search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிகள்"

    • ரூ.2.85 கோடி மதிப்பிலான மீன்பிடி இறங்கு தளம், வலை பின்னும் தளம், ஏல கூடம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார்.
    • கொடியம்பாளையம் கிராமத்தில் உள்ள பள்ளிகள், குளம் கட்டுமான பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் 2000-க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ரூ.2.85 கோடி மதிப்பிலான மீன்பிடி இறங்கு தளம், வலை பின்னும் தளம், ஏல கூடம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் மற்றும் மேற்குவ ங்கம் நேஷனல் என்வராயில்மெண்ட் வைல்டு லைப் சொசைட்டி மூலம் சதுப்புநில காடுகள் (மாங்குரோவ் காடுகள்) விரிவாக்கம் செய்வதற்கான இடம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் லலிதா படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து கொடிய ம்பாளையம் கிராமத்தில் உள்ள பள்ளிகள், குளம் கட்டுமான பணி ஆகியவற்றைபார்வையிட்ட ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது காவல் கண்கா ணிப்பாளர் நிஷா, மேற்கு வங்கத்தை சேர்ந்த நேஷனல் என்விரான்மென்ட் சொசைட்டியின் நிர்வாகி அஜந்தா டே, மாவட்ட கடல் சார் சட்ட அமலாக்க பிரிவு ஆய்வாளர் வெர்ஜினியா, வனத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • எஸ்.பி.கே. பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.
    • விநாயகருக்கு பூஜை செய்து படையல் படைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

    அருப்புக்கோட்டை

    விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே. பள்ளிகளில் உள்ள விநாயகருக்கு பூஜை செய்து படையல் படைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள விநாயகருக்கு பூஜைகள் செய்து உறவின்முறை தலைவர் காமராஜன் தலைமையில் பள்ளிச் செயலாளர் மணி முருகன் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

    இதில் உறவின்முறை நிர்வாகிகள், தலைமையாசிரியர் ஆனந்தராஜ், ஆசிரியர்-ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் கொண்டாடப்பட்ட நிகழ்வில் பள்ளி செயலாளர் ராமச்சந்திரன், தலைவர் ஜெயவேல் பாண்டியன் உறவின்முறை செயலாளர் முத்துசாமி, முன்னாள் தலைவர் மனோகரன் மற்றும் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டும்.
    • சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டும், தேர்தல் காலை வாக்குறுதிகளின்படி சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கசாமி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.‌

    இதில் நிர்வாகிகள் அறிவழகன், கருணாநிதி, ராமாமிர்தம், சுகந்தி, நாவலரசன், முத்துராமன், மதிவாணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுமதி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சிவ ரவிச்சந்திரன், முன்னாள் படை வீரர் நலத்துறை நிர்வாக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் இளங்கோவன், தமிழ்நாடு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில அமைப்பு செயலாளர் ரமேஷ், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க மாநில செயலாளர் பாஸ்கரன், மருத்துவத்துறை ஆய்வக நுட்பனர் சங்கம் மாநில செயலாளர் சாந்தராமன், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் தமிழ்வாணன், முடக்கு வட்ட செயலாளர் அஜய் ராஜ், ஒரத்தநாடு வட்ட செயலாளர் தம்பிஐயா, அரசு ஊழியர் சங்கம் மாநில செயலாளர் ஹேமலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி, மாவட்ட பொருளாளர் மதியழகன் ஆகியோர் நன்றி கூறினர்.

    • ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • அரசு மேல்–நிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்தில் ஆய்வு செய்து உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் எம்.எல்.ஏ கேட்டறிந்தார்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.

    உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடி கிராமம் மற்றும் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மரைக்கான் சாவடி பகுதியில் தலா ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, கட்டுமாவடியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம், கணபதிபுரம், அம்பல், திருக்கண்ணபுரம் ஊராட்சிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் பயணியர் நிழலகங்களையும் ஆய்வு செய்தார்.

    மேலும், திட்டச்சேரி, திருமருகல், மருங்கூர், கணபதிபுரம் அரசு பள்ளிகளுக்கு வழங்க ப்பட்ட பென்ஞ் டெஸ்க்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குறிப்பாக திருமருகல் அரசு மேல்–நிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்தில் ஆய்வு செய்து, உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் எம்.எல்.ஏ கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது, திருமருகல் தி.மு.க ஒன்றியச் செயலாளர்கள் செல்வ செங்குட்டுவன், சரவணன், வி.சி.க ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஒன்றிய ஆணையர் பாலமுருகன், திட்டச்சேரி பேரூராட்சி மன்றத் தலைவர் ஆயிஸா சித்தீக்கா, பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் சுல்தான், ஒன்றிய பொறியாளர்கள் கவிதா ராணி, செந்தில் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனிருந்தனர்.

    • தஞ்சை மாவட்டத்தில் 23,208 மாணவர்களுக்கு ரூ.11 கோடியே 79 லட்சத்து 14 ஆயிரத்து 180 மதிப்பில் மிதிவண்டிகள் இந்த ஆண்டில் வழங்கப்பட உள்ளது.
    • அரசு மற்றும் அரசு உதவி பெறும் 10 பள்ளிகளை சேர்ந்த 2,488 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 25ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக தஞ்சை அரண்மனை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவிகளுக்கு இளையெல்லாம் மிதிவண்டி களை வழங்கினார்.

    தஞ்சையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 10 பள்ளிகளை சேர்ந்த 2488 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

    அப்போது அவர் தஞ்சை மாவட்டத்தில் 23208 மாணவர்களுக்கு ரூ.11 கோடியே 79 லட்சத்து 14 ஆயிரத்து 180 மதிப்பில் வேலை எல்லாம் மிதிவண்டிகள் இந்த ஆண்டில் வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்திரா, ஸ்ரீகாந்த், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் சிவகுமார், முதன்மை மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவி அலுவலர்கள் பழனிவேலு (மேல்நிலை) , மாதவன் (இடைநிலை) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இரு வாரங்களுக்கு ஒரு முறை இரு சக்கர வாகனத்தில் உசிலம்பட்டிக்கு சென்று கஞ்சா வாங்கி வந்து விற்றதும் தெரியவந்தது.
    • இரு சக்கர வாகனத்தையும், கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா உத்தரவின்படி, இன்ஸ்பெ க்டர் ராஜேஷ்குமார் மற்றும் ஏட்டுக்கள் உமாசங்கர், ராஜேஷ், போலீசார் அருள்மொழி நவீன், அழகு, சுஜித் அடங்கிய தனிப்படையினர்பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனையை கண்காணித்து வந்தனர்.

    இதில் பட்டுக்கோட்டை அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த ரிஷிகுமார் (வயது23) என்பவர் 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததால் அவரை கைது செய்தனர்.

    மேலும், இவர் இரு வாரங்களுக்கு ஒரு முறை இரு சக்கர வாகனத்தில் உசிலம்பட்டிக்கு சென்று கஞ்சா வாங்கி வந்து விற்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து இரு சக்கர வாகனத்தையும், கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பட்டுக்கோட்டை புறவழி ச்சாலை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பேருந்து நிலையம உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் சிறுவர்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்து வருவது கண்டு பெற்றோர்கள் பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    கஞ்சா விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாணவர்களுக்கு மனதை பாதிக்கும் வண்ணம் எந்தவித தண்டனையும் வழங்கக்கூடாது.
    • ஆய்வின்போது செல்போன் பேசிக்கொண்டிருக்கும் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை.

    மாணவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் பள்ளிகள் பின்பற்ற வேண்டிய 77 வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி, உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்னரே பள்ளிக்கு வரவேண்டும்.

    மாணவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வது, ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல் என பள்ளியில் எந்த நிகழ்வு நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலரின் நேரடி கவனத்துக்கு கொண்டு வரவேண்டும்.

    பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை விடும்போது முதன்மை கல்வி அலுவலருக்கு செல்போன் மற்றும் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். 10, 12-ம் வகுப்பு ஆசிரியர்கள் சரியாக பாடத்திட்டத்தின்படி பாடம் நடத்தியிருக்கிறார்களா? என்பதை தலைமை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும்.

    அரசு பள்ளியில் தீத்தடுப்பு சாதனம் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு அவர்களின் மனதை பாதிக்கும் வண்ணம் எந்தவித தண்டனையும் வழங்கக்கூடாது.

    ஆசிரியர்கள் பள்ளியில் வகுப்பறையில் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். ஆய்வின்போது செல்போன் பேசிக்கொண்டிருக்கும் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளியிலும் படிக்கும் மாணவர்களை எக்காரணத்தை கொண்டும் ஆசிரியர்கள் தன்னுடைய சொந்த வேலைக்காக வெளியில் அனுப்பக்கூடாது.

    மாணவர்கள் செல்போனை பள்ளிக்கு கொண்டுவருவதை முழுவதுமாக தவிர்க்கவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்துக்குள் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா நடத்தி முடிக்கப்பட வேண்டும். சினிமா பாட்டு முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    மாணவர்கள் பள்ளிக்கு மோதிரம், செயின் போன்றவைகளை கண்டிப்பாக அணிந்து வரக்கூடாது. மாணவர்கள் அவற்றை அணிந்து கொண்டு வந்தால், பெற்றோரை அழைத்து வரச்சொல்லி விவரத்தை தெரிவிக்க வேண்டும்.

    இது போன்று 77 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    • அனுமதியின்றி செயல்படும் மழலையர் பள்ளிகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.
    • அனுமதி பெறாத பள்ளிகள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது விரைவில் தெரியவரும்.

    மதுரை

    மதுரையில் அனுமதியின்றி செயல்படும் மழலையர் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு முதன்மை கல்வி அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    தமிழகம் முழுவதும் தனியார் மழலைப் பள்ளிகள் அரசு அனுமதி இன்றி நடத்தப்படுவதாக புகார் அளித்துள்ளது. இதை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் அனுமதி இன்றி செயல்படும் மழலை பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள 70% மழலையர் பள்ளிகள் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக எத்தனை மழலையர் பள்ளிகள் மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது, அதில் எத்தனை அங்கீகாரம் பெற்றுள்ளன எந்த விவரங்களை முதன்மை கல்வி அலுவலகம் ஆவணங்களின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகிறது.

    சுமார் 70 சதவீத பள்ளிகள் உரிய அனுமதி இன்றி செயல்படுவதால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் விளக்கம் அளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா உத்தரவிட்டுள்ளார். அனுமதி பெறாத பள்ளிகள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது விரைவில் தெரியவரும்.

    • சின்னசேலம் வன்முறை சம்பவத்தை கண்டித்து சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் மூடினார்கள்.
    • குறிப்பாக, பள்ளிக் கூட்டத்திற்குள் வைக்கப்பட்டிருந்த மாணவ- மாணவிகளின் கல்வி சான்றிதழ் தீக்கிரையாக்கப்பட்டன.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் இன்டர்நேசனல் பள்ளி வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டது. குறிப்பாக, பள்ளிக் கூட்டத்திற்குள் வைக்கப்பட்டிருந்த மாணவ- மாணவிகளின் கல்வி சான்றிதழ் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும் பள்ளி முன்பு நிறுத்தியிருந்த காவல் துறையின் பஸ்சை வன்முறையாளர்கள் தீ வைத்து கொளுத்தினார்கள். போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தடுக்க முயன்ற டி.ஐ.ஜி.பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ரீஅபிநவ் (சேலம்), செல்வகுமார் (கள்ளக்குறிச்சி) உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட 55 போலீசார் காயம் அடைந்தனர்.

    இந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு இன்று முதல் தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவித்துள்ளது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1500-க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ.பள்ளிகள், இன்டர்நேசனல் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    இதில் சேலம் மாநகரத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் இன்று திறக்கப்படவில்லை. அதுபோல் சேலம் புறநகர் மாவட்டத்தில் மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, ஆத்தூர், வீரபாண்டி, ஏற்காடு, கெங்கவல்லி, நங்கவள்ளி, தலைவாசல், பொத்தநாயக்கன் பாளையம், மேச்சேரி, தாரமங்கலம், வாழப்பாடி, ஏத்தாப்பூர், காகாபாளையம், இடங்கணசாலை, ஓமலூர், காடையாம்பட்டி, மகுடஞ்சாவடி, தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

    அதுபோல் நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், ராசிபுரம், குமாரபாளையம், பாண்டமங்கலம், மோகனூர், கொல்லிமலை, சேந்தமங்கலம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் திறக்கப்படவில்லை.

    பள்ளிக் கூடங்கள் திறக்கப்படாது என்பது பற்றிய தகவல் முன்கூட்டியே பள்ளி நிர்வாகம் சார்பில் எஸ்.எம்.எஸ், மின்னஞ்சல் முகவரி வாயிலாக மாணவ- மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அளிக்கப்படாத, தகவல் கிடைக்காத பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர். பள்ளி முன்பகுதி கேட் மூடப்பட்டு, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படாது என நோட்டீசு ஒட்டப்பட்டிருந்தது. இதனால் பெற்றோர், மாணவ- மாணவிகள் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பினர்.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில பள்ளிகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது. அதுபோல் ஒரு சில தனியார் பள்ளிகள் உயர்நிலை, மேல்நிலை வகுப்புக்காக பள்ளிகள் திறந்திருந்தனர்.

    பல தனியார் பள்ளிகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர்கள் பள்ளின்கூட்டங்களை சுற்றிலும் கண்காணித்து வருகின்றன.

    • மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
    • பள்ளிக்குள் வைத்திருந்த அனைத்து சான்றிதழ்களும் கருகியது.

    பரமத்திவேலூர்:

    தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜா, மாநில செயலாளர் இளங்கோவன்,மாநில பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் விடுத்துள்ள செய்தில் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் தனியார் பள்ளியின் விடுதில் தங்கி பயின்று வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி பள்ளியின் விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பாதுகாப்புக்கு வந்த போலீசாரை கல்வீசி தாக்கியும், பள்ளி மற்றும் காவல்துறையினரின் வாகனங்களுக்கும், பள்ளி வாகனங்களுக்கும் தீ வைத்த கும்பல் பள்ளி வளாகத்திற்கு புகுந்து பள்ளியின் உடமைகளை சேதப்படுத்தியும் உள்ளனர். பள்ளிக்குள் வைத்திருந்த அனைத்து சான்றிதழ்களும் கருகியது.

    இதனால் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கும்,பள்ளி உடைமைகளுக்கும்,

    ஆசிரியர்கள்,ஊழியர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தனியார் பள்ளியின் கூட்டமைப்பின் சார்பில் மேற்கண்ட பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் இன்று கருப்பு வண்ண பேட்ஜ் அணிந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். எனவே இன்று தனியார் பள்ளிகள் இயங்காது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், பிரைமரி மற்றும் நர்சரி பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் என அனைத்து பள்ளிகளையும் தனியார் பள்ளி நிர்வாகிகள் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளை மூடி சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    • திருப்பூா் மாவட்டத்தில் ஒட்டுமொத்த தோ்ச்சி சதவீதம் 88.46 சதவீதமாகும்.
    • அடுத்த ஆண்டில் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், தனியாா் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 357 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 14,804 மாணவா்கள், 14, 827 மாணவிகள் என மொத்தம் 29,631 போ் 10-ம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதினா்.

    இதில்12,459 மாணவா்கள், 13,753 மாணவிகள் என மொத்தம் 26,212 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.இதில், மாணவா்கள் 84.16 சதவீதம், மாணவிகள் 92.76 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.திருப்பூா் மாவட்டத்தில் ஒட்டுமொத்த தோ்ச்சி சதவீதம் 88.46 சதவீதமாகும்.

    மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என மொத்தம் 128 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. திருப்பூா் கல்வி மாவட்டமானது மாநில அளவில் 30 வது இடத்தைப் பிடித்தது. முதலிடத்தில் இருந்து 30 வது இடத்துக்கு சரிவடைந்தது. திருப்பூா் மாவட்டமானது கடந்த 2018 ம் ஆண்டு 10-ம்வகுப்பு பொதுத் தோ்வில் 97.18 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் 7 -வது இடத்தைப் பிடித்திருந்தது. இதைத் தொடா்ந்து, 2019 ஆம் ஆண்டில் 98.53 சதவீத தோ்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்தது. இந்நிலையில் கொரோனா தொற்றால் 2020, 2021 ம் ஆண்டில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போதைய பொதுத்தோ்வில் 10-ம் வகுப்பு மாணவா்களின் தோ்ச்சி விகிதமானது கடந்த 2019 ம் ஆண்டைக்காட்டிலும் 10.07 சதவீதம் சரிவடைந்துள்ளதுடன் மாநில அளவில் 29 இடங்கள் பின்தங்கி 30-வது இடத்துக்கு சரிந்துள்ளது.

    இது குறித்து கலெக்டர் எஸ்.வினீத் கூறியதாவது :-

    10-ம் வகுப்பு பொதுத் தோ்வில் மாநில அளவில் 30 வது இடமும், பிளஸ்- 2 பொதுத் தோ்வில் மாநில அளவில் 7 -வது இடத்தையும் திருப்பூா் பிடித்துள்ளது. 10-ம்வகுப்பு பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி விகிதம் குறைந்துள்ளது தொடா்பாக பள்ளிகள் வாரியாக ஆய்வுகள் நடத்தப்படும். இதன் பின்னா் அடுத்த ஆண்டில் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

    • மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
    • சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், செவிலியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஆசீர்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப்பள்ளி, அம்பலச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,

    பழனியப்பபுரம் டிஎன்டிடிஏ நடுநிலைப்பள்ளியில் 12 முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

    இதில் சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், செவிலியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதில் 15 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    ×