search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொண்டாட்டம்"

    • தாத்தா பாட்டிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
    • தாத்தா பாட்டிகள் குழந்தைகளுக்கு கதைகள் கூறி தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அவினாசி சாலை அசர்நகர் கிழக்கில் அமைந்துள்ள வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்மழலை குழந்தைகளின் தாத்தா, பாட்டிகள் கலந்து கொள்ளும் தாத்தா - பாட்டிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாக அலுவலர் சாருலதா, மற்றும் முதல்வர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் துணை முதல்வர் சித்ராதேவி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாத்தா பாட்டிகள் குழந்தைகளுக்கு கதைகள் கூறி தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.மேலும் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று விளக்கம் அளித்தனர். தாத்தா பாட்டிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் ஆஷா நன்றி கூறினார்.

    • இந்திய அரசியலமைப்பு அடிப்படை உரிமைகள் குறித்து மாணவர்களது குறுநாடகமும் இடம் பெற்றது.
    • இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வந்த அம்பேத்காரின் வாழ்க்கை வரலாறு காணொளி மூலம் காண்பிக்கப்பட்டது.

    திருப்பூர் : 

    ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசியலமைப்பு தினம் நவம்பர் 26 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினம் பற்றிய சிறப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளியில் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.முதல்வர் பிரியாராஜா வரவேற்று பேசினார்.

    மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் அரசியலமைப்பு சட்டம் குறித்து உரையாற்றினர். மேலும் இந்திய அரசியலமைப்பு அடிப்படை உரிமைகள் குறித்து மாணவர்களது குறுநாடகமும் இடம் பெற்றது. அரசியல் அமைப்பு சபையில் பங்கேற்ற தலைவர்கள் போல வேடமணிந்த மாணவர்கள் அந்தந்த தலைவர்களின் பங்களிப்பு குறித்து உரையாற்றினர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வந்த அம்பேத்காரின் வாழ்க்கை வரலாறு காணொளி மூலம் காண்பிக்கப்பட்டது.நிறைவாக பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார். பள்ளி தாளாளர், முதல்வர், ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலத்தில் உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
    • விழாவை முன்னிட்டு சிறுவர்- சிறுமியர் மற்றும் ஏழை- எளியவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    திருமங்கலம்

    தி.மு.க. மாநில இளைஞ ரணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் நாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர தி.மு.க. சார்பில் முன்சீப் கோர்ட்டு சாலையில் ராஜாஜி தெரு சந்திப்பில் 45 கிலோ கேக் வெட்டி உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடினர். விழாவை முன்னிட்டு சிறுவர்- சிறுமியர் மற்றும் ஏழை- எளியவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் திருமங்க லம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகரசபை தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை சேர்மன் ஆதவன் அதியமான், இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட அவைத் தலை வர் நாகராஜன், நகர அவைதலைவர் சேட், துணைச் செயலாளர் செல்வம், வழக்கறிஞர்கள் தங்கச்சாமி, தங்கேஸ்வரன், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், காசி பாண்டி, ரம்ஜான் பேகம், வினோத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அரிட்டாபட்டி கிராம மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    • இப்பகுதி பல பறவைகள் மற்றும் விலங்குகள் வாழ்விடமாக பல வருடங்களாக உள்ளது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமம் உள்ளது. இதனை தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்பிரியா சாகு தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் அரிட்டாபட்டி அமைந்து உள்ளது.

    அரிட்டாபட்டி கிராமம் 7 சிறு குன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள பகுதியாகும். இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பகுதி இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இங்கு 72 ஏரிகள், 200 இயற்கை நீர் ஊற்று கொண்ட குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளன. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி 16-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர் ஆட்சியில் கட்ட ப்பட்டது.

    இந்த கிராமத்தில் உள்ள மலைப்பகுதிகளில் சிறு மற்றும் நடுத்தர பறவை இனங்கள் 300-க்கும் மேல் உள்ளன. இதில் லகர் ராஜாளி, சாகின் ராஜாளி மற்றும் ராஜாளி பருந்து ஆகிய 3 முதன்மையான கொன்னுருண்ணி பறவை இனங்கள் உள்ளன. எறும்புத்தின்னிகள், மலைப்பாம்பு மற்றும் அரிய வகை தேவாங்கு ஆகிய வனவிலங்குகளும் உள்ளன. இப்பகுதி பல பறவைகள் மற்றும் விலங்குகள் வாழ்விடமாக பல வருடங்களாக உள்ளது.

    மேலும் இங்கு பல்வேறு சமண சிற்பங்கள், சமண படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்ட எழுத்து கல்வெட்டுக்கள், 2200 ஆண்டுகள் பழமையான குடை வரை கோவில்கள் உள்ளன.

    இந்த வரலாற்றுச் சின்னங்கள் இப்பகுதிக்கு கூடுதல் சிறப்பையும் தருகின்றது. இதனை பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்க கோரி ஊராட்சி மன்ற தலைவர் வீரம்மாள் ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பினார்.

    அதேபோல் இப்ப குதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன், வன பாதுகாவலர் ஓடையன், நரசிங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த், முன்னாள் நரசிங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஓடையன் உள்பட பலர் அரசிற்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

    மதுரையை சுற்றியுள்ள சமூக ஆர்வலர்களும் மற்றும் பறவை இன பாதுகாவலர்கள் வன பாதுகாவலர்களும் கோரிக்கை விடுத்தனர். கல்லூரி மாணவ-மாணவிகள் இங்கு வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் தமிழக அரசு அரிட்டா பட்டியை தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்தது. இதையொட்டி அரிட்டா பட்டி கிராம பிரமுகர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் தங்களது கிராமத்தை பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்ததற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

    • மீனவர் தினம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதால் அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மீனவர் கூட்டமைப்பும் வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது.
    • காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க 2 கடல் ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் டன்ஸ்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலக மீனவர் நாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மீனவர் தினம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதால் அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மீனவர் கூட்டமைப்பும் வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது.

    கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் மாநாட்டு பொதுக்கூட்டம் முட்டம் கடற்கரை மைதானத்தில் வைத்து நடைபெறும். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., நாகாகோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், நகராட்சி மன்ற மீனவ தலைவர், பேரூராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், நகராட்சி உறுப்பினர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவர் அமைப்புகள், கடலோர மற்றும் உள்நாட்டு மீனவர்களும் திரளாக மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

    மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க 2 கடல் ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும். ஏற்கனவே குமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மீனவர்களை பழங்குடி பட்டியலில் சேர்த்து தனி தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    மீன்பிடி படகுகள் ஆய்வு செய்வது ஏற்கனவே 3 ஆண்டுகள் என இருந்தது. அதை தற்போது ஒரு ஆண்டுகளாக ஒரு முறை படகுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. மீண்டும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசு ஆணை வெளியிட வேண்டும். கடலில் காணாமல் போன மீனவர்களை ஒரு ஆண்டு களுக்குள் இறந்து விட்டதாக அறிவித்து அவர்களுக்கு அதற்கான சலுகைகள் வழங்க வேண்டும். கட்டு மரங்களுக்கு 500 லிட்டர் மானிய மண்எண்ணை, விசைபடகுகளுக்கு 5 ஆயிரம் லிட்டர் மானிய மண்எண்ணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் இந்த மாநாட்டில் முன் வைக்கப்படுகிறது.

    மீனவர் தினத்தை யொட்டி வருகிற 19, 20-ந்தேதிகளில் கால்பந்தாட்ட போட்டி அம்மாண்டிவிளை ஜாண் கல்லூரி மைதானத்தில் நடைபெறும்.

    நாகர்கோவிலில் அமைந்துள்ள கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அலுவலகத்தில் 20-ந்தேதி பேச்சு, கட்டுரை, கவிதை, பாட்டு ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது. 21-ந்தேதி முட்டம் சின்ன மண்டபத்தில் வைத்து கடல் மீன் சமையல் போட்டி நடைபெறும். போட்டியில் பங்கெடுப்பவர் கடல் மீன் சமையலுக்கு தேவையான மீன், மசால், பாத்திரங்கள், எரிபொருள், ஸ்டவ்அடுப்பு முதலியவை கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது முட்டம் பங்குத்சந்தை அமல்ராஜ், தமிழ்நாடு மீனவ கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்

    • நூலகத்தில் உள்ள புத்தகங்கள் ,புத்தக வரிசைகள் குறித்து நூலகர் கலாவதி மற்றும் நூலகர்கள் விளக்கினர்.
    • துணைத்தலைவர் சிவகுமார் ,முன்னாள் நூலகர் கணேசன் உட்படபலர் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகம் எண் இரண்டில் தேசிய நூலக வார விழா 14 -ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது .முதல் நாள் நிகழ்ச்சியில் புத்தக கண்காட்சி மற்றும் புதிய நூல்கள் அறிமுக விழா, உறுப்பினர் சேர்க்கை, நூலக புரவலர்கள் சேர்க்கைகள் நடைபெற்றன. இதில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தலைமை ஆசிரியர் விஜயா வழிகாட்டுதலுடன் பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி தலைமையில் மாணவிகள் நூலகத்திற்கு சைக்கிளில் களப்பயணம் வந்தனர்.

    நூலகத்தில் உள்ள புத்தகங்கள் ,புத்தக வரிசைகள் குறித்து நூலகர் கலாவதி மற்றும் நூலகர்கள் விளக்கினர். இதில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் ,சுபேதார் நடராஜ் ,பொருளாளர் சிவகுமார், நூலக வாசகர் வட்ட ஆலோசகர் ஐயப்பன், துணைத்தலைவர் சிவகுமார் ,முன்னாள் நூலகர் கணேசன் உட்படபலர் கலந்து கொண்டனர். வரும் 20ந் தேதி வரை நடக்கும் நூலக வார விழாவில் பல்வேறு போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படுகிறது. முன்னால் ராணுவ வீரர் நலச் சங்கம் மற்றும் ஆசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் புரவலர்களாக சேர்ந்தனர்.

    • போட்டிகளில் பங்கேற்று விளையாடி மகிழ்ந்தனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை எஸ்.வி.ஜி.விமெட்ரிக் பள்ளியில் தாத்தா, பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி தாளாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். முதல்வர் சசிகலா வரவேற்றார். பள்ளி செயலாளர் ராஜேந்திரன், அறங்காவலர் தாரகேஸ்வரி, நிர்வாக அதிகாரி சிவ சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். விழாவில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தாத்தா, பாட்டிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முதுமையை மறந்து இளமையான நினைவு கூற நடனம் மற்றும் விளையாட்டு உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி மகிழ்ந்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பள்ளி நிர்வாகத்துக்கு தாத்தா, பாட்டிகள் நன்றி கூறினார்.

    • பிட் இந்தியா ப்ரீடம் ரன் 3.0 கொண்டாடப்பட்டது.
    • ஜோதியை ஏற்றி மாணவர்களுக்கு நகர்மன்ற தலைவர் சிறப்புறையாற்றினார்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி உடற்கல்வித்துறை சார்பில் உலக ஒற்றுமை நாள் சுடர் ஓட்டமானது பிட் இந்தியா ப்ரீடம் ரன் 3.0 கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் எஸ். அறிவுடைநம்பி தலைமை வகித்தார். நகர்மன்ற துணை தலைவர் மா. சுப்பராயன் முன்னிலை வகித்தார்.

    ஜோதியை ஏற்றி மாணவர்களுக்கு நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் சிறப்புறை யாற்றினார்.ஜோதி ஓட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாட்டினை காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவல் துறையினர் செய்திருந்தனர்

    உடற்கல்வி ஆசிரியர்கள் சக்திவேல் ஹரிஹரன், ராகேஷ் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்கண்டன் செய்திருந்தனர். உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் நன்றி கூறினார்.

    • தீபாவளி பண்டிகையை அதன் சுற்றுபகுதியில் நரிக்குறவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உடன் கொண்டாடி வருகிறார்.
    • மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடுசுந்தரரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியா ற்றுபவர் வசந்தா . வேதாரண்யம் பகுதிகளில் நிறைய சமூக சேவைகளை ஆற்றுபவர்.

    பற்றி மாணவர்களுக்கு மழை காலங்களில் பற்றி வருவது தடைபட கூடாது என கருதி இதுவரை ஜந்து ஆயிரம் குடைகளை பற்றி மாணவர்களுக்கு வழங்கி உள்ளார் அது போல் இதுவரை பொது மக்களுக்கு 5 லட்சம் முககவசம் வழங்கி உள்ளார்

    பல்வேறுசமூகப் சேவை பணிகளுக்காக ஜம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.இவர் வருடம் தோறும் தீபாவளி பண்டிகையை வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நரிகுறவர்கள் ( நாடோடிகள்) மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உடன் கொண்டாடி வருகிறார்.

    அதேபோல் இந்த ஆண்டும்வேதாரண்யத்தை அடுத்த அண்டர் காடு, ஆயக்காரன்புலம், வாய்மேடு ,தாணிக்கோட்டகம் மற்றும் இடும்பாவனம் பகுதிகளில் சாலை ஓரங்களில் தற்காலிக குடிசைகளில் நிரந்தரமாக வசித்து வரும்40 நாடோடி குடும்பங்களைச் சேர்ந்த 125 க்கு மேற்பட்டவர்களுடனும் வீதிகளிலும் சாலைகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதித்த 50 நபர்களுடனும்தீபாவளியை கொண்டாடினார்.

    இதில் கலந்துகொண்ட நாடோடிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குஅன்பளிப்பு , புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், மற்றும் காலை உணவு வழங்கினார்

    நிகழ்ச்சியில்சமூக ஆர்வலர் சித்திரவேல், மற்றும்ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள்கலந்து கொண்டனர். படவிளக்கம் வேதாரண்யம் அடுத்த அண்டர்காட்டில் நரிகுறவர்களுக்கு புத்தாடைகளை ஆசிரியை வசந்தா வழங்கினார்

    • ஆயத்த ஆடைகள்-பட்டாசுகள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம்
    • வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு பலரும் வந்ததால் பஸ்-ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகரிப்பு

    நாகர்கோவில்:

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி.

    புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து ஆனந்தமாக கொண்டாடும் தீபாவளி பண்டிகை, இந்த ஆண்டு நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக புதிய துணி வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டினர்.

    வீட்டில் இருக்கும் உறவினருக்கு ஆடைகளை எடுத்து தைக்க கொடுப்ப தில் முனைப்பாக செயல்பட்டனர். இதனால் கடந்த சில நாட்களாக ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டத்திலும் தீபாவளி பண்டிகை விற்பனை விறு விறுப்பாக நடந்தது. பண்டிகை காலம் நெருங்க நெருங்க ஆயத்த ஆடைகள் (ரெடிமெட்) வாங்க அனைத்து கடை களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    சாலையோர சிறு வியாபாரிகள் ஆயத்த ஆடைகள், பட்டாசுகள், மற்றும் சிறுவர்-சிறுமிகளை கவரும் பொருட்கள் போன்ற வற்றை விற்பனைக்காக குவித்து வைத்திருந்தனர். அவற்றை வாங்குவதிலும் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். நாகர் கோவில் மீனாட்சிபுரம், செம்மங்குடி ரோடு, கோட்டார் சாலை உள்ளிட்ட முக்கிய சாலை களில் மக்கள் குடும்பத்து டன் வந்ததால், அங்கு போக்குவரத்து நெருக்கடி யும் ஏற்பட்டது. இதற்கிடையில் குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை வியா பாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திடீர்.. திடீரென பெய்யும் மழையால் சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்து வரு கின்றனர்.

    இருப்பினும் அவர்கள் தங்கள் வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி வர அங்கு மக்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இதனை சீரமைக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீ சார் பல்வேறு நடவடிக்கை களை எடுத்துள்ளனர். சாலையில் தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    இதனால் மக்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கும் சிரமமின்றி சென்று ஜவுளி மற்றும் பல்வேறு பொருட்களை வாங்கிச் சென்றனர்.

    தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால், பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல்ேவறு ரக புதிய பட்டாசுகளை வாங்குவதில் சிறுவர்-சிறுமிகள், இளைஞர்கள் ஆர்வம் காட்டினர். இதனால் குமரி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை களை கட்டி காணப்பட்டது. இன்னும் 2 நாட்களில் இந்தக் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் வியாபாரிகளும் போலீசாரும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    இதற்கிடையில் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் குடும்பத்தினருடன் கொண்டாட, வெளியூர்க ளில் வேலை பார்ப்ப வர்கள் இன்று முதல் குமரி மாவட்டம் வரத் தொடங்கி விட்டனர். இதனால் வடசேரி, அண்ணா பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதேபோல் வெளியூர்களில் இருந்து இங்கு வந்து வேலை பார்ப்பவர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பஸ்நிலையம், ரெயில் நிலையம் நோக்கி வருகின்றனர். வெளியூர் செல்வோர் மற்றும் வருவோர் வசதிக்காக சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் மாலை , இரவு நேரங்கள் மட்டுமின்றி, காலை நேரத்திலும் ஏராளமானோர் பயணத்தை தொடர்வதில் ஆர்வம் காட்டினர்.

    • அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா ராமநாதபுரம், கீழக்கரை, திருப்புல்லாணியில் கொண்டாடப்பட்டது.
    • தொடர்ந்து 51 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் அ. தி. மு. க. பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கி ணங்க, மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில், நகர் செயலாளர் பால்பாண்டியன் ஏற்பாட்டில் அரண்மனை அருகே அ.தி.மு.க.51-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. முன்னதாக அ.தி.மு.க.கட்சி கொடியினை மாவட்ட செயலாளர் ஏற்றி வைத்தார். தொடர்ந்து 51 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் அரண்ம னையில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் வாழ்த்து பெற்றனர். விழாவில் மாவட்ட அவைத்தலைவர் சாமிநா தன்,எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் சேது பாலசிங்கம், ஸ்டாலின் ஜெயச்சந்திரன், செந்தில்குமார், சரவ ணகுமார், திலகர், ராதாகிருஷ்ணன், ஜெயல லிதா பேரவை செயலாளர் சேது பாலசிங்கம், ராமநா தபுரம் நகர் துணைச் செயலாளர் ஆரிப் ராஜா, முன்னாள் நகர் மன்ற தலைவர் ராமமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை இந்து பஜாரில் அ.தி.மு,க, 51 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அவைத் தலைவர் சரவண பாலாஜி தலைமையில் நகர செயலாளர் ஜகுபர் உசேன் முன்னிலையில் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    இதில் துணைச்செய லாளர் குமரன், பொரு ளாளர் ஹரி நாராயணன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் வேலன், முன்னாள் நகர செயலாளர் இம்பாலா உசேன், கருப்பையா, முனியசாமி, பாருக், விஜி காசிநாதன், அங்குசாமி, சிவா, சிவராமலிங்கம், பிரதீபன், முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 51-ம் ஆண்டுதொடக்க விழாவை யொட்டி ஒன்றிய செய லாளர் கருப்பையா தலைமையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. அதேபோல் திருப்புல்லாணி ஒன்றியம் மாயாகுளத்தில் ஒன்றிய துணைச் செயலாளர் பாக்கியநாதன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி பாக்கியநாதன் அ. தி.மு,க.கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் ஏராள மான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. வின் 51-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது
    • ஆரல்வாய்மொழி நகர அ.தி.மு.க. சார்பாக எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

    ஆரல்வாய்மொழி:

    அ.தி.மு.க. வின் 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஆரல்வாய்மொழி நகர அ.தி.மு.க. சார்பாக எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவரும், நகரச் செயலாளருமான முத்துக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தோவாளை ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரன், ஒன்றிய செயலாளர் மகாராஜன், நகரத் துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தாழக்குடி நகரச் செயலர் பிரமநாயகம் பிள்ளை, ரோகினி அய்யப்பன்,

    தோவாளை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஷேக், பொதுக்குழு உறுப்பினர் சுடலையாண்டி, வடக்கு ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ், கச்சேரி நாகராஜன், பேரவை நிர்வாகிகள் சுந்தரம் இசக்கியப்பன், ஒல்சி, பேச்சியம்மாள், மல்லிகா, அமுதா, பஞ்சாயத்து துணைத்தலைவர் சுதா பாலகிருஷ்ணன், நகர பொருளாளர் சுயம்புலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×