்களுடன் ஹமாஸ் அமைப்பினரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.

    இந்த மாதம் (ஜூலை) 13-ந்தேதி கான் யூனிஸ் நகரம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. முகமுது டெய்ஃப் மறைந்து இருந்த இடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அவர் மறைந்து இருந்த இடத்திற்கு அருகில் இருந்த கூடாரங்கள் வசித்து வந்த 90-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலில் முகமது டெய்ஃப் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் இஸ்ரேல் ராணுவமும் உறுதிப்படுத்தவில்லை, ஹமாஸ் அமைப்பும் உறுதிப்படுத்தவில்லை. இவர்தான் அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த மூளையாக செயல்பட்டடார்.

    இந்த நிலையில்தான் புலனாய்வு மதிப்பீட்டின்படி வான் தாக்குதலில் முகமது டெய்ஃப் கொல்லப்பட்டார் என்பதை உறுதிப்படுத்த முடியும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    நேற்று முன்தினம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இஸ்ரேல்தான் வான்தாக்குதல் மூலம் கொலை செய்ததாக ஈரான் குற்றம்சாட்டி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளது.

    தலைவர் கொல்லப்பட்ட இரண்டு நாளில் முக்கிய தலைவர் தாக்குதலில் உயிரிழந்தார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது ஹமாஸ் அமைப்பினருக்கு போரில் அடுத்தடுத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    • இஸ்மாயில் ஹனியே சிந்திய ரத்தத்துக்கு பழிவாங்குவது எங்கள் கடமை.
    • கடுமையான தண்டனையை பெறுவதற்கு இஸ்ரேல் களம் அமைத்துள்ளது என்றார்.

    தெக்ரான்:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிப்போம் என்று இஸ்ரேல் சூளுரைத்து உள்ளது.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள வீட்டில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.

    அவரை இஸ்ரேல் கொலை செய்துள்ளது என்று ஈரான், ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளன. ஈரான் நாட்டுக்குள்ளே ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டது. அந்நாட்டு அரசை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. இதற்கு இஸ்ரேலை பழி வாங்குவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ஈரானின் உச்ச தலைவர் அயோதுல்லா அலி காமேனி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தும் படி ராணுவ படைகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட சிறிது நேரத்தில் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் அயோதுல்லா அலி காமேனி தலைமையில் நடந்தது. இதில் இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.

    போர் விரிவடையும் பட்சத்தில், இஸ்ரேல் தாக்குதல் மற்றும் தற்காப்பு ஆகிய இரண்டிற்கும் திட்டங்களை தயாரிக்குமாறு ஈரானின் புரட்சிகர காவலர்கள் மற்றும் ராணுவ தளபதிகளை அறிவுறுத்தினார். மேலும் அயோதுல்லா அலி காமேனி வெளியிட்ட அறிக்கையில், இஸ்மாயில் ஹனியே சிந்திய ரத்தத்துக்கு பழிவாங்குவது எங்கள் கடமை. ஏனென்றால் இது எங்கள் நாட்டில் நடந்தது. கடுமையான தண்டனையை பெறுவதற்கு இஸ்ரேல் களம் அமைத்துள்ளது என்றார்.

    இது குறித்து ஈரான் அதிகாரிகள் கூறும்போது, இஸ்ரேல் மீது ஈரான் எவ்வளவு வலிமையுடன் தாக்குதல் நடத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஹைபாவிற்கு அருகிலுள்ள ராணுவ இலக்குகள் மீது டிரோன்கள், ஏவுகணைகளின் கூட்டுத் தாக்குதலை நடத்த ராணுவத் தளபதிகள் பரிசீலித்து வருகின்றனர்.

    அதே வேளையில் பொதுமக்கள் மீது தாக்குதலை தவிர்ப்பது எங்களது குறிக்கோளாக இருக்கும். மேலும் ஈரான்,ஏமன், சிரியா, ஈராக் உள்ளிட்ட நட்பு நாட்டுப் படைகளுடன் இணைந்து மற்ற முனைகளில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலை நடத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    ஈரான் மீது இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ தாக்குதல் நடத்தினால் போரை விரிவுப்படுத்தும் படியும், அதற்கேற்ப தயாராகும்படியும் படைகளுக்கு காமினி உத்தரவிட்டு உள்ளார் என்றார்.

    • ஈரான் அதிபர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார்.
    • ஈரானின் உச்ச அதிகாரம் பெற்ற தலைவரை சந்தித்த பின், வீட்டிற்கு சென்ற நிலையில் படுகொலை.

    ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது பாதுகாவலர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

    நேற்று ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். அத்துடன் ஈரானின் உச்ச அதிகாரம் பெற்ற அயதுல்லா அலி கமேனியையும் சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில்தான் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார். இஸ்ரேல்தான் இந்த படுகொலைக்கு காரணம் என ஹமாஸ் மற்றும் ஈரான் நம்புகிறது.

    இந்த நிலையில் ஈரானுக்கு எதிராக பழிக்குப்பழி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரான் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அயதுல்லா அலி கமேனி கூறுகையில் "ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வான்வழி தாக்குதல் மூலம் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்குப்பின், இஸ்ரேல் தனக்குத்தானே கடுமையான தண்டனைக்கு தயார்படுத்தியுள்ளது.

    எங்களுடைய பணியான பழிக்குப்பழி குறித்து நாங்கள் பரிசீலனை செய்வோம் என காமெனி தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஹனியே எங்களுடைய நாட்டின் மதிப்பிற்குரிய விருந்தாளி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    காசா மீதான தாக்குதலுக்குப்பின் ஒருமுறை ஈரான் பகுதியில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக லெபனான் மற்றும் ஈரானில் இருந்து ஈரான் கடுமையான வான்தாக்குதலை நடத்தியது. அப்போது அமெரிக்கா உதவியுடன் வான்பாதுகாப்பு சிஸ்டம் மூலம் ஈரான் தாக்குதலை முறியடித்தது.

    தற்போது இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேல்- ஈரான் இடையே நேரடி போர் நடைபெறலாம் என அஞ்சப்படுகிறது.

    • உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் காசா மக்கள் தவித்து வருகிறார்கள்.
    • தடுப்பூசிகள் குழந்தைகளைச் சென்றடைவதை உறுதிசெய்ய போர்நிறுத்தம் தேவை.

    பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். போரால் உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் காசா மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் காசாவில் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, காசாவில் கழிவுநீர் மாதிரிகளில் தொற்று நோய் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது.


    உலக சுகாதார நிறுவனம் காசாவிற்கு 1 மில்லியன் போலியோ தடுப்பூசிகளை அனுப்புகிறது. தடுப்பூசிகள் குழந்தைகளைச் சென்றடைவதை உறுதிசெய்ய போர்நிறுத்தம் தேவை என்றார்.

    காசாவின் சுகாதார அமைச்சகம் கூறும்போது, போலியோ தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது.

    • கால்பந்து மைதானத் தாக்குதளுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் நேதனயாகு
    • இஸ்ரேலுக்குள் நுழைவோம் என்று எச்சரிக்கை விடுத்த துருக்கி அதிபர்

     கோலன் சிகரம் [Golan Heights]

    லெபனான் மற்றும் ஜோர்டான் நாட்டு எல்லையில் 1200 சதுர கிலோமீட்டர்களுக்குப் பரந்து விரிந்து கிடக்கும் பிரதேசம் கோலன் சிகரம் [Golan Heights] . இதன் பகுதிகளைக் கடந்த 1981 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அங்கு வாழ்ந்து வந்த சிரியன் மற்றும் பாலஸ்தீனிய மக்களை வெளியேற்றிவிட்டு, தங்களது மக்களை இஸ்ரேல் அரசு அங்கு குடியேற்றம் செய்தது. அங்கு வாழும் மக்கள் சிரிய நாட்டில் வசித்தாலும் இஸ்ரேலிய குடியுரிமை கொண்டவர்கள் ஆவர்.

    கால்பந்து மைதான தாக்குதல்

    லெபனான் இஸ்ரேல் எல்லையில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா தற்போது சிரியாவில் உள்ள இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலோன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தின் மீது வான் வழியாக ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் மைதானத்தில் இருந்த குழந்தைகள், இளைஞர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொந்தளிக்கும் இஸ்ரேல்

    இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா பெரிய விலையை கொடுத்தாக வேண்டும் என்று கொந்தளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, தனது அமெரிக்க பயணத்தை அவரச அவசரமாக முடித்துக்கொண்டு இஸ்ரேல் திரும்பியுள்ளார். இதற்கிடையில் இந்த தாக்குதலுக்கு எதிரிவினையாற்றி தக்க பதிலடி கொடுப்பது குறித்து எந்த முடிவையும் எடுக்க பிரதமர் நேதன்யாகுவுக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் முழு அதிகாரத்தை தந்துள்ளது. எந்த நேரத்தில் எந்த வகையில் பதிலடி கொடுக்கலாம் என்று நெதன்யாகுவே முடிவு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மற்றொரு போரை நேதனயாகு தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

    பின்வாங்கும் ஹிஸ்புல்லா

    இஸ்ரேல் பழிவாங்கும் தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் எல்லையிலிருந்து பின்வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல்- லெபனான் எல்லையின் தெற்குப் பகுதிகள் மற்றும் அமைப்பு வலுவாக இருக்கும் பெக்கா பள்ளத்தாக்கில் இருந்தும் [Bekaa valley] ஹிஸ்புல்லா பின்வாங்கியுள்ளது என்று எல்லைப்புற செய்திகள் தெரிவிக்கின்றன.

    இரான் - துருக்கியே அறைகூவல்

    லெபனானுக்குள் இஸ்ரேல் நுழைந்தால் ஒரு முழுமையான போரில் இஸ்ரலை இரான் எதிர்த்து நிற்கும் என்று அந்நாட்டு சார்பில் உறுதிபட தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் மற்றொருமத்திய கிழக்கு நாடான துருக்கியே நாட்டின் அதிபர் தாயிப் எர்தோகான் நேற்று அந்நாட்டின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் செய்து வரும் வெறுக்கத்தக்க நடவைக்கைகளை பார்த்து நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்.

    அவசியம் ஏற்பட்டால் இதற்கு முன்னதாக லிபியா மற்றும் அஜர்பைஜானின் நாகோர்னோ- காராபாக் [Nagorno-Karabakh] பகுதிகளில் நுழைந்ததுபோல் துருக்கியே இஸ்ரேலுக்குள்ளும் நுழையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

     பாலஸ்தீன இஸ்ரேல் போர்

    பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1200 க்கும் அதிகாமானோர் கொல்லப்பட்டனர். பலர் பிணைக் கைதிகளாக பிடித்துச்செல்ப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுப்பதாகக் கூறி பாலஸ்தீனத்தின் காசா, ரஃபா உள்ளிட்ட நகரங்களின் மீது இஸ்ரேல் கடந்த 9 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 39,324 பேர் உயிரிழந்துள்ளனர். 90,830 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    போர் பதற்றம்

    ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும், ஏமனில் இருந்து ஹவுதிகளும் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாலஸ்தீனத்துடனான இந்த போர் மொத்த மத்திய கிழக்குக்கு எதிரான போராக மாறும் வாய்ப்புகள் தென்படத் தொடங்கியுள்ளது உலக அரசியலில் நடுக்கத்தை ஏற்படுத்தியள்ளது.

    தூங்கும் அமைதிப் பேச்சுவார்த்தை

    போரை நிறுத்த ஐநா மற்றும் அமெரிக்க நாடுகளின் முயற்சிகள் எதுவும் தற்போதுவரை பலனளிக்கவில்லை. ஒரு புறம் போரை நிறுத்தவும், மறுபுறம் இஸ்ரேலுக்கு நிதி வழங்கி வருகிறது. தற்போது நடந்துள்ள ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், இஸ்ரலின் பாதுகாப்பை இரும்புக்கரம் கொண்டு உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளார். 

    • இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலோன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தின் மீது ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
    • ஹிஸ்புல்லாவை அழித்தொழிக்க லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுக்கும் என்ற பதற்றம் நிலவி வருகிறது.

    பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர். லெபனான் இஸ்ரேல் எல்லையில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா தற்போது சிரியாவில் உள்ள இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலோன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தின் மீது வான் வழியாக ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    இந்த தாக்குதலில் மைதானத்தில் இருந்த குழந்தைகள், இளைஞர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலில் அமெரிக்க தூதரகம் அருகே நடத்திய தாக்குதலால் கொந்தளித்த பிரதமர் நேதனயாகு ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் இருந்த துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தி, அது எதிரிகளுக்கு ஒரு எச்சரிக்கை என்று தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பின் இந்த கால்பந்து மைதான தாக்குதல் குறித்து பேசியுள்ள அவர், ஹிஸ்புல்லா அமைப்பு இதற்கு பெரிய விலையை செலுத்தியாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஹிஸ்புல்லாவை அழித்தொழிக்க லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுக்கும் என்ற பதற்றம் நிலவி வருகிறது.

    லெபனானில் இஸ்ரேல் நுழைந்தால் தாங்களும் தீவிரமான போரில் இறங்குவோம் என்று ஈரான் அரசும் எச்சரித்திருந்தது. இந்த நிலையில் தற்போது நடந்துள்ள தாக்குதல் மேலும் ஒரு போர் உருவாகும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அமெரிகாவில் உள்ள நேதனயாகு உடனடியாக நாடு திரும்ப உள்ளதகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • மத்திய காசாவின் டெய்ர் எர்-பலா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 30 பேர் பலியாகினர்.

    காசா:

    இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போர் கடந்த 9 மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து நடந்துவருகிறது. இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் இதுவரை 38 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், மத்திய காசாவின் டெய்ர் எர்-பலா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 30 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய படைகள் ரஃபா நகரின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை நோக்கி முன்னேறும்போது இந்த தாக்குதல் அரங்கேறியது.

    அமெரிக்காவுடன் கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் முன்முயற்சியில் மேற்கொள்ளப்பட்டஇஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த அமைதிப் பேச்சுவார்தை தோல்வி முகத்தில் உள்ளன. இஸ்ரேல் பிரதமர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டொனால்டு டிரம்பை அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்து பேசியுள்ளார்.
    • கடைசியாக டிரம்ப் அதிபராக இருந்த சமயத்திலேயே நேதன்யாகு அவரை சந்தித்திருந்தார்.

    பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து போர் குறித்து பேச்சுவார்த்தை நடந்தினார். பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக அமெரிக்க தெருக்களில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள் திரண்டுஅவரது உருவ பொம்மை மற்றும் அமெரிக்கக் கோடியை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அமைதி பேச்சுவார்த்தையை விரும்புவதாக அமெரிக்கா கூறி வந்தாலும் இஸ்ரேலுக்கு அதிகளவில் அமெரிக்கா நிதி வழங்கிவருகிறது. இதற்கிடையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்க உள்ள நிலையில் ஆளும் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகக் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களமிறங்கியுள்ளனர்.

    எனவே தங்களுக்கான சாதக பாதகங்களைக் கணக்கில் வைத்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இன்று டொனால்டு டிரம்பையும் அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். கடைசியாக டிரம்ப் அதிபராக இருந்த சமயத்திலேயே நேதன்யாகு அவரை சந்தித்திருந்தார். இந்நிலையில் வெகு காலம் கழித்து நடந்த இந்த சந்திப்பில் காசாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவாக உரையாடியுள்ளார்.

     

     

    அப்போது இந்த பிரச்சனையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர நேதன்யாகுவிடம் டிரம்ப் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கு நேதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார் என்றும் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து டிரம்ப் உயிர்பிழைத்த நிலையில் அவரது காதில் குண்டு பாய்ந்ததால் ஏற்பட்ட காயம் குறித்து கேட்டறிந்தார். அப்போது தனது காதில் இருந்த புண்ணை நேதன்யாகுவுக்கு காட்டி விளக்கம் கொடுத்தார் டிரம்ப். 

     

     

    • 'நேதன்யாகுவை கைது செய்யுங்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்துங்கள்'
    • வெள்ளை மாளிகைக்கு வெளியிலும் போராட்டக்காரர்கள் திரண்டு கோஷம் எழுப்பினர்.

    இஸ்ரேல், காசா நகரின்மீது கடந்த 9 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் 39,175 பாலஸ்தீனிய மக்கள் கொள்ளப்பட்டுள்ளனர். 90,000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பாலஸ்தீன இஸ்ரேல் போர் ஆபத்தான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஜோ பைடன் மற்றும் அமெரிக்க தலைவர்களிடம் பேசுவார்த்தை நடந்த நேற்று முன் தினம் அமெரிக்கா வந்துள்ளார். நேதன்யாகுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போரை எதிர்க்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

     

    நேற்று முன் தினம் தலைநகர் வாஷிங்க்டன் யூனியன் கட்டிடத்தின்முன் திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாலஸ்தீன கொடியைக் கையில் ஏந்தியபடி ஊர்வலமாக வந்து நேதன்யாகுவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். நேதன்யாகுவை கைது செய்யுங்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்துங்கள். நேதனயாகு நீ உள்ளே ஒளிந்துகொள்ள முடியாது, நீ செய்வது இனப்படுகொலை என்று கோஷம் எழுப்பினர். சில போராட்டக்காரர்கள் நேதன்யாகு நகருக்குள் நுழையும் வழியிலும் மறியல் செய்தனர்.

     

     

     

    இதனால் போராட்டக்கார்கள் மீது போலீஸ் கடுமையான அடக்குமுறையை உபயோகப்படுத்தியது. நகரின் சுவர்க்ளிலும், கொலம்பஸ் உள்ளிட்டவர்களின் சிலைகளிலும் கிராஃபிட்டி வரைந்து தங்களின் எதிர்ப்பை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர். கைகளில் ரத்தத்துடன் ஜோ பைடன் நிற்கும் படங்களை போராட்டத்தில் பங்கேற்ற கலைஞர்கள் வரைந்தனர்.

     

    மேலும் அமெரிக்க கொடியையும், நேதன்யாகுவின் உருவ பொம்மையையும் போராட்டக்காரர்கள் எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை 200 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதைதொடர்ந்து நேற்று ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸை நேதன்யாகு சந்தித்து பேசிய நிலையில் வெள்ளை மாளிகைக்கு வெளியிலும் போராட்டக்காரர்கள் திரண்டு கோஷம் எழுப்பினர். இந்நிலையில் அமெரிக்க கோடியை எரித்தது நாட்டுப் பற்றின்மையை காட்டுவதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்த போராட்டங்களுக்கு தனது கண்டனத்தை தெரிவியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

    • அமைதிக்கான உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளும்படி நேதன்யாகுவை பைடன் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
    • போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நேதன்யாகுவிடம் தான் வலியுறுத்தியதாக கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

    பாலஸ்தீனம் மீதான தாக்குதல்களை  தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல்  பிரதமர் நேதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் காமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேசுவார்த்தையில் அமைதிக்கான உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளும்படி நேதன்யாகுவை பைடன் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

     

    மேலும் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள கமலா ஹாரிஸ் நேதன்யாகுவிடம் பேசுகையில், கடத்த 9 மாதங்களாக காசாவில் நடந்தவை கொடூரமானது. இறந்த குழந்தைகளின் புகைப்படங்களையும், பசியில் துடித்தபடி தொடர்ந்து இடம்பெயரும் மக்களின் அவல நிலையையும் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியவில்லை. அவர்களின் துன்பங்களைப் பொருட்படுத்தாமல் எங்களை நாங்களே மரத்துப்போகச் செய்ய முடியாது. இவற்றைக் கண்டு நான் அமைதியாக இருக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

     

     

    மேலும் நேதன்யாகுவிடம் பேசியது குறித்து பின்னர் மனம் திறந்த கமலா ஹாரிஸ், காசா மக்கள் படும் துயரம் குறித்தும் இதுவரை பறிபோன அப்பாவி மக்களின் உயிர்கள் குறித்தும் அங்கு நிலவும் மனிதநேய சிக்கல் குறித்தும் எனது கவலையை நான் அவரிடம் வெளிப்படுத்தினேன் என்று தெரிவித்துள்ளார். எனவே இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்தக்குக்கு உடன்பட்டு இருதரப்பிலும் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நேதன்யாகுவிடம் தான் வலியுறுத்தியதாக கமலா ஹாரிஸ் தெரிவித்தார். இதற்கிடையில் இன்று குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்பை நேதன்யாகு சந்திக்க உள்ளார்.

     

    கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலில் 1,197 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். அதில் பலர் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்னும் 111 பேர் ஹமாஸிடம் பிணை கைதிகளாக உள்ளனர். ஹமாஸ் தாக்குதலால் கோபமடைந்த இஸ்ரேல், காசா நகரின்மீது கடந்த 9 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் 39,175 பாலஸ்தீனிய மக்கள் கொள்ளப்பட்டுள்ளனர். 90,000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    • இஸ்ரேலை தடைசெய்யக் கோரி பாலஸ்தீன குழு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் அனுப்பியது.
    • பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 8 பாலஸ்தீன விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.

    பாரிஸ்:

    பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நாளை மறுதினம் முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் டேக்வாண்டோ தடகள வீரர் அவிஷாக் செம்பெர்க், ஜிம்னாஸ்டிக் வீரர் ஆர்டெம் டோல்கோபியாட் மற்றும் லானிர் உள்ளிட்ட பல்வேறு இஸ்ரேலிய வீரர் போட்டியில் உள்ளனர்.

    இதேபோல, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 8 பாலஸ்தீன விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.

    இதற்கிடையே, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவருக்கு இஸ்ரேலை தடை செய்யக் கோரி பாலஸ்தீன ஒலிம்பிக் கமிட்டி கடிதம் அனுப்பியது. பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சட்டவிரோதமானது என ஐ.நா.சபையின் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய கருத்தையும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில், பாலஸ்தீனிய ஒலிம்பிக் குழுவின் கோரிக்கையை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் ஆகியோர் நிராகரித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் தாமஸ் பாக் கூறுகையில், ஐ.ஓ.சி.யின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. எங்களிடம் இரண்டு தேசிய ஒலிம்பிக் கமிட்டிகள் உள்ளன. அதுவே அரசியல் உலகத்துடனான வித்தியாசம். இந்த வகையில் இருவரும் அமைதியான சக வாழ்வில் வாழ்ந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

    மேலும், பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பு நாடு அல்ல. ஆனால் பாலஸ்தீன ஒலிம்பிக் கமிட்டி என்பது அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஒலிம்பிக் கமிட்டியாகும். மற்ற அனைத்து ஒலிம்பிக் கமிட்டிகளைப் போலவே சம உரிமைகளையும் வாய்ப்புகளையும் அனுபவிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

    • இஸ்ரேல் தாக்குதலில் கர்ப்பிணியான ஓலா அட்னன் ஹர்ப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 24க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    பாலஸ்தீன நகரமான காசாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் இந்த தாக்குதலில் ஆண்கள், பெண்கள் மட்டுமில்லாமல் பல குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 24க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இஸ்ரேலின் இந்த தாக்குதலால் நிறைமாத கர்ப்பிணியான ஓலா அட்னன் ஹர்ப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அதே சமயம் உயிரிழந்த பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு இதயத்துடிப்பு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.

    உயிருடன் பிறந்த அந்த ஆண் குழந்தை தற்போது நலமுடன் உள்ளது. ஆனால், போர்களத்திற்கு நடுவே பிறப்பதற்கு முன்பே அந்த குழந்தை தனது தாயை இழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×