search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 175142"

    • விதை, உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் குடிமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
    • நுண்ணுாட்ட சத்துக்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் பகுதிகளில் பருவ மழை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் உழவுப்பணியை துவக்கியுள்ளனர்.பயிர் சாகுபடிக்கு தேவையான, விதை, உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் குடிமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:-

    உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், தமிழக முதல்வரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் மற்றும்விதை கிராமத்திட்டத்தின் வாயிலாக வேளாண் இடுபொருட்களான, விதைகள், நுண்ணுயிர் உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள வேளாண் விரிவாக்க மைய கிடங்குகளில், மக்காச்சோளம் கோ.எச்.எம்.,8, சோளம், கோ-32, கம்பு, கோ-10, உளுந்து, வம்பன் 8,9, பாசிபயறு, கோ-8, கொண்டைக்கடலை என்.பி.ஜி., -119, 47, நிலக்கடலை - தரணி ரக விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    மேலும் நுண்ணுயிர் உரங்களான, அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியம், திட வடிவத்திலும், திரவ நிலையிலும் இருப்புள்ளது.நுண்Èட்ட உரங்களான தானிய வகை, பயறு வகை,பருத்தி வகைநுண்ணுாட்டங்களும் தேவையான அளவு இருப்பு உள்ளது.தேவைப்படும் விவசாயிகள், சிட்டா, ஆதார் அட்டை நகலுடன் வந்து, மானிய விலையில், விதை,உரங்களை பெற்றுபயனடையலாம்.

    மேலும் தென்னை மரத்திற்குநுண்Èட்டச்சத்து பற்றாக்குறையால் குரும்பை உதிர்வதை தடுக்க நுண்Èட்ட உரம் இடுவதற்கு சரியான தருணமாகும்.ஒரு தென்னை மரத்திற்கு, 6 மாதத்திற்கு ஒரு முறை அரைக்கிலோ இட வேண்டும். குடிமங்கலம் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், விவசாயிகளுக்கு தேவையான தென்னை நுண்ணுாட்ட உரமும், போதிய அளவு இருப்பு உள்ளது. இதனையும்,தென்னை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    • மேயர் தினேஷ்குமார் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • மார்க்கெட்டில் தேங்கியுள்ள கழிவு நீர் மற்றும் சகதிகளை அகற்றி சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தென்னம்பாளையம் சந்தை பகுதியில் மழையின் காரணமாக, சுகாதார சீர்கேடு மற்றும் பழுதடைந்த பகுதிகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து நேற்று காலை மேயர் தினேஷ்குமார் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகளிடம் 24 மணி நேரத்தில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து தென்னம்பாளையம் மார்க்கெட்டில் தேங்கியுள்ள கழிவு நீர் மற்றும் சகதிகளை அகற்றி சுத்தம் செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு தென்னம்பாளையம் மார்க்கெட் சுத்தம் செய்யும் பணி இரவு நடைபெற்றது. அந்த பணியினை மேயர் தினேஷ்குமார் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். பணிகள் அனைத்தையும் விரைந்து விரைந்து முடித்து விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் முடித்துக் கொடுக்க உத்தரவிட்டார்.

    நேற்று காலை ஆய்வு செய்து இரவோடு இரவாக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய மேயரின் செயலை விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பாராட்டினர்.

    • பாம்பு கடித்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீகாளஹஸ்தி :

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்துள்ள கே.வி.பி.புரம் மண்டலம் திகுவபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செஞ்சய்யா. விவசாயி. இவரது மகன் பசவையா (வயது 7). அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்கள் தங்கள் நிலத்தில் வீடுகட்டி வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று செஞ்சய்யா மற்றும் குடும்பத்தினர் நிலத்தில் விவசாய வேலைசெய்து கொண்டிருந்தனர். சிறுவன் பசவையா வீட்டின் அருகே இருந்துள்ளான். அப்போது அவனை பாம்பு கடித்துள்ளது.

    உடனடியாக அவனை சிகிச்சைக்காக, தந்தை செஞ்சய்யா கே.வி.பி. புரம் முதன்மை சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் சிறுவன் இறந்துவிட்டான்.

    அதைத்தொடர்ந்து சிறுவனின் உடலை வீட்டுக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக 108 ஆம்புலன்சை அணுகியபோது அவர்கள் சிறுவனின் உடலை ஏற்றிச்செல்ல மறுத்துவிட்டனர். இதேபோல் ஆட்டோ உள்ளிட்ட வாகன டிரைவர்களும் மறுத்துவிட்டனர்.

    இதனால் வேறு வழியின்றி மகன் பசவையாவின் உடலை, அவனது தந்தை செஞ்சய்யா தனது தோளிலேயே சுமந்து வீட்டிற்கு கொண்டு சென்றார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கிலோ ஒன்றுக்கு ரூபாய் 200 வழங்கிட வேண்டும்
    • அரசே ரப்பரை கொள்முதல் செய்ய வேண்டும்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு தாலுகாவில் அதிக அளவு ரப்பர் பயிரிடப்படுகிறது. இங்கு பயிரிடப்படும் ரப்பர் வெளிநாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இங்கு உள்ள ரப்பர்தான் உயர்தர வகையை சார்ந்தது. ரப்பர் விவசாயிகள் நலனை பாதுகாக்க கிலோ ஒன்றுக்கு ரூபாய் 200 வழங்கிட வேண்டும், அரசே ரப்பரை கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் குலசேகரத்தில் தர்ணா போராட்டம் நடந்தது.

    தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தை வாபஸ் வாங்க கேட்டும் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்தை கைவிட வேண்டும். பால் வடிப்பு தொழிலாளர்களுக்கு மழை கால நிவாரணம் ரூ.5ஆயிரம், ஒரு மாத கால ரேஷன் இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தர்ணா போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சேகர் தொடக்க உரை ஆற்றினார்.மாவட்ட செயலாளர் ரவி, மாவட்ட துணை தலைவர் முருகேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தர்ணா போராட்டத்துக்கு மாவட்ட நிர்வாகி வின்சென்ட், களியல் பேரூராட்சி தலைவர் ஜூலிட், திற்பரப்பு பேரூராட்சி துணை தலைவர் ஸ்டாலின்தாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர்கள் வில்சன், விஸ்வம்பரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கிணற்று பாசனத்திற்கு பல்வேறு வகையான காய்கறி பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
    • விளைவித்த காய்கறிகளை உடுமலை உழவர் சந்தை மற்றும் தனசரி சந்தையில் விற்பனை செய்கின்றனர்.

    உடுமலை :

    உடுமலை வட்டாரத்தில் கிணற்று பாசனத்திற்கு பல்வேறு வகையான காய்கறி பயிர்களும் பயிரிடப்படுகின்றன.

    இதில் விவசாயிகள் தங்கள் விளைவித்த காய்கறிகளை உடுமலை உழவர் சந்தை மற்றும் தனசரி சந்தையில் விற்பனை செய்கின்றனர். இந்த சீசனில் வெண்டைக்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறும்போது; வெண்டை சாகுபடியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்கள் அறுவடைக்கு வரும் தற்போது 16 கிலோ கொண்டபை ஒன்று ரூபாய் 500 முதல் 600 வரை விற்பனையாகிறது. வெங்காயம் தக்காளி உள்ளிட்ட சாகுபடியில் கடந்த சீசனில் விலை கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டது.

    இதில் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். தற்போது வெண்டைக்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது என தெரிவித்தனர்.

    • கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியை www.pmfby.gov.in அணுக வேண்டுகோள்
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பருவ மழை காலங்களில் வெள்ளம் , புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாயிகள் பாதிக்கப்படும்போது அவர்களின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பாதுகாத்திடும் வகையில் முதல் அமைச்சர் உத்தரவின்படி 2022 - 2023-ம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு வரவு - செலவு திட்டத்தில் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் கும்பப்பூ பருவத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நெற்பயிருக்கு வருகிற 15.12.2022 தேதி வரை காப்பீடு செய்யலாம். காப்பீட்டுக் கட்டணமாக நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 515 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே , கும்பப்பூ பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிருக்கு தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு வங்கிகளில் 1 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களில் ( இ - சேவை மையங்கள் ) தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள " விவசாயிகள் கார்னரில் " நேரிடையாக காப்பீடு செய்யலாம் . முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம் , கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ - அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் பயிர்களை சாகுபடி செய்துவரும் விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது பயிரை காப்பீடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியை www.pmfby.gov.in அணுகவும். வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வங்கிகளையோ அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சீதோஷ்ண நிலை இருப்பதால் காலிபிளவர் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
    • பண்ணைகளில் நாற்று 1-க்கு 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர், பல்லடம் சுற்றுப்பகுதியிலும் மிதமான சீதோஷ்ண நிலை இருப்பதால் காலிபிளவர் சாகுபடிக்கு ஏதுவாக உள்ளதால் விவசாயிகள் காலிபிளவர் சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.

    குறைந்த அளவு தண்ணீரில் விளையக் கூடிய பயிராகவும் விவசாயிகளுக்கு தினமும் ஏற்படும் பணத்தேவையை தீர்க்கும் பயிராகவும் காலிபிளவர் உள்ளது. காலிபிளவர் நாற்றுகளை, தனியார் நாற்று பண்ணைகளில் நாற்று 1-க்கு 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 ஏக்கருக்கு 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் நாற்றுகள் வரை நடவு செய்யலாம். காலிபிளவர் சாகுபடியில் பூச்சி தாக்குதல்களுக்கு 2 முறை மருந்து தெளித்து, குறிப்பிட்டநாள் இடைவெளியில், நீரில் கரையும் உரங்களை காலிபிளவர் செடியின் வளர்ச்சிக்காக உபயோக்கின்றனர். காலிபிளவர் செடிநட்ட 80-வது நாளில் இருந்து காலிபிளவர் பூ அறுவடை செய்யலாம். தற்போது மார்க்கெட்டில் காலிபிளவர் 1 கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகிறது.

    • அரசினால் கிலோவிற்கு ரூ.30 மானியம் வழங்கப்படுகிறது.
    • 105 முதல் 110 நாட்கள் வயது உள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.பொன்னுசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் வட்டாரத்தில் உள்ள வெள்ளகோவில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வரும் ராபி பருவத்தில் விதைப்பதற்கு ஏற்ற தானியம் மற்றும் தீவன பயிருக்கு ஏற்ற கோ 32 சோளம் தேவையான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த ரகத்திற்கு அரசினால் கிலோவிற்கு ரூ.30 மானியம் வழங்கப்படுகிறது. இந்த ரகமானது 105 முதல் 110 நாட்கள் வயது உள்ளது. இது இறவை மற்றும் மானாவாரிக்கு ஏற்றது. தானியத்திற்கு விதைப்பு செய்தால் எக்டருக்கு 2 ஆயிரத்து 445 கிலோவும், தீவனம் பயிரிட்டால் எக்டருக்கு 6 ஆயிரத்து 490 கிலோவும் மகசூல் தரக்கூடியது.

    ஆகவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான கோ 32 சோளத்தினை மானிய விலையில் பெற்று பயிர் செய்து உயர் விளைச்சல் பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விவசாயிகளுக்கு வழங்கப்படும், அனைத்து திட்டங்களையும் செயல்படுத்ததுறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • அனைத்து பயன்களையும் பெற விவசாயிகள் இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும்.

     திருப்பூர் :

    தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை மூலம் வழங்கப்படும் அனைத்து திட்டப் பலன்களும் இணைய வழியில் பதிவு செய்யும்விவசாயிகளுக்கே வழங்கப்படும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தோட்டக்கலைத்துறை மூலம், விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டங்களில் விவசாயிகளுக்கு மானியங்களும் வழங்கப்படுகின்றன. தற்போதைய, 2022-23ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும், அனைத்து திட்டங்களையும் செயல்படுத்ததுறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து பயன்களையும் பெற விவசாயிகள் இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும்.

    தற்போது, விவசாயிகள் இச்சேவையை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இணையதளம் மூலம்விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே, அனைத்து பலன்களும் வழங்க இயலும் நிலை உள்ளதால்இதற்காக விவசாயிகள் ,http:/tnhorticulture.tngov.in/tnhortnet/registration-new.phpஇணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யத்தெரியாத, இயலாத விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள, தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். என கலெக்டர் தெரிவித்துள்ளார்.   

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறிக்கை
    • வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு பிப்ரவரி 28 - ந் தேதி வரை பிரீமியம் செலுத்தலாம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட் டத்தில் முக்கிய தோட்டக் கலை பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள முக்கிய பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி போன்ற பயிர்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    சுமார் 5063 ஹெக்டர் பரப்பளவில் வாழை மற்றும் 1437 ஹெக்டர் பரப்பளவில் மரவள்ளி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பயிர்கள் சாகுபடி செய்யும்போது ஏற்படும் இடர்பாடுகளான நடவு செய்ய இயலாமை, மழை பொய்த்தல் , வெள்ளம், கடும் வறட்சி, தொடர் வறண்ட நிலவரம், நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை, புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் இழப்பு ஏற்படும் போது காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படு கிறது.

    பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே வகையான காலக்கெடு வழங்கப்படுகிறது. குத்தகை விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் காப்பீடு செய்து பயன் பெற லாம். வாழை விவ சாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,182 பிரீமியமாக செலுத்தி ரூ. 83,650 இழப்பீடாகவும், மரவள்ளி விவசாயிகள் ஏக்கருக்கு பிரிமியமாக ரூ.1420 செலுத்தி ரூ.28,400 இழப்பீடா கவும் பெறலாம்.

    கடன் பெறும் விவ சாயிகளுக்கு பிரீமியம் தொகையை அந்தந்த கடன் வழங்கும் வங்கிகள் மூலம் பிடித்தம் செய்து காப்பீட்டு நிறுவ னங்களுக்கு செலுத்தலாம். கடன் பெறாத விவசாயிகள் தங்களது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் பிரீமியம் செலுத்தலாம். அருகாமையிலுள்ள தேவையான ஆவணங்கள் நிலத்தீர்வை ரசீது மற்றும் அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை, புகைப்படம், காப்பீடு செய்வதற்கான காலக்கெடு விபரம், வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு பிப்ரவரி 28 - ந் தேதி வரை பிரீமியம் செலுத்தலாம்.

    மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலு வலகங்களை அணுகி பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டு உள்ளது.

    • விவசாய குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
    • கலெக்டர் அலுவலகத்தில்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். வேப்பந்தட்டை தாலுகா, மாவிலங்கை கிராமத்தை சேர்ந்த வெங்கடாஜலம் என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் சகோதரர்கள் குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். அப்போது வெங்கடாஜலத்தின் மூத்த மகள் சிவரஞ்சனி திடீரென்று பையில் வைத்திருந்த கேனை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெய்யை தீ குளித்து தற்கொலை செய்வதற்காக தனது உடல் மீதும், குடும்பத்தினர் மீது ஊற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்தனர்.

    இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களின் வயலுக்கு அருகில் உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தினை வயலுக்கு சென்று வர பாதையாக பயன்படுத்தி வந்ததாகவும், இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் அந்த பாதையை ஆக்கிரமித்து சுவர் எழுப்பியும், மண் வெட்டி கரை எழுப்பியும் அடைத்துள்ளனர். இதனால் அவர்களால் விவசாயம் செய்ய வயலுக்கு செல்ல முடியவில்லையாம். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் அந்த குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தங்களது வயலுக்கு பாதை அமைத்து கொடுக்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்பதற்கு தீ குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக மண்எண்ணெய் கொண்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர்களில் சிலர் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டு சென்றனர்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • நீர்வழிப் பாதையை அளவீடு செய்வதே பெரும் போராட்டமாக உள்ளது.

    உடுமலை :

    உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-

    மவுனகுருசாமி:பூளவாடி உள்ளிட்ட பகுதிகளில் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்வழிப் பாதையை அளவீடு செய்வதே பெரும் போராட்டமாக உள்ளது. அதற்கென தனி அளவையர் நியமிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் மூலம் அளவீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும். பூளவாடி ஊராட்சியில் 10 கிலோ மீட்டருக்கு மேல் மண் சாலைகளாக உள்ளது.அவற்றை தார்சாலைகளாக மாற்ற வேண்டும்.

    பரமசிவம்: நாய்கள் தொல்லை அதிகரித்து விட்ட நிலையில் எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் வெறி நாய்க்கடி தடுப்பூசி போட வேண்டும். எலையமுத்தூர் பகுதியில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று பல ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்ததுடன் தண்ணீர் திருட்டிலும் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகள் போராடும் நிலை ஏற்படும். ஜம்புக்கல் கரடு மலைப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை ஆவணங்களின் அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரணி வாய்க்கால் பாசனத்துக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேப்போல் பல்வேறு விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    ×