search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 177592"

    • விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்
    • 3 தினங்களுக்கு முன்பு மீன் பிடித்து கரை திரும்பிய விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்லவில்லை

    கன்னியாகுமரி :

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000 -க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.

    தற்போது விசைப்படகு களில் கணவாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும்.இந்நிலையில் கடந்த. 3 நாட்களாக குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடந்த 3 தினங்களுக்கு முன்பு மீன் பிடித்து கரை திரும்பிய விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்லவில்லை. ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகளும் பாதியிலேயே கரை திரும்பியது.

    அவை நங்கூரம் பாய்ச்சி மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.ஆனால் அருகில் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் பைபர் கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றன.என்றாலும் குறைவான மீன்களே கிடைத்தன.தவிர இன்று காலை கரை திரும்பிய ஒரு சில விசைப்படகுகளில் சிறிய இறால் எனப்படும் புல்லன் மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர்.இன்று ஒரு கிலோ புல்லன் மீன்கள் தலா ரூ.45 முதல் ரூ.50 வரை விலை போனது. இது வழக்கமான விலைதான் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    • சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான பொருட்களை வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறார்.
    • சி.சி.டி.வி. காமிரா பதிவில், கொள்ளையர்கள் முகம் தெரியாமலிருக்க அதனை திருப்பி வைத்து சென்றுள்ளனர்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் ஆற்றூர் அருகே உள்ள கல்லுப்பாலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயன்.

    இவர் அந்த பகுதியில் சமையல் பாத்திரங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான பொருட்களை வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறார். இதனால் கடையில் ஏராளமான வெங்கல பாத்திரங்கள் வைத்திருந்தார்.

    சம்பவத்தன்று இரவு ஜெயன், கடையை அடைத்துச் சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை அவர் கடைக்கு வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    கடைக்குள் சென்று பார்த்தபோது, பாத்திரங்கள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. சுமார் 60 கிலோ மதிப்பிலான 2 பெரிய வெண்கல வார்ப்புகள், வெண்கல உருளிகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போய் இருப்பதாக போலீசில் ஜெயன் புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில் திருவட்டார் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டனர். கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவில் மினி டெம்போ வாகனத்தில் வரும் இருவர் அப்பகுதியில் சுற்றி திரிவதும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து கடையின் அருகில் நிற்பதும் தெரியவந்தது.

    தொடர்ந்து அவர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடிப்பதும் தெரியவந்தது. எனினும் கொள்ளை நடந்த கடை அருகில் வைக்கபட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவில், கொள்ளையர்கள் முகம் தெரியாமலிருக்க அதனை திருப்பி வைத்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து கைப்பற்ற பட்ட காட்சிகள் அடிப்படை யில் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

    கடந்த சில தினங்களாக ஆற்றூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெண்கல பொருட்களை மட்டுமே குறி வைத்து கொள்ளை சம்பவ ங்களை அரங்கேற்றிவரும் கொள்ளையர்களால் வியாபாரிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.ஆற்றூர் அருகே குட்டைக்குழி கும்பளம் மகாதேவர் கோவிலில் கடந்த 21-ந் தேதி ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வெண்கல மணிகள், விளக்குகள் கொள்ளை யடிக்கபட்டது குறிப்பிடத் தக்கது.

    இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு உண்ணாமலைகடை பகுதியில் பாத்திரக்கடை யில் இருந்து வெண்கல பொருட்கள் கொள்ளை போனது. தொடர்ந்து ஆற்றூர், திரு வட்டார் பகுதிகளில் இரவு நேரங்களில் கொள்ளை சம்பவம் தொடர்கிறது.

    எனவே போலீசார் இரவு நேரங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    • சாலை ஓரங்களில் விபத்துக்கள் அதிகளவு நடந்து வந்த வண்ணமாக உள்ளது.
    • ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைக்காரர்கள் அகற்றிக் கொள்ள வேண்டும்.

    கடலூா:

    புவனகிரி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதால் சாலை ஓரங்களில் விபத்துக்கள் அதிகளவு நடந்து வந்த வண்ணமாக உள்ளது. குறிப்பாக கடந்த சில வாரங்களில் ஒரே நாளில் 2 விபத்துகளில்2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது               இது சம்பந்தமாக நெடு ஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்ப டையில் ஆக்கிர மிப்புகள் தான் காரணம் என்று உடனடியாக அதனை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகா ரிகள் தெரிவித்தனர்.

    எனவே ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைக்காரர்கள் அகற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கபட்டது. இதனை தொடர்ந்து அனைத்து கடைக்கா ரர்களும் அவரவர்கள் கடைக்கு முன்பு வைத்திருந்த ஆக்கிரமி ப்புகளை தானாக முன்வந்து அகற்றினர். இதனால் சாலை அகலமாக காட்சி அளிக்கிறது.

    • மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரம் விநியோகம்.
    • வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை உடனடியாக சேர்க்கவும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    இன்று ஜனவரி 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப் படுகிறது.

    இதை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் துறை முகத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாகை மாவட்ட மீன்வளத்துறை மற்றும் கடற்படை சார்பில் மீனவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாகை கடற்படை முகாமில் இருந்து உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் தலைமையில் விசைப்படையில் கடற்–படையினர், மீன்வளத் துறையினர் சென்று மீனவர்–களிடம் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    அதனைத் தொடர்ந்து அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த மீன் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை உடனடியாக சேர்க்கவும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    இதில் நாகை கடற்படை முகாம் கமாண்டர், மீன்வளத்துறை இணை இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வியாபாரிகளை ரவுடிகள் மிரட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கூட்டத்திற்கான ஏற்பாடுகளை குட்டி என்ற அந்தோணிராஜ் செய்தி ருந்தார்.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல ஆலோசனை கூட்டம் தெப்பக்குளம் சந்திர குழந்தை திருமண மண்டபத்தில் நடந்தது. மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஸ்வீட்ராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில தலைவர் முத்துக்குமார், மாநில நிர்வாகிகள் தங்க ராஜ், சூசை ஆகியோர் பங்கேற்றனர்.

    இதில் வணிகர்களை அச்சுறுத்தும் டெஸ்ட் பர்சேஸ் முறையை தடுக்கக்கோரியும், அதிக ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்தும், தென்தமிழகத்தில் வியாபாரிகளை ரவுடிகள் மிரட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும், அதிக டோல்கேட் வசூலை தடுக்க கோரியும், மின் கட்டண உயர்வை கைவிடக்கோரியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    மேலும் மாநகராட்சி, உணவு பாதுகாப்பு மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் அத்துமீறி செயல்படுவதை தடுக்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி வருகிற 20-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவனஈர்ப்பு அறப்போராட்டத்தில் பங்கேற்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் மதுரை மண்டல நிர்வாகிகள், உறுப்பி னர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடு களை குட்டி என்ற அந்தோணிராஜ் செய்திருந்தார்.

    • மதுரை மண்டல தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • தெப்பக்குளம் சந்திர குழந்தை திருமண மண்டபத்தில் இன்று மாலை நடக்கிறது.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல ஆலோசனை கூட்டம் இன்று மாலை தெப்பக்குளம் சந்திர குழந்தை திருமண மண்டபத்தில் நடக்கிறது.

    மண்டல தலைவர் மைக்கேல் ராஜ் தலைமை தாங்குகிறார். ஜெயக்குமார் முன்னிலை வகிக்கிறார். ஸ்வீட்ராஜன் வரவேற்கிறார்.

    சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில தலைவர் முத்துக்குமார், மாநில நிர்வாகிகள் தங்கராஜ், சூசை ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இதில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மதுரை மண்டல நிர்வாகிகள், உறுப்பினர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

    கூட்டத்திற்கான ஏற்பாடுகளை குட்டி என்ற அந்தோணிராஜ் செய்துள்ளார்.

    • அதிகளவில் காலா மீன், வாவல், நிலக்கால் நண்டு, புள்ளி நண்டு, இறால் உள்ளிட்ட மீன்கள் கிடைத்துள்ளன.
    • மீன்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதா ரண்யம் கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும்.

    தற்போது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரையில்யில் தாங்கி மீன் பிடித்து வருகின்றனர்.

    காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 10 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத நிலையில் நேற்று இரவு மீன் பிடிக்க சென்ற கோடியக்கரை மீனவர்களது வலையில் அதிக அளவில் காலாமீன், வாவல், நிலக்கால் நண்டு, புள்ளி நண்டு, இறால், உள்ளிட்ட மீன்கள் கிடைத்துள்ளன.

    இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் காலா மீன் கிலோ ரூபாய் 500, வாவல் மீன் ரூ. 700, இறால் ரூ. 200,நீலக்கால் நண்டு ரூ. 700, புள்ளிநண்டு ரூ.200க்கும், ஏலம் போயின.

    ஒரே நாளில் 5 டன்மீன்கள் கிடைத்ததாலும் அதற்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மீன்களை வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஐஸ் வைத்து அனுப்பும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

    • போலி வியாபாரிகள் தரமற்ற விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
    • சேமிப்பு கிடங்கு ஏற்பாடு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    அப்போது தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள் ஏராள மானோர் கலெக்டர் அலுவல கத்துக்கு வந்தனர்.

    திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, திருவோணம், மதுக்கூர், பட்டுக்கோட்டை மற்றும் வல்லம் பகுதிகளில் எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை ஆண்டுதோறும் சாகுபடி செய்யப்படுகிறது.

    ஆனால் இதற்கான விதை தரமான முறையில் வழங்கப்படவில்லை , போலி வியாபாரிகள் தரமற்ற விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    இதனை கண்டித்தும், விவசாயிகளுக்கு தரமான விதை சான்று பெற்ற வியாபாரிகள் மட்டும் விற்பனை செய்வதை உறுதி செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு விவசாயிகள் உற்பத்தி செய்யும் நிலக்கடலையை கட்டுப்படியான விலை கிடைத்திடவும், சேமிப்பு கிடங்கு ஏற்பாடு செய்தி டவும் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கொடுத்தனர்.

    • தூத்துக்குடி நகர மத்திய வியாபாரிகள் சங்கத்துக்கு உட்பட்ட ஸ்பிக்நகர், முத்தையாபுரம், முள்ளக்காடு, எம் சவேரியார் புரம் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட சிறப்பு ஆலோசனை கூட்டம் ஸ்பிக்நகரில் நடைபெற்றது.
    • காவல்துறை முழுமையாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி நகர மத்திய வியாபாரிகள் சங்கத்துக்கு உட்பட்ட ஸ்பிக்நகர், முத்தையாபுரம், முள்ளக்காடு, எம் சவேரியார் புரம் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட சிறப்பு ஆலோசனை கூட்டம் ஸ்பிக்நகர் ஞானமஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சங்கத் தலைவர் சின்னதங்கம் தலைமை தாங்கினார். இந்து வியாபாரிகள் சங்க தலைவர் தனராஜ், முள்ளக்காடு சங்கத் தலைவர் முனிய தங்கம் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கடந்த சில மாதங்களாக முத்தையாபுரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் திருட்டு சம்பவங்கள், கஞ்சா விற்பனை பெருகிவிட்டன. இதில் காவல்துறை முழுமையாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    மேலும் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் சார்பாக பொதுமக்கள் வியாபாரிகளுக்கு ஓர் அறிவிப்பு என்ற பெயரில் துண்டு பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த இரண்டு, மூன்று, மாதங்களாக முத்தையாபுரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் திருட்டு, வழிப்பறி, கஞ்சா, ரவுடியிசம் பெருகிவிட்டன.

    இதுவரை காவல் துறையால் இவைகளை கட்டுப்படுத்தவோ, குற்ற வாளிகளை கண்டு பிடிக்கவோ முடியவில்லை. பலமுறை குற்றவாளிகளை கண்டுபிடித்து கொடுத்தும், மனுக்கள் அளித்தும் இது வரை எந்த பலனும் இல்லை. ஆகையால் வரும் காலங்களில் தங்களின் உடைமை களையும், பணத்தையும் தாங்களே பாதுகாத்திட முத்தையாபுரம், ஸ்பிக்நகர், எம். சவேரியார்புரம், முள்ளக்காடு பகுதி அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் சார்பாக கேட்டுக்கொள்கி றோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளின் விளை பொருட்களை விற்க முடியாத நிலை உள்ளது.
    • விவசாயிகள் பாதிக்கும் வகையில் வியாபாரிகள் கடை அமைக்க அனுமதிக்க கூடாது .

    வீரபாண்டி :

    திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையத்தில் இயங்கி வரும் உழவர் சந்தைக்கு தினமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் உழவர் சந்தை வியாபாரத்தை கெடுக்கும் வகையில் வியாபாரிகள் சாலையோரமாக கடை அமைத்து விதிகளை பின்பற்றாமல் காலை நேரங்களில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொது மக்களின் வருகை குறைவதால் விவசாயிகளின் விளை பொருட்களை விற்க முடியாத நிலை உள்ளது.

    இந்நிலையில் பல்லடம் சாலையில் உள்ள திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் காலை 4 மணி முதல் 9 மணி வரை வியாபாரிகள் கடை அமைத்துக் கொள்ளலாம் என கூட்டுறவு சங்கத்தின் மூலம் அறிவிப்பு வெளியானது.

    இந்நிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் சண்முகசுந்தரம், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏபிடி. எம் .மகாலிங்கம், திருப்பூர் மாநகர ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் மற்றும் தெற்கு உழவர் சந்தை விவசாயிகள் ஆகியோர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனரை நேரில் சந்தித்து உழவர் சந்தை இயங்கும் நேரத்தில் தங்களது வளாகத்தில் வியாபாரிகளுக்கு கடை அமைக்க வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வியாபாரிகள் இங்கு கடை அமைக்க அனுமதிக்க கூடாது எனவும் மனு வழங்கப்பட்டது.

    • கீழக்கரையில் சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகளை எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • 5-வது வார்டு முத்துசாமிபுரத்தில் உள்ள குடிநீர் குழாய்களை பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    கீழக்கரை

    தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சாலையோர வியாபாரி களுக்கான ஆதரவு திட்டத்தின் கீழ் கீழக்கரையில் உள்ள சாலையோர வியாபா ரிகளுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள தள்ளுவண்டிகள் வழங்க 15 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. முதற்கட்டமாக 5 தள்ளு வண்டிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து புதிய ஜெட்டி பாலத்தில் அமைந்துள்ள உயர் கோபுர மின் விளக்கை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். 1-வது மற்றும் 7-வது வார்டுகளில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காக்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்தார். 5-வது வார்டு முத்துசாமிபுரத்தில் உள்ள குடிநீர் குழாய்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    மேலும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சம் மதிப்பில் அமைய உள்ள சமுதாயக் கூட இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணைத்தலைவர் ஹமீது சுல்தான், ஆணையாளர் செல்வராஜ், பொறியாளர் அருண், ராமநாதபுரம் நகராட்சி துணைத் தலைவர் பிரவீன் தங்கம், கீழக்கரை நகர் தி.மு.க. செயலாளர் பஷீர் அகமது, மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன், வடக்கு தெரு ஜமாஅத் தலைவர் ரத்தின முஹம்மது, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சுபியான், நயீம் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
    • விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து கரை திரும்பும்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் கணவாய், இறால், புல்லன், கேரை, சுறா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். தற்போது குளச்சல் கடல் பகுதியில் கணவாய், கிளி மீன்கள், நாக்கம் மீன்கள் கிடைத்து வருகின்றன.ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகளில் 45 படகுகள் நேற்று கரை திரும்பின.இவற்றுள் நாள் ஒன்றுக்கு 20 டோக்கன்கள் முறையில் விசைப்படகுகளில் இருந்த மீன்கள் இறக்கப்பட்டன. அவற்றுள் கிளி மீன்கள், நாக்கண்டம் மற்றும் கணவாய் மீன்கள் கிடைத்தன.

    மீனவர்கள் அவற்றை மீன் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். ஒரு கிலோ கிளி மீன்கள் தலா ரூ.105 விலை போனது.கடந்த நாட்களை விடவும் ரூ.25 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.சின்ன கிளி மீன் தலா கிலோ ஒன்றுக்கு ரூ.80 முதல் ரூ.85 வரை விலை போனது. நாக்கண்டம் தலா கிலோ வழக்கமாக ரூ.40 க்கு விலை போனது. தோட்டு கணவாய் தலா கிலோ ஒன்றுக்கு ரூ.385 விலையும், ஓலக்கணவாய் வழக்கமாய் ரூ.240-க்கும், ஸ்குட் கணவாய் ரூ.415 க்கும், நிப்புள் கணவாய் ரூ.180-க்கும் விலைபோனது.

    கிளி மீன்கள் பற்பசை தயாரிப்பதற்கும், நாக்கண் டம் மீன்கள் மீன் எண்ணை மற்றும் கோழி தீவனம் தயாரிப்பதற்கும் வியாபாரிகள் போட்டிப் போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர்.

    ×