search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பிணி"

    • பிரசவம் பார்க்க டாக்டர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • கர்ப்பிணி நாற்காலியில் குழந்தை பிரசவித்த சம்பவம் அப்பகுதியில் இருந்த நோயாளிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நெரெடி கும்மாவை சேர்ந்தவர் அஸ்வினி. நிறைமாத கர்ப்பிணியான அஸ்வினிக்கு நேற்று முன் தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது.

    உறவினர்கள் அவரை பிரசவத்திற்காக தேவார கொண்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பிரசவம் பார்க்க டாக்டர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் நல்கொண்டா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டர் நிகிதா மற்றும் செவிலியர்கள் அஸ்வினியை பரிசோதித்து விட்டு பிரசவத்திற்கு இன்னும் கால அவகாசம் ஆகும் என தெரிவித்தனர்.

    30 நிமிடங்களுக்கு பிறகு அஸ்வினியை நடை பயிற்சி செய்யுமாறு தெரிவித்தனர். அப்போது அஸ்வினிக்கு பிரசவ வலி அதிகரித்ததால் அங்கு இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.

    நாற்காலியில் உட்கார்ந்த அஸ்வினிக்கு குழந்தை பிறந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த செவிலியர்கள் அஸ்வினியை பிரசவ வார்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

    கர்ப்பிணி நாற்காலியில் குழந்தை பிரசவித்த சம்பவம் அப்பகுதியில் இருந்த நோயாளிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்காமல் கால தாமதம் செய்து பணியில் அலட்சியமாக இருந்த டாக்டர் நிகிதா, செவிலியர்கள் விஜயலட்சுமி, சைதம்மா, மவுனிகா, சரிதா ஆகியோர் சஸ்பெண்டு செய்து கலெக்டர் நாராயண ரெட்டி உத்தரவிட்டார்.

    • ரவீணா உய்கே என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
    • டாக்டரின் வழிகாட்டுதல்படி மருத்துவச்சி ரேஷ்னா வன்ஷ்கர், ரவீணாவுக்கு பிரசவம் பார்த்தார்.

    போபால்:

    நடிகர் விஜய் நடித்த நண்பன் படத்தில், பிரசவ வலியில் துடிக்கும் பெண்ணுக்கு, அவரது டாக்டர் தங்கை செல்போன் மூலம் பிரசவத்துக்கு ஆலோசனை வழங்குவார். அதன்படியே நடிகர் விஜய்யும் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, தாயையும், குழந்தையையும் காப்பாற்றுவார்.

    சினிமாவில் வரும் இந்த காட்சியை நினைவுபடுத்தும் வகையில், மத்திய பிரதேசத்தில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள சியோனி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையில், அந்த மாவட்டம் முழுவதுமே வெள்ளக்காடாக உள்ளது. அங்குள்ள ஜோராவாடி கிராமத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த ஊருக்குள் யாரும் செல்லவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    அந்த கிராமத்தை சேர்ந்த ரவீணா உய்கே என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. அருகில் இருந்த அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் முயன்றனர். சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி இருந்ததால், அவர்களால் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியவில்லை.

    போன் மூலம் மாவட்ட ஆஸ்பத்திரியை தொடர்பு கொண்ட ரவீணாவின் கணவர், தனது மனைவியின் நிலைகுறித்து தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட சுகாதார அதிகாரியான பெண் டாக்டர் மனிஷா சிர்சாமுடன் மருத்துவக் குழுவினர் கிராமத்துக்கு புறப்பட்டனர். ஆனால் வெள்ளம் சூழ்ந்து இருந்ததால், அவர்களால் அங்கு செல்ல முடியவில்லை.

    எந்த சூழ்நிலையிலும் குழு கிராமத்தை அடைய முடியாது என்பது தெளிவாகத் தெரிந்ததும், டாக்டர் சிர்சாம், ரவீணாவின் கணவருக்கு போன் செய்து, கிராமத்திலிருந்து பயிற்சி பெற்ற மருத்துவச்சியை தங்கள் வீட்டிற்கு வரவழைக்கச் சொன்னார்.

    இதையடுத்து அந்த கிராமத்து மருத்துவச்சியான ரேஷ்னா வன்ஷ்கர் வரவழைக்கப்பட்டார். அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட டாக்டர் சிர்சாம், தான் கூறும் வழிமுறைகளை பின்பற்றி ரவீணாவுக்கு பிரசவம் பார்க்கும்படி தெரிவித்தார்.

    டாக்டரின் வழிகாட்டுதல்படி மருத்துவச்சி ரேஷ்னா வன்ஷ்கர், ரவீணாவுக்கு பிரசவம் பார்த்தார். அவரது உடல்நிலையை தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே இருந்த டாக்டர், அதற்கு தகுந்தபடி மருத்துவ ஆலோசனைகளை கூறினார்.

    இறுதியில் ரவீணாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. மறுநாள் வெள்ளம் வடிந்ததும், ரவீணாவும், அவருக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளும் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். "தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர்" என்று சுகாதார அதிகாரி ஒருவர் கூறினார்.

    • ரவி என்ற தூய்மை பணியாளரின் மனைவி தீபிகா 9 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.
    • விபத்தில் காயமடைந்த தீபிகா தனது குழந்தையை பிறக்கும் முன்பே இழந்துள்ளார்.

    குஜராத் மாநிலம் வதோதராவில் குடிபோதையில் சிறுவன் ஓட்டி வந்த கார் மோதியதில் 9 மாத கர்ப்பிணியின் குழந்தை பிறக்கும் முன்பே இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ரவி என்ற தூய்மை பணியாளரின் மனைவி தீபிகா 9 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். ரவி தனது மனைவி மற்றும் 6 வயது குழந்தையுடன் பைக்கில் வந்துள்ளார். அப்போது குடிபோதையில் சிறுவர்கள் ஓட்டி வந்த கார் அந்த பைக்கின் மீது மோதியது.

    இந்த விபத்தில் காயமடைந்த தீபிகா தனது குழந்தையை பிறக்கும் முன்பே இழந்துள்ளார். ரவி சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். ஆனால் அவர்களின் 6 வயது மகள் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இஸ்ரேல் தாக்குதலில் கர்ப்பிணியான ஓலா அட்னன் ஹர்ப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 24க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    பாலஸ்தீன நகரமான காசாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் இந்த தாக்குதலில் ஆண்கள், பெண்கள் மட்டுமில்லாமல் பல குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 24க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இஸ்ரேலின் இந்த தாக்குதலால் நிறைமாத கர்ப்பிணியான ஓலா அட்னன் ஹர்ப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அதே சமயம் உயிரிழந்த பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு இதயத்துடிப்பு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.

    உயிருடன் பிறந்த அந்த ஆண் குழந்தை தற்போது நலமுடன் உள்ளது. ஆனால், போர்களத்திற்கு நடுவே பிறப்பதற்கு முன்பே அந்த குழந்தை தனது தாயை இழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் தோற்று ஏற்பட்டால் குறைப்பிரசவத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.
    • ஜிகா வைரஸ் தோற்றால் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.

    ஏடிஸ் வகை கொசு மூலம் பரவும் ஜிகா வைரஸ் காய்ச்சல் பரவலால், எச்சரிக்கையாக இருக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது.

    மகாராஷ்டிராவில் ஜிகா வைரல் பரவல் கண்டறியப்பட்டதை அடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரல் உள்ளதா என்று சோதிக்கக வேண்டும் என்றும் ஜிகா வைரல் இருந்தால் கருவின் வளர்ச்சியை கண்காணிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    ஏனெனில் கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் தோற்று ஏற்பட்டால் குறைப்பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கும், குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதற்கும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருக்கலைவு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    தலைவலி, தோல் வெடிப்பு, காய்ச்சல், மூட்டு வலி உள்ளிட்டவை ஜிகா வைரஸ் தொற்றுப் பாதிப்பின் அறிகுறிகளாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடல் இயக்கங்களை மேன்மைபடுத்தி மலத்தை வெளியேற்றும் பணியை சீராக்குகிறது.
    • ஆண்களுக்கு பாலியல் தூண்டுதலை உண்டாக்கும்.

    அத்திப்பழம் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகளுக்கு, நோய் எதிர்ப்பு அளிப்பதற்கு, ஆண்மை குறைபாட்டுக்கு, சுவாசப்பிரச்சனைகளுக்கு என பல்வேறு குறைபாட்டுகளுக்கு நன்மை ஏற்படுகிறது.

    பெண்களின் மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கை குறைக்கவும், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்தாகவும், குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி, எலும்பு, சதை, பல் வழுவானதாகவும் மாற பயன்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் மருந்துகளை நாடாமல் தேனில் ஊறிய அத்திப்பழத்தை எடுத்துகொள்வது நன்மை பயக்கும். குடல் இயக்கங்களை மேன்மைபடுத்தி மலத்தை வெளியேற்றும் பணியை சீராக்குகிறது.

    உடலில் இருக்கும் பித்தம், இரல், நுரையீரல் பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது. அத்தித்தேன் கல்லீரல் வீக்கத்தை குறைக்கிறது. மேலும் இது இன்சுலின் அளவை மேம்படுத்தகூடும்.

    ஆண்களுக்கு பாலியல் தூண்டுதலை உண்டாக்கும்.

    ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க, இதய நோய்க்கு சிறந்த தீர்வு.

    • பதிவு வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து பயனர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை பதிவிட்டனர்.
    • சில பயனர்கள் பெண்ணின் செயலை பாராட்டி பதிவிட்டனர்.

    நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக தனது தாய் வீட்டுக்கு செல்வதால் கணவருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான இரவு உணவை தயாரித்ததாக எக்ஸ் தளத்தில் செய்த பதிவு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஜப்பானை சேர்ந்த 9 மாத கர்ப்பிணி ஒருவர் கடந்த 21-ந்தேதி எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு செய்திருந்தார். அதில், பிரசவத்திற்காக நான் பெற்றோர் வீட்டிற்கு செல்ல உள்ளேன். நான் இல்லாத நேரத்தில் எனது கணவர் சரியாக சாப்பிட மாட்டார் என்பதால் அவருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான இரவு உணவை சமைத்து வைத்துள்ளேன் என கூறியிருந்தார். அவரது இந்த பதிவு வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து பயனர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை பதிவிட்டனர்.

    திருமணத்திற்கு முன்பு உங்களது கணவர் எப்படி சாப்பிட்டார்? என ஒரு பயனரும், இந்த பெண் தனது கணவரின் பணிப்பெண்ணாக நடிக்கிறார் என ஒரு பயனரும் பதிவிட்டனர். சில பயனர்கள் உங்கள் கணவர் வீட்டில் எதுவும் செய்வதில்லையா? என கேள்வி எழுப்பி இருந்தனர். அதே நேரம் சில பயனர்கள் அந்த பெண்ணின் செயலை பாராட்டி பதிவிட்டனர்.

    • ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் குடும்பத்தினர் பரிதவித்தனர்.
    • நர்ஸ் ஜெயலட்சுமி பிரசவத்திற்கு தேவையான முக்கியமான பொருட்களை எடுத்துக் கொண்டு பிரசவ வார்டுக்கு ரம்யாவை கொண்டு சென்றார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பட்டாண்டிவிளையைச் சேர்ந்தவர் ஜோன்ஸ். இவரது மனைவி ரம்யா (வயது 24). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    கடந்த 18-ந் தேதி காலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் அப்போது, கனமழை பெய்தது. இதனால் ரம்யாவின் தாயார் பாத்திமா, அவரது தம்பி ஜேசுபால் மற்றும் உறவினருடன் அன்று காலையில் சரக்கு ஆட்டோவில் ஏரல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அந்த சமயத்தில் ஏரல் அருகே உள்ள சூழைவாய்க்கால் சாலையில் வெள்ளம் அதிகமாக சென்றதால் ஆட்டோவில் செல்ல முடியவில்லை.

    இதனால் ஜேசுபால், ரம்யாவை தோளில் தூக்கிக் கொண்டும், அப்பகுதி மக்கள் சேர்ந்து கையை பிடித்து சேர்த்து கொண்டு தண்ணீரைக் கடந்து ஏரலுக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் குடும்பத்தினர் பரிதவித்தனர். மாலை 6 மணி அளவில் வெள்ளம் ஆஸ்பத்திரி உள்ளே வந்தது. அப்போது, ரம்யாவுக்கு பிரசவ வலி அதிகமானது.

    அங்கிருந்த நர்ஸ் ஜெயலட்சுமி பிரசவத்திற்கு தேவையான முக்கியமான பொருட்களை எடுத்துக் கொண்டு பிரசவ வார்டுக்கு ரம்யாவை கொண்டு சென்றார். முட்டளவுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருந்தபோது, ரம்யாவுக்கு, ஜெயலட்சுமி பிரசவம் பார்க்க தொடங்கினார். இரவு 7 மணிக்கு ரம்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    வெள்ளம் குறைந்த 3 நாட்களுக்கு பிறகு ஆஸ்பத்திரியில் இருந்து ரம்யா, குழந்தை மற்றும் குடும்பத்தினரை படகு மூலம் சிறுத்தொண்டநல்லூரில் கொண்டு விட்டனர். அங்கிருந்து போலீசார் தங்களது வாகனத்தில் பட்டாண்டிவிளையில் விட்டனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.

    இதுகுறித்து ரம்யாவின் தாயார் பாத்திமா கூறுகையில், 'எங்களுக்கு நர்ஸ் ஜெயலட்சுமிதான் தெய்வம். நாங்கள் எப்படி தப்பிப்போம். குழந்தையை எப்படி காப்பாற்றுவோம் என நினைத்தோம். ஆனால் கடவுள் அருளால் ஜெயலட்சுமி எங்களுக்கு உதவி செய்தார்' என்றார்.

    இதுதொடர்பாக நர்ஸ் ஜெயலட்சுமி கூறுகையில், 'ரம்யா மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வரும்போது தண்ணீர் இல்லை. பிறகு கொஞ்சம், கொஞ்சமாக வெள்ளம் வந்தபோது, எனக்கு பயமாக தான் இருந்தது.

    மின்சாரமும் இல்லாததால் இன்வெர்ட்டர் மூலம் ஒரு பல்பு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அந்த பல்ப்பை நாடித்துடிப்பு பார்க்கும்போது இயக்குவேன். சரியாக இரவு 7 மணிக்கு குழந்தை பிறந்தது. குழந்தையும், தாயும் நலமாக இருந்தனர். அப்போது, பல்ப்பும் அணைந்து விட்டது. கடவுள் புண்ணியத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை' என்றார்.

    • பிரசவ வலி அதிகமாகி அலறித்துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவம் பார்க்காமலேயே பெண் குழந்தை பிறந்தது.
    • இரவு நேரங்களில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியில் இல்லாதது வேதனையாக உள்ளது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பாப்பான்குளத்தை சேர்ந்தவர் ராஜ் (வயது 32).

    இவரது மனைவி சுபத்ரா தேவி (24). இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் 2-வது பிரசவத்திற்கு சுபத்ரா தேவி திசையன்விளை அருகே உள்ள நாலந்துலாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

    இரவு பிரசவத்திற்கான வலி வந்ததால் திசையன்விளையில் உள்ள 33 படுக்கைகள் கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனது கணவர் ராஜ் மற்றும் சித்தியுடன் பிரசவம் பார்க்க சென்றுள்ளார்.

    ஆனால் அங்கு இரவு நேரம் பணியில் உள்ள டாக்டர்களோ, நர்சுகளோ இல்லாததால் 1 மணி நேரமாக மருந்து, மாத்திரை, ஊசி என எந்த மருத்துவம் கொடுக்காமல் பிரசவ வலியில் சுபத்ரா ஜோதி அலறி துடித்துள்ளார். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு பணியில் ஒரு பயிற்சி செவிலியரும், துப்புரவு பணியாளர் ஒருவரும் இருந்துள்ளனர்.

    அவர்களிடம் 108 ஆம்புலன்சை வர சொல்லுங்கள், நாங்கள் நெல்லை அரசு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுகிறோம் என்று கூறியும் ஒன்றரை மணி நேரமாக எந்த ஆம்புலன்சும் வரவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் பிரசவ வலி அதிகமாகி அலறித்துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவம் பார்க்காமலேயே பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் வெகுநேரம் கழித்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கர்ப்பிணி பெண்ணை தையல் போடுவதற்கான பிரசவ வார்டுக்கு ஸ்ட்ரெச்சர் மூலம் அழைத்துச் சென்றனர்.

    இதுகுறித்து கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 33 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்ற பெயர்தான் உள்ளதே தவிர இன்னும் சரியான மருத்துவ பணியாளர்கள் இல்லாமல் தான் இயங்கி வருகிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் விபத்து போன்றவைகளில் சிக்கிய நோயாளிகள் கடும் அவதிக்கும், வேதனைக்கும் உள்ளாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    கடந்த ஆகஸ்ட் 27-ந் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து பணியில் இல்லாத ஊழியர்களுக்கு மெமோ கொடுத்து சென்றார்.

    ஆனால் இங்கு 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என விளம்பர பலகையில் வைக்கப்பட்ட நிலையில் இரவு நேரங்களில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியில் இல்லாதது வேதனையாக உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து முழுநேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • படுகாயமடைந்த மீரா காருக்குள் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
    • துப்பாக்கியால் சுடப் பட்டதில் படுகாயமடைந்த மீராவுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள உழவூரை சேர்ந்தவர் மீரா ஆபிரகாம் (வயது32). இவரது கணவர் அமல் ரெஜி. இவர்கள் இருவரும் அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வந்தனர்.

    கணவன்-மனைவி இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் அமெரிக்கா வந்திருக்கின்றனர். அவர்களது 3 வயது மகன் டேவிட் கோட்டயத்தில் தனது தாத்தா-பாட்டி பராமரிப்பில் வளர்ந்திருக்கிறான். அவனை கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவுக்கு மீரா அழைத்துச் சென்றார்.

    இந்நிலையில் மீரா மீண்டும் கர்ப்பமானார். கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர், தனது சகோதரியுடன் செவிலியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரவு மீரா தனது கணவர் அமலுடன் காரில் சென்றார். அப்போது அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.

    கணவன்-மனைவி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த அமல் ரெஜி, தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மனைவி மீராவை துப்பாக்கியால் சுட்டார். சுமார் 10-க்கும் மேற்பட்ட முறை அவர் சரமாரியாக சுட்டிருக்கிறார்.

    இதில் படுகாயமடைந்த மீரா காருக்குள் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். ஆத்திரத்தில் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்ட அமல் ரெஜி, சிறிது தூரம் சென்றதும் அங்கிருந்த தேவாலய பார்க்கிங் பகுதியில் தனது காரை நிறுத்தினார்.

    பின்பு அங்கிருந்தவர்களிடம் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக கூறிய அவர், அதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுக்குமாறு கூறினார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மீராவை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    மனைவியை துப்பாக்கியால் சுட்ட அமல்ரெஜியை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கியால் சுடப் பட்டதில் படுகாயமடைந்த மீராவுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை இறந்துவிட்டது.

    அமல் மீது கொலை முயற்சி மற்றும் பிறக்காத குழந்தையை வேண்டு மேன்றெ கொன்றதாக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் படுகாயமைடைந்த மீரா கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

    • மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் அரசு ராசாமிராசுதார் ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்தனர்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை மேலக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். கூலித்தொழிலாளி, இவரது மனைவி அஞ்சலி தேவி (வயது 34), நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை பிரசவத்திற்காக உறவினர்கள் ஒரத்தநாடு தாலுகா, தொண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கிருந்து அஞ்சலிதேவியை மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.

    இதையடுத்து, அவர் ஆலத்தூரில் இருந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    இந்நிலையில், தஞ்சை செல்லும் வழியில் அஞ்சலி தேவிக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து ஓட்டுநர் முரளி சாலையோரம் ஆம்புலன்சை நிறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து அவசர சிகிச்சை நிபுணர் சிதம்பர கண்ணன் அஞ்சலி தேவிக்கு பிரசவம் பார்த்தார்.

    இதில் அஞ்சலி தேவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    பின்னர், மீண்டும் ஆம்பு லன்ஸ் தொண்ட ராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு தாயும், சேயும் அழைத்து செல்லப்பட்டனர்.

    உரிய நேரத்தில் பிரசவம் பார்த்து தாயையும், குழந்தை யையும் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு உறவினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • 21 வகையான சீர்வரிசை பொருட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது.
    • கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    கோட்டூர் அடுத்த ஆதிச்சபுரத்தில் குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா கோட்டூர் ஒன்றிய தலைவர் மணிமேகலை தலைமையில், கோட்டூர் வட்டார திட்ட அலுவலர் அபிநயா முன்னிலையில் நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தாம்பூலம், குங்கும சிமிழ், புடவை, வெற்றிலை, பாக்கு, பூ, வளையல், பழங்கள் உள்பட 21 வகையான சீர்வரிசை பொருட்களை 100 கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார்.

    விழாவில் தாய்பால் கொடுப்பதன் அவசியம் குறித்தும், கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் குறித்தும் கர்ப்பிணிகளுக்கு எடுத்துரைக்க ப்பட்டது.

    இதில் டாக்டர் பிரியங்கா, மேற்பார்வையாளர்கள் தமிழ்செல்வி, சுசீலா, விஜயா, திட்ட உதவியாளர் பிரபு, அலுவலக உதவியாளர் அருண்ராஜ், கோட்டூர் வட்டார அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை பணியாளர் கவிதா தொகுத்து வழங்கினார்.

    முடிவில் பணியாளர் கனகா நன்றி கூறினார்.

    ×