search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொண்டாட்டம்"

    • அனைத்து துறை மாணவ-மாணவிகளுக்கிடையே அத்தப்பூ கோலபோட்டி நடைபெற்றது
    • அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமை ந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டா டப்பட்டது. ரோகிணி கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.விழாவை யொட்டி அனைத்து துறை மாணவ-மாணவிகளும் புத்தாடை அணிந்து, ஊஞ்ச லாடி, இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

    மேலும் அனைத்து துறை மாணவ-மாணவிகளுக்கிடையே அத்தப்பூ கோலபோட்டி நடைபெற்றது. விழாவில் கல்லூரி துணை தலைவர் பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசி ரியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • பெண்கள் ஊஞ்சலாடி மகிழ்ந்தனர்
    • புத்தாடைகளை அணிந்து பெண்கள் ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    நாகர்கோவில் :

    கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

    நாகர்கோவிலில் வடசேரி பகுதிகளில் பொதுமக்கள் ஓண ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகளை அணிந்து ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் அவர்கள் ஓண ஊஞ்சலாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    நாகர்கோவிலில் பல்வேறு பகுதிகளிலும் ஓண ஊஞ்சல் வீடுகள் முன்பு கட்டப்பட்டிருந்தது. அதில் குடும்பத்தோடு ஆடி மகிழ்ந்தனர். வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமும் போடப்பட்டிருந்தது. பல்வேறு கலரிலான பூக்களில் பெண்கள் கோலமிட்டு மகிழ்ந்தனர். வடசேரி கிருஷ்ணன்கோவில் வடிவீஸ்வரம், பார்வதிபுரம் வெட்டூர்ணிமடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளும் முன்பு அத்தபூக்கோலம் போடப்பட்டிருந்தது. கேரளாவை ஒட்டியுள்ள களியக்காவிளை, மார்த்தாண்டம், மேல்புறம், குழித்துறை, தக்கலை பகுதிகளிலும் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    இதையடுத்து அந்த பகுதிகளில் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலம் போடப்பட்டுள்ளது. புத்தாடைகளை அணிந்து பெண்கள் ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    ஓணம் பண்டிகையைடுத்து இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டிலும் வியாபாரிகள் பூக்களை வாங்குவதற்கு வந்திருந்தனர். நேற்று முன்தினம் ஓணம் பண்டிகையையொட்டி விடிய விடிய பூக்கள் வியாபாரம் நடந்தது.

    ராயக்கோட்டை, பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மதுரை, திண்டுக்கல், சங்கரன்கோவில் பகுதியில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை மாவட்டத்தில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வந்து இருந்தது.

    பிச்சிப்பூவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டது. மற்ற பூக்கள் குறைவான அளவில் விற்பனையானதால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.

    • அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
    • சோழவந்தான் பேரூர், வார்டு நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    அதிமுக பொது குழு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை வரவேற்று மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர், வார்டு நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    இதில் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், வாடிப்பட்டி யூனியன் தலைவர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகேசன், தென்கரை ராமலிங்கம், வார்டு கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா, ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, சோழவந்தான் நகர இளைஞரணி கேபிள் மணி, பேரூர் துணை செயலாளர் தியாகு, 5-வது வார்டு செயலாளர்அசோக், 10-வது வார்டு செயலாளர் மணிகண்டன், நிர்வாகிகள் துரை கண்ணன், ஜெயபிரகாஷ், மாரி, பேட்டை பாலா, மன்னாடி மங்கலம் ராஜபாண்டி, பால் பண்ணை ராஜேந்திரன், பிரேம், சுரேஷ், ராஜா, பாலுசாமி, மணி, அழகர் ஜூஸ்கடை கென்னடி, பி.ஆர்.சி. மகாலிங்கம் முள்ளிப்பள்ளம் ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டப்பட்டது.
    • முன்னதாக பஸ் நிலையம் முன்புள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    சிவகங்கை

    அ.தி.மு.க.வில் நிறை வேற்றப்பட்ட தீர்மா னங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை வரவேற்று சிவகங்கையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அந்த கட்சியி னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    முன்னதாக பஸ் நிலையம் முன்புள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில் நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள், ஸ்டிபன் அருள்சாமி, கருணாகரன், செல்வமணி, பழனிச்சாமி, சிவசிவஸிதர், மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், நகர துணை செயலாளர் மோகன், புலியடிதம்பம் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், கூட்டுறவு சங்க தலைவர் பாபு, நகர் மாணவரணி செயலாளர் ராஜபாண்டி, கவுன்சிலர்கள் கிருஷ்ண குமார், தாமு முன்னாள் கவுன்சிலர்கள் காஜா, பழனி, மாரிமுத்து, மற்றும் நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

    நாகர்கோவில் :

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதற்கு தடைவிதிக்க மறுத்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இந்த தீர்ப்பினை வரவேற்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியா குமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் தலைமையில் அ.தி.மு.க.வினர் நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த தீர்ப்பை வரவேற்று நிர்வாகிகளும், தொண்டர்களும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பஸ்களில் பயணித்த பயணி களுக்கு பஸ்சில் ஏறி இனிப்புகளை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வழங்கினார்.இதுபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த தீர்ப்பினை வரவேற்று அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட இணை செயலாளர் சாந்தினிபகவதியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாநகராட்சி உறுப்பினர்கள் ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன், ஒன்றிய செயலாளர் பொன்.சுந்தர்நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கரூரில் அ.தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
    • ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு

    கரூர்,

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை கடந்த ஜூன் 28-ல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

    இந்நிலையில் நேற்று மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் உத்தரவிட்டனர். இதை அடுத்து கரூர் மாவட்ட அ.தி.மு.க அவை தலைவர் திரு விகா தலைமையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்று பஸ் நிலையம் ரவுண்டானா அருகே மனோகரா கார்னர் பகுதியில் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகளும் வழங்கி கொண்டாடினர். அப்போது பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் சரவணன், முன்னாள் நகர செயலாளர் நெடுஞ்செழியன், கரூர் தெற்கு பகுதி செயலாளர் விசிகே ஜெயராஜ், மத்திய தெற்கு பகுதி செயலாளர் சேரன் பழனிச்சாமி, பகுதி செயலாளர் சக்திவேல், மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ், தினேஷ்குமார் உட்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சென்னை உயர்நீதிமன்றம் அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் பொதுக்குழு எடுத்த முடிவுகள் செல்லும் என தீர்ப்பு வழங்கியது.
    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினருமான பொன் சரஸ்வதி தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    சேலம்:

    சென்னை உயர்நீதிமன்றம் அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் பொதுக்குழு எடுத்த முடிவுகள் செல்லும் என தீர்ப்பு வழங்கியது.

    திருச்செங்கோடு

    இதனை கொண்டாடும் வகையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினருமான பொன் சரஸ்வதி தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர், நகர மன்ற உறுப்பினர்கள் ராஜவேல், மல்லிகா, கார்த்திகேயன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர், நகர வங்கி தலைவர் ராமமூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் மோகன், எட்டிமடை அ.தி.மு.க. நிர்வாகி குணசேகர், அசோக்குமார், சரவணன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் லோகநாதன், செந்தில்குமார், முனியப்பன், குணவேல், சிறு மொளசி பஞ்சாயத்து துணைத் தலைவர் வெங்கடாசலம், நகர நிர்வாகி சந்திரன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    நாமக்கல்

    இதேபோல் நாமக்கல்லில் ஸ்ரீதேவி மோகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    தீவட்டிப்பட்டி

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தீவட்டிப்பட்டி பஸ் நிலையம் அருகில் கிழக்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் விஜயன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது.

    இதில் மருத்துவ அணி மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன், வேப்பிலை ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம், தீவட்டிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச் செயலாளர் ராமசாமி வெள்ளையன் என்கிற ராஜமாணிக்கம், ராஜகுரு, பீட்டர், ரஜாக், மணி, ராஜேஷ், நைனாகாடு ராஜா, பாபுலால், வேலு, நாராயணன் குலாப்ஜான், வேப்பிலை ரவி, காசி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வாழப்பாடி

    உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று வாழப்பாடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சதீஸ்குமார் தலைமையில் வாழப்பாடி பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இதில் நிர்வாகிகள் குபேந்திரன், சிவக்குமார், பத்மாவதிகுமரன், செல்லையா, பார்த்திபன், வெங்கடேசன், அனிதா பழனிமுத்து, பழனிசாமி, மதியழகன், ராஜா, சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஓணப்பண்டிகை விழா கடந்த 20-ந் தேதி அத்தப்பூ கோல மிடுதலுடன் தொடங்கியது.
    • கேரள மக்கள் வீடுகள் முன்பு பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்து வருகிறார்கள்.

    கோவை,

    கேரள மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஓணம் திருவிழா. இந்த பண்டிகை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஓணப்பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான விழா கடந்த 20-ந் தேதி அத்தப்பூ கோல மிடுதலுடன் தொடங்கியது.

    கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை, நீலகிரியிலும் இந்த பண்டிகை களை கட்டத் தொடங்கி உள்ளது. கோவை மாவட்டத்தில் வாளையார், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், ஆனைக்கட்டி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதி கேரள எல்லையில் உள்ள பகுதிகளாகும். இங்கு கேரள மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இங்கும் கோவை மாநகர், ஊட்டி, குன்னூர் பகுதிகளிலும் ஓணம் பண்டிகை களை கட்டி உள்ளது.

    கேரள மக்கள் வீடுகள் முன்பு பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்து வருகிறார்கள். இதேபோல பள்ளி, கல்லூரிகளிலும் ஓணம் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது.குன்னூரில் உள்ள பிராவிடன்ஸ் கல்லூரியில் ஓணம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல வண்ண பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு மலையாள பாடல்களுக்கு மாணவிகள், பேராசிரியைகள் நடனமாடி அசத்தினர்.

    கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து, மாவே லியை வரவேற்கும் விதமாக பல்வேறு, வண்ண பூக்களால் அத்தப் பூக்கோலமிட்டனர். இதுமட்டுமில்லாமல் திருவாதிரைக்களி உட்பட மலையாள பாடல்களுக்கு ஏற்ப மாணவிகளும், பேராசிரியைகளும் நடனமாடி அசத்தினர்.

    தொடர்ந்து, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து செண்டை மேளக் கலை ஞர்கள் இசை வாத்தியங்கள் இசைக்க, கேரள பாரம்ப ரிய கதகளி நடனம் அனை வரையும் வெகுவாக கவர்ந் தது.

    பல்வேறு பாடல்களுக்கு ஆயிரக்கணக்கான மகளிர் ஒன்றாக இணைந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றாக ஓணம் திருவிழாவை கொண்டாடியது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர்.

    இதேபோல மாவட்டம் முழுவதும் ஓணம் பண்டிகை களை கட்டி உள்ளது.

    • பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்தனர்.
    • அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    திருப்பரங்குன்றம்

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை வரவேற்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின் பேரில் இளைஞரணி மாவட்ட செயலாளர் ரமேஷ் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    இதில் ஒன்றிய செய லாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், பகுதி துணைச் செயலாளர் செல்வகுமார், வட்ட செய லாளர் பாலமுருகன், ராஜ்குமார், நாகரத்தினம், மாணவரணி பகுதி செய லாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சந்திராயன் 3விண்கலம் வெற்றி கரமாக ஏவப்பட்டது.
    • மாணவர்கள் தேசியக் கொடியினை அசைத்து வெற்றியை கொண்டாடினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் சந்திரனுக்கு சந்திராயன் 3விண்கலம் வெற்றி காரமாக ஏவப்பட்டது கொண்டாடும் விதமாக மாணவ மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் பள்ளியின் சார்பாகபட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது பள்ளியில் பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேசியக் கொடியினை அசைத்து சந்திராயன்-3 வெற்றியை கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர் வசந்தா செயலாளர் ஆறுமுகம்,பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், பள்ளி ஆசிரியர்கள்மே லாண்மை குழுவினர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சந்திரயான்-3 திட்டம் கடந்த 40 நாட்களுக்கு முன்பு விண்ணில் ஏவி தொடங்கப்பட்டு நேற்று வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு உலக அரங்கில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.
    • இந்திய நாட்டின் வெற்றியை நாடு முழுவதும் பொது மக்கள் கொண்டாடி வரு கின்றனர்.

    தொப்பூர்,

    இந்திய நாட்டை வல்லரசு நாடுகள் மத்தியில் மிகப்பெரிய மைல் கல்லை யும் வெற்றி சரித்திரத்தையும் படைக்க வைத்து உலக நாடு களை திரும்பிப் பார்க்கும் வகையில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறு வனம் தனது அடுத்த வெற்றி மைக் கல்லை தொடங்கியது.

    சந்திரயான் ஒன்று, இரண்டு படிகளை தொட ர்ந்து சந்திரயான்-3 திட்டம் கடந்த 40 நாட்களுக்கு முன்பு விண்ணில் ஏவி தொடங்கப்பட்டு நேற்று வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு உலக அரங்கில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில் இந்திய நாட்டின் வெற்றியை நாடு முழுவதும் பொது மக்கள் கொண்டாடி வரு கின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் பிறமொழி பிரிவு சார்பில் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் இந்திய நாட்டில் இஸ்ரோவின் வெற்றி சரித்திரத்தை பொது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடி னர்.

    இந்த வெற்றி கொண் டாட்டத்தில் பொது மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு சந்திர யான்-3 வெற்றியை பதிவு செய்த விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து அவர்களின் சாதனைகளை பாராட்டி இந்தியாவின் அசோக சின்னத்தை நிலவில் பதிய வைத்ததை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் பிறமொழி பிரிவு, மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் கட்சி தொண்டர்கள், ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • சந்திராயன் திட்டம் வெற்றியடைந்ததையொட்டி ராமநாதபுரத்தில் பா.ஜ.க.வினர் கொண்டாடினர்.
    • மாணவர்கள் தொலை நோக்கி கருவி மூலம் சந்திராயன் 3 விண்கலம் நிலவில் தரை யிறங்கும் காட்சியை கண்டு களித்தனர்.

    ராமநாதபுரம்

    சந்திராயன் 3 தரை யிறங்கும் காட்சிகளை தொலைநோக்கி மூலம் காணும் வசதியை ராமநாதபுரம் அஸ்ட்ரோ கிளப் சார்பில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    ராமநாதபுரம் அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அஸ்ட்ரோ கிளப் சார்பில் நடந்த இந்த நிகழ்விற்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ராமநாதன், மல்லிகா முன்னிலை வகித்தனர்.

    தலைமையாசிரியை ஜெயந்தி வரவேற்றார். அஸ்ட்ரோ கிளப் சொக்க நாதன் தொலை நோக்கி கருவி மூலம் மாண வர்களுக்கு சந்திராயன்- -3 விண்கலத்தை காட்டினார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் ராமநாதன், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    ஏராளமான மாணவர்கள தொலை நோக்கி கருவி மூலம் சந்திராயன் 3 விண்கலம் நிலவில் தரை யிறங்கும் காட்சியை கண்டு களித்தனர். இஸ்ரோவால் சந்திராயன் தரையிறங்கும் காட்சியை மாணவர்களுக்கு பெரிய திரையில் ஒளிபரப்பு செய்தனர். இதை மாண வர்கள் கண்டு மகிழ்சியை பகிர்ந்து கொண்டனர்.

    சந்திராயன் வெற்றியை தொடர்ந்து ராமநாதபுரம் அரண் மனை பகுதியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    இதேபோல் ஏராளமான பள்ளிகளில் மாணவ மாணவிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

    ×