search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொண்டாட்டம்"

    • மானாமதுரை, திருப்புவனம் இளையான்குடியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
    • உதவிப் பேராசிரியர் ஆரிப் ரகுமான் தேசிய கொடி ஏற்றி பேசினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடிபகுதிகளில் 74-வது குடியரசு தின விழா நடந்தது.

    மானாமதுரையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழரசி எம்.எல்.ஏ. தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.ஆர்.பி.முருகேசன், எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சக்திவேல் தேசியக்கொடி ஏற்றினார். நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை யூனியன் அலுவலகத்தில் தலைவர் லதா அண்ணாதுரை தேசியக்கொடி ஏற்றினார்.துணைத்தலைவர் முத்துசாமி, கவுன்சிலர்கள் வழக்கறிஞர் அண்ணா துரை, மலைச்சாமி மற்றும் ஆணையாளர், அலுவலர்கள் கொடி வணக்கம் செலுத்தினர்.

    திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சேங்கைமாறன் தேசியக் கொடி ஏற்றினார். இதில் செயல் அலுவலர் ஜெயராஜ், துணைத் தலைவர் ரகமத்துல்லாகான் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    இங்குள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் அதன் தலைவர் சேங்கைமாறன் தேசியக்கொடி ஏற்றினார். செயலாளர் கிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

    இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரியில் நடந்த குடியரசு தின விழாவுக்கு ஆட்சி குழுத் தலைவர் அகமது ஜலாலுதீன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜபருல்லாகான் முன்னிலை வகித்தார். முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார். உதவிப் பேராசிரியர் ஆரிப் ரகுமான் தேசிய கொடி ஏற்றி பேசினார்.

    விழாவில் மாணவ, மாணவிகள், ஆட்சிக் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    துணை முதல்வர் ஜஹாங்கீர் நன்றி கூறினார்.

    இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தலைவர் நஜூமுதீன் தேசிய கொடி ஏற்றினார். செயல் அலுவலர் கோபிநாத், துணைத் தலைவர் இப்ராஹிம் மற்றும் கவுன்சிலர்கள் ஊழியர்கள் பங்கேற்றனர்.

    • காரைக்குடியில் குடியரசு தின கொண்டாட்டப்பட்டது.
    • லெப்டினண்ட் கமாண்டர் பெல்லியப்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    காரைக்குடி

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழா நடந்தது. துணைவேந்தர் ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்து தேசிய மாணவர் படை மற்றும் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவுக்கு பள்ளியின் கல்வி இயக்குநர் டாக்டர் ராஜேசுவரி தலைமை தாங்கினார். தலைமை ஒருஙகிணைப்பாளர் சிவகாமி முத்துகருப்பன் வரவேற்றார். அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர் வைரவசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடி யேற்றினார். தாளாளர் சத்தியன் வாழ்த்து தெரிவித்தார்.

    புதுவயல் வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் குமார் தேசிய கொடியை ஏற்றினார். மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் தேசிய கொடியை ஏற்றினார். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் உஷாகுமாரி வரவேற்றார்.

    சேர்மன் குமரேசன் தலைமை தாங்கினார்.துணை சேர்மன் அருண்குமார் முன்னிலை வகித்தார்.லெப்டினண்ட் கமாண்டர் பெல்லியப்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    காரைக்குடி முத்துப்பட்டினம் சரசுவதி ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியை மீனா கொடியேற்றி பேசினார்.

    காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    பொறியாளர் கோவிந்த ராஜ், துணை பொறியாளர் சீமா, நகர்நல அலுவலர் டாக்டர் திவ்யா, கவுன் சிலர்கள், நகராட்சி அலுவலர்கள், சுகா தார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • லிட்டில் கிங்டம் பள்ளியில் 74 வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • சிறப்பு விருந்தினராக பள்ளியின் நிறுவனரும் முதன்மை முதல்வருமான ேஹமா கலந்து கொண்டு கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் சோளிப்பாளையத்தில் உள்ள லிட்டில் கிங்டம் பள்ளியில் 74 வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக பள்ளியின் நிறுவனரும் முதன்மை முதல்வருமான ேஹமா கலந்து கொண்டு கொடியேற்றி சிறப்புரையாற்றினார். 11ம் வகுப்பு மாணவர்கள் கருத்தரங்கு நடத்தினர். குடியரசு தினம் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதனையடுத்து மாணவர்களின் கொடி அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில்பள்ளி நிறுவனர், தாளாளர், முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது.
    • இதில் மாவட்ட கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக சமாதான புறாக்களை பறக்க விட்டு, குடியரசின் பெருமையை வலியுறுத்தும் விதமாக மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். இதை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையை சேர்ந்த 61 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கம், 63 பேருக்கு சான்றிதழ்கள், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பொதுச் சேவையில் சிறந்து விளங்கிய தன்னார்வலர்கள் உட்பட மொத்தம் 190 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி னார்.

    வருவாய் நிர்வாகம் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், வாழ்ந்து காட்டு வோம் திட்டம், மீன்வளத்துறை, தாட்கோ, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை துறை களின் சார்பில் முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, விலை யில்லா தையல் எந்திரங்கள், சலவை பெட்டிகள், முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை என மொத்தம் 48 பயனாளி களுக்கு ரூ. 96 லட்சத்து88 ஆயிரத்து 986 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    விழாவில், ராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை) பிரதீப்குமார். மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன்,வன உயிரின காப்பாளர் ஜெகதீஸ் பகன் சுதாகர் உள்பட போலீஸ் அதிகாரிகள், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், மஞ்சள் பொங்கல் போன்றவை வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகா னந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள கோசாலையில் விவேகானந்தகேந்திர நிர்வாகம் மூலம் 50-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் பரா மரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கோசாலையில் மாட்டுப் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி அந்த கோசாலையில் உள்ள 50 பசு மாடுகளுக்கும் கழுத்தில் பூமாலை அணிவிக்கப்பட்டு நெற்றியில் சந்தனம் குங்குமம் திலகம் இட்டு கொம்பில் பட்டு துணியி னால் பரிவட்டம் கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், மஞ்சள் பொங்கல்போன்றவை 3 மண்பானைகளில் வைத்து பெண்களால் பொங்கல்இடப்பட்டது.

    அதன்பிறகு கோசாலையின் மத்தி யில்அமைக்கப்பட்டுஇருந்த கோமாதாவுடன் கூடிய கிருஷ்ணபகவான் சிலை முன்புகாய், கனிகள் மற்றும் பழவகைகள் படைக்கப்பட்டு பொங்கல் பானைகள் வைத்து பசு மாடுகளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.கேந்திர துணைத் தலைவர் அனுமந்தராவ், மூத்த ஆயுட்கால ஊழியர் அங்கி ராஸ், கேந்திர இயற்கை வள அபிவிருத்தி திட்ட செயலாளர் வாசுதேவ்,

    கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்மநாபன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம், ஆரல்வாய்மொழி பேரூராட்சிதலைவர்முத்துக் குமார், தோவாளை பஞ்சாயத்து யூனியன் தலைவி சாந்தினி பகவதியப்பன், தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் தாமரை தினேஷ், நாகர்கோவில் மாநகர கிழக்கு பகுதி செய லாளர் ஜெயகோபால், தோவாளை வடக்கு ஒன்றிய கழக பொருளாளர் வெங்கடேஷ், தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், கன்னியாகுமரி லாட்ஜ் உரிமையாளர் சங்க நிர்வாகி சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாட்டுப் பொங்கல் பிரசாதமான சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், மஞ்சள் பொங்கல் போன்றவை வழங்கப்பட்டது.

    • வேளாண் பட்டம் படித்து வரும் மாணவர்கள், ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் தை திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.
    • முசிறி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய வேளாண் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ஆத்தூர்:

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இளங்கலை வேளாண் பட்டம் படித்து வரும் மாணவர்கள், ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் தை திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.

    இவ்விழாவில் வேளாண் உதவி இயக்குனர் சம்பத்குமார், வேளாண் அலுவலர்கள் ஜானகி, கௌதமன் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் பொங்கல் வைத்தனர்.

    சமத்துவ பொங்கல் விழாவில் ஆத்தூர் வட்டா

    ரத்தில் கிராம தங்கள் பணி திட்டத்தில் பயிலும்

    வாணவராயர் வேளாண்மை கல்லூரி, தனலட்சுமி ஸ்ரீனிவாசன், தந்தை ரோவர் மற்றும் முசிறி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய வேளாண் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    • மகளிர் திட்ட மேலாளர் சரவணன் மற்றும் இளைஞர்கள், கிராம பெரியோர்கள், பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை ஒன்றியம் நாலுகோட்டை கிராமத்தில் சமுதாய பொங்கல் விழா நடந்தது. தாலுகா காவல் ஆய்வாளர் ரமேஷ். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரத்தினவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதற்கான ஏற்பாட்டை நாலுகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன் செய்திருந்தார்.

    இதில் ஊராட்சி அலுவலகம் முன்பு 5 பானைகளில் பொங்கலிட்டனர். சிறுவர்-சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சக்தி, மகளிர் குழு உறுப்பினர்கள் தமிழரசி, மாசிலாமணி, மீனாட்சி, நேத்ரா, காளியம்மாள், கனிமொழி, பாண்டீசுவரி, வீரம்மாள், பால்ரூபதி, புவனேசுவரி, பாண்டியம்மாள், அம்பிகா, நாலுகோட்டை ஊராட்சி செயலர் சோனையா, வழக்கறிஞர் ராம்பிரபாகர், இணை இயக்குநர் நாராயணன், உதவிதிட்ட அலுவலர்கள் அன்புராஜ், குபேந்திரன், வட்டார மகளிர் திட்ட மேலாளர் சரவணன் மற்றும் இளைஞர்கள், கிராம பெரியோர்கள், பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    • நெற்குப்பை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடடப்பட்டது.
    • அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி அலுவலகத்தில் புகையில்லா சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் மன்ற தலைவர் அ.புசலான் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் கணேசன் புகையில்லா பொங்கல் குறித்து பேசினார். நகர் பகுதிகளில் குப்பைகளை கொட்டவோ, எரிக்கவோ மாட்டோம், பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சியாக மாற்றுவோம், நாள்தோறும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவோம், மின்சார கழிவுகளை பிரித்து எடுத்து ஒப்படைப்போம், நீர் வரத்து கால்வாய் பகுதிகளில் கழிவுகளை கொட்ட மாட்டோம், பசுமை திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் மரங்கள் நட்டு பராமரிப்போம், மண்வளத்தை காப்போம், நோய் தொற்று பரவாமல் இருக்க காய்ச்சிய நீரை பருகுவோம், துணி பைகளை பயன்படுத்துவோம், மழை நீரை சேகரிப்போம், குப்பைகள் இல்லா தூய்மையான பேரூராட்சியாக மாற்றுவோம் போன்ற உறுதிமொழிகளோடு புகையில்லா சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் இளநிலை உதவியாளர் சேரலாதன் மற்றும் மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • முத்துப்பேட்டை, கீழக்கரை கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டப்பட்டது.
    • ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாணவர்கள் மத்தியில் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் கல்லூரி வளாகத்தில் கல்லூரி செயலர் மரிய சூசை அடைக்கலம் தலைமையில், கல்லூரி முதல்வர் ஹேமலதா முன்னிலையில் நடைபெற்றது.

    விழாவில் கல்லூரியின் மாணவ, மாணவிகள் தமிழகத்தின் பாரம்பரிய உடை அணிந்து, சமத்துவ பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடி னர். தொடர்ந்து கல்லூரி அரங்கத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமையில், துணை முதல்வர் ஷேக் தாவூத் முன்னிலையில் நடைபெற்றது. விழா ஒருங் கிணைப்பாளர் கணேஷ் குமார் வரவேற்றார். ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். பொங்கல் பொங்கி வந்த போது மாணவ மாணவியர்கள் பொங்கலோ பொங்கல் என உற்சாக முழக்கமிட்டனர். விழாவை முன்னிட்டு கரகாட்டம்,ஒயிலாட்டம், கும்மியாட்டம், உரியடி, சிலம்பாட்டம், கபடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியினை கல்லூரி விரிவுரையாளர் மரியதாஸ் தொகுத்து வழங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் உமையாள் நன்றி கூறினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி இயக்குனர் மருதாசல மூர்த்தி மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் செய்தனர்.

    • கிராம மக்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்டோருக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கினார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றி யத்துக்கு உட்பட்ட பூதமங்க லம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடந்தது.

    பூதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சின்னகருப்பன் பொங்கல் வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.பொங்கல் திருநாளை முன்னிட்டு பூதமங்கலம் தூய்மை பணியாளர் களுக்கு பொங்கல் பரிசாக பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி பருப்பு, முழு கரும்பு, சீருடைகள் வழங்கப்பட்டது. பணித்தள பணியாளர்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன. 50-க்கும் மேற்பட்டோருக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கினார்.

    இந்த விழாவில் பூதமங்க லம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பகதூர், தும்பைபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் அயூப் கான், வஞ்சிநகரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி, கச்சிராயன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் அமிர்தம் ஆண்டிச்சாமி, அட்டப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ணன், பூதமங்கலம் ஊராட்சி செயலர் வடிவேலன், சமூக ஆர்வலர் தேவராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பணித்தள பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    மேலூர் யூனியன் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, துணை தலைவர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலச்சந்தர், ஜெயபாலன், ஊராட்சி மன்ற தலைவர்கள் திருவாதவூர் இளவரசன், ஆட்டுக்குளம் சிவன் ராஜன், சூரக்குண்டு நிர்மலா ஸ்டீபன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி செயலர்கள், யூனியன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு முசிறியில் டி.எஸ்.பி தலைமையில் போலீசார் கேக் வெட்டி கொண்டாடினர்
    • புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்றிரவு முசிறி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    முசிறி:

    புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்றிரவு முசிறி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். போலீசாரின் ரோந்து பணியினை டிஎஸ்பி யாஸ்மின் ஆய்வு செய்து கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணியானதை தொடர்ந்து முசிறி கைக்காட்டி பகுதியில் டிஎஸ்பி யாஸ்மின் கேக் வெட்டினார். பின்னர் கேக் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது. போலீஸ் இன்ஸ் பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி, சக்தி விநாயகம், வடிவேல், நெடுஞ்சாலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அங்கமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் கோமதி பிரியா பலர் கலந்து கொண்டனர்.


    • கோவில்கள், தேவாலயங்களில் நள்ளிரவில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு பிரார்த்தனை நடத்தினர்
    • ஆங்கில புத்தாண்டை–யொட்டி இரவு ஓட்டல்களில் விருந்து மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    திருச்சி:

    2023 ஆங்கில புத்தாண்டையொட்டி திருச்சியில் இன்று கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. தேவாலயங்களில் நேற்றிரவு சிறப்பு பிரார்த்தனை நடை–பெற்றது. இதில் பொது–மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண் டாட்டத்திற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகளில் நடன, கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.இந்தநிலையில் 2022-ம் ஆண்டு முடிவடைந்து நேற்றிரவு 12 மணிக்கு 2023-ம் ஆண்டு பிறந்தது. ஆனால் இந்த ஆண்டு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாததால் புத்தாண்டு கொண்டாட்டம் களை–கட்டியது. இதையடுத்து பொது–மக்கள் தங்களது நண்பர்கள், உறவினர்க–ளிடம் வாழ்த்துக்களை பரி–மாறி கொண்டனர்.திருச்சி, அரியலூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்க–ளில் ஆங்கில புத்தாண்டை–யொட்டி இரவு ஓட்டல்களில் விருந்து மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.அதேபோல் கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற வழிபாடுகள் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் அதிக அளவிலானோர் கலந்துகொண்டனர். இளை–ஞர்கள் இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் இருசக்கர வாகனங்களில் சாலைகளில் உலா வந்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.புத்தாண்டையொட்டி திருச்சி உள்பட 5 மாவட் டங்களிலும் நேற்றிரவு பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் பலர் விதவிதமான கேக்குகளை வாங்கி சென்றனர். இதே–போல் 10 மணி வரை சைவ, அசைவ உணவு ஓட்டல் களில் பலர் தங்களது நண் பர்களுடன் வந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர். குறிப்பாக அசைவ உணவு ஓட்டல்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.2023 ஆங்கில புத்தாண் டையொட்டி திருச்சி–யில் ஸ்ரீரங்கம் ரெங்க–நாதர் கோவில், சமய–புரம் மாரியம்மன் கோவில், உறையூர் வெக்காளி–யம் மன் கோவில், திருவா–னைக்காவல் அகிலாண் டேஸ்வரி, ஜம்பு–கேஸ்வரர் கோவில், திருச்சி மலைக் கோட்டை தாயு–மான சுவாமி கோவில், உச்சிப் பிள்ளையார் கோவில், வயலூர் முருகன் கோவில், கல்லுக்குழி ஆஞ்சநே–யர் கோவில் திருச்சி கண் டோன்மென்ட் அய்யப்பன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்க–ளிலும் இன்று அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடை–பெற்றது.உள்ளூர் பக்தர்கள் மட்டு மின்றி சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள், மேல் மருவத்தூர் ஆதிபாராசக்தி கோவிலுக்கு செல்லும் செவ்வாடை பக்தர்கள், பாத யாத்திரையாக வந்த பக்தர்கள் என திரளானோர் குவிந்தனர்.மேலும் கடுமையான குளிரையும் பொருட்படுத் தாமல் அனைத்து கோவில் களிலும் பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.இதேபோல் மேலப்புதூர் தூய மரியன்னை ஆல–யம், பொன்மலை புனித சூசையப் பர் ஆலயம், புத்தூர் பாத்திமா ஆலயம், ஏ.ஜி.சர்ச், புனித சந்தியா–கப்பர் ஆல யம், புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ தேவா–லயங்களிலும் நேற்றி–ரவு இரவு முதல் கிறிஸ்த–வர் கள் பிரார்த்தனையில் ஈடு–பட்டனர்.புத்தாண்டு கொண்டாடத் தின் போது எந்தவித அசம் பாவித சம்பவங்களும் நடை பெறாமல் இருப்பதற்காக திருச்சி போலீசார் பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். திருச்சியில் ஒருசில இடங்களில் விதி–களை மீறி இருசக்கர வாக–னங்களில் ரேஸ் சென்ற இளைஞர்களை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்த–னர்.

    ×