search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபோன்"

    • தடை விதிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
    • இது ஏற்றுக் கொள்ள முடியாத பாதுகாப்பு விதிமீறல்.

    ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏஐ தொழில்நுட்பத்தை தனது இயங்குதளங்கள் அளவில் ஒருங்கிணைத்தால், எனது நிறுவன வளாகத்திற்குள் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.


    இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "ஒருவேளை ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏஐ தொழில்நுட்பத்தை ஓ.எஸ். அளவில் ஒருங்கிணைத்தால், எனது நிறுவன வளாகங்களில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும். இது ஏற்றுக் கொள்ளவே முடியாத பாதுகாப்பு விதிமீறல். என் நிறுவனத்திற்குள் வருபவர்கள் தங்களது ஆப்பிள் சாதனங்களை வாசலிலேயே ஒப்படைக்க வேண்டும். அவை அங்கு பாதுகாப்பாக வைக்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    எலான் மஸ்க்-இன் இந்த கருத்து தொடர்பாக ஓபன்ஏஐ மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் சார்பில் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.

    முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வில் (WWDC 2024) ஏ.ஐ. சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் ஆப்பிள் நிறுவன சேவைகள் மற்றும் சாதனங்களில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் புகுத்தப்படும் என்றும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவை தனது சாதனங்களில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.


    ஆப்பிள் அறிவிப்புகளுக்கு கண்டனம் தெரிவித்த எலான் மஸ்க், "தங்களுக்கென சொந்தமாக ஏ.ஐ. உருவாக்க முடியாத ஆப்பிள் நிறுவனம், ஓபன்ஏஐ மூலம் உங்களது பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்தி விடும் என்பது அபத்தமாக இருக்கிறது. உங்களின் தரவுகளை ஓபன்ஏ.ஐ.-இடம் கொடுத்துவிட்டால் அதற்கு என்னவாகும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் உங்களை விற்கிறார்கள்," என்று தெரிவித்துள்ளார். 

    • மீட்பு குழுவினர் விரைந்து வந்து ஐபோனை மீட்க முயற்சி செய்தனர்.
    • கேரள மீட்பு குழுவினர் மற்றும் உதவியவர்களுக்கு பெண் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆண்டிலியா சேலட் என்ற இளம்பெண் தனது விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காக தனது நண்பர்களுடன் கேரளாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு எதிர்பாராத விதமாக அவரது ஐபோன் பாறைகளுக்கிடையே விழுந்தது.

    இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து வந்து ஐபோனை மீட்க முயற்சி செய்தனர். அவர்களது இந்த முயற்சியில் பொதுமக்களும் உதவினர்.

    இதற்கிடையே அங்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனை பொருட்படுத்தாமல் அவர்கள் கடுமையாக போராடி 7 மணிநேரத்திற்கு பிறகு ஐபோனை மீட்டு இளம்பெண்ணிடம் ஒப்படைத்தனர். இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த அவர் கேரள மீட்பு குழுவினர் மற்றும் உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

    இதற்கு ஆயிரக்கணக்கானோர் தங்களது விருப்பம் மற்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    • ஐபோன் 15-ஐ விட அளவில் சிறியதாக இருக்கும்.
    • ஐபோன் ப்ரோ மேக்ஸ் வேரியண்டை விட அதிகமாக இருக்கும்.

    ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் ஐபோன் 17 சீரிஸ் பற்றிய விவரங்கள் வெளியாக துவங்கியுள்ளன. அதன்படி ஆப்பிள் நிறுவனம் 2025 ஆண்டு முதல் ஐபோன் சீரிசில் "பிளஸ்" மாடலை நிறுத்திவிட்டு, புதிதாக "ஸ்லிம்" மாடல் ஐபோனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய ஸ்லிம் மாடல் அடுத்த ஆண்டு "ஐபோன் 17 ஸ்லிம்" எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய ஐபோன்களில் விலை உயர்ந்த மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், இதன் விலை ஐபோன் ப்ரோ மேக்ஸ் வேரியண்டை விட அதிகமாக இருக்கும்.

    தற்போது வரை ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய ஐபோன்களில் ப்ரோ மேக்ஸ் வேரியண்ட் விலை தான் அதிகளவில் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 பிளஸ் விலை அதன் பேஸ் வேரியண்ட் ஐபோன் 15 மாடலை விட ரூ. 10 ஆயிரம் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை இதைவிட ரூ. 70 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     

    கோப்புப்படம்

    கோப்புப்படம்


    சமீபத்தில் நடைபெற்ற ஆப்பிள் "லெட் லூஸ்" நிகழ்ச்சியில் அந்நிறுவனம் இதுவரை தான், அறிமுகம் செய்ததில் மிக மெல்லிய ஐபேட் ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. இதே பாணியை ஐபோன் மாடல்களிலும் பின்பற்ற ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிள் வெளியிட்டதில் மிகவும் மெல்லிய ஐபோன்களில் ஒன்றாக ஐபோன் 6 மாடல் இருந்தது.

    ஐபோன் 6 மாடல் அளவில் 6.9 மில்லிமீட்டர் அளவு தடிமனாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. அந்த வரிசையில், ஐபோன் 17 ஸ்லிம் மாடல் ஆப்பிள் டிசைனிங்கில் ஐபோன் X அளவுக்கு அசாத்திய அப்டேட்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. ஐபோன் X மாடலில் ஆப்பிள் நிறுவனம் நாட்ச் மற்றும் பெசல் லெஸ் டிசைன் உள்ளிட்டவைகளை அறிமுகம் செய்து இருந்தது, நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இது புதிய டிரெண்ட் ஆகவும் மாறியது.

    இந்த வரிசையில், ஐபோன் 17 ஸ்லிம் மாடல் இதுவரை வெளியான ஐபோன் மாடல்களில் மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கும் என்றும் இதில் அலுமினியம் சேசிஸ் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும், இந்த ஐபோனின் டிசைன் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை என்று தெரிகிறது. இந்த மாடல் ஐபோன் 15-ஐ விட அளவில் சிறியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    ஐபோன் பிளஸ் மாடல்களின் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாது தான், இந்த மாடல் நிறுத்தப்படுவதற்கு காரணமாக இருக்கும் என்று தெரிகிறது. இதற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படும் "ஸ்லிம்" மாடல் பயனர்களுக்கு புதிதான கண்ணோட்டத்தை கொடுக்கும் என்றும் இதன் மூலம் பலர் புதிய ஐபோன் ஸ்லிம் மாடலை வாங்க வாய்ப்புகள் அதிகம் ஆகும்.

    • ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • ஐபோன் 16 சீரிஸ் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் டம்மி யூனிட் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் உடன் வைக்கப்பட்டு இருக்கும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் டம்மி யூனிட் அளவில் பெரியதாக காட்சியளிக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், புதிய ஐபோன் 16 சீரிஸ் பற்றிய விவரங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வருகிறது.

    அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் டம்மி யூனிட் புகைப்படம் மூலம் புதிய போன் மாடலின் விவரங்கள் ஓரளவுக்கு தெரியவந்துள்ளது. புதிய ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் இதுவரை வெளியான ஐபோன்களில் மிகவும் பெரியதாக இருக்கும் என்று தெரிகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் டம்மி யூனிட் புகைப்படத்தின் படி, இந்த மாடலில் 6.9 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய ஐபோன் சீரிசில் பெசல்களை கணிசமான அளவுக்கு குறைக்க ஆப்பிள் நிறுவனம் பார்டர் ரிடக்ஷன் ஸ்டிரக்ச்சர் (பி.ஆர்.எஸ்.) எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

    இந்த தொழில்நுட்பம் ஐபோன்களின் பெசல்களை முடிந்தவரை மெல்லியதாக மாற்றும். புதிய பி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் அளவீடுகளில் எவ்வித மாற்றமும் இன்றி பெசல்களை குறைக்க உதவும் என்று தெரிகிறது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் கேமரா சென்சார் தற்போதைய ஐபோனில் இருப்பதை விட அளவில் சற்று உயரமாக காட்சியளிக்கிறது.

    அந்த வகையில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலில் 1/1.14 இன்ச் அளவு கொண்ட சென்சார் வழங்கப்படும் என்று தெரிகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 1/1.28 இன்ச் சென்சாரை விட பெரியதாக இருக்கும். 

    • வலைதளத்தில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • இவை தவிர எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடலை வாங்க நீண்ட காலம் திட்டமிடுவோர் தற்போது அதனை வாங்கும் நிலை உருவாகி இருக்கிறது. அதன்படி ஆப்பிளின் ஐபோன் 15 மாடலுக்கு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி ஐபோன் 15 என்ட்ரி லெவல் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 16 ஆயிரம் வரை தள்ளுபடி கிடக்கிறது. இந்த மாடல் ஐபோன் 14-க்கு மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்படது. இந்திய சந்தையில் ரூ. 79 ஆயிரதது 900 விலையில் அறிமுகம் செய்யப்ட்ட ஐபோன் 15 விலை ரூ. 66 ஆயிரத்து 499 என மாறியுள்ளது.

    வங்கி சலுகைகளாக ஐபோன் 15 மாடலுக்கு ரூ. 9 ஆயிரத்து 901 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் வங்கி சலுகைகளின் கீழ் ரூ. 3 ஆயிரத்து 325 வரை குறைந்துள்ளது. இவை தவிர பயனர்கள் எக்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ. 50 ஆயிரம் வரை அதிகபட்ச தள்ளுபடி பெறலாம்.

    • ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் ஆடம்பரமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளன.
    • அதிக விலை கொண்ட வெர்ஷனாக இருக்கிறது.

    ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவன சாதனங்களை ஆடம்பரமாக கஸ்டமைசேஷன் செய்வதில் புகழ் பெற்ற நிறுவனம் கேவியர். காதலர் தினத்தை ஒட்டி கேவியர் நிறுவனம் ஐபோன் 15 வேலன்டைன்ஸ் டே எடிஷன் மற்றும் இதய வடிவம் கொண்ட ஏர்டேக் என விசேஷமான சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன்களை அந்நிறுவனம் "கார்டன் ஆஃப் ஈடன்" என அழைக்கிறது. இதில் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் ஆடம்பரமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளன. இதில் பேந்தர் கோல்டு 18K மாடலின் (ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்) விலை 60 ஆயிரத்து 350 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 50 லட்சத்து 11 ஆயிரத்து 273 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     


    அந்த வகையில், இது தற்போது கிடைப்பதிலேயே அதிக விலை கொண்ட வெர்ஷனாக இருக்கிறது. இந்த எடிஷனில் ஐபோன் முழுக்க 18K தங்கத்தால் ஆன பாடி மற்றும் 159 கருப்பு வைர கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. புதிய கார்டன் ஆஃப் ஈடன் சீரிசில் மொத்தம் ஐந்து விதமான ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    இவை ஒவ்வொன்றிலும் ஆடம்பர பொருட்களான வைரங்கள், ரத்தின கற்கள் மற்றும் படிகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பிளாக்ஷிப் பேந்தர் கோல்டு 18K மட்டுமின்றி வொன்டர்ஃபுல் ஆர்சிட் ஐபோன் 15 ப்ரோ மாடல்களின் விலை 9 ஆயிரத்து 630 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 7 லட்சத்து 99 ஆயிரத்து 577 என துவங்குகிறது.

    கார்டன் ஆஃப் ஈடன் கலெக்ஷன் வாங்கும் போது இதய வடிவம் கொண்ட ஏர்டேக் வழங்கப்படுகிறது. இதனை தனியாகவும் வாங்கிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த மாடல்கள் அனைத்தும் லிமிடெட் எடிஷன் என்பதால் மொத்தத்தில் 14 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. மற்ற மாடல்கள் அனைத்தும் 99 யூனிட்கள் உள்ளன.

    • விலை உயர்ந்த ஐபோனை பறிகொடுத்த பயணி மிகுந்த கவலை அடைந்தார்.
    • ஒரு வாலிபர் தன்னிடம் இருந்த குளிர்பான பாட்டில் ஒன்றை குரங்கிற்கு தூக்கி போட்டார்.

    குறும்பு சேட்டைகளுக்கு பெயர் பெற்ற குரங்குகள் சுற்றுலா தலங்களில் பயணிகளின் பொருட்களை தூக்கி சென்ற சம்பவங்களை பார்த்திருப்போம். அதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உத்தரபிரசேத மாநிலம் மதுராவில் அமைந்துள்ள பிருந்தாவனத்தில் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். இங்கு ஏராளமான குரங்குகள் சுற்றி திரியும். அவை அடிக்கடி சுற்றுலா பயணிகளின் பொருட்களை தூக்கி செல்வது வாடிக்கையாக உள்ளது. சம்பவத்தன்று அங்கு சுற்றுலா சென்ற பயணி ஒருவரின் ஐ போனை குரங்கு ஒன்று பறித்து கொண்டு பிருந்தாவனம் மதில் சுவர் மீது அமர்ந்து கொண்டது. விலை உயர்ந்த ஐ போனை பறிகொடுத்த அந்த பயணி மிகுந்த கவலை அடைந்தார்.

    இதை பார்த்த அங்கிருந்த சிலர் குரங்கிடம் இருந்து ஐ போனை மீட்பதற்காக முயற்சி செய்தனர். அப்போது ஒரு வாலிபர் தன்னிடம் இருந்த குளிர்பான பாட்டில் ஒன்றை குரங்கிற்கு தூக்கி போட்டார். அதை பிடித்த குரங்கு தன்னிடம் இருந்த ஐ போனை கீழே தூக்கி எறிந்தது. உடனே ஐ போனை பறிகொடுத்த நபர் அதனை வேகமாக பிடித்தார். இந்த காட்சிகளை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    அந்த வீடியோ வைரலாகி ஏராளமான பயனர்களின் பார்வைகளை குவித்து வருகிறது.

    • இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவு.
    • புதிய ஆலையில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்ற முடியும்.

    இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் கட்டமைக்க டாடா குழுமம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருக்கும் நிலையில், டாடா குழுமம் அதற்கான பணிகளை துரிதப்படுத்தும் என தெரிகிறது.

    இதற்காக தமிழ்நாட்டில் டாடா குழுமம் அமைக்கும் உற்பத்தி ஆலையில் கிட்டத்தட்ட 20 அசெம்ப்லி லைன்கள் இருக்கும் என்றும், இதில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்ற முடியும் என்றும் கூறப்படுகிறது. இது நாட்டிலேயே மிகப் பெரிய ஐபோன் உற்பத்தி ஆலையாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் இந்த ஆலையில் பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

     


    டாடா குழுமத்துடன் இணைந்து உள்நாட்டில் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்ற ஆப்பிள் முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில், புதிய ஆலை உருவாக்கப்பட்டு வருகிறது. சீனாவை தவிர்த்து இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்த நினைக்கும் ஆப்பிள் திட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், டாடா குழுமம் கர்நாடகா மாநிலத்தில் உள்ள விஸ்ட்ரன் ஆலையை கைப்பற்றி இருக்கிறது.

    அடுத்த இரண்டில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவில் மட்டும் 50 மில்லியன் ஐபோன்களை உற்பத்தி செய்ய வேண்டும் என ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே டாடா குழுமம் ஐபோன் உற்பத்தி பணிகளை விரிவுப்படுத்தும் வகையில், புதிய ஆலையை கட்டமைத்து வருகிறது. 

    • வீடியோக்களை பார்க்கும் போது அசத்தலான ஃபுல் ஸ்கிரீன் அனுபவம் கிடைக்கும்.
    • புதிய அண்டர் பேனல் கேமரா வழங்கப்படலாம்.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களில் அன்டர் டிஸ்ப்ளே கேமரா வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் வெளியாகும் ஐபோன்களில் இந்த தொழில்நுட்பத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. தென்கொரிய தொழில்நுட்ப நிறுவனமான எல்.ஜி. அன்டர் பேனல் கேமரா ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த புதிய வகை கேமரா ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவின் கீழ் மறைந்து கொண்டிருக்கும். இதன் மூலம் கேமிங் மற்றும் வீடியோக்களை பார்க்கும் போது அசத்தலான ஃபுல் ஸ்கிரீன் அனுபவம் கிடைக்கும். தற்போதைய ஐபோன் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் டைனமிக் ஐலேண்ட்-க்கு மாற்றாக புதிய அண்டர் பேனல் கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    கோப்புப்படம்

    கோப்புப்படம்

     

    எல்.ஜி. குழுமத்தின் எலெக்ட்ரிக் உபகரணங்கள் உற்பத்தி பிரிவு புதிய வகை அண்டர் பேனல் கேமரா சென்சார்களை உருவாக்கும் பணிகளில் மேம்பட்ட நிலையை அடைந்திருப்பதாக கொரியாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தற்போதைய செல்ஃபி கேமராக்களில், அண்டர் டிஸ்ப்ளே கேமராக்கள் டிஸ்ப்ளேவினுள் குறைந்தளவு வெளிச்சத்தையே அனுமதிக்கின்றன.

    இதன் காரணமாக கேமரா லென்ஸ் மற்றும் சென்சார்களுக்கு மிக குறைந்த தகவல்களே கிடைக்கும். இதனாலேயே தற்போதைய கேமராக்கள் புகைப்படங்களை குறைந்த தரத்தில் வழங்குகின்றன. இந்த அண்டர் டிஸ்ப்ளே கேமராக்கள் சந்திக்கும் சவால்களை எல்.ஜி. உருவாக்கும் அண்டர் பேனல் கேமரா சிறப்பாக எதிர்கொண்டு தரமுள்ள புகைப்படங்களை வெளிப்படுத்தும் என்று தெரிகிறது.

     

    கோப்புப்படம்

    கோப்புப்படம்


    2026 வரை ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் புதிய அண்டர் பேனல் கேமரா சென்சார்களை வழங்க வாய்ப்புகள் மிகவும் குறைவுதான் என கூறப்படுகிறது. அண்டர் ஸ்கிரீன் கேமராவை வழங்கும் முன்பு ஆப்பிள் நிறுவனம் ஃபேஸ் ஐ.டி. அம்சத்திற்காக அண்டர் டிஸ்ப்ளே சென்சாரை வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

    முன்னதாக 2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இசட்.டி.இ. ஆக்சன் 30 5ஜி மற்றும் சியோமி மி மிக்ஸ் 4 போன்ற மாடல்கள் மற்றும் அதன் பிறகு அறிமுகமான சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 4 மற்றும் கேலக்ஸி Z ஃபோல்டு 5 போன்ற மாடல்களில் செல்ஃபி கேமரா சென்சார்கள் டிஸ்ப்ளேவின் கீழ் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • டாடா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்தது.
    • ஓசூரில் உள்ள உற்பத்தி ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

    விஸ்ட்ரன் ஐபோன் உற்பத்தி ஆலையை டாடா குழுமம் முழுமையாக கையகப்படுத்தி, ஐபோன்களை உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. முன்னதாக டாடா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்து கொடுத்தது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டாடா நிறுவனம் ஓசூரில் உள்ள ஆலையில் உற்பத்தியை இருமடங்கு அதிகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் உற்பத்திக்காக ஆப்பிள் நிறுவனம் டாடா குழுமத்தை அதிகளவு நம்புவதாக தெரிகிறது.

     

    இங்கு உற்பத்தி செய்யப்படும் யூனிட்கள் சர்வதேச சந்தையிலும் ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது ஓசூரில் உள்ள உற்பத்தி ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, அதில் 15 ஆயிரம் பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.

    முதற்கட்டமாக ஐபோன்களின் குறிப்பிட்ட சில பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பாகங்கள் ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரன் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வினியோகம் செய்யப்பட உள்ளன. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் ஓசூர் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டு, உற்பத்தி தற்போது இருப்பதை விட இருமடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

     

    இதன் மூலம் விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலையில் 28 ஆயிரம் பேர் வரை பணியாற்ற முடியும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்துவது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் டாடா குழுமத்திற்கு இலக்கு நிர்ணயித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.
    • சிறப்பான அனுபவத்தை வழங்கும் என ஆப்பிள் நம்பிக்கை.

    ஆப்பிள் நிறுவனம் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமான ஐபோன் 15 சீரிசில் யு.எஸ்.பி. டைப் சி வழங்கிய ஆப்பிள் நிறுவனம் தற்போது ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் (ஆர்.சி.எஸ்.) ரக மெசேஜிங் வசதியை வழங்க இருக்கிறது. இது தொடர்பான தகவலை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.

    அதன்படி அடுத்த ஆண்டு முதல் ஐபோன்களில் ஆர்.சி.எஸ். வசதி வழங்கப்படும் என்று ஆப்பிள் செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் ஆர்.சி.எஸ். வழிமுறை வழக்கமான எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்.-களுடன் ஒப்பிடும் போது சிறப்பான அனுபவத்தை வழங்கும் என்று ஆப்பிள் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    ஐபோன்களில் ஆர்.சி.எஸ். ஐமெசேஜ் உடன் வழங்கப்பட இருக்கிறது. இது ஆப்பிள் பயனர்களுக்கு சிறப்பான மற்றும் பாதுகாப்பான மெசேஜிங் அனுபவத்தை வழங்கும் என்று ஆப்பிள் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார். கூகுள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக ஆப்பிள் நிறுவனம் ஆர்.சி.எஸ். மெசேஜிங்கை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களில் ஏற்கனவே உள்ள ஐமெசேஜ் சேவையை நீக்காமல், கூடுதலாக ஆர்.சி.எஸ். சேவையை வழங்க இருக்கிறது. ஐபோன் பயனர்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கு ஐமெசேஜ் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆர்.சி.எஸ். அறிமுகம் செய்யப்பட்டாலும் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும். 

    • புதிய வகை பொருட்களை கொண்டு OLED பேனல்களை உற்பத்தி செய்வதாக தகவல்.
    • இவ்வாறு செய்யும் போது, OLED பேனல்களின் திறன் மற்றும் பிரைட்னஸ் அதிகரிக்கும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால ஐபோன் மாடல்களில் நீண்ட நேர பேட்டரி பேக்கப் கிடைக்கும் என புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஐபோன்களின் பேட்டரி பேக்கப் அதிகரிக்க சாம்சங் முக்கிய காரணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் OLED பேனல்களை சாம்சங் நிறுவனமும் உற்பத்தி செய்து வருவது அனைவரும் அறிந்ததே.

    அதன்படி OLED உற்பத்தியில் சாம்சங் மேற்கொள்ள இருக்கும் அதிரடி மாற்றம் காரணமாக ஐபோன்களின் பேட்டரி நீண்ட நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக சாம்சங் நிறுவனம் புதிய வகை பொருட்களை கொண்டு OLED பேனல்களை உற்பத்தி செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய வகை பொருட்கள் குறைந்த அளவு மின்திறனை எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது.

    சாம்சங் டிஸ்ப்ளே நிறுவனம் இது தொடர்பான ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆய்வில் உருவாக்கப்படும் புதிய வகை பாகங்கள், ஏற்கனவே உள்ள OLED பாகங்களுடன் ஒருங்கிணைக்கப்படும். இவ்வாறு செய்யும் போது, OLED பேனல்களின் திறன் மற்றும் பிரைட்னஸ் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    2026 ஆண்டு வாக்கில் சாம்சங்கின் புதிய வகை தொழில்நுட்பம் தயார் நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சாம்சங் உருவாக்கி வரும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் ஐபோன் என்ற பெருமையை ஐபோன் 18 பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

    ×