search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம்"

    • தப்பி செல்ல முயன்ற வரை போலீசார் தடுத்து நிறுத்தினர்
    • 2 ஆட்டோக்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக மாணவ-மாணவிகளை ஏற்றி செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் செல்லச்சாமி தலைமை யிலான போலீசார் இன்று காலை கேப் ரோடு மற்றும் ராமன்புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த ஆட்டோக்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதிக மாணவிகளை ஏற்றி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து 2 ஆட்டோக்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு ஆட்டோ 2-வது முறையாக சிக்கியது தெரியவந்தது. அந்த ஆட்டோ டிரைவருக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப் பட்டது. ஹெல்மெட் அணி யாமல் வந்த வாலிபர்களை யும் தடுத்து நிறுத்தி போலீசார் அபராதம் விதித்தனர். செல்போன் பேசிக்கொண்டு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். போலீசை பார்த்த தும் அவர் தப்பி செல்ல முயன்றார். போலீசார் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி அவருக்கு அபராதம் விதித்தனர். ஹெல்மெட் அணியாததற்கு ரூ.1000, செல்போனில் பேசியதற்கு ரூ.1000 என ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், செல்போன் பேசி விட்டு வாகனம் ஓட்டினால் முதல் முறை என்பதால் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2-வது முறை சிக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடித்து வாகனம் ஓட்ட வேண்டும். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது உயிருக்கு ஆபத்தானதாகும். எனவே அரசின் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்றார்.

    • அந்த வழியாக வந்த வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • பலியான வெங்கடேசனுக்கு சிந்து என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் ராஜாவூர் அருகே உள கோழிக்கொண்டு பொத்தை பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் வெங்டேசன் (வயது 46).

    இவர், கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு இவர் கடையை அடைத்ததும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர் வீட்டுக்குச் செல்லாமல், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூர் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டார். இதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். நேற்று இரவு முப்பந்தல் பேரிகார்டு அருகே வெங்கடேசன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்பது பற்றி விசாரித்து வருகின்றனர். பலியான வெங்கடேசனுக்கு சிந்து என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

    • பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ள பக்தர்கள் குடும்பத்தோடு வந்திருந்தனர்
    • சப்பரத்தை தூக்கி வந்த அறநிலைய துறை ஊழியர்கள் 4 பேரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலையன் சாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் தரிசனத்திற்கு வந்து செல்கிறார்கள். கோவிலில் பிரதோஷ தினத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள். குறிப்பாக சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆனி மாதம் சனிக்கிழமையான நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ள பக்தர்கள் குடும்பத்தோடு வந்திருந்தனர். பெண்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது.

    பிரதோஷ வழிபாடுகள் முடிவடைந்ததும் சுவாமி, வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுவாமி வாகனம் கோவிலை சுற்றி 3 முறை கொண்டு வரப்படுவது வழக்கம். அதன்படி கோவிலை சுற்றி சுவாமி வாகனத்தை எடுத்து வந்தனர். 2-வது சுற்று வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சுவாமி வாகனம் கவிழ்ந்தது. அதில் இருந்த விக்கிரகங்களும் சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து அர்ச்சகர்கள் உடனடியாக சுவாமி சப்பரத்தை சரி செய்து மீண்டும் 3-வது சுற்றாக கோவிலை சுற்றி கொண்டு வந்தனர். சுவாமி வீதி உலாவின்போது சப்பரம் கவிழ்ந்து விக்கிரகங்கள் கீழே விழுந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் ஏதோ அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். சப்பரத்தை தூக்கி வந்த அறநிலைய துறை ஊழியர்கள் 4 பேரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இணை ஆணையர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

    • நகராட்சி பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது
    • 10 பேட்டரி வாகனங்கள் உள்ள நிலையில் ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் வாயிலாக புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு குப்பை சேகரிக்க புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.வளர்ந்து வரும் நகரங்களில் குப்பை அகற்றுவது பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. உடுமலை நகராட்சி பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது.இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் உடுமலை நகராட்சியில் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் வாயிலாக வீடுகள் ,வணிகம் நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பை சிறிய அளவிலான பேட்டரி வாகனங்கள் வாயிலாக பெரிய வாகனங்கள் மற்றும் நுண் உர குடில்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.ஏற்கனவே நகராட்சியில் 10 பேட்டரி வாகனங்கள் உள்ள நிலையில் ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் வாயிலாக புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

    அதிகாரிகள் கூறுகையில்,தற்போது 7வாகனங்கள் வந்துள்ளன. மேலும் 3 வாகனங்கள் வாங்க வேண்டி உள்ளது . விரைவில் தூய்மைப் பணிக்கு இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்றனர்.இந்த புதிய பேட்டரி வாகனங்களின் வருகையால் நகரின் குப்பை பிரச்சனை தீர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள், சுந்தருக்கு தகவல் தெரிவித்தனா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வெள்ளமாசி வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தா்(வயது32). இவரது வீட்டு முன் 2இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதிகாலையில் திடீரென இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள், சுந்தருக்கு தகவல் தெரிவித்தனா்.

    இதையடுத்து வீட்டிலிருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை அவா் ஆய்வு செய்த போது, மூகமுடி அணிந்து வந்த மா்ம நபா் தீ வைத்து விட்டுச் சென்றது தெரியவந்தது.

    இதைத் தொடா்ந்து, உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், நாகாச்சி கிராமத்தை சோ்ந்த ஹரீஸ் (25) வாகனங்களுக்கு தீ வைத்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • இளங்கோ மனைவி அருள்மதிக்கு 4 சக்கர வாகனம் வழங்கப்பட்டது.
    • நிவேதா முருகன் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. நிவேதா முருகன் முன்னிலையில் அனைத்து துறையை சார்ந்த அதிகபட்ச மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    இதில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மீனவ பயனாளிக்கு ரூ. 20 லட்சம் மதிப்பிலான குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம் ரூ.8 லட்சம் மானிய தொகையில் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவ கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த இளங்கோ மனைவி அருள்மதிக்கு வழங்கப்பட்டது.

    இதனை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

    இணை இயக்குநர் இளம்வழுதி, உதவி இயக்குநர் ராஜேஷ்குமார், ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பயனாளியின் பயன்பாட்டிற்கு வழங்கினர்.

    • அந்த பாலத்திற்கு மாறாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது.
    • பழுதடைந்த பாதையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பேராவூரணி:

    பேராவூரணி - பட்டுக்கோட்டை சாலையில் பழமையான பூனைகுத்தி காட்டாற்று பாலம் உள்ளது. மழை காலங்களில் பாலத்தின் மீது தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து துண்டிக்கப்படும்.

    இதனால் அங்கு உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து அங்கு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதனால் அந்த பாலத்திற்கு மாறாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது.

    அந்த மாற்றுப்பாதை வழியாக தினமும் இருசக்கர, நான்கு சக்கர உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில், இந்த மாற்றுப்பாதை ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது.இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்களில் செல்பவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே, உடனடியாக அந்த பழுதடைந்த பாதையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கடந்த 2-ந்தேதி மாலை மலரில் செய்தி வெளியானது.

    இதன் எதிரொலியாக தற்போது அந்த பழுதடைந்த சாலையில் தார்சாலை போடப்பட்டுள்ளது.

    இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பள்ளிகள் திறப்பதற்கு சில தினங்களே உள்ள நிலையில் தார்சாலை அமைத்து தந்த அதிகாரிகளை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வெகுவாய் பாராட்டினர்.

    • சாலையோரத்தில் நடந்து சென்ற முதியவர் மீது வாகனம் மோதி விட்டது.
    • சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடி குமுளை அருகே பைபாஸ் சாலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் சாலையோரத்தில் நடந்து சென்ற முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயம் அடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை. இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திரு விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 10 நாட்களாக நடந்து வந்த திருவிழா இன்றுடன் முடிவடைகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திரு விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்களாக நடந்து வந்த திருவிழா இன்றுடன் முடிவடைகிறது.

    திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசை கச்சேரி, பக்தி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    9-ம் திருவிழாவான நேற்று மாலை 6.30 மணிக்கு கன்னியாகுமரி பார்வதிகாரர் குடும்பத்தினர் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மனை எழுந்தருள செய்து மேளதாளம் முழங்க சன்னதி தெரு வழியாக தெற்குரத வீதியில் உள்ள கன்னியம்பலம் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் விசேஷ பூஜை களும், அலங்கார தீபாராத னையும் நடந்தது. இதில் மண்டகப்படி கட்டளைதாரர்கள் ஹரிகரன், சிவசுப்பிரமணியன் விஜய் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    பின்னர் இரவு 7 மணிக்கு சமயசொற்பொழிவும் அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பக்தி பஜனை யும் நடந்தது. அதன்பிறகு பகவதி அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரதவீதி, சன்னதிதெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடு கிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டனர்.

    • தொடரும் சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி
    • வெள்ளமடம் பகுதியில் இன்று மீண்டும் விபத்து

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில்-திருநெல்வேலி சாலையில் முக்கியமான பகுதியாக ஆரல்வாய்மொழி உள்ளது. இங்குள்ள வெள்ளமடம், குமாரன்புதூர், சகாய நகர் பகுதியில் வளைவுகள் அதிகம் உள்ளன.

    இதனால் வேகமாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி வருகின்றன. கடந்த சில நாட்களாக விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஆடல்-பாடல் குழுவினர், திருச்செந்தூர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது, சகாயநகர் பகுதியில் வேன் விபத்தில் சிக்கியது. சாலையின் எதிர்புறம் பாய்ந்த வேன் அரசு பஸ் மீது மோதியதில் 4 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து, விசுவாசபுரம், சகாய நகர் விலக்கு, குமரன் புதூர், வெள்ள மடம் ஆகிய பகுதிகளில் சாலையின் நடுவே சிமெண்ட் கல் கொண்டு தடுப்புகள் (சென்டர் மீடியன்) அமைத்தனர். இதனால் விபத்துக்கள் குறையும் என கருதப்பட்டது. ஆனால் பாதுகாப்பு என வைக்கப்பட்ட தடுப்பு விபத்துக்கு மேலும் காரணமாக அமைந்து விட்டது அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி வந்த வேன், மதுரையில் இருந்து வந்த அரசு பஸ் போன்றவை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்வாறு பல்வேறு சம்பவங்கள் நடந்த சூழலில் இன்று மற்றோரு வாகனமும் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதன் டிரைவர் பலியாகி விட்டார். இது பற்றிய விவரம் வருமாறு:-

    திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று காலை ஒரு பால்வண்டி புறப்பட்டது. அதனை மேலநத்தம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் நம்பிபாலன் (வயது27), ஓட்டி வந்தார்.கிளீனராக யேசுராஜ் இருந்தார். இந்த வேன் வெள்ள மடம் அருகே உள்ள விசுவாசபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    அதே வேகத்தில் சென்ற வேன், தடுப்பு சுவர் கல்லில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதனை பார்த்த பலரும் அங்கு ஓடிவந்து மீட்பு பணியில் இறங்கினர். ஆனால் வேனை அவர்களால் மீட்க முடியவில்லை. வேனின் அடியில் சிக்கிக் கொண்ட டிரைவர் மற்றும் கிளீனர் கூச்சலிட்டனர்.

    இதனை தொடர்ந்து ஆரல்வாய் மொழி போலீசா ருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. அவர்கள் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து சுமார் 1½ மணி நேரம் போராடி கவிழ்ந்து கிடந்த வேனை நிமிர்த்தினர். ஆனால் அதற்குள் டிரைவர் நம்பிபாலன் பரிதாபமாக இறந்து விட்டார். கிளீனர் யேசுராஜ் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    பலியான நம்பிபாலனுக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலைய தலைமை காவலர் ராபின் வழக்கு பதிவு செய்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்துக்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் தொடர் விபத்துக்களுக்கு காரணமாகி வருவது அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • திருப்பூரில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
    • சிக்னல் ப்ரீ ரோடு திட்டம் நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குமரன் சாலை, மங்கலம் சாலை, பல்லடம் சாலை, அவிநாசி சாலை, பி.என்.ரோடு உள்ளிட்ட பிரதான இடங்களில் அதிக அளவிலான வாகன போக்குவரத்து எப்பொழுதும் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. திருப்பூர் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் போக்குவரத்து நெரிசல் இருந்த வண்ணம் உள்ளது.

    குறிப்பாக மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள சிக்னலால் மங்களம் செல்லக்கூடிய வாகனங்கள் வளர்மதி பாலம் வரை நீண்ட வரிசையில் நிற்கின்றது. அதேபோன்று ரயில் நிலையம் மார்க்கமாக செல்லக்கூடிய வாகனங்கள் பல்லடம் சாலையில் உள்ள பாலம் வரை நிற்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் மாநகர போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் சிக்னல் ப்ரீ ரோடு திட்டம் நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தால் வாகனங்கள் சிக்னலில் நீண்ட நேரம் நிற்க அவசியம் ஏற்படாது.

    இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி சிக்னலில் இதற்கான ஒத்திகை நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி சிக்னல் அணைத்து வைக்கப்பட்டு வழி மாற்றம் செய்தனர். குமரன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பல்லடம் சாலைக்கும், மங்கலம் சாலைக்கும் சிக்னலில் நிற்காமல் சென்றது .

    அதேபோன்று பல்லடம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பூங்கா சாலை வழியாக செல்லாமல் தாடிக்காரன் முக்கு வழியாக நட்ராஜ் தியேட்டர் சென்று ெரயில் நிலையம் சென்றது. இந்த ஒத்திகையால் எப்பொழுதும் பரப்பரப்பாக காணப்படும் பூங்கா சாலை நேற்று இரவு 7,30 மணிக்கு வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சிக்னல் ப்ரீ ரோடு திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் இனி நீண்ட நேரம் சிக்னலில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

    • எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயம் அடைந்தார்.
    • வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே முத்தூர் பகுதியைச் சேர்ந்த பாபு மகன் கௌதம் (25) என்பவர் வேன் டிரைவராக பணியாற்றி வருகின்றார். கௌதம் நேற்று இரவு முத்தூரிலிருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயம் அடைந்தார்.

    அந்த வழியாக வந்தவர்கள்கௌதமை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று பார்த்தபோது, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×