search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்ரோ தலைவர் சோமநாத் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.
    • அப்போது, சந்திரயான் மாடல் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

    சென்னை:

    இஸ்ரோ தலைவர் சோமநாத் சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    முதல்வரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திரயான் மாடல் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

    குலசேகரப்பட்டினத்தில் 2வது ஏவுதளம் தயாராக உள்ளது. 2 ஆண்டுகளில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். ஏவுதளத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துதர கேட்டுள்ளோம்.

    தொழிற்துறை விண்வெளி மற்றும் பாதுகாப்பில் தமிழக அரசு உறுதுணையாக உள்ளது.

    ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் 17 பேர் பதக்கங்கள் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்ரோ தலைவர் சோமநாத், பிரக்ஞானந்தா வீட்டுக்கு சென்று நினைவுப் பரிசு வழங்கினார்.
    • பிரக்ஞானந்தா சாதனைக்காக மிகவும் பெருமைப்படுகிறோம் என்றார்.

    சென்னை:

    இஸ்ரோ தலைவர் சோமநாத் இன்று சென்னை வந்துள்ளார். அவர், சென்னையில் உள்ள செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வீட்டுக்கு சென்றார். அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி மகிழ்ந்தார்.

    இது குறித்து பிரக்ஞானந்தா கூறுகையில், இஸ்ரோ தலைவர் சோமநாத்தை சந்திப்பதில் பெருமிதம் கொள்கிறேன். சந்திரயான் 3 புறப்பட்டு தரையிறங்குவதைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. எனது பயணம் மற்றும் பயிற்சி குறித்து விவாதித்தோம். ராக்கெட்டுகள் தயாரிக்கப்படும் திருவனந்தபுரத்திற்கும், ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் வருமாறு என்னை அவர் அழைத்துள்ளார். எனவே, நான் நிச்சயமாக அங்கு செல்வேன் என கூறினார்.

    இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறுகையில், ஒவ்வொரு இந்தியரைப் போலவே, நாமும் பிரக்ஞானந்தா சாதனைக்காக மிகவும் பெருமைப்படுகிறோம்.

    செஸ் என்பது இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒரு பழைய விளையாட்டு. நாம்தான் அதன் பிறப்பிடம். இது மனமும் புத்திசாலித்தனமும் கொண்ட விளையாட்டு.

    நிலவில் பிரக்ஞன் இருக்கிறான் என்று பெருமை கொள்கிறோம், பூமியில் இந்த பிரக்ஞன் இருக்கிறான்.

    நிலவில் இந்தியாவுக்கு நாம் என்ன செய்தோமோ அதை அவர் நிலத்தில் சாதித்திருக்கிறார். விண்வெளியை மேம்படுத்த எங்களுடன் இணைந்து பணியாற்றப் போகிறார்.

    அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவை ஒரு சக்திவாய்ந்த நாடாக மாற்ற இளைஞர்களை ஊக்குவிப்பதில் எங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் என தெரிவித்தார்.

    • விண்வெளிக்கு அனுப்புவதற்காக இந்திய விமானப் படையை சேர்ந்த விமானிகள் தேர்வு செய்யப்பட்டு ரஷியாவில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர்.
    • இஸ்ரோ நிறுவனம் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் முன்பு பல சோதனைகளை நடத்த உள்ளது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. இந்த திட்டத்தின்படி அடுத்த ஆண்டு மத்தியில் ஆளில்லா சோதனை விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது. அதில் அனுப்புவதற்காக வியோமா மித்ரா என்ற பெண் ரோபோ ஒன்றை இஸ்ரோ தயார் செய்துள்ளது. அந்த ரோபோ விண்வெளியில் சோதனை செய்து இஸ்ரோவுக்கு தகவல்களை அனுப்பும்.

    அதன் பிறகு அடுத்த ஆண்டு இறுதியில் 3 இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்ட்டு உள்ளது. ககன்யான் திட்டத்துக்கு இஸ்ரோவின் அதிநவீன எல்விஎம்-3 ராக்கெட்டை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான விண்கலம், விண்வெளி உடை, விண்வெளி பயணத்துக்கு பிறகு பூமி திரும்பும் வீரர்கள் பத்திரமாக தரையிறங்குவதற்கான பாராசூட் ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளன.

    விண்வெளிக்கு அனுப்புவதற்காக இந்திய விமானப் படையை சேர்ந்த விமானிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ரஷியாவில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர்.

    இஸ்ரோ நிறுவனம் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் முன்பு பல சோதனைகளை நடத்த உள்ளது. இந்த நிலையில் ககன்யான் திட்டத்தின் முதல் சோதனையை இஸ்ரோ நிறுவனம் வருகிற 21-ந்தேதி நடத்த உள்ளது. இந்த சோதனையானது ராக்கெட்டை விண்வெளிக்கு செலுத்தி, மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து வங்காள விரிகுடா கடலை அடைந்த பிறகு அதை பத்திரமாக மீட்டெடுப்பதாகும். இதை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடத்தப்படும் இந்த சோதனையானது இந்திய விண்வெளி வீரர்கள் தங்கி இருக்கும் விண்கலத்தின் பகுதியை சோதிக்கும் நோக்கம் கொண்டதாகும்.

    விண்கலம் விண்வெளிக்கு செல்லும்போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதில் இருந்து தப்பித்து அவர்களை கடற்படை வீரர்கள் காப்பாற்றும் முறை பற்றிய ஒத்திகையாகும்.

    இதுகுறித்து மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறுகையில், 'இந்த சோதனையின் வெற்றியானது முதல் ஆளில்லா ககன்யான் திட்டத்துக்கும், அதன்பிறகு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கும் அடித்தளம் அமைக்கும்' என்றார்.

    • மக்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
    • எள்ளுவிளை கிராமங்களும் அடங்கியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) ராக்கெட் ஏவும் பணிகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு இடம் தேர்வு விவரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. குறிப்பிட்ட அந்த பகுதியை மக்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    அதன்படி கிழக்கு கடற்கரை சாலையான தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி சாலையை ஒட்டியுள்ள படுக்கபத்து மற்றும் சாத்தான்குளம் தாலுகாவில் பள்ளக்குறிச்சி, திருச்செந்தூர் தாலுகாவில் மாதவன்குறிச்சியை உள்ளடக்கிய பகுதி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    இதன் வடக்கு எல்லையாக தாண்டவன்காடு, நாராயணபுரம் மற்றும் மாதவன்குறிச்சி கிராமங்களும், தெற்கே மன்னார் வளைகுடா, கிழக்கே மன்னார் வளைகுடா மற்றும் அமரபுரம், மணப்பாடு கிராமங்களும், மேற்கே படுக்கபத்து மற்றும் எள்ளுவிளை கிராமங்களும் அடங்கியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • விண்வெளி நிலையம் இந்திய விண்வெளி பொருளாதாரத்திற்கு எவ்வாறு பயன் அளிக்கும் என்பதை நாங்கள் பார்க்கிறோம்.
    • ககன்யான் திட்டத்தை பொறுத்தவரை மனித விண்வெளி பயண திறனை நோக்கியதாகும்.

    இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கூறியிருப்பதாவது:-

    சந்திரயான்-3 பயணத்தின் வெற்றிக்கு பிறகு அனைத்து சாத்திய கூறுகளையும் நாங்கள் பார்த்து வருகிறோம். என்ன வகையான அறிவியல் மேம்பாடுகளை செய்ய முடியும் என்பதை நாங்கள் பார்க்கிறோம். விண்வெளி நிலையத்தை உருவாக்குவது போன்ற பெரிய திட்டங்களும் உள்ளது. விண்வெளி நிலையம் இந்திய விண்வெளி பொருளாதாரத்திற்கு எவ்வாறு பயன் அளிக்கும் என்பதை நாங்கள் பார்க்கிறோம்.

    எதிர்காலத்தில் ஒரு விண்வெளி நிறுவனத்தை தொடங்க வேண்டும். அதனை ரோபோ இயக்கத்துடன் தொடங்க வேண்டும் என்ற திட்டம் எங்களிடம் உள்ளது. ககன்யான் திட்டத்தை பொறுத்தவரை மனித விண்வெளி பயண திறனை நோக்கியதாகும். அது நடந்த உடன் அடுத்த 20 அல்லது 25 ஆண்டுகளுக்குள் விண்வெளி நிலைய கட்டிட பணிகளை நாம் பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • விக்ரம் லேண்டர் தமது நீண்ட உறக்கத்தில் இருந்து எழும் என்ற நம்பிக்கை மங்கி வருகிறது.
    • இன்னும் 14 நாட்கள் காத்திருந்து அடுத்த சூரிய உதயம் வரை லேண்டரை செயல்படுத்த முயற்சிக்கப்படும்.

    சந்திரயான் - 3 விண்கலம் கொண்டு சென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக சிவசக்தி புள்ளியில் தரை இறங்கியது. அங்கு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. ஒரு குறிப்பிட்ட அளவிலான ஆய்வுகளை செய்துவந்த நிலையில், நிலவில் சூரியன் அஸ்தமித்தது. இதனால் 14 நாட்கள் லேண்டரும், ரோவரும் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. மீண்டும் சூரியன் உதிக்க ஆரம்பித்ததும் உறக்க நிலையில் இருந்து ரோவர் மற்றும் லேண்டரை மீண்டும் எழுப்பி ஆய்வில் ஈடுபட விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்றனர்.

    குறிப்பாக சூரியனின் கதிர்களால் லேண்டரில் உள்ள மின்கலங்கள் மின்னேற்றப்பட்டு ஏனைய ஆய்வுகளை தெளிவாக மேற்கொள்ள விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். ஆனால் லேண்டர் மற்றும் ரோவரில் இருந்து எந்தவிதமான சமிக்ஞைகளும் கிடைக்காததால் இஸ்ரோ தனது நம்பிக்கையை இழந்து வருகிறது. குறிப்பாக, சூரியன் உதயமாகி ஒரு சில வாரங்கள் கடந்த நிலையில் ரோவர் எந்தவித முன்னேற்றத்தையும் காட்டவில்லை.

    இந்த நிலையில் மீண்டும் கடந்த மாதம் 30-ந்தேதி முதல் நிலவில் சூரியன் மறைந்து மெல்ல மெல்ல அங்கே இருள் சூழ ஆரம்பித்துள்ளது. சூரியனின் வெப்பமயமாதல் இல்லாததால் அங்கு வெப்பநிலை வீழ்ச்சி அடைய தொடங்கி உள்ளது. இதனால் உறக்கத்தில் இருக்கும் லேண்டரும், ரோவரும் மீண்டும் எழுந்திருக்கும் என்ற விஞ்ஞானிகள் மத்தியில் இருந்த நம்பிக்கை மெல்ல மெல்ல அஸ்தமித்து வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் விக்ரம் லேண்டர் தமது நீண்ட உறக்கத்தில் இருந்து எழும் என்ற நம்பிக்கை மங்கி வருகிறது. இருந்தாலும் இன்னும் 14 நாட்கள் காத்திருந்து அடுத்த சூரிய உதயம் வரை லேண்டரை செயல்படுத்த முயற்சிக்கப்படும். அடுத்த 14 நாட்களும் ரோவர் கடும் குளிரை தாங்கி மீண்டும் எழ முயற்சிக்க வேண்டிய இக்கட்டில் உள்ளது. இந்த சூழ்நிலை நம்பிக்கையை இழக்கும் விளிம்பில் தங்களை நிறுத்தியுள்ளது. இந்த முயற்சியால் வெற்றிகரமான பணிகளுக்காக காத்திருக்கிறோம். தவறினால் இந்தியாவின் நிலவு தூதராக எப்போதும் இந்த லேண்டர் அங்கேயே இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • நிலவின் மேற்பரப்பில் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் குளிர் வீசியது.
    • குளிர் காலநிலையில் 2 வாரங்கள் கழித்த பிறகு, சில விண்கலங்கள் செயல்படவில்லை.

    திருப்பதி:

    சந்திரயான்-3 மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. அதனைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் 12 நாட்கள் பல ஆய்வுகளையும் மேற்கொண்டது.

    இது தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்தனர்.

    இதனையடுத்து நிலவின் தென் துருவத்தில் இரவு சூழல் வந்ததால், ரோவர் மற்றும் லேண்டர் காலங்களின் இயக்கமானது முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டு அவை உறக்க நிலையில் வைக்கப்பட்டன.

    உறக்கத்துக்கு பிறகு மீண்டும் விழித்தெழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிலவில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரிடம் இருந்து இதுவரை எந்த சிக்னலும் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    லேண்டர் மற்றும் ரோவரை தொடர்பு கொள்ளும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    நிலவின் மேற்பரப்பில் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் குளிர் வீசியது. இதனால் விண்கலத்தில் இருந்து பதில் எதுவும் வர இல்லை.

    இதன் மூலம் மீண்டும் விண்கலம் விழித்துக்கொண்டு ஆராய்ச்சி செய்யும் என்ற நம்பிக்கை மங்கி வருகிறது. உலை போன்ற ஒரு கருவியை இதன்னுடன் சேர்த்து அனுப்பி வைத்திருந்தால் விக்ரம் லேண்டர் பனியில் உறையாமல் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்திருக்கும்.

    கடந்த 1977-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவால் விண்ணில் செலுத்தப்பட்ட வாயேஜர்-1 மற்றும் 2 விண்கலங்கள் சூரிய குடும்பத்திற்கு அப்பால் சென்றன. சிறிய சூரிய ஒளி கூட இல்லை. இருப்பினும், அந்த விண்கலங்கள் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

    காரணம் அவற்றில் உள்ள ஆர்.டி.ஜி. நாசா இந்த கருவிகளை முன்னோடி, வைக்கிங், காசினி, நியூ ஹொரைசன்ஸ், ஆர்வம் மற்றும் விடாமுயற்சி போன்ற விண்கலங்களிலும் நிறுவியுள்ளது.

    2013-ம் ஆண்டு செவ்வாய்க்கு சீனா அனுப்பிய சேஞ்ச்-3 லேண்டர் மற்றும் யூட் ரோவர் ஆகியவை இதே போன்ற வெப்ப சாதனங்களைக் கொண்டுள்ளன.

    சாம்-4 லேண்டர் மற்றும் யுடு-2 ரோவர் ஆகியவை 2018-ல் நிலவின் தெற்குப் பகுதியில் சீனாவால் முதன்முதலில் தரையிறக்கப்பட்டன, அவை 4½ ஆண்டுகளாக ஆர்டிஜி உதவியுடன் செயல்பட்டு வருகின்றன.

    சந்திரயான்-3 தரையிறங்குவதற்கு முன் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான லூனா-25 (ரஷ்யா), ஆர்டிஜி கருவியையும் கொண்டிருந்தது.

    எனவே அவை சந்திரன் மேற்பரப்பில் 14 நாட்கள் பகல் நேரத்தில் மட்டுமே செயல்பட முடியும். தொடர்ந்து 14 நாட்களில் இரவு வெப்பநிலை மைனஸ் 200 டிகிரி செல்சியஸாக இருந்தது.

    அத்தகைய குளிர் காலநிலையில் 2 வாரங்கள் கழித்த பிறகு, சில விண்கலங்கள் செயல்படவில்லை. இதனால், அவை நிரந்தரமாக சேதமடையும் அபாயம் உள்ளது.

    இந்தப் பின்னணியில் மீண்டும் சூரியன் உதித்தாலும், வெயில் அதிகமாக இருந்தாலும் அவைகளால் வேலை செய்ய முடியாது.

    விக்ரம் மற்றும் பிரக்யானுக்கு சூரிய சக்தி தான் அடிப்படை. வெப்பநிலை குறைவதால் மின்சாரம் தயாரிக்க ஹைட்ரோதெர்மல் ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. விண்கலத்தின் பூஜ்ஜிய வெப்பமான வானிலையில் நமது பேட்டரிகள் மற்றும் இந்த ஹீட்டர்களில் அந்த இழுப்பு கதிரியக்க சிதைவு தொடர்கிறது.

    • தமிழனாக பிறந்த பெருமையை இன்று அடைந்துள்ளேன். இந்த மேடையில் நிற்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.
    • திண்ணை பள்ளியில் படித்து விண்ணை தொட்டவர் மயில்சாமி அண்ணாதுரை.

    சென்னை:

    சென்னை கோட்டூர்புரத்தில் 'ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்' என்ற தலைப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    இந்த நாட்டில் ஏன் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் உருவாகவில்லை என அப்போது கேட்டவர் அண்ணா. அதனால், அவர் பெயரிலான இந்த அரங்கில், விஞ்ஞானிகளான உங்களை அழைத்து பாராட்டுவதே சிறந்தது.

    தமிழனாக பிறந்த பெருமையை இன்று அடைந்துள்ளேன். இந்த மேடையில் நிற்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.

    இஸ்ரோ விஞ்ஞானிகள் சிவன், மயில்சாமி அண்ணாதுரை பிறந்த மண் தமிழ்நாடு. விஞ்ஞானி வீரமுத்துவேலின் பணி பெருமைக்குரியது. திண்ணை பள்ளியில் படித்து விண்ணை தொட்டவர் மயில்சாமி அண்ணாதுரை.

    ஆகஸ்ட் 23 உலகத்திற்கே முக்கியமான நாள்.

    உலகத்தையே வியக்க வைத்த விஞ்ஞானிகள் தமிழ்நாட்டில் உள்ளனர்.

    இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆதித்தயா எல்-1 விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
    • லெக்ரேஞ்சியன் புள்ளியை (L1) சுற்றி, ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்பட உள்ளது.

    ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி. 57 ராக்கெட் மூலம் ஆதித்தயா எல்-1 விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சூரியனுக்கு விண்கலன் அனுப்பும் திட்டம் இதுவரை இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் இது இந்தியாவிற்கே ஒரு புது முயற்சியாகவே உள்ளது.

    பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில், எல்-1 லெக்ரேஞ்சியன் புள்ளியை சுற்றி, ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த புள்ளியை விண்கலம் அடைவதற்கு சுமார் 125 நாட்களுக்கும் மேல் ஆகும்.

    இந்த நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் இதுவரை 9.2 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த விண்கலம் புவி ஈர்ப்பு மண்டலத்திற்கு வெளியே வெற்றிகரமாக பயணித்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

    • வீனஸ் போன்ற கிரகங்களின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.
    • இஸ்ரோவின் இந்த ஆண்டுக்கான ஆழமான விண்வெளி சாகசம் இன்னும் முடிவடையவில்லை.

    சென்னை:

    சந்திரயான்-3 வெற்றிக்கு பிறகு, சூரிய குடும்பத்திற்கு வெளியே வாழக்கூடிய வளிமண்டலத்தைக் கொண்ட கிரகங்களை ரேடாரில் தேடும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இறங்க உள்ளது. இதற்காக 'எக்சோ வேர்ல்ட்ஸ்' என்ற செயற்கைகோளை உருவாக்கி வருகிறது. இது நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே இருக்கும் கிரகங்கள் அல்லது மற்ற நட்சத்திரங்களைச் சுற்றி ஆய்வு செய்வதற்கான ஒரு பணியாகும். சுமார் 5 ஆயிரம் புறக்கோள்கள் (எக்சோபிளானெட்டுகள்) இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

    பூமியை போன்ற வளிமண்டலம் இருப்பதால் நூற்றுக்கும் அதிகமான நட்சத்திரங்கள் பூமிக்கு அருகில் வாழக்கூடியதாக இருக்கலாம். ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் வளிமண்டலத்தை கடந்து செல்லும்போது மாற்றம் அடைகின்றன. திட்டமிடப்பட்ட புறக்கோள்கள் பணிக்கு இன்னும் மத்திய மந்திரி சபையால் அங்கீகரிக்கப்படவில்லை. விண்வெளி ஆய்வு அத்தகைய விளக்குகளின் நிறமாலை பண்புகளை ஆய்வு செய்யும். அவை பூமியால் உருவாக்கப்பட்ட தகவல்களுடன் பொருந்துமா என்பதை கண்டறியும்.

    புறக்கோள்களின் வளிமண்டல குணாதிசயங்களை தெரிந்து கொள்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வுக் கருவிகள் அகச்சிவப்பு, ஒளியியல் மற்றும் புற ஊதா நிற மாலைகளில் கதிர்வீச்சை பகுப்பாய்வு செய்யும். இத்தகைய குணாதிசயங்கள் மூலம் அங்கு வாழக்கூடிய கிரகங்களின் வளிமண்டலம் எதனால் ஆனது என்பதை நமக்கு தெரியவரும். செவ்வாய் கிரக ஆய்வுக்கான லேண்டர் திட்டங்களும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

    அதே நேரத்தில் வீனஸ் (சுக்கிரன்) பயணத்திற்கான ஒப்புதலுக்காக இஸ்ரோ ஈடுபட்டு வரும் வகையில், வீனஸ் பயணத்திற்கான 2 கருவிகள் தயாராகி வருகின்றன. வீனஸ் மேற்பரப்புக்கு அருகில் பூமியை விட 100 மடங்கு வளிமண்டல அழுத்தத்தை கொண்டுள்ளது. ஆனால் வீனஸ் மேற்பரப்புக்கு அருகில் அதிக வளிமண்டல அழுத்தத்திற்கான காரணங்கள் தெரியவில்லை. வீனசை சூழ்ந்திருக்கும் அடர்த்தியான மேகங்கள் அமிலத்தால் நிரம்பியுள்ளன, மேலும் ஒருவரால் மேற்பரப்பைக் கூட ஊடுருவ முடியாது.

    வீனஸ் போன்ற கிரகங்களின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வது அவசியமாகும். வீனஸ் மற்றும் செவ்வாய் கிரகங்களை ஆய்வு செய்தால், பூமியில் நம்முடைய செயல்பாடுகளினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அறிய முடியும்.

    இஸ்ரோவின் இந்த ஆண்டுக்கான ஆழமான விண்வெளி சாகசம் இன்னும் முடிவடையவில்லை. ஏனெனில் இறக்கும் நட்சத்திரங்களுடன் தொடர்புடைய மர்மங்களை புரிந்துகொள்வதற்கான ஆய்வுப்பணிக்காக இஸ்ரோ 'எக்ஸ்ரே போலரிமீட்டர்' அல்லது 'எக்ஸ்போசாட்' என்ற செயற்கைகோள் டிசம்பரில் ஏவ இஸ்ரோ தயாராக உள்ளது.

    450 கிலோ எடையுள்ள இந்த செயற்கைகோள் பிரகாசமான எக்ஸ்ரே பல்சர்களின் துருவமுனைப்பை அளவிடுவதற்கும் பிரகாசமான கருத்துகள் மூலங்களின் பொறிமுறையை புரிந்துகொள்வதற்கும் 2 கருவிகளை கொண்டுள்ளது. தற்போது எக்ஸ்ரே மூலங்கள் ஆற்றல், நேரம் மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை அளவிடுகின்றன' என்றனர்.

    • விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றில் இருந்து இதுவரை எந்த சிக்னல்களும் கிடைக்கவில்லை.
    • பிரக்யான் ரோவரில் உள்ள கருவிகள் ஏற்கனவே பல்வேறு இடங்களில் இருந்து சோதனைகளை மேற்கொண்டுள்ளன.

    சந்திரயான்-3 திட்டம் ஒரு நிலவு புதிரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரை இறங்கியதும் அதில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவரின் 6 சக்கரங்களிலும் இந்திய தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோவின் சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது.

    நிலவின் தென்துருவத்தின் மேல்பரப்பில் ரோவர் ஆய்வுப்பணிக்காக சுற்றி வரும்போது, இந்த இரண்டு சின்னங்களும் நிலவின் மேல்பரப்பில் பதிக்கப்பட்டு வருவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஏனோ இந்த இரண்டு சக்கரங்களும் நிலவின் மேல்பரப்பில் உள்ள மணல் பகுதியில் பதிக்கவும் இல்லை. நிலவின் மேற்பரப்பில் தெளிவான அடையாளங்களையும் விடவில்லை.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, 'நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள நிலவு மண்ணின் தனித்தன்மையைப் பற்றிய புதிய நுண்ணறிவுகள் பெறப்பட்டு உள்ளது. இந்தப்பணி இன்றியமையாத பணியாகும். நிலவில் மண் தூசி நிறைந்ததாக இல்லாமல் கட்டியாக உள்ளது. இதற்கு காரணம் ஏதோ ஒரு பொருள் மண்ணை பிணைக்கிறது, மண்ணை என்ன பிணைக்கிறது என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும். காரணம் நிலவின் தென் துருவத்தில் எதிர்காலத்தில் மனிதர்களின் பயணங்களுக்கு ஒரு முக்கிய படிக்கல்லாக இவை அமையும்.

    விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றில் இருந்து இதுவரை எந்த சிக்னல்களும் கிடைக்கவில்லை. அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இருந்தாலும் நிலவு நாள் நம்பிக்கை அளிக்கிறது.

    குறிப்பாக தொடர்ந்து 14 பூமி நாட்களுக்கு தொடர்ச்சியாக சூரிய ஒளி இந்த கருவிகள் மீது விழுவதால், அவை வெப்பமடைந்து விழித்தெழுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் நிலவின் வெவ்வேறு இடங்களில் சோதனைகளை மீண்டும் செய்யும் திறன் ஏற்படும். நிலவின் நிலப்பரப்பு மற்றும் அதன் மாறிவரும் பண்புகள் பற்றிய விரிவான புரிதலைப் பெறுவதற்கு தரவு சேகரிப்பு மிக அவசியமாகிறது.

    பிரக்யான் ரோவரில் உள்ள கருவிகள் ஏற்கனவே பல்வேறு இடங்களில் இருந்து சோதனைகளை மேற்கொண்டுள்ளன. ஆனால் ஆய்வுக்கான அதிக வாய்ப்புகள் நிலவின் ரகசியங்களைப் பற்றிய விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளை அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறுகின்றனர்.

    • வெப்பநிலை அதிகரிக்கும் வரை, உள்ளே உள்ள அமைப்புகள் வெப்பமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
    • நிலவில் தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.

    பெங்களூரு:

    நிலவின் தென் துருவத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் சூரிய சக்தி மூலம் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனால் லேண்டர், ரோவர் நிலவில் தரையிறங்கிய அடுத்த 14 நாட்களுக்கு தனது பணிகளை திட்டமிட்டபடி செய்து அந்த தகவல்களை இஸ்ரோவிற்கு அனுப்பி வைத்தது.

    பின்னர் நிலவில் இரவுகாலம் தொடங்கியதால் லேண்டர், ரோவர் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது பகல் பொழுது தொடங்கிய நிலையில் அவற்றை உறக்க நிலையில் இருந்து விழிக்க செய்யும் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், லேண்டர், ரோவரிடம் இருந்து இதுவரை எந்த சமிக்ஞையும் இல்லை. ஆனால் அது வராது என்று என்னால் கூற முடியாது. முழு சந்திர நாள் வரையும் (14 பூமி நாட்கள்) நாம் காத்திருக்க வேண்டும்.

    ஏனெனில் அந்த காலம் முழுவதும் சூரிய ஒளி தொடர்ந்து இருக்கும், அதாவது வெப்பநிலை மட்டுமே உயரும். வெப்பநிலை அதிகரிக்கும் வரை, உள்ளே உள்ள அமைப்புகள் வெப்பமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே அமைப்புகள் 14 வது நாளில் கூட எழுந்திருக்கலாம்.

    அது எப்போது நடக்கும் என்று கணிக்க வழி இல்லை. 2 கருவிகளும் மீண்டும் செயல்படுவதால் பல நன்மைகள் ஏற்படும். ஏற்கனவே நாங்கள் செய்த பல சோதனைகள் எங்களுக்கு தரவை வழங்கியுள்ளன, ஆனால் அது காலப்போக்கில் மாறக்கூடும் என்றார்.

    இதனிடையே நிலவின் தென் துருவத்தில் ஆய்வில் ஈடுபட்ட ரோவரின் பின்புற சக்கரங்களில் இந்திய தேசிய சின்னம் மற்றும் சந்திர மண்ணில் இஸ்ரோ லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. அந்த முத்திரைகள் ரோவர் ஆய்வில் தெளிவாக விழவில்லை.

    இது ஒரு நல்ல அறிகுறி என்கின்றனர் விஞ்ஞானிகள். தென் துருவப் பகுதியில் உள்ள நிலவு மண்ணின் பண்புகள் பற்றிய புதிய புரிதல். தென் துருவப் பகுதியில் உள்ள மண்ணைப் பற்றிய புதிய தகவல்கள் என்பது பல எதிர்கால பயணங்களுக்கு இலக்காக உள்ளது.

    நிலவில் தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், நிலவின் மண் தூசி நிறைந்ததாக இல்லை, ஆனால் கட்டியாக உள்ளது. மண்ணை ஏதோ பிணைக்கிறது, மண்ணை என்ன பிணைக்கிறது என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

    ×