search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 175142"

    • சிவப்பு மிளகாய் பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
    • துணை தோட்டக்கலை அலுவலரை தொடர்பு ெகாள்ளலாம்

    அரியலூர்

    பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் அரியலூர் மாவட்டத்தில் மத்திய-மாநில அரசுகளின் மானியத்துடன் ரபி பருவத்தில் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் அனைவரும் நடப்பு ரபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள சிவப்பு மிளகாய் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம். மேலும் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பு மற்றும் பாதிப்புகளில் இருந்து வாழ்வாதாரத்தினையும், பொருளாதார இழப்பினையும் பாதுகாக்க பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறலாம். பயிர் காப்பீடு செய்வதற்கு ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. தகவல்களுடன் கூடிய புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சிட்டா நகல், நடப்பு பயிர் சாகுபடி அடங்கல், முன் மொழிவுப் படிவம் ஆகியவற்றை கொண்டு தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் காப்பீடு கட்டணம் செலுத்தலாம். தனியார் நிறுவனத்தில் பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.885 செலுத்திட கடைசி நாள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு அரியலூர் துணை தோட்டக்கலை அலுவலரை 9943841155 என்ற செல்போன் எண்ணிலும், திருமானூர் தோட்டக்கலை அலுவலரை 8760531338 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது."

    • கன்னியாகுமரி விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் தகவல்
    • நெல்-98, வெண்டை - 99, எள்-97, கேழ்வரகு-97, நிலக்கடலை, பீட்ரூட், முருங்கை-96,காரட், பீன்ஸ், கீரை, மல்லி-95 மற்றும் இதர பயிர்களுக்கு-98 என்ற சதவீதங்கள் அளவில் புறத்தூய்மை இருத்தல் வேண்டும்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் விதைகள் அதிக அளவு சுத்தத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். பயிர் அறுவடை முடிந்து பிரிக்கப்பட்டு எடுக்கப்படும் விதை குவியல்களிலிருந்து கிடைக்கும் விதைகளை உடனடியாக விற்பனைக்கோ, நடவு செய்வதற்கோ தகுதியானதாக இருக்காது.

    அந்த விதைகளுடன் மண், சிறுகற்கள், இலைகளின் துகள்கள், குச்சி, சாவி விதைகள் கலந்து இருக்கும். எனவே இந்த விதைகளை சுத்தமாகவும், பிற பொருட்கள் கலப்பு இன்றியும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். சுத்தமான விதைகள் விதைப்பின் போது சீராக விதைப்பதற்கும் வேண்டிய அளவு பயிர் எண்ணிக்கை பராமரிப்பதற்கும் எளிதாக அமையும். நாகர்கோவில் விதை பரிசோதனை நிலையத்தில் விதைகளுக்கு புறத்தூய்மை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. புறத்தூய்மை சோதனையின் போது தூய விதைகள், களை விதைகள், பிறரக விதைகள் மற்றும் உயிர்ப்பற்ற பொருட்கள் கலந்து உள்ளனவா என கண்டறியப்படுகிறது. ஒவ்வொரு பயிருக்கும் குறைந்த பட்ச தரங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நெல்-98, வெண்டை - 99, எள்-97, கேழ்வரகு-97, நிலக்கடலை, பீட்ரூட், முருங்கை-96,காரட், பீன்ஸ், கீரை, மல்லி-95 மற்றும் இதர பயிர்களுக்கு-98 என்ற சதவீதங்கள் அளவில் புறத்தூய்மை இருத்தல் வேண்டும்.

    எனவே விதை மாதிரிகளில் புறத்தூய்மை பரிசோதனை செய்து நல்விதையாக விவசாயிகளுக்கு வழங்கி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எளிதில் பூச்சிகள் தாக்காத குணம் கொண்டதால் பராமரிப்பு மிகவும் குறைவாகக் கொண்ட பயிராகும்.
    • நல்ல லாபம் தரும் தொழிலாக கற்றாழை சாகுபடி இருக்கும்.

    உடுமலை :

    கடுமையான வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது கற்றாழை. குறைந்த அளவு நீரில் கரடு முரடான நிலத்திலும் வளர்ந்து பலன் தரக்கூடிய மூலிகைத்தாவரம் கற்றாழை ஆகும். எளிதில் பூச்சிகள் தாக்காத குணம் கொண்டதால் பராமரிப்பு மிகவும் குறைவாகக் கொண்ட பயிராகும்.

    அழகு சாதனப்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் பிடிக்கும் கற்றாழை சாகுபடியில் வேளாண் துறையினர் போதிய வழிகாட்டல் இருந்தால் நல்ல லாபம் தரும் தொழிலாக கற்றாழை சாகுபடி இருக்கும்.

    இந்தநிலையில் உடுமலையையடுத்த போடிபட்டி பகுதியில் தென்னந்தோப்பில் கற்றாழை சாகுபடி செய்துள்ள விவசாயி ராமநாதன் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டிராக்டர் ஏர்க்கலப்பையில் சிக்கியநிலையில் கற்றாழை செடி ஓன்று தோட்டத்துக்கு வந்து சேர்ந்தது.

    அதிலிருந்து கிளைவிட்ட நாற்றுகளை பிரித்து தோட்டத்தில் நடத்தொடங்கினேன். இவ்வாறு படிப்படியாக வளர்ந்து தோட்டம் முழுவதும் தற்பொழுது கற்றாழை வளரத்தொடங்கியுள்ளது. சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மருந்துக்காக கற்றாழையை வாங்கிச் செல்கிறார்கள். அவர்களிடம் பணம் எதுவும் வாங்குவதில்லை.

    மேலும் தென்னை மரங்களைச் சுற்றி பாத்தி போல் பள்ளம் தோண்டி அதில் கற்றாழையை வெட்டி போடுகிறோம். இதனால் தென்னையில் வேர்ப்புழு உள்ளிட்ட நோய்களின் தாக்குதல் குறைவாக உள்ளது. தென்னை மரங்களுக்கு பூச்சி மருந்தாகவும் உரமாகவும் கற்றாழை பயன்படுகிறது.

    மேலும் நன்கு வளர்ந்த கற்றாழைகளை 8 மாதங்களில் அறுவடை செய்யலாம். மேலும் வெட்டப்பட்ட கற்றாழை இதழ்களை ஒரு கிலோ ரூ. 10 முதல் ரூ .20 வரை விற்பனை செய்யலாம் எனவும், அதிலிருந்து ஜெல்லை பிரித்து விற்பனை செய்தால் கிலோ ரூ. 80 வரை விற்பனை செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.

    ஆனால் சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரியவில்லை. மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் இருந்தால் கற்றாழை சாகுபடி நல்ல லாபம் தரக்கூடிய தொழிலாக மாறும் என்று கூறினார்.

    • மழையாலும், பனியாலும் பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்தது.
    • ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் செலுத்தி காப்பீடு செய்திருந்தார்.

    வேலூர் :

    வேலூர் மாவட்டம் கெங்காரெட்டி பள்ளியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் 5 ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தார். அதற்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் செலுத்தி காப்பீடு செய்திருந்தார். நெற்பயிர் நன்கு வளர்ந்திருந்தது.

    இந்த நிலையில் தற்போது பெய்த மழையாலும், பனியாலும் பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்தது. இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவிக்க ஒரு மாதமாக அலைந்துள்ளார். ஆனால் வேளாண்மைத் துறையும், காப்பீட்டு நிறுவனமும் காப்பீடு வழங்காமல் அவரை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் வேளாண்மைத்துறையின் கவனத்தை ஈர்க்க 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மேலும் சேதமடைந்த நெற் பயிர்களை தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறை ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • புதுக்கோட்டை மாவட்ட மாநாடு நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு தனிதுறை ஒதுக்கி நலத்திட்டங்களை அமுல்படுத்த வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது.

    விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 9-ஆவது மாநாடு கீரனூரில் நடைபெற்றது. தோழர் மருதப்பா நினைவரங்கில் நடைபெற்ற மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். மணிவேல் கொடியேற்றினார். வரவேற்புக்குழுத் தலைவர் தங்கவேல் வரவேற்றார். மாநாட்டைத் தொடங்கி வைத்து மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், பொருளாளர் சண்முகம் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி மாநில செயலாளர் எம்.சின்னதுரை, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் உரையாற்றினர்.

    தமிழக அரசு வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீடும், மனைப்பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும் வழங்க வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதோடு புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். ஏழை மக்களுக்கான சமூக நலத்திட்டங்களை தொடர்ந்து அமுல்படுத்த வேண்டும்.

    தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு தனிதுறை ஒதுக்கி நலத்திட்டங்களை அமுல்படுத்த வேண்டும். மகாத்மாக காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும். அவர்களுக்கு வருடத்திற்கு நூறுநாள் வேலையும், நிர்ணயிக்கப்பட்ட கூலியை குறைக்காமலும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 24-ந் தேதி இரவு படுதா ர்கொல்லை ஏரியில் குளிக்க செல்வதாக நாராயணசாமி மனைவியுடன் கூறி சென்றார்.
    • முதியவர் பிணம் குறித்து, திரு.பட்டினம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் படுதார்கொல்லை ஏரியில் மிதந்த, முதியவர் பிணம் குறித்து, திரு.பட்டினம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் படுதா ர்கொல்லை முத்தாம் பள்ளம் பேட்டை ச்சேர்ந்தவர் நாரா யணசாமி (வயது70). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நாராயணசாமி மனைவியுன் வசித்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த 24-ந் தேதி இரவு படுதா ர்கொல்லை ஏரியில் குளிக்க செல்வதாக நாராயணசாமி மனைவியுடன் கூறி சென்றார். நீண்டநேரம் ஆகியும் நாராயணசாமி வீட்டுக்கு வராததால், உறவினர்கள் ஏரி மற்றும் அதன் சுற்று பகுதியில் தேடினர். நாராயணசாமி கிடைக்கவில்லை.

    இந்நிலையில், நாராயண சாமி ஏரியில் பிணமாக மிதப்ப தாக திரு.பட்டினம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார், நாராயணசாமி உடலை கைபற்றி, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்க்கு பிரேத பரிசோதனை க்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயிகளுக்கு 1½ லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
    • பசுமை போர்வை இயக்கம் சார்பில் வழங்கப்படுகிறது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நீடித்த விவசாய நிலத்தில் பசுமை போர்வை இயக்கம் 2022-23-ன் கீழ் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வினியோகம் செய்ய அனைத்து வட்டாரங்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வனப்பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதத்திற்கு உயர்த்துவதற்காக தமிழக அரசு பண்ணை நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்திட தமிழ்நாடு நீடித்த பசுமை போர்வை இயக்கம் என்னும் திட்டத்தை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உழவன் செயலியில் பதிவு செய்த விவசாயிகளுக்கு பசுமை போர்வை திட்டத்தில் 1 லட்சத்து 65 ஆயிரம் மரக்கன்றுகள் இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது."

    • ஏ.டி.எம்., சென்டரில் 500 ரூபாய் நோட்டுகளாக 10 ஆயிரம் ரூபாய் கிடந்துள்ளது.
    • விவசாயி வரதராஜனின் நேர்மையை பாராட்டிய போலீசார், பணம் யாருடையது என விசாரித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் நெருப்பெரிச்சல் அடுத்த வாவிபாளையத்தை சேர்ந்தவர் வரதராஜன்(வயது 43). விவசாயி. இவர் அங்குள்ள கனரா வங்கி ஏ.டி.எம் சென்டரில் பணம் எடுக்க சென்றுள்ளார். ஏ.டி.எம்., சென்டரில் 500 ரூபாய் நோட்டுகளாக 10 ஆயிரம் ரூபாய் கிடந்துள்ளது. அதனை எடுத்த அவர் திருமுருகன் பூண்டி போலீசில் ஒப்படைத்தார்.விவசாயி வரதராஜனின் நேர்மையை பாராட்டிய போலீசார், பணம் யாருடையது என விசாரித்து வருகின்றனர்.

    • இயற்கை விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு நெல் திருவிழா நடத்தி அதன் மூலம் விலை இல்லா விதைகள் வழங்கி வருகிறார்.
    • 5 ஏக்கரில் அரிய வகை நெற்பயிரான ராஜமுடி நெல், சின்னார் 20 நெல் மற்றும் செங்கல்பட்டு சிறுமனி, சம்பா நெல் ரகத்தை சிவலிங்கம் மற்றும் இந்தியா வரைபடம் வடிவத்தில் பயிரிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர்.

    விவசாயியான பாஸ்கர் வரிச்சிகுடி கிராமத்தில் தனக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை விவசாய முறையில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, ராஜமுடி சின்னார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வருகிறார்.

    மேலும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு நெல் திருவிழா நடத்தி அதன் மூலம் விலை இல்லா விதைகள் வழங்கி வருகிறார்.

    இந்த நிலையில் அனைவரும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது வயலின் நடுவே 5 ஏக்கரில் அரிய வகை நெற்பயிரான ராஜமுடி நெல், சின்னார் 20 நெல் மற்றும் செங்கல்பட்டு சிறுமனி, சம்பா நெல் ரகத்தை சிவலிங்கம் மற்றும் இந்தியா வரைபடம் வடிவத்தில் பயிரிட்டுள்ளார்.

    அந்த நெற்பயிர்கள் அனைத்தும் தற்போது நன்றாக வளர்ந்துள்ளது. இது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

    • உரக்கடைகளை நாடி உரம் வாங்கி பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.
    • உரக்கடைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர் :

    குன்னத்தூரில் யூரியா உரம் வாங்க சென்ற விவசாயிகளிடம் மற்றொரு உரத்தை வாங்க வற்புறுத்திய உரக்கடை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் எழுந்துள்ளது.

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, குன்னத்தூர் வட்டாரங்களில் சோளப்பயிர் தற்போது முளைத்து வளரத் தொடங்கியுள்ளது. தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி யூரியா உரம் சீராக கொடுத்தால் பயிர் நல்ல வளர்ச்சி அடையும் என்று விவசாயிகள் எண்ணி, யூரியா உரம் வாங்க அருகில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு சென்றால் அங்கு இருப்பு இல்லை.

    இந்நிலையில், தனியார் உரக்கடைகளை நாடி உரம் வாங்கி பயன்படுத்த முயற்சிக்கின்றனர். குன்னத்தூரில் உள்ள உரக்கடைக்கு, விவசாயிகள் யூரியா உரம் வாங்க சென்றால், அங்கு பணியாளர் யூரியா உரம் தனியாக தர முடியாது. மற்றொரு உரமும் சேர்ந்து வாங்கினால்தான் தர முடியும். இல்லையென்றால் இரண்டுக்கும் சேர்ந்து ரூ.1100 கொடுத்தால்தான் யூரியா 1 மூட்டை தருவேன் என்று கறாராக சொல்லி அனுப்பிவிட்டார். இது போன்று விவசாயிகள் பலரும் ஏமாற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் இது தொடர்பாக முறையிட்டபோது, யாரிடம் வேண்டுமானால் புகார் அளித்து கொள்ளுங்கள் என பேசினார். யூரியா உரம் கேட்டுச்செல்லும் விவசாயிகளிடம் தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிற உரக்கடைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தேவையான உரங்கள் இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்துக்கும், வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கும் புகார் அனுப்ப உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • 61890 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு 8336 தேங்காய் உற்பத்தியாகிறது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தை பொறுத்தவரை 61890 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டப்பட்டு சந்தைகளுக்கும், கொப்பரையாகவும் பருப்பாக மாற்றப்பட்டு வியாபாரிகள் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் எண்ணெய் உற்பத்திக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு 8336 தேங்காய் உற்பத்தியாகிறது. இது மற்ற மாவட்டங்களை காட்டிலும் சற்று குறைவான உற்பத்தியாக உள்ளது.

    திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட தேங்காய் உலர்களங்கள் உள்ளன. மேலும் 50க்கும் மேற்பட்ட எண்ணெய் ஆலைகள் மூலம் எண்ணெய் பிழியப் பட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்கள் பலவற்றுக்கும் டேங்கர் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.49 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது. வெள்ளக்கோவில், லாலாபோட்டை, வாணியம்பாடி, முத்தம்பட்டி, திருச்சி, கரூர், வாகரை, தேவத்தூர் பகுதி விவசாயிகள் 140 பேர், 64 ஆயிரம் கிலோ எடை கொண்ட 1264 தேங்காய் பருப்பு மூட்டைகளை, வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    விற்பனைக்கூட கண்காணிப்பாளர் முன்னிலையில் முத்தூர், வெள்ள கோவில், காங்கேயம், ஊத்துக்குளி பகுதி எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் 19 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் தரமான முதல் தர பருப்பு கடந்த மாதத்தை காட்டிலும் ரூ.6 அதிகரித்து அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.86.40 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ரூ.4 அதிகரித்து ஒரு கிலோ ரூ.60.80 ரூபாய்க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.49 லட்சது 11 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

    தற்போது முகூர்த்த தினங்கள் வரவுள்ள நிலையில் தேங்காய் விலையும் தேங்காய் பருப்பு விலையும் கடகடவென சரிந்து வந்த நிலையில், இந்த வாரம் சற்றே விவசாயிகள் நிம்மதி அடையும் வகையில் விலை உயர்ந்துள்ளது. மேலும் எண்ணெய் விலைகளும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.
    • னியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி உள்ளது.

    அதன்படி வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் மானியவிலையில் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம், வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டத்தின் மூலம் 2022-23 ம் ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் கருவிகள் வழங்குவது, வாடகைக்கு விடும் மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அதிகபட்சமாக டிராக்டருக்கு ரூ.4.25 லட்சம் , விசையால் களை எடுக்கும் கருவிகள் 35 ஆயிரம் , ரோட்டவெட்டரான சூழற்கலப்பைகள் 45 ஆயிரம் ரூபாய், விசைத் தெளிப்பான் கருவிகள் ரூ.3,100 ரூபாய் அல்லது மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    இதர விவசாயிகளுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகபட்ச மானியம் அல்லது மொத்த விலையில் 40 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். தனிப்பட்ட வேளாண் எந்திரங்களை மானியத்தில் விவசாயிகள் பெற்றிடும் வகையில் 5 டிராக்டர்கள் 8 பவர்டில்லர்கள், 1 விசையால் களையெடுக்கும் கருவிகள், 3 ரோட்டவேட்டர், தட்டு வெட்டும் கருவி 4, தென்னை மட்டை துகளாக்கும் கருவி 2, இரண்டு விசைத் தெளிப்பான்கள் ஆகியவற்றிற்கு 29 லட்சத்து 53 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அந்தந்த பகுதி விவசாயிகள் மானிய விலையில் வேளாண் கருவிகளை பெற்றிட அந்தந்த பகுதிக்கான உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் உரிய விண்ணப்பத்தினை அளித்து மூதுரிமை அடிப்படையில் விவசாயிகள் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு, திருப்பூர் உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறுப்பு ) ஆர்.சுப்பிரமணியனின் செல்போன் எண் 9942703222, தாராபுரம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் , 7904087490, உடுமலை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் முத்துராமலிங்கம் , 9865497731 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வேளாண்மைப்பொறியியல் துறை மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உழவு பணிகள், அறுவடைப்பணிகள், நிலம் சமன்படுத்தும் பணிகள் மேற்கொள்ள குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் கருவிகள் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    விவசாய நிலத்தில் உழவு பணிக்கு தேவைப்படும் டிராக்டர் (உழவுக்கருவியுடன்) 1 மணி நேரத்திற்கு ரூ.500 வாடகையிலும், மண் தள்ளும் இயந்திரம் 1 மணி நேரத்திற்கு ரூ.1,230 ம், சக்கரவகை மண் அள்ளும் இயந்திரம் 1 மணி நேரத்திற்கு ரூ.890 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனத்துடன் இயங்கக்கூடிய தேங்காய் பறிக்கும் எந்திரம் 1 மணி நேரத்திற்கு ரூ.450 என்ற வாடகையிலும் வழங்க வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மேற்கண்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு தேவைப்படும் விவசாயிகள் இ- வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்து முன்பணம் செலுத்தி பயன்பெற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    வேளாண்மைப்பொறியியல் துறையின் மூலம் நில நீர் ஆய்வுக்கருவியின் உதவியால் நிலத்தடி நீர்மட்டத்தை அறிந்து கொள்ளதிருப்பூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை விவசாய பெருமக்கள்பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவசாயம்நிலங்களுக்கு ரூ.500 வீதம் மற்றும் விவசாயம் அல்லாத பணிகளுக்குரூ.1000 கட்டணமாக உழவன் செயலி (UZHAVAN APP) மூலம்அரசுக்கு செலுத்தப்பட வேண்டும்.இது தொடர்பாக செயற்பொறியாளர் (வே.பொ) வேளாண்மைப் பொறியியல் துறை, திருப்பூர் அலுவலகத்தின் உதவிப்புவியியலாளர் அஞ்சனா மேத்யூவை 7994162692 தொடர்பு கொண்டுபயன்பெறுமாறு கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×