search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காளதேசம்"

    • டேவிட் மில்லர் 38 பந்துகளில் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • கேசவ் மகாராஜ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 21 ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ஹென்ட்ரிக்ஸ்- டி காக் களமிறங்கினர். ஹென்ட்ரிக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் டிகாக் 18 ரன்னிலும் மார்க்ரம் 4, ஸ்டப்ஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். 44 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில் கிளாசன் விக்கெட்டை பறிகொடுத்தார். டேவிட் மில்லர் 38 பந்துகளில் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டும் தம்சிம் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    எளிய இலக்கை துரத்திய வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர்களான தன்சித் ஹாசன் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹூசைன் சுமாரான துவக்கம் கொடுத்தனர். இருவரும் முறையே 9 மற்றும் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹாசன் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    இவர்களை தொடர்ந்து களமிறங்கிய தவ்ஹித் மற்றும் மஹ்மதுல்லா பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தனர். இருவரும் முறையே 37 மற்றும் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த வீரர்களும் ரன் குவிக்க முடியாமல் திணறினர்.

    போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை சேர்த்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா சார்பில் கேசவ் மகாராஜ் மூன்று விக்கெட்டுகளையும், ரபாடா, நார்ட்ஜே தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • கிளாசன் 44 பந்துகளில் 46 ரன்களுடன், டேவிட் மில்லர் 38 பந்துகளில் 29 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
    • வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டும் தம்சிம் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    வாஷிங்டன்:

    டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்காளதேசம் மோதுகிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ஹென்ட்ரிக்ஸ்- டி காக் களமிறங்கினர். ஹென்ட்ரிக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் டிகாக் 18 ரன்னிலும் மார்க்ரம் 4, ஸ்டெப்ஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 23 ரன்னில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். 44 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில் கிளாசன் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த சிறிது நேரத்தில் டேவிட் மில்லர் 38 பந்துகளில் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனால் இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டும் தம்சிம் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    • ஹென்ட்ரிக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
    • டிகாக் 18 ரன்னில் வெளியேறினார்.

    வாஷிங்டன்:

    டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்காளதேசம் மோதுகிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ஹென்ட்ரிக்ஸ்- டி காக் களமிறங்கினர். ஹென்ட்ரிக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் டிகாக் 18 ரன்னிலும் மார்க்ரம் 4, ஸ்டெப்ஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 23 ரன்னில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் பொறுப்புடன் ஆடி வருகின்றனர். வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இரு அணி வீரர்கள் விவரம்:

    தென் ஆப்பிரிக்கா:

    ரிசா ஹெண்ட்ரிக்ஸ், குயின்டன் டிகாக், மார்க்ரம் (கேப்டன்), ஸ்டப்ஸ், ஹெண்ட்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், மெக்ரோ ஜென்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அண்ட்ரிச் நோர்ட்ச், பார்ட்மென்

    வங்காளதேசம்:

    தச்டித் ஹசன், லிண்டன் தாஸ், நஜிமுல் ஹசன் (கேப்டன்), தவுகித் ஹிரிடே, ஷகிப் அல் ஹசன், ஜகர் அலி, முகமதுல்லா, ரஷித் ஹசன், தஷ்கின் அகமது, தம்சிம் அகமது ஷேக், முஸ்தபிசூர் ரகுமான்

    • வங்காளதேசம் அமெரிக்காவில் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
    • முதல் போட்டியில் அமெரிக்க அணி வங்காளதேசத்தை வீழ்த்தியது.

    ஹூஸ்டன்:

    வங்காளதேசம் அணி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று ஹூஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. ஹிருடோய் அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார். மஹமதுல்லா 31 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்கா களமிறங்கியது. 14.5 ஓவரில் அமெரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து களமிறங்கிய கோரே ஆண்டர்சன், ஹர்மித் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில், அமெரிக்க அணி 19.3 ஓவரில் 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது.
    • அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2 ஆம் தேதி துவங்குகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் 2024 டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஆயத்தமாகும் வகையில், அணிகள் ஒவ்வொன்றாக அமெரிக்கா புறப்பட்டன. சில தினங்களுக்கு முன்பு இலங்கை அணி அமெரிக்கா புறப்பட்டு சென்றது. அந்த வரிசையில், தற்போது ஆசிய நாடுகளில் ஒன்றான வங்காளதேசம் கிரிக்கெட் அணி அமெரிக்கா புறப்பட்டது.

    அமெரிக்கா புறப்படும் முன் வங்காளதேசம் அணி வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜ்முல் ஹாசனுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

    • ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
    • இதில் முதல் 4 போட்டிகளின் முடிவில் 4-0 என வங்காளதேச அணி தொடரை கைப்பற்றியது.

    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் 4 போட்டிகளின் முடிவில் 4-0 என வங்காளதேச அணி தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேச அணி 20 ஒவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக முகமதுல்லா 54 ரன்கள் எடுத்தார்.

    ஜிம்பாப்வே தரப்பில் பிளெசிங் முசரபானியும் பிரையன் பென்னட்டும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரையன் பென்னட் மற்றும் தடிவானாஷே மருமணி ஆகியோர் களம் இறங்கினர்.

    இதில், தடிவானாஷே மருமணி 1 ரன்னில் அவுட் ஆனார். அதன் பின் ஜோடி சேர்ந்த பிரையன் பென்னட்டும் சிக்கந்தர் ராசாவும் வங்கதேச பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தனர். இறுதியில் ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக 70 ரன்கள் குவித்து பிரையன் பென்னட் அவுட் ஆனார். சிக்கந்தர் ராசா 76 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என வங்கதேசம் கைப்பற்றியிருந்த நிலையில், 5வது டி20யில் ஜிம்பாப்வே அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

    • நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் போது இலங்கை -வங்காளதேசம் அணிகள் மோதின
    • களத்திற்குள் வர மேத்யூஸ் 3 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்து கொண்டதால், நடுவர்கள் அவருக்கு அவுட் கொடுத்தனர்

    நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் போது இலங்கை -வங்காளதேசம் அணிகள் மோதின. அந்த போட்டியில் இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். அப்போது அவரின் ஹெல்மட்டில் ஏதோ பிரச்சனை வந்தது. இதனால் நேராக க்ரீஸிற்குள் வராமல் மாற்று ஹெல்மட் கொண்டு வருவாறு அணியினருக்கு சிக்னல் கொடுத்தார். இதனால் ஷகிப் அல் ஹசன் அடுத்த பந்தை வீசுவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச அணி வீரர்கள் நடுவர்களிடம் டைம் அவுட் முறையீடு செய்தனர்.

    எம்சிசி விதியின் படி, ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்து வெளியேறினால், அடுத்த பேட்ஸ்மேன் 3 நிமிடங்களுக்குள் க்ரீஸில் இருக்க வேண்டும். ஆனால் மேத்யூஸ் 3 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்து கொண்டதால், நடுவர்கள் அவருக்கு அவுட் கொடுத்தனர். இதனால் சோகமடைந்த மேத்யூஸ், உடனடியாக ஷகிப் அல் ஹசன் மற்றும் நடுவர்களிடம் முறையீடு செய்தார்.

     ஆனால் மேத்யூஸ் விளக்கங்களை ஏற்காத நடுவர்கள் உடனடியாக அவுட் கொடுத்தனர். இதன் மூலம் எந்த பந்தையும் எதிர்கொள்ளாமல் ஏஞ்சலோ மேத்யூஸ் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். உலகக்கோப்பை வரலாற்றிலேயே டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்த முதல் பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரனானார் மேத்யூஸ்.

    இதற்கு ரிவெஞ்ச் கொடுக்கும் விதமாக உலககோப்பைக்கு பின்பு நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி வீரர்கள் கைகடிகாரத்தை காட்டுவது போன்று புகைப்படம் எடுத்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    அப்போதிலிருந்தே இலங்கைக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான மோதல் கிரிக்கெட் களத்தில் மட்டுமில்லாது சமூக வலைத்தளங்களிலும் வெடிக்க ஆரம்பித்தது.

     இந்நிலையில் இந்த மோதலுக்கு முடிவுக்கட்டும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கை அணி வீரர் பத்திரனாவும் வங்கதேச அணி வீரர் முஸ்தாபிஜூர் ரஹ்மானும் இணைந்து பகத் பாசிலின் ஆவேசம் படத்தின் புகழ்பெற்ற காட்சியை ரீல்ஸ் செய்துள்ளனர்.

    அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜ் வங்காளதேசத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • ஜான் செல்வராஜ் இதற்கு முன்பு சென்னை மடிப்பாக்கம், தேனாம்பேட்டை போலீஸ் நிலையங்களிலும் பணியாற்றியுள்ளார்.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சேலையூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஜான் செல்வராஜ். இவரது சொந்த ஊர் திருச்சி ஆகும். சென்னை மடிப்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த அவர் அங்கிருந்தபடி சேலையூர் போலீஸ் நிலையத்துக்கு பணிக்கு சென்று வந்தார்.

    இவர் போலீஸ் நிலையத்தில் இருந்து கோர்ட்டுகளுக்கு குற்றவாளிகளை அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும் இவர் அடிக்கடி மருத்துவ விடுப்பில் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்தநிலையில் அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மருத்துவ விடுப்பில் சென்றிருந்தார். அதன் பிறகு அவர் இதுவரை பணிக்கு திரும்பவில்லை.

    இந்த நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜ் வங்காளதேசத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலையூர் போலீஸ் நிலையத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்காளதேச எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக கூறி அவரை வங்காளதேச ராணுவ அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

    போலீஸ் நிலையத்தில் இருந்து கோர்ட்டுகளுக்கு குற்றவாளிகளை அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்ட போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜுக்கு, சட்டவிரோத கும்பலுடன் தொடர்பு எற்பட்டதா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் போதைப்பொருள் உள்ளிட்ட வழக்குகளில் பிடிபடும் குற்றவாளிகளையும் கோர்ட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்படி அழைத்து செல்லும்போது அவருக்கு போதைப்பொருள் கடத்தும் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாரின் மத்தியில் எழுந்துள்ளது.

    கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜிடம் வங்காளதேச ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகுதான் இது தொடர்பான விரிவான விவரங்கள் வெளிவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    கைது செய்யப்பட்டுள்ள சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜ் இதற்கு முன்பு சென்னை மடிப்பாக்கம், தேனாம்பேட்டை போலீஸ் நிலையங்களிலும் பணியாற்றியுள்ளார். கடந்த 2 வருடமாக அவர் சேலையூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்டம்ப்களை பார்க்காமலேயே ஸ்டம்பிங் செய்து விக்கெட்டை எடுத்தார்.
    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியது.

    தற்போது இந்த போட்டியின் போது வங்காளதேசம் அணியின் விக்கெட் கீப்பர் எடுத்த ரன் அவுட் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. போட்டியின் இக்கட்டான சூழலில் வங்காளதேசம் அணி விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ், ஸ்டம்ப்களை பார்க்காமலேயே காற்றில் மிதந்த படி ஸ்டம்பிங் செய்தார்.

     


    இதில் இலங்கை அணியின் தசுன் ஷனகா 9 பந்துகளில் 19 ரன்களை எடுத்திருந்த போது தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி ஒன்றில், ஸ்டம்ப்களை பார்க்காமலேயே ஸ்டம்பிங் செய்து விக்கெட்டை எடுத்தார்.

    தற்போது இதே போன்று வங்காளதேச விக்கெட் கீப்பர் ஸ்டம்பிங் செய்து விக்கெட்டை வீழ்த்தியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பலர் தோனி மற்றும் லிட்டன் தாஸ் செய்த ஸ்டம்பிங் வீடியோக்களை இணைத்து வெளியிட்டு வருகின்றனர்.



    • 5-வது ஜூனியர் பெண்கள் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்றது.
    • நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.

    டாக்கா:

    5-வது ஜூனியர் பெண்கள் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. லீக் சுற்றின் முடிவில் இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன.

    நேற்று நடந்த இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியன் வங்காளதேசத்தை எதிர்கொண்டது.

    மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனால் போட்டி முடிவை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதல் 5 பெனால்டி வாய்ப்புகளையும் இரு அணியினரும் கோலாக மாற்றியதால் 5-5 என்ற கணக்கில் சமநிலை நிலவியது. இதையடுத்து, சடன்டெத் முறை அமலுக்கு வந்தது.

    இதிலும் இரு அணியினரும் வாய்ப்புகளை தவறவிடாமல் கோல் அடித்ததால் பெனால்டி ஷூட்-அவுட் முறை நீடித்துக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் 11-11 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தபோது, ஆட்டத்தை நிறுத்திய நடுவர்கள் வெற்றியாளரை முடிவு செய்ய 'டாஸ்' முறையை கொண்டு வந்தனர்.

    டாஸ் போடப்பட்டதில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை ஏற்றுக்கொள்ளாத வங்காளதேச வீராங்கனைகள் நடுவர்களுடன் வாக்குவாதம் செய்ததுடன், மைதானத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரசிகர்களும் அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். சிலர் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசினர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் நிலவியது.

    அதன்பின் போட்டி அதிகாரிகள், நடுவர்கள் இருதரப்பினரையும் கலந்து ஆலோசித்து இந்தியா, வங்காளதேசத்தை கூட்டு சாம்பியன்களாக அறிவித்தனர். இரு அணியின் கேப்டன்களும் கோப்பையை கூட்டாகப் பெற்றுக் கொண்டனர்.

    • ஒருங்கிணைந்து பணியாற்றும் முனைப்பில் சீனா அழைப்பு.
    • வங்காளதேசத்துக்கான சீனா தூதரை ஹசன் சந்தித்து இருந்தார்.

    சீனாவுக்கு அலுவல் பூர்வ பயணம் மேற்கொள்ள வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது. வங்காளதேசத்தில் புதிய அரசு அமைந்துள்ளதை அடுத்து, அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்து பணியாற்றும் முனைப்பில் சீனா அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    "நாங்கள் பயணத்திற்கு ஏற்ற வகையில், சரியான நேரத்தை தேர்வு செய்கிறோம்," என்று வங்காளதேச வெளியுறவு துறை மந்திரி ஹசன் மஹ்மூத் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக வங்காளதேசத்துக்கான சீனா தூதரை ஹசன் சந்தித்து இருந்தார்.

    பிரதமரின் பீஜிங் சுற்றுப் பயணத்திற்கு ஏற்ற நேரம் ஒதுக்கி, பயணத்திற்கு வேண்டிய முன்னேற்பாடுகளை செய்வதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா முன்னதாக 2019-ம் ஆண்டு அலுவல்பூர்வ பயணமாக சீனா சென்றிருந்தார்.

    • வங்காளதேசம் சார்பில் தௌஹித் ரிடோய் 74 ரன்களை குவித்தார்.
    • ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக ஆடிய மிட்செல் மார்ஷ் ரன்களை குவித்தார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டி பூனேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி களமிறங்கிய வங்காளதேசம் அணி துவக்கம் முதலே நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் இருவரும் முறையே 36 ரன்களை குவித்தனர். அடுத்து வந்த கேப்டன் நஜுமுல் 45 ரன்களையும், தௌஹித் ரிடோய் 74 ரன்களையும் குவித்தார்.

    போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஜாம்பா மற்றும் சீன் அபாட் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாயினிஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    307 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. துவக்க வீரரான டிராவிஸ் ஹெட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டேவிட் வார்னர் 53 ரன்களை குவித்தார். அடுத்து வந்த மிட்செல் மார்ச் அதிரடியாக ஆடி 177 ரன்களை குவித்தார். இவருடன் விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் 63 ரன்களை குவித்தார்.

    இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 44.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 307 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் சார்பில் டஸ்கின் அகமது முஸ்தாஃபிசுர் ரகுமான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ×