search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம்"

    • 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
    • யார் அவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே வேட்டைக்காரனிருப்பு, பெட்ரோல் பங்க் அருகே சம்பவத்தன்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

    இதில் காயமடைந்த அவரை அக்கம் பக்கதினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, யார் அவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், இறந்தவர் குறித்து யாருக்கும் தகவல் தெரிந்தால் துணை போலீஸ் சூப்பிரண்டு, வேட்டைகாரனிருப்பு போலீசாருக்கு தெரிவிக்கலாம் என்றனர்.

    • 21 முக்கிய அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்யப்பட்டது.
    • விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். தவறும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொன்னேரி:

    தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்குகின்றனவா? என்பதை ஆய்வு செய்ய வருவாய்த் துறை, காவல்துறை, கல்வித் துறை மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு கோடை விடுமுறையில் வாகனங்களை தணிக்கை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களை சிறப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

    பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் பள்ளி வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்காக அரசு அறிவித்துள்ள வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள், படிக்கட்டு வசதி, அவசர கால கதவு, முதலுதவி பெட்டி, ஜன்னல் பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட 21 முக்கிய அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்யப்பட்டது.

    மொத்தம் 208 வாகனங்களை சோதனை செய்ததில் தகுதியுடைய 178 வாகனங்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன. விதிமுறைகளை கடைபிடிக்காமல் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 30 வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டு அவை திருப்பி அனுப்பப்பட்டன. குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்களில் அவற்றை சரி செய்து மீண்டும் தணிக்கை குழுவினரிடம் சான்று பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    முன்னதாகபள்ளி வாகனங்களில் திடீரென தீப்பிடித்தால் அதனை எவ்வாறு கையாள்வது? தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது எப்படி? என்பது போன்ற தத்ரூப ஒத்திகையை தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.

    தொடர்ந்து தனியார் பள்ளி டிரைவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்க கூடாது எனவும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக் கூடாது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், தவறும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இள முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பையன், ராஜராஜேஸ்வரி, கல்வித் துறை அலுவலர் சுப்ரமணி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • 265 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
    • மொத்தம் 3 இடங்களிலும் 710 பள்ளி வானங்கள் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

    தஞ்சாவூா்:

    தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

    இந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி வாகனங்கள் தரமான நிலையில் உள்ளதா? மாணவ-மாணவிகள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய அனைத்து வசதிகளும் உள்ளதா என வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    தஞ்சை வட்டார போக்கு வரத்து அலுவலக த்திற்குட்பட்ட இடங்களை சேர்ந்த பள்ளி வாகனங்கள் ஆய்வு தஞ்சையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் 265 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார். அப்போது அவர் ஒவ்வொரு பள்ளி வாகனங்க ளிலும் ஏறிச்சென்று கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா? அவசரகால வழி கதவு உள்ளதா? வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? தீயணைப்பான் கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் இன்று தஞ்சை, கும்பகோணம் பட்டுக்கோட்டை ஆகிய 3 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த வாக னங்கள் அந்தந்த பகுதியில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மொத்தம் 3 இடங்களிலும் 710 பள்ளி வானங்கள் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

    இதில் சிறுசிறு குறைகள் வாகனத்தில் கண்டறிய ப்பட்டாலும் அந்தக் குறைகள் அனைத்தையும் முழுமையாக சரி செய்த பிறகே இயக்க அனுமதி க்கப்படும். மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு தான் முக்கியம்.

    டிரைவர்கள் மிகவும் கவனமுடன் பஸ்கள் இயக்க வேண்டும். மாணவர்கள் பத்திரமாக பஸ்களில் ஏறி, பத்திரமாக இறங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பான் கருவியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் ? சரியான முறையில் இயங்குகிறதா என பரிசோதிப்பது எப்படி ? என்பது குறித்து டிரைவர்களுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    இந்த ஆய்வின் போது தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, முதன்மைக்கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் தெய்வபாலன், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த், தாசில்தார் சக்திவேல்,

    மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் அமலாதங்கத்தாய், மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • கிழக்கு கடற்கரை சாலையில் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, நாடியம்மன்கோவில் சாலை காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது58), இவரது மனைவி ஜெயலட்சுமி (43), கூலி தொழிலாளர்கள்.

    இந்நிலை யில், நேற்று சேதுபாவா சத்திரத்தில் இருந்து கட்டுமாவடி நோக்கி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், கழுமங்குடா சந்திப்பு பகுதியில் கோபால், ஜெயலட்சுமி இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    இது குறித்து சேதுபாவா சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • கழிவு செய்யப்பட்ட அரசு வாகனம் ஏலம் விடப்பட உள்ளது.
    • விருப்பமுள்ளவர்கள் அன்றைய தினம் விலைப்புள்ளியை கோரலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் அலுவலக வாகன எண்.TN01G0660 கழிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை வருகிற 19-ந் தேதி காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூல கட்டிட வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. டேவனித் தொகை ரூ.3 ஆயிரம் செலுத்திய பின்பே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஏலத்தை மாற்றம் செய்யவோ ரத்து செய்யவோ ஏலக்குழுத் தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது. ஏலம் எடுப்பவர் ஏலம் முடிந்த உடன் முழு தொகையை அன்றே செலுத்த வேண்டும். ஏலத் தொகைக்குரிய ஜி.எஸ்.டி. 18 சதவீதம் செலுத்தப்பட வேண்டும். பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அன்றைய தினம் விலைப்புள்ளியை கோரலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் இருந்து 50 வாகனங்களில் 1500 பேர் பயணம் செய்தனர்.
    • மாநில தலைவர் முத்துக்குமார் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் 40-வது வணிகர் தின விழாவை முன்னிட்டு நாளை (5-ந் தேதி) சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வி.ஜி.பி. தங்க கடற்கரையில் சுதேசி விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது. நாளை காலை 9 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் நான் (மைக்கேல்ராஜ்) தலைமை தாங்குகிறேன். சங்கத்தின் பல்வேறு நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள். மாநில தலைவர் முத்துக்குமார் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து நாளை காலை 9.30 மணிக்கு கலைநிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து சுதேசி விழிப்புணர்வு மாநாடு கூட்டம் நடைபெறுகிறது.

    இதில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நலத்திட்ட உதவி களை வழங்கி பேசுகிறார். இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னையில் நடக்கும் இந்த மாநாட்டில் மதுரை மண்டலத்தின் சார்பில் நிர்வாகிகள் சூசை அந்தோணி, தங்கராஜ், சில்வர் சிவா, குட்டி என்ற அந்தோணி ராஜ், ஸ்வீட் ராஜன், ஜெயக்குமார், தேனப்பன், வக்கீல் கண்ணன், , சுருளி, ஆன்ந்த், அப்பாஸ், ராமர், கரன்சிங், வாசுதேவன், மூங்கில் கடை ரவி, பிச்சைப்பழம், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    மதுரை மண்டலத்தில் இருந்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையினர் 50 வாகனங்களில் 1500-க்கும் மேற்பட்டோர் இன்று மாலை மாநாட்டிற்கு புறப்பட்டு செல்கின்றனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    • தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட்டின் அருகே‌ நேற்று இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் அந்த வழியாக நடந்து சென்றார்.
    • அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் அந்த நபர் மீது மோதியது.

    கடலூர்:

    வேப்பூர் அருகே சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட்டின் அருகே நேற்று இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் அந்த வழியாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் அந்த நபர் மீது மோதியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் இறந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது காரை மோதி விபத்துக்குள்ளாக்கிய காரை ஓட்டி வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் தஞ்சாவூர் மாவட்ட கிளை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
    • ரெட்கிராஸின் பல்வேறு சேவைகளில் ரத்த வங்கி சேவை என்பது‌ குறிப்பிடத்தக்கது.

    தஞ்சாவூர்:

    ஐ.சி.ஐ.சி.ஐ பவுண்டேஷன் சார்பில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டிக்கு ரூ. 40 லட்சம் மதிப்புள்ள ரத்த சேகரிப்பு போக்குவரத்து வாகனம் மற்றும் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள ரத்த வங்கி உபகரணங்களை ஐ.சி.ஐ.சி.ஐ பவுண்டேஷன் திட்ட மேலாளர் ஆசிப் இக்பால் ஏற்பாட்டில் மத்திய மண்டல தலைவர் செந்தில்குமார், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் , கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா ஆகியோர் முன்னி லையில் ஒப்படைத்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:- இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, தஞ்சாவூர் மாவட்ட கிளை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    ரெட்கிராஸின் பல்வேறு சேவைகளில் ரத்த வங்கி சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பணி மேலும் சிறப்பாக செயல்படுவதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ பவுண்டேஷன் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள வாகனம் மற்றும் உபக ரணங்கள் பயனுள்ளதாக இருக்கும். இதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ, பவுண்டேஷன் மற்றும் வங்கிக்கு பாராட்டுக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். பாலாஜி நாதன், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர். வரதராஜன், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பிராந்திய தலைவர்கள் சீனிவாச யோகானந்த், கிருஷ்ண மூர்த்தி, பிராந்திய மேலா ளர்கள் ராதாகிருஷ்ணன், சிவராமன், கிளை மேலாளர் அரவிந்த், வளர்ச்சி அலுவலர் நவராஜா, ரெட்கிராஸ் மேலாண்மை குழு உறுப்பினர்கள் முகமதுரபி, ஜெயக்குமார், முனைவர் பிரகதீஷ், தஞ்சை ராமதாஸ், குருநாதன், அம்மாபேட்டை துணை கிளை சேர்மன் தர்ம புருஷோத்தமன், சுவாமி மலை துணை கிளை சேர்மன் இராகவ நாராயணன், பூதலூர் துணை கிளை சேர்மன் ரவிசங்கர், ஒரத்தநாடு துணை கிளை சேர்மன் நாராயணசாமி, சேதுபாவாசத்திரம் துணை கிளை தலைவர் ஷேக் அப்துல்லா, டாக்டர் சிங்காரவேலு, ஆர்க்கிடெக்ட் அருண் பாலாஜி, முனைவர் ஜோசப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ரெட்கிராஸ் துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார் வரவேற்றார். பொருளாளர் சேக் நாசர் நன்றி கூறினார்.

    • இருசக்கர வாகனங்களை இயக்கும் பொழுது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
    • ஆஸ்பத்திரி வளாகத்தை சுற்றி வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சமூக மருத்துவத்துறை சார்பில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இதனை மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் பாலாஜிநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் ஆறுமுகம், இணை பேராசிரியர் சிவச்சந்திரன், துணை பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்தின் போது டீன் பாலாஜிநாதன் பேசியதாவது:-

    உலக சுகாதார தினமானது ஆண்டுதோறும் ஏப்ரல் 7-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் மக்களால் பெருமளவில் தாக்கும் நோயின் மீது கவனத்தை ஈர்க்க இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

    மேலும், உலக சுகாதார தினமானது உலக சுகாதார நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட நாளையும் நினைவு கூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட 75 -வது ஆண்டு ஆகும்.

    உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "அனைவருக்கும் சுகாதாரம்" என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த கருபொருளின் இலக்கு என்னவென்றால், கடந்த 70 ஆண்டுகளில் பொது சுகாதாரத்தை பேணுவதில் செய்யப்பட்ட சாதனைகளை நினைவு கூருவது, பொது சுகாதாரப் பணிகள் எப்படி கடந்த 70 ஆண்டுகளில் மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது என்பதை அறிவது, தமிழ்நாடு அரசின் சீரிய வழிகாட்டுதலின் பேரில் 100 சதவீதம் கட்டாய முகக்கவசம் அணிந்து, நம்மை தொற்று நோய்களில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும்.

    மருத்துவ மாணவர்கள் இருஓசக்கர வாகனங்களை இயக்கும் பொழுது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். நமது உடல் சுகாதாரத்தைப் பேண, நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விழிப்புணர்வு ஊர்வலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரி வளாகத்தை சுற்றி வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முடிவில் சமூக மருத்துவத் துறையின் இணை பேராசிரியர் சிவச்சந்திரன் நன்றி கூறினார்.

    • பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான அண்ணா நகர் டவர் பார்க். சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
    • வீடுகளில் வசிப்போருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அன்றாடம் ஏற்படும் பிரச்சினைகள் கொஞ்சம் நஞ்சமல்ல.

    சென்னையில் மக்கள் தொகை பெருகி வருவது போல் வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.

    இதற்கேற்றார் போல் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான அரசு அலுவலகங்கள், வணிக தலங்கள், பூங்காக்கள் ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்த போதிய இட வசதிகள் இல்லாததால் அருகில் உள்ள தெருக்களில், வீடுகளின் முன்பு வண்டிகளை நிறுத்தி செல்கின்றனர்.

    இதனால் வீடுகளில் வசிப்போருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அன்றாடம் ஏற்படும் பிரச்சினைகள் கொஞ்சம் நஞ்சமல்ல.

    சென்னை நகரின் அழகான பகுதி அண்ணாநகர். இங்கு வசிப்போர் பெரும்பாலும் நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் ஆவார்கள். பெரும்பலான வீடுகளில் கார்கள் பயன்பாடு அதிகம். எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணாநகரில் வணிக நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், கோவில்கள், பொழுது போக்கு பூங்காக்கள் அதிகம் உள்ளன.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான அண்ணா நகர் டவர் பார்க். சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் வரும் வாகனங்கள் பூங்காவின் முன்பு நிறுத்தப்பட்டு அங்கு இடமில்லாமல் அருகில் உள்ள தெருக்களின் வீடுகள் முன்பு நிறுத்தப்படுகின்றன. இதனால் வீடுகளில் வசிப்போர் பெரும் சிரமம் அடைகிறார்கள். இதனால் வாகன ஓட்டிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

    ஒய் பிளாக்கில் அதிக வாகனங்கள் வீடுகளின் முன்பு நிறுத்தப்படுவதால் ஏற்படும் சங்கடங்கள் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    பல ஏக்கர் பரப்பளவுள்ள டவர் பூங்காவில் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த பகுதி மட்டுமல்லாது சுற்று வட்டார பகுதிகளிலும் இருந்தும் இங்கு வந்து செல்கின்றனர். அதிலும் பெரும்பாலானோர் கார்களில் வருவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக ஏற்பட்டு எங்கு இடம் கிடைக்குமோ அங்கு நிறுத்த வேண்டிய சூழலில் நிறுத்தி செல்கின்றனர்.

    நாங்கள் அவசரத்துக்கு எங்கும் செல்ல முடியவில்லை. பல ஏக்கர் பரப்பளவுள்ள டவர் பூங்காவில் கட்டண முறையில் வாகன நிறுத்தத்தை ஏற்படுத்தி தந்தால் அவர்களுக்கும் வசதி. எங்களுக்கும் வசதி என்கின்றனர்.

    சென்னையின் மிகப் பெரிய வணிக ஸ்தலம் தியாகராய நகர். கோடிகள் புரளும் இந்த பகுதியில் பொதுமக்கள் வரத்து எப்போதும் அதிகமாகவே காணப்படும். இரு சக்கர வாகனங்கள் முதல் 4 சக்கர வாகனங்கள் என எந்நேரமும் சாலைகள் பரபரப்புடன் காணப்படும்.

    வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று போதிய இடம் இல்லாததால் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டி பஜார் ஆகிய இடங்களில் உள்ள தெருக்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. சில தெருக்களில் நோபார்க்கிங் என்ற அறிவிப்பு போர்டையும் மீறி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

    பாண்டி பஜாரில் பிரமாண்ட பன்னடுக்கு பார்க் கிங் கட்டப்பட்டு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. ஆனால் அதன் அருகில் உள்ள மாசிலாமணி தெருவிலேயே இரு சக்கர வாகனங்களும், 4 சக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டு உள்ளன.

    வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் நிறுத்தப்படுவதால் பொது மக்கள் நடந்து செல்ல கூட முடியாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    அரசு இந்த பிரச்சினைக்கு மல்டி லெவல் பார்க்கிங் போன்ற பல்வேறு வசதிகளை கொண்டு வந்தாலும் தெருக்களில் நிறுத்தப்படும் வாகனப் பிரச்சினைக்கு தீர்வு என்பது எப்போது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    • வாகனம் மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்.
    • நடந்து சென்ற போது சம்பவம்

    கரூர் :

    கரூர் தளவாபாளையம் அருகே உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி முத்துராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 65). இவர் தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மாணிக்கம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணிக்கம் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் விபத்து ஏற்படுத்திய செல்வராஜ் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேலூர் நகராட்சி பகுதியில் உரிமம் பெறாத கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்கள் மீது வழக்கு தொடரப்படும்

    மேலூர்

    மேலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தனியார் கட்டிடங்களில் உள்ள மனித கழிவு நீர் தொட்டிகளில் இருந்து கழிவுகளை அகற்றும் வாகனங்கள் உடனடியாக உரிமம் பெற வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளார்.

    கழிவுநீர் அகற்றும் வாகனங்களில் அரசு விதிப்படி போதிய பாதுகாப்பு அமைப்புகள் செய்திருக்க வேண்டும்.தகுந்த ஆவணங்களுடன் வாகன உரிமையாளர்கள் ரூ.2 ஆயிரம் கட்டணத்துடன் நகராட்சியில் விண்ணப்பித்து 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம்.

    அவ்வாறு உரிமம் பெறாத கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்கள் மீது வழக்கும் தொடரப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    ×